Saturday 29 March 2014

சௌராஷ்ட்ரா சமூகம் - பெண் பார்க்கும் படலம்

சௌராஸ்ட்ரா பெண் பார்க்கும் படலம்::


சௌராஷ்ட்ரா மொழி இன சமூகத்தில் இன்றைக்கு ஆண்பெண் இருவருக்குமே திருமணம் நடைபெறுவதில் காலதாமதம் ஆகிறது

காதலித்து திருமணம் செய்ய நினைப்பவர்களுக்கும் திருமணம் தள்ளி போகிறது. நிறைய காரணங்கள் இருக்கிறது.

பெற்றோர் பார்த்து பேசி திருமணம் செய்ய நினைக்கும் போதும், திருமணம் தள்ளி போகிறது. பல சமயங்களில் வயது 30க்கும் மேலாகிவிடுகிறது.

திருமணம் செய்து கொள்வது எதோ நாட்டிற்க்கும் வீட்டிற்க்கும் சேவை செய்வதற்க்காக அல்ல. இளமையில் இயற்கை எற்படுத்தும் காம உணர்ச்சியை அனுபவிப்பதற்க்கு மட்டுமே. இந்த மொத்த திருமண உறவு ஏற்படுத்தி கொள்ள நிகழும் நிகழ்வுகளில் பெண் பார்க்கும் படலம் முக்கியமானது. ஆண் தரப்பிலிருந்து இந்த பெண் பார்க்கும் படலத்தை சற்று பார்ப்போம்.

தனக்கு வாய்க்க போகும் மனைவி எப்படியிருக்க வேண்டும் என்று பல நினைவுகள் இருக்கும். அதே போல பெண்ணுக்கும் பல விருப்பங்கள் இருக்கும் என்பதை ஆண்கள் உணர வேண்டும். பெண்கள் வெளிப்படையாக விருப்பங்களை சொல்லவிட்டாலும் அவர்களுக்கு பல கனவுகள் உண்டு. அதில் எல்லோரையும் போல முதலில் கண்ணில் படுவது தன்னை பார்க்க வந்திருக்கும் ஆணின் தோற்றத்தை வைத்தே அவள் எடை போட்டுவிடுவாள்.

பெண் ஆணை நிராகரிக்க கூறும் காரணங்களில் முக்கியமானது

பாடகர்/பிரசங்கர்/அம்மாஞ்சி போல இருக்கிறார் என்பது - (பௌதுல் மாதிரி)

பழைய சோறு போல இருக்கிறார்.(சில்லோ பாத் மாதிரி)

வழ வழ கொழ கொழ மாதிரி (பொங்கல் மாதிரி)

வடித்த கஞ்சி/ சோபை இழந்த முகம்,முகத்தில் பிரகாசம் இன்மை (வெல பேஸ்)
மந்த புத்திகாரன் (தெலிவ் நீ)

இது போன்று பலவித வார்த்தைகளால் மணமகனை வர்ணித்து நிராகரிக்கிரார்கள்.

பெண் பார்க்க போகும் போது ஆண் எப்படி செல்ல வேண்டும்.

தலையிருந்து ஆரம்பிப்போம்

உங்கள் முக வெட்டுக்கு ஏற்ப தலைமுடி வெட்டியிருக்க வேண்டும். எது சரியானது என்பதை நண்பர்களிடமிருந்து கேட்டுக்கொள்ள வேண்டும். பெண் பார்க்கும் படலம் ஆரம்பிக்கும் 6 மாதத்திற்க்கு முன்பிருந்தே, வெவ்வேறு வகையில் தலைமுடியை வெட்ட ஆரம்பிக்க வேண்டும். அம்மா அப்பா பொறுக்கிதனமாக இருக்கிறது என்று கூறினால், அது இந்த காலத்திற்க்கு ஏற்றது என்பதை உணர வேண்டும். தங்கை / அக்கா நன்றாக இருக்கிறது என்று கூறும் படியிருக்க வேண்டும். இவர்களின் இளம் வயது கணவர்களூம் நன்றாக இருக்கிறது என்று சொல்ல வேண்டும். நண்பர்களும் நன்றாக இருக்கிறது என்று சொல்ல வேண்டும். ஆறு மாதத்திற்க்கு மாதம் ஒரு முறை வெவ்வேறு விதமாக தலைமுடி வெட்டி இது போன்ற கருத்து கனிப்புக்களை நடத்த வேண்டும். நீங்களும் கண்ணாடி முன் நின்று எது உங்களது முகவெட்டுக்கு சரியாக இருக்கிறது என்று கவனிக்கவேண்டும்.

