Saturday 31 May 2014

மலர மறுத்த மொட்டு



சென்னை, கோடம்பாக்கம் வடபழனி பகுதிகள் இனையும் இடம். ஒரு சிவன் கோவில் இருக்கிறது. இப்போது சிவன் கோவிலின் பின்புறம் தாம்பரம் - கோயம்பேடு போகும் 100 அடி சாலை இருக்கிறது. அந்த கோவிலின் பின்புறத்தில் சற்று தள்ளி கோடம்பாக்கம் காவல் நிலையம் இருக்கிறது. இப்போது சில பேருக்கு நான் எந்த இடத்தை சொல்கிறேன் என்று தெரிந்திருக்கும்.

கோவில் எதிரே மிகப் பெரிய மல்லிகை பூ தோட்டம் இருந்தது. கோவிலுக்கு சொந்தமானது என நினைக்கிறேன். அந்த தோட்டத்தை சுற்றி குடியிருப்பு பகுதிகள் இருந்தது. அந்த மல்லிகை பூ தோட்டத்தையும் அங்கு விளையும் வேறு சில பொருட்களையும் நம்பி வாழ்ந்த குடும்பங்கள் பல.

அந்த பகுதியில் இருந்த ஒரு தெருவின் பெயர் பூக்கார தெரு. இது ஒன்றும் ஆச்சரியமான விசயம் அல்ல. ஆனால், அந்த தெருவில் நாங்கள் குடியிருந்தோம் என்பது தான் விசயம் இது 1965 -68 இடைப்பட்ட காலங்களில் வாழ்ந்த இடம் . எனக்கு 10 -12 வயது இருக்கும்.

காலையில் வெளிச்சம் பரவ ஆரம்பிக்கும் சமயம் நானும், அண்ணனும் அக்காவும் தோட்டத்திற்க்கு பூப்பறிக்க செல்வது வழக்கம். மடியில் துண்டு கட்டிக்கொண்டு, பூப்பறித்து அதில் போட்டுக்கொள்வோம். ஒரு படி பூ பறித்து கொடுத்தால் ஒரு ஆழக்கு பூ கூலி கொடுப்பார்கள். 8 ஆழக்கு ஒரு படி அதாவது 1/8 பங்கு கூலி. நாங்கள் மூன்று பேரும் சேர்ந்து பல படி பூக்களை பறித்து கொடுத்து கூலியாக பூக்களை வாங்கி வருவோம். 8 மணிக்கு பூ பறிக்கும் வேலை முடிந்து விடும் .சிறிது காலத்திற்க்கு பிறகு ஆழக்கு பூவிற்க்கு பதில் 5 காசு கூலி கொடுக்க ஆரம்பித்தார்கள்.

அதற்கு பிறகு தோட்டதின் உரிமையாளர், கூலிக்காக பூப்பறித்தவர்களின் இடங்களில் சென்று விடுபட்டிருக்கும் பூக்களை பறிப்பார்.

காலையில் பூ பறித்த பின்பு மீண்டும் 10-11 மணி அளவில் தோட்டத்திற்க்கு செல்வோம். விடுபட்ட பூக்களை பறித்து வருவோம். சிறிய காய் பூக்களை பறித்தால் தோட்ட உரிமையாளர் விரட்டி விடுவார். இப்படி விடுபட்ட பூக்களை பறிப்பதற்க்காகவே கொஞ்சம் பூக்களை விட்டு விட்டு தான் காலையில் பூப்பறிப்போம். அதனால் தான் நாங்கள் பறித்த பின்பு தோட்ட உரிமையாளர் ஒரு சுற்று சுற்றி வந்து விடுபட்ட பூக்களை அவர் பறிப்பார். அவர் பார்வையிலிருந்தும் தப்பிய பூக்கள் 10-11 மணிக்கு எங்கள் பார்வையில் படுவதை பறித்து வருவோம். கூலியாக கிடைத்ததும் விடுபட்ட பூக்களை பறித்ததுமாக ஒரு படி பூ சேர்ந்து விடும்.

