Saturday 28 June 2014

எனது மடத்தில் பெண்களை மட்டுமே நியமிக்க போகிறேன்



நான் துறவறம் மேற்கொள்வது பற்றி எழுதியிருந்தேன். யாரும் பொருட்டாக மதிக்கவில்லை. நக்கலும் நையாண்டியும் இருந்தது. நானும் யோசித்து கொண்டிருந்தேன்.

இப்போது மிக அவசரமாக துறவறம் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்ப்பட்டுள்ளது. என் மாமனாரும் மாமியாரும் என் வீட்டிற்க்கு வரப்போவதாக தகவல் வந்துள்ளது. உடனடியாக இங்கிருந்து ஓட வேண்டிய நிலை ஏற்ப்பட்டுவிட்டது.

துறவறம் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்து வருகிறேன்.

1. காவி வேட்டி கட்டிக்கொள்வது என முடிவு செய்து விட்டேன்.

2. ஜட்டி போட்டு தான் பழக்கம். துறவறத்தில் காவி வேட்டி கட்டிக்கொண்டு ஜட்டி போடலாமா அல்லது கோவணம் கட்டி கொள்ள வேண்டுமா. கோவணம் என்றால் அரைஞான் கயிறு வாங்க வேண்டும். அல்லது இரண்டும் இல்லாமல் காற்றோட்டமாக விட்டு விடலாமா. ?

3. மேல் சட்டை போட வேண்டுமா இல்லையா. ? இப்போது என் வீட்டு வழியாக போன சாமியார்கள் ஜிப்பா போட்டுக்கொண்டிருந்தனர்.

4. ருட்சாத்திர மாலை வேண்டும். என் நண்பன் வைரவேல் வைத்துள்ளான். அதை இரவல் வாங்கலாம். அதிலும் தங்கத்தால் செய்யப்பட்டுள்ளது. அவசரத்துக்கு உதவும்.

5. திருவோடு கமண்டலம் வாங்க வேண்டுமா.?

6. .மடங்களில் தங்கி கொள்ளலாமா அல்லது விடுதியில் தங்கலாமா அல்லது தெருவில் படுத்து தூங்க வேண்டுமா.?

7 தென்னிந்திய உணவுகளை வழங்கும் மடங்கள் ஹரிதூவாரின் எங்கே இருக்கிறது.?

8. பஜனை செய்ய தெரியும் ஆனால் பஜனை பாடல்கள் தெரியாது. பாடல்கள் தெரியாமல் மடங்களில் சமாளிக்க முடியுமா.?

9.சிகிரெட் மது இவைகளை விட்டு விட வேண்டுமா.? இப்போது போதை மருந்துகள் சாப்பிடும் பழக்கம் சாமியார்களிடம் இருப்பதாக கேள்விப்பட்டேன். அதை கற்றுக்கொள்ள வேண்டுமா. ?

10. முக்கியமான விசயம். காமத்தை அடக்க வேண்டும். அதற்கு காந்திஜியை போல பெண்களுடன் நிர்வானமாக படுத்து , காமம்  செய்யாமல் இருந்து பழக வேண்டும். அந்த பயிற்சியை இங்கேயே ஆரம்பித்து செய்து பார்த்து விட்டு அங்கு போக வேண்டுமா அல்லது அங்கு போய் பயிற்சி செய்யலாமா. ?

இப்படி பயிற்சி செய்யும் போது மறைந்திருந்து படம் எடுத்து என்னை மிரட்ட வேண்டியதில்லை. நேரடியாக படம் பிடிக்கலாம். எங்கு வேண்டுமானலும் வெளியிடலாம். கிடைக்கும் வருமானத்தில் பாதியை கொடுத்து விட வேண்டும்.

ஆசைகளை துறந்து விட்டு தான் துறவறம் செல்கிறேன். எனக்கு பெரிய ஆசைகள் ஏதும் இல்லை. சின்ன குடிசை வேண்டும். கிடைக்கும் காசில் சிறியதாக 1000 ஏக்கரில் மடம் கட்ட வேண்டும். மக்கள் சேவை செய்ய 1000 கோடி இருந்தால் போதும். மடத்தில் பணத்தை களவாடி விடுவார்கள் எனவே, மடத்தை நிர்வாகிக்க அனைத்து பொறுப்பிலும் பெண்களை மட்டுமே நியமிக்க வேண்டும்.

இத்தனை வேலைகள் இருக்கிறது. எனக்கு சிஷ்யர்களாக சேர விரும்போர் இப்போதே விண்ணப்பித்தால், இந்த ஏற்பாடுகளை செய்ய வசதியாய் இருக்கும்.

Thursday 26 June 2014

சிறுகதை



தந்தையும் மகளும்

வழக்கு பதிவு செய்யப்பட்ட அன்றே அந்த வழக்கு குறித்து பரபரப்பு அதிகமாகி விட்டது.

வழக்கு தொடர்ந்தவர் மிக பிரபலமான சங்கத்தின் தலைவர். 

மிக சிறு வயதிலேயே மிகப் பிரபலாமாகி விட்டார். அவரது தந்தையின் செல்வாக்கினால் தான் பிரபலமானார் என்ற குற்றச்சாட்டு உண்டு. அவர் தனது தந்தையின் பெயரை எங்கும் உபயோகிக்கவில்லையென்றாலும், அவர் இன்னாரது மகள் என்ற காரணத்தாலேயே அவருக்கு மரியாதை கிடைத்தது. அவர்  கேட்காமலேயே அவருக்கு தலைவர் பதவி தந்தனர். அவரை தலைவராக வைத்து கொண்டு மற்றவர்கள் புகழ் அடைந்ததுடன், சங்கத்துக்கு கிடைத்த நன்கொடை பணம் மூலமாக தங்களது வசதிகளை பெருக்கி கொண்டனர். 