இப்படி முகவெட்டுக்கு ஏற்ப தலைமுடியை வெட்டிய பிறகு, பெண் பார்க்க போகும் அன்று, ஒரு மணி நேரத்திற்க்கு முன்பு தலைக்கு ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும்.  பின்பு ஈர தலையில் ஜெல் (gel) போட்டு தலைமுடியை வாரவேண்டும். ஜெல் உபயோகிக்கும் பழக்கம் இல்லையென்றால், சிறிதளவு தேங்காய் எண்ணை தடவ வேண்டும். தலையை படிய வார கூடாது. வகிடு எடுத்து, முன் பகுதியில் (பழைய ஹீரோ போல) கோபுரம் வைக்க கூடாது. வகிடு எடுக்காமல் தலை முடி அனைத்து பக்கத்திலும் பரவலாக இருக்கும் படி பார்த்து கொள்ளவேண்டும். பொதுவாக ஆண்களுக்கு இருபக்கமும் சற்று வழுக்கைமுடி உள்நோக்கி இருக்கும். குறிப்பாக வகிடு எடுக்கும் பக்கம் முடி உள்வாங்கியிருக்கும் ) இந்த வழுக்கையை மறைக்கும் படி தலை வார வேண்டும். வலுக்கட்டாயமாக கொஞ்சம் முடியை வழுக்கையை மறைக்க கொண்டு வரக்கூடாது. இயற்கையாக இருப்பது போல வகிடு எடுக்காமல் தலைமுடி அனைத்து பக்கமும் பரவலாக இருக்கும் படி பார்த்துகொள்ள வேண்டும். சிலருக்கு முன்பகுதியில் நன்றாக வழுக்கை இருக்கிறது. அதை ஒன்றும் செய்ய இயலாது. அதை கஷ்டப்பட்டு மறைக்க வேண்டிய அவசியமில்லை. அந்த குறையை வேறு வழிகளில் நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

அடுத்து, மீசை. இதையும் உங்கள் முக வெட்டுக்கு ஏற்ப தலைமுடி வெட்டும் போது மாற்றி மாற்றி செய்து பார்த்து மேலே கூறியபடி கருத்து கணிப்பு நடத்த வேண்டும். மீசை நிச்சியம் வைக்க வேண்டும். மீசை இல்லையென்றால் அவண் காலட்சேபம் செய்பவன் போல் இருக்கிறான் (பௌதுல் மாதிரி) என்று நிராகிரிக்கப்படுவான். சிலர் பொட்டை போல (பெண் போல) இருக்கிறான் என்று நிராகரித்து விடுவார்கள்.

அடுத்து தாடி. முக வெட்டுக்கு ஏற்ப நன்றாக தாடி வைக்கலாம். குறுந்தாடியிலேயே பல வகை உண்டு. உங்கள் முக வெட்டுக்கு ஏற்ப தலைமுடி வெட்டும் போது இதிலும் பல வகை செய்து பார்த்து, கருத்து கணிப்பு செய்திருக்க வேண்டும். அல்லது நன்றாக அன்று ஷேவ் செய்திருக்க வேண்டும். குளிப்பதற்க்கு முன்பு கடையில் திருத்தமாக ஷேவ் செய்து , மீசையை ஒழுங்குபடுத்தி கொள்ள வேண்டும். முடிந்தால், கடைக்காரரிடம் உண்மையை சொல்லி சரியாக செய்ய சொல்ல வேண்டும்.  தாங்களாகவே செய்து கொண்டு அகோரம் செய்து கொள்ள கூடாது.