அவைகளை மதியம் 3 – 4 மணிவாக்கில் கட்டி, இரண்டு முழ பூவை துண்டுகளாக்கி கை விரலில் மாட்டிக்கொண்டு, வடபழனி காய்கறி அங்காடி அருகில் உள்ள பேருந்து நிலையத்தில் விற்பது எனது வேலை. அண்ணனும் அக்காவும் பெரியவர்கள் என்பதால் அவர்கள் விற்பனைக்கு வரமாட்டார்கள்.

வடபழனி காய்கறி அங்காடிக்கு முன்புறம் நிரந்தரமாக பூ விற்பவர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு அருகில் விற்க்ககூடாது. அதே போல வடபழனி கோயிலுக்கு செல்லும் சாலையின் ஆரம்பத்தில் நிரந்தரமாக பூ கடை வைத்திருப்பவர்கள் இருப்பார்கள். அங்கேயும் சென்று விற்க கூடாது. அந்த இரண்டு இடங்களுக்கு இடைப்பட்ட இடத்தில் ஓடி ஓடி சென்று விற்பேன். குதிரை வண்டியில் , பேருந்தில் வந்து இறங்குபவர்களிடம் ஓடி ஓடி விற்பது மாலை நேர வேலை.

தோட்டத்தின் உரிமையாளர்கள் காலையில் பறித்த பூவை மொத்தமாக பிராட்வே பகுதியில் உள்ள மொத்த விற்பனையாளர்களுக்கு விற்று விட்டு, கதம்பம் கட்டி விற்ப்பதற்க்காக வேறு பூக்களை வாங்கி வருவார்கள். சம்பங்கி, கனகாம்பரம், மருகொழுந்து மற்றும் ரோஜா பூக்கள். இவைகளை வாங்கி வந்து கதம்பமாக கட்டி, பழைய மாம்பலம் பகுதியில் மிதி வண்டியில் சென்று தெருக்களில் விற்ப்பார்கள்.

இந்த பூவை கட்டி கொடுத்தாலும் கூலி கிடைக்கும். ஒரு தட்டு நிறைய அனைத்து பூக்களையும் வைத்து கொடுப்பார்கள். அதை கதம்பமாக கட்டி கொடுக்க வேண்டும். வெறும் மல்லிகை பூவையும், கனகாம்பரம் பூவையும் கூட கட்டி கொடுக்க சொல்வார்கள். அதற்கு கூலி உண்டு. அந்த தெருவில் இரண்டு குடும்பங்கள் மட்டுமே காசுக்கு பூ கட்டி கொடுக்கும் வேலையை பார்த்த்து. அதில் எங்கள் குடும்பமும் ஒன்று.

நான் மிக நன்றாக நெருக்கமாக பூ கட்டுவேன். என்னிடம் கட்டும் பூ பெண்கள் கொண்டையில் சுற்றி வைத்து கொள்வதற்க்கு வசதியாக இருக்கும். அதனால் நான் கட்டி கொடுப்பதை விரும்புவார்கள் . 

பின்பு எனது அம்மா புரட்சி செய்து கூலி உயர்வு வாங்கினார்கள். குத்து மதிப்பாக ஒரு தட்டு நிறைய பூவை கட்டி கொடுப்பது சரியாக வரவில்லை. எனவே ஒரு முழம் பூ கட்டினால் ஒரு காசு கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை போட்டு கட்டினார்கள். அப்போதும் நான் கட்டும் பூவுக்கு மவுசு அதிகம். நான் நெருக்கமாக கட்டுவதால், அவர்கள்  10 முழம் என்று கணக்கிட்டு எனக்கு 10 காசு கூலி கொடுப்பார்கள். ஆனால், அதை அவர்கள் விற்கும் போது சிறிது சிறிதாக இழுத்து 15 முழம் ஆக்கி விடுவார்கள்.

பூ கட்டும் கூலி, விடுபட்ட பூக்களை கட்டி விற்ற காசு குடும்ப செலவுக்கு பெரும் உதவியாக இருந்தது. அதில் மிட்டாய் வாங்க, பொரி கடலை வாங்க காசு கிடைக்கும்.

நான் குடியிருந்த வீட்டுக்கு அருகே, வடபழனி முருகன் கோயிலுக்கு சுவாமிக்கு பூ கட்டி கொடுப்பவர்கள் இருந்தார்கள். அவர்கள் மாலையும் கட்டி கொடுப்பார்கள். மேலும், கோவில் இருக்கும் சாலையில் முதல் கடை அவர்களுடையது. அங்கேயும் பூவும் மாலையும் விற்ப்பார்கள்.

