Wednesday 24 December 2014

நகுலன் கதைகள்



எழுத்தாளர் திரு. நகுலனின் எட்டு கதைகள் அடங்கிய புத்தகம் படிக்க வாய்ப்பு கிடைத்தது.
1. நிழல்கள் 1965
2. நினைவுப்பாதை 1972
3. நாய்கள் 1974
4. நவீனன் டயரி 1976
5. சில அத்தியாயங்கள் 1983
6. இவர்கள் 1992
7. வாக்கு மூலம் 1992
8. அந்த மஞ்சள் நிற பூனைக்குட்டி 2002

இலக்கியம் என்றால் என்ன என்ற குழப்பம் எனக்கு தொடர்ந்து இருந்தாலும் கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து புத்தகங்கள் படித்து வருகிறேன். இதன் மூலம் ஏதேனும் ஒரு கால கட்டத்தில் இலக்கியம் என்றால் என்ன என்பது புரியும் வாய்ப்பு ஏற்ப்படும் என்ற நம்பிக்கை.
எந்த புத்தகமாக இருந்தாலும் முழுவதுமாக படித்து முடித்து விடுவேன். சில புத்தகங்களை தொடர்ச்சியாக படித்து விட்டு தான் கீழே வைப்பேன். சிலவற்றை சிறிது சிறிதாக படிப்பேன். பொதுவாக முழுமையாக படித்து விடுவேன்.
முழுமையாக படிக்க இயலாத புத்தகம் இந்த ஒன்று தான். இதில் இருந்த நிழல்கள், நினைவுப்பாதை இரண்டு கதைகளை படிப்பதற்க்குள் எனக்கு ஏற்ப்பட்ட அனுபவங்களை வெளிப்படையாக கூறினால், யாராவது வழக்கு தொடரலாம் அல்லது அடிக்க வரலாம். என்னால் தொடர்ந்து படிக்க இயலவில்லை மற்ற கதைகளை படிப்பதில்லை என முடிவு செய்து விட்டேன்.
படித்த கதைகளை பற்றி விமர்சனம் எழுதலாம் என நினைத்தால் என்ன படித்தோம் என்று நினைவுக்கு வர மறுக்கிறது. இத்தனைக்கும் பத்து நாட்களுக்கு முன்பு தான் படித்தேன். இந்த நிலையில் தற்போது சென்னையில் நடந்து வரும் புத்தக கண்காட்சியில் ஒரு பதிவாளர் இவர் எழுதிய “நாய்கள்” என்ற கதை புத்தகத்தை விரும்பி விலை கொடுத்து வாங்கியதாக படித்தேன்.
எனக்கு புரியாத ஒரு புத்தகத்தை சிலர் இன்றைக்கும் விலை கொடுத்து வாங்குகிறார்கள் என்றால் அதில் ஏதேனும் சிறப்புகள் இருக்கும் என தோன்றியது. எனவே, இனையத்தில் இவரைப் பற்றியும் இவரது எழுத்துக்களைப் பற்றியும் யார் என்ன எழுதியிருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம் என தேடிப்பிடித்து படித்தேன்.
இதற்க்கிடையில் அந்த “ நாய்கள் ‘ என்ற கதையையும் படித்தேன். இது ஒரு சிறந்த கதை என்று தான் இனையத்தில் சிலர் எழுதியிருந்தனர். எனக்கு சுத்தமாக புரியவில்லை.
இதை எழுதுவதற்க்கு ஒரு மணி நேரம் முன்பு ஒரு இடத்தில் நின்று கொண்டிருந்தேன். ஒரு ஓட்டையை முகர்ந்து கொண்டு எட்டு நாய்கள் விரட்டிக்கொண்டிருக்கும் காட்சியை பார்த்தேன். என்னுடன் அங்கு நின்று கொண்டிருந்த பத்து பதினைந்து நபர்களும் பார்த்து கொண்டிருந்தனர். எந்த நாய்க்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற ஆவல் பார்த்துக்கொண்டிருந்த அனைவருக்கும் இருந்தது. போக்கு வரத்து அதிகமாகி விட்டதால் நாய்களும் மனிதர்களும் கலைந்து சென்று விட்டனர்.
ஏதோ ஒரு நாய்க்கு வாய்ப்பு கிடைத்திருக்கும். பார்த்து கொண்டிருந்த பத்து நாய்களில் பலவற்றுக்கு இந்த டெல்லியின் ஏழு டிகிரி குளிரில் இன்று இரவு வாய்ப்பு கிடைக்கும்.
“நாய்கள்” கதையிலும் கிட்ட தட்ட இது தான் சொல்லப்பட்டிருப்பதாக தோன்றுகிறது. ஆனால் சொன்ன விதம் கொடுமை. புரியவில்லை.