அடுத்து உங்களுக்கு உடல் முழுவதும் நிறைய முடி இருந்தால்,, அரை கை சட்டை போட்டால், கை முட்டி வரை சட்டை இருக்க வேண்டும். முழுக்கை சட்டையும் அணியலாம். அது நீங்கள் பெண் பார்க்க போகும் நாள் வெயில் காலமாக இருந்தால் முழுக்கை சட்டை அணிய கூடாது. நிச்சியமாக பெண் உங்களை பைத்தியகாரன் என்று நினைப்பாள். கையில் இருக்கும் முடி தெரியலாம். சட்டையில் முதல் பட்டனை திறந்து விட்டிருக்க வேண்டும். நெஞ்சில் இருக்கும் முடியும் தெரிய வேண்டும். சில பெண்களுக்கு முடி இருப்பது பிடிக்கும். சிலருக்கு பிடிக்காது. எனவே அவர்கள் முடிவெடுக்க வாய்ப்பு ஏற்ப்படுத்த வேண்டும்

அடுத்து புருவங்களில் உள்ள முடி. அது ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமாக இருக்கும். ஆனால், அதை சீர் திருத்தம் செய்ய வேண்டும். சலூன் கடையில் திரட்டிங் (threating) செய்து கொள்ள வேண்டும். பெண்களை போல வில் போல வளைவாக இருக்க கூடாது.  திருத்தமாக இருக்க வேண்டும்.


கை விரல் நகம் , கால் விரல் நகம் நன்றாக வெட்டியிருக்க வேண்டும். உங்களுக்கு சற்று நிளமாக நகம் வைத்து கொள்ள வேன்டுமென்றாலும் பரவாயில்லை. ஆனால் நகம் சுத்தமாக இருக்க வேண்டும். இவை பெண்ணின் கண்ணில் படும் பகுதி

எனவே, உங்கள் முக வெட்டுக்கு ஏற்ப தலைமுடியிருக்க வேண்டும் ; புருவம் ஒழுங்குபடுத்தியிருக்க வேண்டும். மீசை டிரிம் செய்திருக்க வேண்டும். தாடி இல்லாமல் நன்றாக வழவழப்பாக இருக்க வேண்டும். அல்லது குறுந்தாடி வைத்திருக்கவேண்டும். ஷேவ் செய்ய சோம்பேறிதனம் பட்டுக்கொண்டு இரண்டு மூன்று நாள் தாடியுடன் போக கூடாது.

அடுத்தது முகம். பொதுவாக  20 வயதுக்கு மேல் முகத்தில் பருக்கள் வருவதில்லை. அப்படியெ வந்திருந்தாலும், பெண் பார்க்க போகும் சமயத்தில் பருக்கள் இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். இயற்கையான முறையில் அதை நீக்க வேண்டும். அழுத்தி பிதுக்கி வெளியேற்றி முகத்தை அசிங்கம் செய்து கொள்ள கூடாது. பருக்களால் முகத்தில் ஏற்கனவே தழும்புகள் இருந்தால்  அதை மறைக்க வேண்டிய அவசியமில்லை. இது ஆண்மைக்கு ஒரு சான்று. பருக்களின் வடுக்கள் முகத்தில் இல்லாமல் முகம் வழுவழுப்பாக இருந்தால், அவண் குழந்தை பையன் போல் இருப்பான் . பெண்கள் இதை சாக்லெட் பேபி மற்றும் குழந்தை பையன் என்று சொல்வார்கள். எனவே, முகத்தில் வயதுக்கேற்ற முதிர்ச்சி இருக்கவேண்டும். பருக்களே நீங்கள் பருவம் அடைந்திவிட்டீர்கள் என்பதை அறிவிக்கும் சான்று.

முதலில் நெற்றியில் திருநீறு இடக்கூடாது. ஒரு சிலர் திருநீறு இட்டு குங்கும பொட்டு வைத்துக்கொண்டும் செல்கிறார்கள். இது தான் பாகவதர் போல் காட்டுகிறது. பொதுவாக, பெண் பார்க்க செல்லும் போது, சாமி கும்பிட்டுவிட்டு திருநீறு இட்டுகொள்ள வீட்டில் உள்ள பெரியவர்கள் சொல்வார்கள். உங்களுக்கும் அது பழக்கமாக இருக்ககூடும். எனவே சாமி கும்பிட்டுவிட்டு திருநீறு இட்டு கொள்ளுங்கள். ஆனால், பெண் வீட்டில் நுழையும் போது கலைத்து விடுங்கள். திருநீறு வைத்தது போலவும் இருக்கவேண்டும் வைக்காதது போலவும் இருக்க வேண்டும்.