சுவாமி சிறப்பு அலங்காரம், சுவாமி ஊர்வல சமயங்களில் செய்யும் அலங்கார வேலைகள் அனைத்தும் அவர்களுடையது. அந்த வேலையை அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே செய்வார்கள். பெரிய கூட்டு குடும்பம் . நிறைய பேர் இருப்பார்கள்.

நான் அவர்களிடம் மாலை கட்ட கற்றுகொண்டேன். சமந்தி பூ மாலை, சம்பங்கி பூ மாலை கட்ட எளிதாக கற்று கொண்டேன். ஆனால், மல்லிகை பூ மாலை கட்ட மிகவும் சிரமப்பட்டேன். சிறிய பூ. கையில் பிடித்து மாலை கட்டுவது சிரமம் அதே போல் ரோஜா பூ மாலை கட்டுவதும் சிரமம். கட்டும் போதே ரோஜா பூ உதிர ஆரம்பிக்கும். கட்டி முடித்தவுடன் அதில் ஜரிகை நூல் கட்டிவிட வேண்டும். இல்லையென்றால் பூக்கள் உதிர்ந்து விடும்.. அவர்கள் மாலை கட்ட கற்று கொடுத்தார்களே தவிர , கூலி கொடுக்கவில்லை. 

நானும் பிராட்வே பூக்கடைக்கு சென்று பூக்கள் வாங்கி வந்து மாலை கட்டி வியாபாரம் செய்தேன். ஆனால் என்னிடம் மக்கள் வாங்க விரும்பவில்லை. மற்ற பூக்கடைகாரர்களும் அப்படி விற்க அனுமதிக்கவில்லை.

பூ கட்டுவது ஒன்றும் சுலபமான வேலை அல்ல. வாழை மட்டையில் இருந்து நார் உரித்து, காய வைத்து பதப்படுத்திய நாரினால் கட்ட வேண்டும். காய்ந்த நாரில் கட்டினால் பூ அறுந்து விடும். இறுக்கி கட்டினாலும் பூ அறுந்து விடும். அவ்வப்போது தண்ணிரை நாரின் மேல் தடவி ஈரப்படுத்தி கொள்ள வேண்டும். விரல்களுக்கிடையே நார் சுற்றி வரும் போது விரலை அறுத்து விடும். விரல்களின் இடைப்பகுதி சிவந்து புண்ணாகிவிடும். பூ கட்டி முடித்தவுடன் தேங்காய் எண்ணெய் தடவி கொள்வோம். உட்கார்ந்து பல மணி நேரம் பூ கட்டுவாதல் முதுகு வலியும் இடுப்பு வலியும் வரும்.

பல உரிமையாளர்களை கொண்ட மிகப்பெரிய புந்தோட்டம். அது எத்தனை ஏக்கர் என்று இப்போது சொல்ல தெரியவில்லை. அது பின்பு 1970களில் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டது. அது கோவில் நிலம் என்றும் சொன்னார்கள். எப்படி வீட்டு மனைகளாக மாறியது என தெரியவில்லை. அப்போது ஒரு கிரவுண்டு (2400 சதுர அடி ) விலை ரூ.2000/- அதை வாங்க எங்களிடம் வசதியில்லை. இன்று அது இரண்டு கோடி ரூபாய்க்கும் மேலாக விலை போகிறது. பல அடுக்கு மாடி கட்டிடங்கள் வந்து விட்டது


இந்த பூக்கார தெருவில் தெருவில் தான் , ஒரு மொட்டு பருவத்தில் மலராமல் நீண்ட காலம் காத்திருந்தது . கிட்ட தட்ட தனது 25 வயதில் தான் மலர்ந்தது என கேள்விப்பட்டேன்.