தமிழ் மொழி எழுத படிக்க பேச தெரிந்தாலே அனைத்தையும் படித்து புரிந்து கொள்ள முடியும் என்ற எனது எண்ணத்தை சிதறடிக்க செய்து விட்டார். இவர் எழுதியுள்ள மொழி நடையே பிடி படவில்லை புரியவில்லை என்கிற போது அதில் உள்ள இலக்கிய தன்மையை புரியாதது ஒன்றும் ஆச்சரியமில்லை.
இவரது எழுத்துக்கள் நிஜத்தையும் புனைவும் கலந்தது என்று கூறப்படுகிறது. ஒரு வித மனநிலை பாதிக்கப்பட்டவர் அல்லது வயதான நிலையில் சுய நினைவில்லாமல் , பழைய நினைவுகளையும் தற்கால நிகழ்ச்சிகளையும், கற்பனைகளையும் கலந்து பேசிக்கொண்டிருப்பது போல உள்ளது இவரது எழுத்துக்கள்.
எழுத்தில் இது ஒரு யுக்தி என்று சொல்லப்படலாம் அல்லது கதை சொல்லும் பாணியில் இது ஒரு புதிய முயற்ச்சி என்று சொல்லலாம். ஆனால் வாசகனுக்கு எந்த அளவு அது சென்றடையும் என்பதை அவர் உனர்ந்திருப்பாரா என தெரியவில்லை. வாசகனுக்கு புரியாமல் அல்லது அவனை குழப்புவதின் மூலம் தன்னுடைய படைப்புகளை இலக்கிய படைப்புகளாக அவர் சமூகத்தின் முன் வைத்திருந்தாலும், என்னை பொருத்த வரை சாதாரண வாசகனுக்கு புரியாது.
வாசகனோ அல்லது வேறு எழுத்தாளர்களோ தனக்கு புரியவில்லை அல்லது பிடிக்கவில்லை என்று நேரடியாக ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அப்படி ஒப்புக்கொண்டால், அவர்களது இலக்கிய அறிவும் ரசனையும் கேள்விக்குறியாக்கப்படுவதுடன் ஏளனத்துக்கும் ஆளாவர்கள். எனவே, அவரைப்பற்றி எழுதியவர்கள் அவரது படைப்பை பற்றி எழுதியவர்கள் , பொதுவாக அவரை பற்றியே எழுதியுள்ளார்கள். அவரது எழுத்துக்கள் மூலம் என்ன அறிந்து கொண்டார்கள் என்பதை இனையத்தில் யாரும் எழுதி வைக்கவில்லை.
பத்து சிறந்த வாசகர்களும் பத்து இன்றைய எழுத்தாளர்களும் அவரது கதைகளை படிக்க வைத்து விவாதிக்க ஏற்ப்பாடு செய்தால் அதை கேட்கும் மற்றவர்கள் நேரடியாக அவர்களே சென்று மனநோய் மருத்துவமனையில் சேர்ந்து விடுவார்கள்.
எனக்கு இலக்கியம் புரியவில்லை என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறேன்.

Friday 19 December 2014

PK - இந்தி திரைப்பட விமர்சனம்



PK இந்தி படத்தின் பெயர். படத்தில் கதாநாயகனின் பெயரும் இதுவே. PK என்றால் – பிக்கீ ஆயா கியா – பிகே ஆயா கியா – பிகி/பிகீ என்றால் குடித்து விட்டு என்று பொருள். இவர் பேசுவதும் கேட்கும் கேள்விகளும் குடிகாரன் பேச்சு போல இருப்பதால், என்ன குடித்து விட்டு வந்துள்ளாயா என கேட்க இதுவே இவர் பெயராக மாறுகிறது.