நீங்கள் எந்த நிறமாக இருந்தாலும் பவுடர் போட்டால் நன்றாக துடைத்து விட வேண்டும். வாசனை மட்டும் இருக்க வேண்டும். முகத்தில் பவுடர் அப்பட்டமாக ஒட்டியிருக்க கூடாது. முகத்தில் பொலிவை தர பவுடர் இருக்கலாம். ஆனால், உங்கள் கருப்பு நிறத்தை  மாற்றும் முயற்சியாக சுவருக்கு வெள்ளை அடித்தது போல இருக்ககூடாது. இயற்கையாக இருக்க வேண்டும். இப்போதெல்லாம க்ரீம் வருகிறது. அதை லேசாக தடவலாம். எக்காரணம் கொண்டும் இயற்கை நிறத்தை மாற்ற முயற்சி செய்ய கூடாது.

நீங்கள் கண்ணாடி அணிபவராக இருந்தால், நிச்சியமாக அணிந்து செல்ல வேண்டும். சிலர் அதை தவிர்ப்பார்கள். கண்பார்வை குறைவாக இருக்கிறது என்று பெண் வீட்டார் நினைத்துவிடுவார்கள் என்று அதை தவிர்க்கிறார்கள். அது தவறு. உங்கள் முக வெட்டிற்க்கு ஏற்ப கண்ணாடியை தேர்வு செய்ய வேண்டும். PHOTOCROMATIC LENS கண்ணாடியை அணிய வேண்டும். வெளியில் வெய்யிலில் போகும் போது கண்ணாடியின் நிறம் மாறி கூலிங் கிளாஸ் போல் இருக்கும். கூலிங் கிளாஸ் போடுகிறேன் என்று வெல்டிங் தொழில் செய்பவர்கள் போடுவது போல கூலிங் கிளாஸ் போடக்கூடாது. பார்வை குறைவுக்காக நீங்கள் கண்ணாடி போடுபவராக இருந்தால் பெண் பார்க்கும் படலம் முழுவதும் கண்ணாடி அணிந்திருக்கவேண்டும். கூலிங் கிளாஸ் போட்டிருந்தால், பெண் பார்க்க போயிருக்கும் இடத்தில் உட்கார்ந்த பிறகு , கண்ணாடியை கழட்டி சட்டையில் முன்பக்கம் தொங்க விடவேண்டும். இதன் மூலம் மார்பின் மேல் பகுதி வெளியில் தெரியும். நீங்கள் நல்ல உடல் கட்டுடன் இருப்பவராக இருந்தால் கண்ணாடியை சட்டையில் தொங்கவிடுவதால், சட்டை ஒருபக்கம் சிறிதளவு தொங்கி உங்கள் மார்பழகை எடுப்பாக காட்டும். முக்கியமாக கழுத்திலும், மார்பின் முன்பகுதியிலும் சுண்ணாம்பு அடித்திருப்பது போல பவுடர் அடித்திருக்க கூடாது. குறிப்பாக மார்பின் மேல் பகுதியில் முடி அதிகமாக இருப்பவர்கள் பவுடரை முடியின் மேல் இருப்பதை தவிர்க்க வேண்டும்.

ஒரு சிலர் காதில் வளையம் அல்லது சிறிய தோடு போல போட்டுக்கொள்கிறார்கள். நீங்கள் தொடர்ந்து போடுபவராக இருந்தால் பிரச்சனை ஒன்றும் இல்லை. எப்போதாவது போடும் நபராக இருந்து, பெண் பார்க்க போகும் அன்று போட விரும்பினால், சரியான காதில் போட வேண்டும். வலது காதில் போட்டால், அவர் ஓரின சேர்க்கையாளர் என்று இனம் கானப்படுவார். எனவே அவசரத்தில், தவறான காதில் அணிந்து சென்று நீங்கள் ஓரினசேர்க்கையாளர் என்று தவறாக அறிமுகமாகி அவமானப்படவேண்டாம்.