உழவன்






மான் குட்டி
மீது
மத யானை
ஏறுகிறது
சிலந்தி வலை
சிறையில்
சிரிக்குதப்பா
நீதி




















நிலம் என்னிடமிருந்த போது

புற்களை களையென பறித்தேன்

நிலம் அவனிடம் கை மாறிய பின்

புற்களை பயிரென வளர்க்கிறேன்


புத்தரின் பிச்சை பாத்திரம்



சில சமயங்களில் தொல்பொருள் ஆராய்ச்சி துறை கண்டுபிடிக்கும் பல விசயங்கள் நம்பமுடியாத அளவுக்கு இருக்கிறது. அதில் ஒன்று புத்தரின் திருவோடு என்கிற பிச்சை பாத்திரம் (Begging Bowl) 

புத்தர் உபயோகித்த பிச்சை பாத்திரத்தின் அளவை பாருங்கள்

கிரே கலர் கிரைனைட் கல்லால் செய்யப்பட்டது.
அதன் எடை(Weight) 400 கிலோ
குறுக்களவு (Diameter) 1.75 மீட்டர்கள் (5.75 அடி)
உயரம் (height/depth)(ஆழம்) 4 மீட்டர்கள் ( (13 அடி)
கல்லின் தடிமானம் 1 . 2 அடி

அரண்மனையில் சுகபோகத்தில் வாழ்ந்தவர் இரவோடு இரவாக அரண்மனையை விட்டு வெளியேறி துறவறம் பூண்டவர். துறவறம் பெற்றவர் தனது உணவுக்கு, ஒரு சிறிய பாத்திரத்தை தான் உபயோகித்திருக்க வேண்டும். அதில் உணவு வாங்கி சாப்பிட்டிருப்பார். கையில் கமண்டலத்தில் தண்ணீர் வைத்துக்கொண்டிருப்பார் (நாம் இந்த காலத்தில் தண்ணீர் பாட்டில் வைத்திருப்பது போல ) இது தான் துறவறம் பெற்றவர்கள் உபயோகிக்கும் பொருட்கள்.

அதிக பட்சமாக இவர் அரண்மனையிலிருந்து வெளியேறும் போது ஒரு வெள்ளி பாத்திரமோ தங்க பாத்திரமோ எடுத்து சென்றார் என்று கூறினால் நம்பலாம். அல்லது இவர் வெளியேறிய பிறகு இவரது தந்தை (அரசர்) இது போன்ற பாத்திரங்களை கொடுத்தனுப்பியதகவோ அல்லது அரசரின் ஜால்ராக்கள் , நாட்டின் பெரும் செல்வந்தர்கள்/வணிகர்கள் இது போன்று ஒரு பாத்திரத்தை செய்து கொடுத்தார்கள் என்று கூறினால் நம்பலாம்.. 

ஆனால், இப்போது பிச்சை பாத்திரம் என்று கூறப்படும் பாத்திரத்தின் அளவை பாருங்கள். நிச்சியமாக அதை அவர் ஒரு முறை கூட தூக்கியிருக்க முடியாது. அப்படியே யாரவது அப்படி ஒரு பாத்திரத்தை செய்திருந்தால் ( இதை பிச்சை பாத்திரம் என்று கூறுவதை விட சிறிய தொட்டி என்று கூறலாம்) ஆடு மாடுகளுக்கு பொது இடத்தில் நீர் குடிக்க இது போன்ற ஒரு தொட்டி செய்து வைத்திருக்கலாம். புத்தர் அதன் அருகாமையில் அமர்ந்திருக்கலாம். யாராவது ஒருவர் அவருக்கான உணவை அந்த தொட்டியில் வைத்திருக்கலாம் அதிலிருந்து எடுத்து சாப்பிட்டிருக்கலாம். அதனால் அதை அவரது பிச்சை பாத்திரம் என்று கூற ஆரம்பித்திருப்பார்கள்.

மற்ற படி இவ்வளவு பெரிய கல் தொட்டியை சுமந்து கொண்டு சென்று பிச்சை எடுத்திருக்க வாய்பேயில்லை.

ஆனால், இதை தான் புத்தரின் பிச்சை பாத்திரம் என்று கண்டுபிடித்துள்ளனர். நம்புகின்றனர். மேலும், அந்த பாத்திரத்தின் வெளியே அரேபிய மொழியில் ஏதோ எழுதியிருக்கிறது என்றும் அதை படிக்க முயற்சி செய்வதாகவும் அதன் மூலம் அது எந்த காலத்தை சேர்ந்த்து என கண்டு பிடிக்க முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர்.