பெல்ஜியம் நாட்டில் ஆணும் பெண்ணும் சந்திக்க காதல் ஏற்ப்படுகிறது. காதல் ஏற்ப்படுவதற்க்கு காரணங்கள் தேவையில்லை. ஆண் (Sushant Singh Rajput) பாக்கிஸ்தான் தூதரகத்தில் வேலை செய்து கொண்டே கட்டிட கலை படிப்பு படிப்பவன். பெண் ( Anushka Sharma) . பெண் தனது காதலை இந்தியாவில் உள்ள அம்மா அப்பாவுக்கு தெரிவிக்க , அவர் பதறி அவர் எப்போதும் எல்லா விசயங்களுக்கும் கலந்தலோசிக்கும் குருவிடம் செல்ல , அவர் இந்த காதல் நிறைவேறாது எனவும் அவன் உன்னை திருமணம் செய்ய மாட்டான் என்று கூற , அவள் அவனிடம் நாளைக்கே திருமணம் செய்ய வேண்டும் என கூறி , சர்ச்சில் காத்திருக்கிறாள்.

அங்கு வேறு ஒரு பெண்ணும் திருமணத்திற்க்கு காத்திருக்கிறாள். கையில் ஒரு சிறிய கூடையில் நாய் குட்டி வைத்திருக்கிறாள். அதை அவள் இவளிடம் கொடுத்து விட்டு திருமணத்திற்க்கு செல்கிறாள். அந்த சமயம் ஒரு சிறுவன் ஒரு கடிதத்தை தருகிறான்.  அதில் திருமணம் செய்ய இயலாது என எழுதப்பட்டுள்ளது. அவள் இந்தியா திரும்பி வருகிறாள்.

வேற்று கிரகத்திலிருந்து வரும் வின்கலம் பழுதடைந்து ராஜஸ்தானில் இறங்க அதில் வரும் மனிதன் அமிர்கான். அந்த காட்சியில் மட்டும் சில நொடிகள் நிர்வானமாக இருப்பது போல் கான்பிக்கப்படுகிறது.

 மொழி தெரியாது. சிறிய விபத்தில் சிக்கும் இவனை பாண்டு வாத்திய குழு தலைவன் (சஞ்சய் தத்) எடுத்து செல்ல இவனுக்கு மொழி தெரியாமல் இருக்க, பார்க்கும் பெண்களின் கைகளை இவன் தொட, இவனுக்கு பெண் தேவையென நினைத்து விலை மகளிடம் அழைத்து செல்ல , இவன் விலை மகளின் கையை பிடித்துக்கொண்டு இரவெல்லாம் உட்கார்ந்திருக்க, அவளிடமிருந்து இவனுக்கு போஜ்பூரி மொழி முழுவதும் வந்து விடுகிறது.


வின்கலத்திலிருந்து இவனிடமிருந்த திருட்டு போன பொருள் ரிமோட் (பதக்கம்) டெல்லியில் இருப்பதாக தெரிந்து கொண்டு டெல்லி வந்து தேடும் போது, இவன் கேட்கும் கேள்விகளுக்கு மனிதர்கள் யாரும் பதில் சொல்ல முடியாமல் கடவுள் மட்டும் சொல்லுவார் என்றும் கடவுளுக்கே தெரியும் என்றும் கடவுளே காப்பாற்றுவார் என்று சொல்ல, கடவுள் கோவிலில் இருக்கிறார் என சொல்ல இவர் கோயில்களில் விடை தேட, ஒரு கட்டத்தில் அது பொய்யென தெரிய அனைத்து நம்பிக்கைகளையும் விட்டு விட்டு கடவளை வைத்து இங்கு செய்யப்படும் வியாபாரங்களையும் முட்டாள் தனமான நம்பிக்கைகளையும் கேள்வி கேட்க ஆரம்பிக்கிறார். கடவுள் எங்கே கடவுள் கானவில்லை என்று போஸ்டர் அடித்து ஒட்டுகிறார்.