அடுத்தது சட்டை. நமது நாட்டில் டி சர்ட் போட்டுக்கொண்டு பெண் பார்க்க அழைத்து செல்வதில்லை. எனவே போடும் சட்டை நாம் போட்டிருக்கும் பேண்டுக்கு பொருத்தமானதாக இருக்க வேண்டும். நிச்சியமாக பஞ்சு மிட்டாய் கலரிலோ அல்லது ஒற்றை நிறத்தில் டார்க் கலர் போடக்கூடாது. மிதமான நிறத்தில், கட்டம் போட்ட சட்டையோ அல்லது கோடு போட்ட சட்டையோ அல்லது வெளிர் நிறத்திலோ சட்டை போட்டிருக்க வேண்டும்.  குறிப்பாக லேட்டஸ்டு பேசன்னாக இருக்கவேண்டும். இப்பொதெல்லாம், சட்டையின் காலரும், பட்டன் உள்ள பகுதியும் வேறு நிறத்திலும் சட்டை வேறு நிறத்திலும் இருக்கிறது. நீங்கள் நல்ல விலை உயர்ந்த பிராண்டட் சட்டை போட்டிருந்தால், அந்த லேபில் தெரியும் படி  அதை வெளிக்காட்டி கொள்ள வேண்டும்.

நீங்கள் மெலிந்த உடல்வாகு, அல்லது உடற்பயிர்ச்சி செய்து நல்ல உடல்கட்டுடன் இருந்தால, SLIM FIT சட்டை , உடலோடு ஒட்டிய சட்டை போடவேண்டும். உங்கள் உடல் அமைப்பு உங்கள் சட்டைக்கு வெளியே தெரியவேண்டும். உதாரணமாக உங்கள் முலையின் வடிவம் சட்டைக்கு வெளியே கவர்ச்சியாக தெரியும்படி பார்த்துகொள்ள வேண்டும். இவர்கள் முழுக்கை சட்டை போடுவதை தவிர்க்க வேண்டும். SLIM FIT  போடுகிறேன் என்று அதிக இருக்கமாக போட்டு இரண்டு பட்டன்களுக்கு இடையே இடைவெளி ஏற்படுவது போல இறுக்கமாக போடகூடாது.

சுமாரான உடல் கட்டு உடையவராக இருந்தால், முழுக்கை சட்டை போடலாம்.  தொப்பை இருந்தால், சட்டையை IN  செய்யகூடாது. பேண்டுக்குள் சட்டையை நுழைத்திருந்தால், உங்கள் தொப்பை அதிகமாக தெரியும். அதற்க்காக தொப்பை தெரியகூடாது என்பதற்க்காக தொள தோள என சட்டை போடக்கூடாது. சட்டையில் கைபகுதியை சிறிதளவு மடித்து விட்டிருக்கவேண்டும். அதாவது நீங்கள் கட்டியிருக்கும் வாட்ச் தெரியும் படி இருக்கவேண்டும். வாட்சை மறைத்து சட்டையின் கைப்பகுதியில் இருக்கும் கடைசி பட்டன் வரை போட்டிருக்ககூடாது. ஒரு சிலர் பெண் பார்க்க போகும் அன்று புது சட்டை போட்டுக்கொண்டு போவார்கள். அது நல்லதல்ல. அப்படியே போட்டிக்கொண்டு போனாலும் , புது சட்டையில் உள்ள லேபில்கள அனைத்தையும் கவனமாக நீக்க வேண்டும். அதில் உள்ள குண்டுசீகளை நீக்க வேண்டும். கழுத்து காலரில் ஒரு அட்டை இருக்கும். இவைகளை அனைத்தையும் நீக்கி நன்றாக உதறி போட்டுக்கொள்ள வேண்டும். கூடுமான வரை மடித்து வைத்த சட்டையில் உள்ள கோடுகள் இல்லாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். பழைய சட்டையை இஸ்திரி போட்டு போட்டுக்கொண்டாலும், இஸ்திரி மடிப்பினால் விழும் கோடுகள் இருக்ககூடாது.

அடுத்தது பேண்ட். கூடுமான வரை நல்ல FITTING உள்ள ஜீன்ஸ் அணிவது நல்லது. ஜீன்ஸ் அல்லது வேறு பேண்ட் போட்டிருந்தாலும் சரியான விதத்தில் பொருத்தமாக இருக்கவேண்டும். லூசாக இருந்து அதை சரிசெய்ய இருக்கமாக பெல்ட் போட்டிருக்க கூடாது.