அதை இப்போது இந்தியா கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

கடவுளின் பெயரால் எதை யார் சொன்னாலும் கேள்வி கேட்காமல் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நடைமுறை இருப்பதால், இதையும் நம்புகிறார்கள்



On Friday, a team of Archaeological Survey of India officials will leave for Kabul to officially check if the giant relic that is preserved in Kabul's National Museum is actually the 'begging bowl' that Lord Buddha used during his days in Vaishali in the sixth century BC.
Buddha bowlLord Buddha's begging bowl is kept at the entrance of National Museum of Kabul
The matter came to light and was pursued after RJD leader Dr. Raghuvansh Prasad Singh, who represented Vaishali in 15th Lok Sabha, asked a question about this in Parliament last year and asked why India was not making an effort to bring it back.
The ASI team in Kabul will try to find out if the relic in question, preserved near the entrance of the Kabul museum, is the same that Chinese scholars Fa Hien and Hiuen Tsang and British archaeologist Alexander Cunningham referred to in their writings.
Here are the things you should know about the Buddha's begging bowl.

A gift to the people of Vaishali
In his Report of Tours in north and south Bihar in 1880-81, Major General A Cunningham wrote about this begging bowl. According to Cunningham, Buddha had given his alms-bowl to the people of the Republic of Lichchhavis, when he took final leave of them at the old city on their northern frontier, which Cunningham identified with Kesariya, 30 miles to the north-west of Vaishali. Buddha was travelling to Kushinara where he died afterwards and this bowl was gifted to the people of Vaishali who had long been following the Buddha everywhere.
Chinese travellers and Buddhist scholars Fa Hien and Hiuen Tsang have also made a mention of this giant bowl which has many mythological stories revolving around its origin. The bowl was placed in a monastery in Vaishali where farmers and fruit growers placed their first fruits of the season. It stayed here for the next five centuries.  

Ransom to an invader
The sixteenth century Tibetan Buddhist monk and major scholar Taranath has mentioned the attack of Kushan king Kanishka on Pataliputra in first century AD. It is said that Kanishka defeated the king of Pataliputra but left the city on the king's agreeing to part with the famous Buddhist scholar and dialectician Ashvagosha and the Buddha's alms-bowl. Kanishka took both to his capital Purushpur (modern-day Peshawar in Pakistan) where he placed the sacred alms-bowl in a monastery and made Ashvagosh his spiritual instructor.
A string of Chinese pilgrims reported seeing the giant bowl in Purushpur between the 3rd and the 9th centuries.

Holy verses save the bowl
As the wheel of time kept turning over, Islam replaced Buddhism on the land and somehow Quranic verses came to be inscribed on the bowl, perhaps around the time of Mahmud Ghazni in 11th century. The verses saved the artefact from any further damage in all future religious wars. All through the rule of Muslim rulers on the land, the Quranic verses saved the bowl and it was treated by the people with respect. Until a few decades ago, it was kept at the Jamia Mosque in Kandahar and used for storing water and wazu (washing one's hands and feet before offering namaz).
In the late 1980s during Afghanistan's civil war President Najibullah had the bowl taken to Kabul's National Museum. When the Taliban came to power and started destroying all the un-Islamic artefacts, the Quranic verse saved it again. Today the bowl is displayed at the entrance of the Museum.

Greenish-black wonder weighs 400 kg
The bowl made of solid stone is about 5.7 feet in diameter and its rim is 18 cm thick. It weighs about 400 kg. It has a lotus inscription on its highly polished exterior, typical of Mauryan stone masonry. It has a mystical greenish-black colour. The importance of the bowl is attested by numerous depictions of it in Gandhara art, usually shown on the pedestal of Buddha statues.  
The story of the Buddha's alms-bowl has been carved in numerous Gandhara sculptures. The Guardians of the Four Quarters of the world present the bowls to the Buddha. He holds it in his hand, either in a seating or standing position. Sometimes, it is placed on a throne under a canopy and the worshippers adore it.
References:
Buddhism in India: From the Sixth Century B.C. to the Third Century A.D., by Ashok Kumar Anand
Taranatha's History of Buddhism in India, translated by V. Vasil`ev of St. Petersburg