இந்த நேரத்தில் TV  நிருபர் சந்திப்பு நிகழ்கிறது. இவரை பற்றி விசாரிக்க இவர் உண்மையை கூறுகிறார். அவள் நம்ப மறுக்கிறாள். பின்பு இவன் Remote தேடுவதை நம்ப , இவனை வைத்து நிகழ்ச்சிகளை தயாரிக்க முற்ப்படுகிறாள். இவளது வாழ்க்கை சாமியாரல் பாதிக்கப்பட்டதை  அறிந்து அந்த சாமியாரின் முகமுடியை அகற்ற அங்கு செல்லும் போது, இவன் தொலைத்த ரிமோட் அவரிடம் இருப்பதை கண்டு தன்னுடையது என்று கேட்கிறான். பின்பு சாமியார்களின் அருள் வாக்கு பொய் என்பதை பல சமயங்களில் நிருபிக்க , சாமியாரின் புகழ் மங்க ஆரம்பிக்கிறது.
சாமியார் இவரிடம் தொலைக்காட்சியில் நேரடி விவாதத்தில் இறங்க , நிருபரின் வாழ்க்கையில் தான் கூறியது நிகழ்ந்தது என்றும் இவளது திருமணம் நடக்கவில்லையென்றும் கூற, அது எப்படி நிகழாமல் போனது என்பதை நீருபிப்பதுடன் கதை முடிகிறது. இதை நிருபித்தால் அந்த ரிமோட்டை தருவதாக சாமியார் சவால் விட்டிருப்பதால் அது கிடைக்க, வின்வெளி கலத்தை மீண்டும் அழைத்து அவருடைய கிரகத்திற்க்கு செல்கிறார்.

மீண்டும் ஒரு வருடம் பூமிக்கு வேறு ஒருவருடன் வரும் போது, பூமியில் என்ன செய்ய கூடாது என்ன செய்ய வேண்டும் என்று சொல்வதுடன் படம் முடிவடைகிறது.

இந்த கதையை படம் முழுவதும் நகைச்சுவையாக சொல்லப்பட்டிருக்கிறது.

படம் பார்க்கும் போதே அன்மையில் வெளி வந்த Oh My God  இந்தி படம் நினைவுக்கு வருவதை தடுக்க முடியவில்லை.


Munna Bhai MBBS , Lage Raho Munna Bhai, 3 Idiots படங்களை இயக்கிய இயக்குனர் Rajkumar Hirani இயக்கிய படம். அதிகமாக யோசிக்க வேண்டியதில்லை. நகைச்சுவை படம். அலட்டிக்கொள்ளாமல் இயக்கியிருக்கிறார்.


அமிர்கான் மற்று சுசாந் ராஜ்புத் சிறப்பாக அவர்களது பாத்திரத்தை நடித்துள்ளனர். அனுஷ்கா வழக்கமான கதாநாயகியாக வந்துள்ளர். எந்த நடிகை வேண்டுமானாலு நடிக்கலாம். 


இசையும் பாடல்களும் சுமாராக உள்ளது. குத்து பாட்டு, வழக்கமாக இந்தி படங்களில் வரும் திருமண நிகழ்ச்சி பாட்டு, சோக பாட்டு போன்றவை இதில் இல்லை.


பெல்ஜியம் நகரம் ஓளிப்பதிவில் சிறப்பாக இருக்கிறது. டெல்லியிலும் சிறப்பாக ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


கடவுளை வைத்து பிழைப்பு நடத்துவதையும் மக்கள் ஏமாறுவதையும் நகைச்சுவையாக சொல்லியுள்ளார். இவரது கேள்விகளால் கோபப்படும் சாமியார் ‘ கடவுளை காப்பாற்ற “ எங்களுக்கு தெரியும் என்கிற போது, கடவுள் உன்னை காப்பாற்றுவாரா அல்லது நீ கடவுளை காப்பாற்றுவாயா என்கிறார். அதே சமயம் இந்த நம்பிக்கைகளை மனிதனை தற்கொலை முயற்சிகளிலிருந்து காப்பாற்றுகிறது என்றும் வாழ்வதற்க்கு ஒரு நம்பிக்கையை எற்ப்படுத்துகிறது என்றும் சொல்லி, சிக்கலில் மாட்டி கொள்ளாமல் தம்பிக்கிறார். 