ஜீன்ஸ் பேண்ட் போட்டால், நல்ல பிராண்ட்ட் ஜீன்ஸ் போட வேன்டும். அதற்கு முன்பு அதன் உள்ளாடை சரியாக இருக்க வேண்டும். நிச்சியமாக உள்ளே பாக்ஸர் அல்லது பட்டை போட்ட டவுசர் போடகூடாது. பட்டையான எலாஸ்டிக் உள்ள ஜட்டி போட வேண்டும். குறிப்பாக ஜீன்ஸ் போட்டால், இறுக்கமான ஜட்டி போட வேண்டும்.  ஜீன்ஸ் பேன்ட் போட்டால் இடிப்பு எலும்பு இருக்கும் இடத்தில் போட வேண்டும் ஜீன்ஸ் பேன்ட் தொப்புளுக்கு மேலே போடக்கூடாது. ஜட்டி மற்றும் ஜீன்ஸ் சரியாக போடவில்லையென்றால், உட்கார்ந்திருக்கும் போது கொட்டை மற்றும் உங்கள் தண்டு ஒருபக்கமாக ஒதுங்கி புடைப்பாக வெளிக்காட்டும். இதை போல வேறு ஒரு அவமானம் இருக்காது. நீங்கள் சோபாவில் உட்கார்ந்தாலும் சரி, சேரில் உட்கார்ந்தாலும் சரி அல்லது தரையில் உட்கார்ந்தாலும் சரி, உட்கார்ந்த பிறகு, தொடை பகுதியில் பேன்டை கீழிறக்கி விட்டு, நடுப்பகுதி சமமாக இருக்கிறாத என சரிபார்த்துகொள்ள வேண்டும். உங்கள் ஆண் குறி ஏதேனும் ஒருபக்கம் ஒதுங்கியிருந்தால், எழந்து சரிசெய்து கொண்டு உட்கார வேண்டும். ஜீப் போட்டுள்ளீர்களா என சரிபார்த்து கொள்ள வேண்டும். சேரில் உட்கார்ந்திருக்கும் போது பேண்ட் கனுக்கால் வரை இருக்கவேண்டும்.

உடை நன்றாக இருக்கிறது என்பதற்க்காக போடக்கூடாது. அது உங்களுக்கு பொருத்தமாக இருக்குமா என்று யோசித்து போட வேண்டும்.

அடுத்து செருப்பு. பேண்ட் போட்டிருந்தால், நல்ல செருப்பு அணிய வேண்டும். சீக்கிரமாக கழட்டுவதற்க்கும் மாட்டுவதற்க்கும் வசதியாக இருக்க வேண்டும். ஷூ போட வேண்டும் என்ற அவசியமில்லை. அங்கு சென்று கழட்டவும் மாட்டவும் நேரமாகும். ஒரு வேளை துவைக்காத சாக்ஸ் போட்டுக்கொண்டு போனால் நாற்றமடிக்கும். இவைகளை தவிர்க்க ஷூ போடாமல் நல்ல செருப்பு போட்டுக்கொண்டு போனால் போதுமானது.

கழுத்தில் அதிக ஆடம்பரமில்லாமல் ஒரு செயின் போடலாம். விரலில் ஒரு மோதிரம் போடலாம். ராசிக்கல் மோதிரம்மென்று பல வண்ணங்களில் பல விரல்களில் மோதிரங்கள் போடக்கூடாது. அது தன்னம்பிக்கையின்மையின் வெளிப்பாடு. உங்கள் திறமையையும், உழைப்பையும் நம்பாமல், அதிர்ஷ்டத்தை நம்புபவர் என்பதை வெளிக்காட்டும். வாட்ச் அணிந்திருக்கவேண்டும். தோல் வைத்த வாட்ச் கட்டகூடாது. பர்மாபஜாரில் வாங்கிய கேவலமான கலரில் உள்ள வாட்ச் கட்டகூடாது. கேவலமான வாட்ச் கட்டுவதை விட கட்டாமல் இருக்கலாம்.

கையில் செல்போன் வைத்திருக்கவேண்டும். உங்கள் வசதிக்கேற்ப்ப வைத்திருக்கலாம். உங்கள் விலையுயர்ந்த செல்போனை காண்பித்து சீன் போட வேண்டும் என நினைத்தால்,  பெண் பார்க்க்கும் நேரத்தில், உங்கள் நண்பன் போன் செய்வதற்க்கு ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும். ரிங் டோன் நல்லதாக இயற்கையானதாக இருக்கவேண்டும். சினிமா பாட்டுக்கள், பக்தி பாடல்கள் அல்லது வசனங்கள் போன்றவை இருக்க்கூடாது.

போன் பேச வெளியில் செல்ல வேண்டும். அந்த சமயம் பெண் இருக்குமிடத்தை நோட்டமிட்டுக்கொண்டே செல்ல வேண்டும்.



பெண் பார்த்து விட்டு எழுந்து வரும் போது  செல்போனை உட்கார்ந்திருந்த இடத்தில் மறந்து வைத்து விட்டது போல அங்கேயே விட்டு விட்டு வரவும். ஆனால், வாசலுக்கு வரும் போது சொல்போனை கானவில்லை என்று ஒரு பிட்டு போட வேண்டும். அப்போது எல்லோரும் தேடுவார்கள். பொதுவாக பெண் வழியனுப்ப வாசலுக்கு வந்திருக்கமாட்டாள். எனவே முதலில் விட்டினுள் அவள் தான் தேடுவாள். அப்போது உங்களுடன் வந்திருப்பவர்களிடம் எனது நம்பருக்கு போன் செய்யுங்கள் எங்கிருக்கிறது பார்க்கலாம் என்று உங்கள் போன் நம்பரை நிதானமாக உரக்க சொல்ல வேண்டும். இரண்டு முறை சொல்ல வேண்டும். போன் நம்பரை அவள் கவனிக்கிறாளா என்பதையும் கவனியுங்கள். அவள் கையில் கிடைத்து அவள் எடுத்து கொடுத்தால், வாங்கிகொண்டு ஒரு THANKS சொல்ல வேண்டும். முன்னால் சிறிது நடந்து மீண்டும் திரும்பி பார்த்து ஒரு முறை THANKS  சொல்ல வேண்டும். இவையெல்லாம் உங்களுக்கு பெண் பிடித்திருந்தால் மட்டுமே செய்ய வேண்டும்.
 

டியோடரன்ட் மற்றும் ஃபெர்ஃப்யும் இரண்டும் வெவ்வேறு. டியொடரன்ட் குளித்தவுடன் வெற்றுடம்பில் அடித்துகொள்வது. ஃபெர்ஃபுயும்  சட்டை மீது தெளித்து கொள்ளும் சென்ட் . பலர் தவறுதலாக டியோடரன்ட்டை சட்டை மீது அடித்துகொள்கிறார்கள். அந்த தவறை செய்யாதீர்கள்.

பெண் பார்க்கும் போது, மற்ற எல்லோரும் கீழே உட்கார்ந்திருக்கும் போது, நீங்கள் மட்டும் சேரில் உட்காரதீர்கள்.

பெண்ணை பார்க்க்கும் போது கூச்சப்படாமல், நேருக்கு நேர் பாருங்கள். நீங்கள் எந்த விதமாக உங்களை தயார்படுத்தி கொண்டு வந்துள்ளீர்களோ அவ்வாறே பெண்ணும் அவனை தயார்படுத்திகொண்டிருப்பாள். எனவே, புற தோற்றத்தை வைத்து அவளை ஓரளவு எடை போட முடியும். (பெண்ணின் மனதை ஆண்டவனால் கூட அறிய முடியாது எனவே அவள் மனதை அறிந்துகொண்டேன் என்று இறுமாப்பு அடைய வேண்டாம்)

பெண் வீட்டார் கேட்கும் கேள்விகளுக்கு நேரடியாக சுருக்கமாக பதில் சொல்லுங்கள். சில பொய்களை சொல்லும்படி உங்கள் வீட்டார் உங்களை தயார்படுத்தியிருப்பார்கள். அதை தவிர்த்து விடுங்கள். பெண் வீட்டாரில் சிலர் தேவையற்ற விசயங்களை உங்களிடம் பேசுவார்கள். குறிப்பாக அரசியல்,  ஜாதி பழக்க வழக்கங்கள். இவைகள் உங்களுக்கு விருப்பம் இல்லையென்றால் நேரடியாக தவிர்த்து விடுங்கள். எல்லாவற்றுக்கும் ஆமாம் சாமி போட்டுகொண்டு இருக்காதீர்கள். கலகலப்பாக பேசுங்கள்.

காபி பலகாரம் கொடுத்தால் அரக்க பரக்க சாப்பீடாதீர்கள். சிறிதளவு சாப்பிடுங்கள். சட்னி சாம்பார் குழைத்து அடிக்க கூடாது. கை கழுவ செல்லும் போது பெண் எங்கே இருக்கிறாள் என்று பார்த்து ஒரு புன்னகையை உதிர்க்கவேண்டும்.