அவசரப்பட்டு அவசியம் பார்க்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்றாலும், படத்தை பார்த்தால் ஏன் பார்த்தோம் என்று வருத்தப்பட தோன்றாது

 

Saturday 6 December 2014

அவதார மகிமை என்ன ?



 மைந்தர்கள் பன்னிரு வகை.

1.தன் மனைவியிடம் தனக்குப் பிறந்தவன் ஔரசன்   

2.   தன் மனைவியை தன் அனுமதியுடன் உயர்ந்தவர்களிடம்  அனுப்பி      கருவுறச்செய்து பெறப்பட்டவன் ஷேத்ரஜன்.
 
3. இன்னொரு குடும்பத்தில் இருந்து உரியமுறையில் தத்து எடுத்துக் கொள்ளப்பட்டவன் தத்தன்.

4. தன்னால் மனம் கனிந்து மகனாக ஏற்றுக்கொள்ளப்பட்டவன் கிருத்ரிமன்

5. மனைவி அவள் விருப்பப்படி இன்னொருவனைக் கூடிப்பெற்ற குழந்தை கூடோத்பன்னன்.

6.உரியமுறையில் காணிக்கை கொடுத்து நாடோடி ஒருவனிடம் மனைவியை அனுப்பி பெறப்பட்டவன் அபவித்தன்.

இந்த ஆறு மைந்தர்களும் அனைத்து வகையிலும் மைந்தர்களே. தந்தையின் உடைமைக்கும் குலத்துக்கும் உரிமை கொண்டவர்கள் அவர்கள். தந்தைக்கும் மூதாதையருக்கும் முறையான அனைத்து நீர்க்கடன்களையும் செய்ய உரிமையும் பொறுப்பும் கொண்டவர்கள். அவர்களை மைந்தர்களல்ல என்று விலக்க எந்நூலும் ஒப்புக்கொள்வதில்லை.

இன்னும் ஆறுவகை மைந்தர்கள் உள்ளனர்.
7.  மனைவி தன்னை மணப்பதற்கு முன் பெற்றுக்கொண்டவன் கானீனன்

8.தன் மனைவி தன்னைப் பிரிந்து சென்று செய்துகொண்ட இரண்டாவது திருமணத்தில் இன்னொருவனுக்குப் பிறந்தவன் பௌனர்ப்பவன்.
 
9.நான் உனக்கு மைந்தனாக இருக்கிறேன் என்று தேடி வந்தவன் ஸ்வயம்தத்தன்

10. மைந்தனாக விலைகொடுத்து வாங்கப்பட்டவன் கிரீதன்.

11.கர்ப்பிணியாக மணம்புரிந்துகொள்ளப்பட்ட மனைவியின் வயிற்றிலிருந்தவன் சகோடன். 

12. ஒழுக்க மீறலினால் தனக்கு பிற பெண்களிடம் பிறந்த பாரசரவன். 

அவர்களும் மைந்தர்களே. எக்குலத்தில் பிறந்தாலும், எத்தகைய ஒழுக்கமுள்ள பெண்ணிடம் பிறந்திருந்தாலும் தன் குருதியில் பிறந்த மகவு தன் மைந்தனே. அவனை ஏற்க மறுப்பது மூதாதையர் பழிக்கும் பெரும் பாவமாகும். இவர்கள் அனைத்து நீத்தார் கடன்களுக்கும் உரிமைகொண்ட மைந்தர்கள். மூதாதையரால் நீர் பெற்று வாழ்த்தப்படுபவர்கள். அவர்களுக்கு தந்தை மனமுவந்து அளிக்காவிட்டால் நாட்டுரிமையும் சொத்துரிமையும் இல்லை என்பது மட்டுமே வேறுபாடு

{ எழுத்தாளர் திரு.ஜெயமோகன் எழுதிவரும் மகாபாரத கதை வெண்முரசுவின் இரண்டாம் பாகமான மழைப்பாடல் பகுதியில் 73 அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. }

அரசன் பாண்டுவுக்கு பெண்களிடம் உடல் உறவு கொண்டு குழந்தை பெறும் பாக்கியம் இல்லை. எனவே குழந்தை வேண்டும் என்ற காரணத்தால் தனது மனைவி பிறர் மூலம் குழந்தை பெற்று கொள்ள அனுமதிக்கிறார்.