கை கழுவும் போது நன்றாக குனிந்து கை கழுவ வேண்டும், உங்கள் சட்டை IN செய்திருந்தாலும் செய்யாவிட்டாலும், குனிந்து கை கழுவும் போது முதுகு பக்கம் சட்டை மேல் நோக்கி போக வேண்டும். அப்போது பேண்டுக்கும் சட்டைக்கும் இடையே இடைவெளி உண்டாகும். அப்போது நீங்கள் அணிந்திருக்கும் ஜட்டியின் பட்டை தெரியும்.  முதுகின் கீழ் பகுதியும் ஒரு அங்குலம் வரை தெரியும். இது பெண் பார்வையில் படும் படி அமைந்தால் நல்லது. பெண் வீட்டார் யார் கவனித்தாலும் நல்லது தான். பெண்ணின் அம்மா கவனித்து விடுவார் என கூச்சப்படவேண்டியதில்லை. இப்போதெல்லாம் அவர்கள் தான் பையன் நாகரீகமாக இருக்கவேண்டும் என ஆசைப்படுகிறார்கள். பெண்ணின் அப்பா போடும் பட்டை போட்ட டவுசரை பார்த்து பார்த்து ஒரு வெறுப்பில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். இது சற்று அதிகமாக எழுதி விட்டதாக உங்களுக்கு தோன்றலாம். ஒரு பெண் எழுத்தாளர், ஒரு ஆணை எப்படியெல்லாம், எங்கெல்லாம் பார்க்கிறார்கள் என்றும் அவர்களுக்கு என்ன மாதிரியான உணர்ச்சிகள் ஏற்ப்படுகிறது என்றும் அதை எப்படி கட்டுப்படுத்துகிறார்கள் என்றும் எழுதியிருப்பதாக கேள்விப்பட்டேன் . நான் இன்னமும் புத்தகம் படிக்கவில்லை.(நிறைய அறைகள் உள்ள வீடு- ஆசிரியர் குட்டி ரேவதி)
 

பெண்ணிடம் தனியாக பேசலாம் என கேட்கலாம். ஒண்டு குடித்தன வீடாக இருந்தால் தனியாக பேச அனுமதி கிடைக்காது..

பெண் பிடித்திருக்கிறதா என்று கேட்டால், பெண் விருப்பபட்டால் தனியாக சந்தித்து பேசிய பின் சொல்வதாக தைரியமாக கூற வேண்டும்.

இப்படி பார்த்த பெண் உங்களுக்கு பிடித்திருந்தால், அவள் வேலை செய்யும் இடத்தை அறிந்து கொண்டு சென்று பேசி பார்க்கலாம். அவள் போகும் வரும் வழியில் அவளை கவரும் விதத்தில் நின்று பேச்சு கொடுக்க முயற்சி செய்யலாம். அவள் பேச விருப்பமில்லையென்றால், பெண் பார்த்த பிறகு உங்களை எனக்கு பிடித்திருக்கிறது என்றும் திருமணம் செய்ய ஆசை என்றும் கூறி அவளது அபிப்பிராயத்தை அறியலாம். அவளுக்கும் விருப்பம் என்றால் பேசி பழகலாம். அது காதலாக மாறும்.

காதலாக மாறினால் கல்யாணம் செய்து கொள்ள தடை இருக்காது. ஒரே சமூகம் என்பதால் இருவீட்டாரும் ஒப்புகொள்வார்கள்.

பெண்ணுக்கு விருப்பமில்லையென்றால், வேறு பெண்ணை பார்க்க ஆரம்பிக்க வேண்டும்.

விரைவாக பெண் பார்த்து,திருமணம் செய்ய வேண்டும். நகை பணம், சீர் இவைகளுக்காக காலம் தாழ்த்திகொண்டிருந்தால் இளமை வீனாகிவிடும்.
ஜோசியம் பார்ப்பதற்க்கு கூட கைரேகை இல்லாமல் போய்விடும்.

மேலே எழுதியிருப்பவை பெண்களிடம் கேட்டும், பெண்ணை பெற்ற அம்மாக்களிடம் கேட்டும் எழுதியது.

வேறு ஏதெனும் சந்தேகங்கள் இருந்தால் கேட்கவும்.