துர்வாச முனிவர் குந்திக்கு அவளது திருமணத்திற்க்கு முன்னரே ஒரு மந்திரத்தை உபதேசித்துள்ளார். இந்த மந்திரத்தை உச்சரித்து யாருடைய குழந்தை தனக்கு பிறக்க வேண்டுமென நினைத்து , யாருடன் உடல் உறவு கொண்டாலும் , அவருடைய விந்து உறவு கொள்பவனின் வழியாக உன்னிடம் சேர்ந்து உனக்கு குழந்தையாக பிறப்பார்கள் என வரமளிக்கிறார். 5 முறை மட்டுமே உபயோகிக்க அனுமதியளிக்கிறார்.

திருமணத்திற்க்கு முன் இந்த மந்திரத்தை சோதித்து பார்க்கும் பொருட்டு, மந்திரத்தை உச்சரித்து சல்லிய நாட்டு மன்னன் சல்லியனிடம் உறவு கொண்டு பிறந்த குழந்தை கர்ணன்.

திருமணத்திற்க்கு பின் அரசன் பாண்டுவிடம் இந்த மந்திர தன்மையை சொல்லி அவனது அனுமதியுடன் மூன்று குழந்தைகளை பெற்று கொள்கிறாள்.

தர்ம தேவனை நினைத்து பெற்றுக்கொண்ட குழந்தை தர்மன்
வாயு தேவனை நினைத்து பெற்றுக்கொண்ட குழந்தை பீமன்
இந்திர தேவனை நினைத்து பெற்றுக்கொண்ட குழந்தை அர்ஜூனன்
பாண்டுவின் இரண்டாவது மனைவி மாத்ரிக்கு இந்த மந்திரத்தை குந்தி சொல்லி கொடுத்து அவளையும் இதே போல குழந்தை பெற்று கொள்ள சொல்கிறார்கள்.
மாத்ரி அஸ்வின் தேவர்களை நினைத்து பெற்றுக்கொண்ட குழந்தகள் நகுலன் மற்றும் சகாதேவன் ( இரட்டை குழந்தைகள் )

இதற்கு பிறகு பாண்டுவும் மாத்ரியும் இயற்க்கையான முறையில் உடல் உறவு கொள்ளும் போது பாண்டு இறந்து விடுகிறான்.

பாண்டு என்ற அரசனும் குந்தி என்ற அரசியும் இயற்க்கையான முறையில் உடல் உறவு கொண்டு பெறாத குழந்தைகளை இளவரசர்களாக அங்கீகரித்து அதில் மூத்தவன் தருமனுக்கு அரசுரிமை கோரியுள்ளனர்.

ஆனால் பாண்டுவின் அண்ணன் அரசர் திருதஷ்டிரர் அரசி காந்தாரியும் இயற்கையான முறையில் உடல் உறவு கொண்டு பெற்ற குழந்தை துரியோதனனுக்கு இளவரசு பட்டமும் அரசுரிமையும் மறுக்கப்பட்டுள்ளது.
முறையாக பிறக்காத குழந்தை தருமனுக்கு அரசுரிமை பெற்று தர விஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணர் பல வித நியாயங்களை (அதர்மங்களை ) கூறி மாபெரும் யுத்தத்தை நடத்த உதவியுள்ளார்.

தருமனுக்கு ஏன் முடி சூட்ட வேண்டும் ஏன் துரியோதனனுக்கு மூடி சூட்ட கூடாது என்பதற்க்கு பலரும் பல விதமான காரண காரியங்களை கூறி விவாதிக்கின்றனர்.

இந்த கதையை மாபெரும் காப்பியம் என்று கூறி பல நூற்றாண்டுகளாக படித்து போற்றி வருகின்றனர்.

இன்றைய சமூகத்தில் இவ்வாறு முறையாக பிறக்காத குழந்தைகளுக்கு ஒரு பொதுப்பெயர் மட்டுமே உள்ளது.

ஒருவனுக்கு ஒருத்தி என்ற சமூக கட்டுப்பாட்டில், கணவன் மூலமாக குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் குழந்தையை தத்து எடுத்துக்கொள்ள மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.

தானே இயற்கையான முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் பெண் கணவனை விவாகரத்து செய்து விட்டு மறுமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக்கொள்ள சமூகத்தாலும் சட்டத்தாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

கணவனும் மனைவியும் பிரியாமல் தங்களுக்கான குழந்தையை பெற்றுக்கொள்ள நவீன விஞ்ஞான முறை சில வழிகளை கண்டுப்பிடித்துள்ளது. 

அவர்களது விந்து முட்டைகளை இனைத்து மனைவியின் கருவறையிலிருந்தோ அல்லது மற்ற பெண்ணின் கருவறையிலிருந்தோ குழந்தை பெற்றுக்கொள்ளலாம்.

விந்துவையோ அல்லது கரு முட்டையையோ விலைக்கு வாங்கி சோதனை சாலையில் கருவுற செய்து மனைவியின் கருவறையிலிருந்தோ அல்லது மற்ற பெண்ணின் கருவறையிலிருந்தோ குழந்தை பெற்றுக்கொள்ளலாம்.

அதர்மம் எப்போதெல்லாம் தலை விரித்து ஆடுகிறதோ அப்பொதெல்லாம் நான் அவதரிப்பேன் என்பது விஷ்ணுவின் அவதாரத்துக்கு சொல்லப்படுகிறது.

அண்ணன் தம்பிகளான கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் நடக்கும் அரசுரிமை பகைமை அதர்மமா ? இதற்கு . முன் சகோதரர்களுக்கிடையே இவ்வாறு அரசுரிமை போர் நடந்தில்லையா ? இந்த அரசுரிமை போருக்கு ஒரு சார்புக்கு ஆதரவளிக்க விஷ்ணு அவதரிக்க வேண்டுமா ? அப்படியே அது மாபெரும் அதர்ம செயல் என்று கருதி அவரது அவதாரத்துக்கு நியாயம் கற்ப்பித்தாலும், அவரது அவதாரத்துக்கு பிறகு எத்தனையோ அரசுரிமை போர்கள் நடந்துள்ளது. அப்போதெல்லாம் மீண்டும் மீண்டும் ஏன் அவர் அவதாரம் எடுக்கவில்லை ? அவதாரம் எடுத்து அதர்மத்தை ஒழித்து தர்மத்தை நிலைநாட்டிய பிறகும் அது மீண்டும் மீண்டும் தொடர்ந்தால் அந்த அவதாரத்துக்கு என்ன பொருள் ? 

கடவுளே நேரில் வந்து தீர்த்து வைத்த பிரச்சனை மீண்டும் மீண்டும் நடக்கிறது என்றால் மனித குலம் கடவுளின் நியாய தர்மங்களை ஏற்க்கவில்லையென்று தானே பொருள்படுகிறது. இப்படிப்படிட நிலையில் இந்த அவதார கதைகளை நம்ப தான் வேண்டுமா ?

கலியுகத்தில் மீண்டும் அவதரிப்பேன் என்று கூறியுள்ளார். தற்போது நடந்து வரும் கலியுகத்தில் எத்தனையோ அதர்மங்கள் நடைப்பெருகின்றன. இன்னமும் மிகப் பெரிய அதர்ம செயல் நடைப்பெறும் வரை ஏன் காத்திருக்க வேண்டும். கலியுக அவதாரத்தில் உலகமே அழிந்தி விடும் என்று கூறும் போது, இப்போதே அவதரித்து அதர்மங்களை அழித்து மனித குலத்தை அழித்து மீண்டும் எதை உருவாக்க வேண்டுமென நினைக்கிறரோ அதை நிறைவேற்ற வேண்டியது தானே ?  

இதிகாசங்களிலிருந்து காப்பியங்களிலிருந்தும் நல்லதை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் இவைகளை அதிகமாக ஆராய கூடாது என்பதும் சரியான வாதம் அல்ல.