அவர் இந்த வழக்கை தொடர போகிறேன் என்று கூறியவுடன் மற்றவர்கள் மறுப்பு ஏதும் சொல்லவில்லை. இதன் மூலம் சங்கம் மேலும் பிரபலமடையும் என்றும் வெளிநாட்டு நிதி வரத்து அதிகரிக்கும் அதன் மூலம் தங்களது தேவைகளை நிறைவேற்றி கொள்ளலாம் என அவரவருக்கு இருந்த தனிப்பட்ட ஆசையின் காரணமாக ஆதரவு அளித்தனர்.

வழக்கு தொடரப்பட்டது ஓய்வு பெற்ற நீதியரசர் மீது . அவர் சர்ச்சைக்குரிய வழக்குகளில் அதிரடியான தீர்ப்புகளை வழங்கி புகழ் பெற்றவர். அரசியல்வாதிகளும், தொழில் அதிபர்களும் அவர் ஓய்வு பெற்ற தினத்தை விமர்சையாக கொண்டாடினார்கள்.அவர் ஓய்வு பெற்ற பின்பு , பொதுவாக கிடைக்க வேண்டிய ஏதாவது விசாரனை குழ தலைவர் பதவியோ அல்லது வேறு எந்த பதவியோ அவருக்கு வழங்கப்படவில்லை.

வழக்கை பற்றி அவரிடம் கருத்து கேட்ட போது, வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போது கருத்து சொல்ல முடியாது என அறிவித்துவிட்டார்.

சங்க தலைவரிடம் கேட்ட போது, யாராக இருந்தாலும் நான் வழக்கு தொடருவேன் என்று கூறினார்.

பொது இடத்தில் நான்கு தீவிரவாதிகளை தன் கையாலேயே கொன்றுள்ளார். இதற்கு சாட்சிகள் உள்ளன. அவர்கள் தீவிர வாதிகளாக இருந்தாலும், சட்டப்படி அவர்களை அரசாங்கத்திடம் தான் ஒப்படைத்திருக்க வேண்டும் என்பதே சங்கத்தின் வாதம் என்று குறிப்பிட்டார்.

வழக்கு உடனடியாக விசாரனைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சங்கத்தின் சார்பாக வாதடிய வழக்கறிஞ்சர் வழக்கின் விவரங்களை கூறி சாட்சியங்களை அழைத்து விசாரணை நடத்தினார். சாட்சிகள் அவர் தீவிரவாதிகளை கொன்றதை பார்த்ததாகவும்  தாங்கள் விலகி நின்று வேடிக்கை பார்த்ததாகவும் கூறினர்.

குற்றம் சாட்டப்பட்டவர் தனக்காக வழக்கறிங்கரை நியமித்து கொள்ளாமல் தானே வாதாடுவதாக கூறியதால், அவர் குறுக்கு விசாரணை செய்தார்.

தீவிரவாதிகளுடன் தான் பேச்சு வார்த்தை நடத்தியதை பற்றி கேட்டார். சாட்சியங்கள் பேச்சு வார்த்தி நடத்தியதாக ஒப்புக்கொண்டனர். தீவிரவாதிகளை விலகி செல்லும் படி அறிவுறுத்தியதாகவும், அனால் தீவிரவாதிகள் தன் மீது தாக்குதல் நடத்தியதால் அவர்களுடன் சண்டையிட்டு அவர்களை கொன்றதாக கூறினார். சாட்சியங்களும் அதை ஒப்புக்கொண்டனர்.

மேலும், அரசாங்கம் தீவிரவாதிகளை ஒழிக்காமல் இருப்பதால் தான் தனி மனிதர்கள் தங்களை காத்து கொள்ள இது போன்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் கூறி, தனது செயலுக்கு நியாயம் கற்ப்பித்தார். மேலும், அரசு தீவிரவாதிகளை ஒழிக்கவில்லையென்றால், பொது மக்கள் இது போன்ற செய்கைகளில் ஈடுபடுவார்கள் என்றும் வாதிட்டார்.

இவைகளை கேட்ட நீதிபதி, அரசுக்கு நோட்டிஸ் அனுப்பி ஒரு வார காலத்திற்க்குள் நேரில் வந்து பதில் அளிக்கும் படி உத்தரவிட்டு வழக்கை ஒரு வார காலத்திற்கு ஒத்தி வைத்தார்.

குற்றம் சாட்டப்பட்ட நீதிபதியின் வீட்டீல் அவரது மனைவி , உங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை. உங்களுக்கு தெரியாத சட்டமா, நியாயப்படி செய்திருக்க வேண்டியது தானே. உங்களை யார் இப்படி செய்ய சொன்னது என்று புலம்பி கொண்டிருந்தார். மற்றவர்கள் எப்படி ஒதுங்கி சென்றார்களே அவ்வாறே நீங்களும் இருந்திருக்க வேண்டியது தானே என்று புலம்பி கொண்டிருந்தார்.

வழக்கு தொடர்ந்த சங்கத்தின் தலைவி, அவரை பார்த்து அம்மா எனக்கு காப்பி கொடு என்று கூறினார்.

ஏண்டி, அப்பாவை போட்டு ஏன் இப்படி படுத்துகிறாய். அப்பா மீது வழக்கு தொடர்ந்து அவரை அவமானப்படுத்திவிட்டாய் என்று புலம்பி தீர்த்தார்.

ஒரு வாரத்துக்கு பிறகு மீண்டும் வழக்கு விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அரசு தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், தீவிரவாதம் உலகெங்கிலும் இருப்பதாகவும், இந்த அரசு அவர்களை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், உலக நாடுகளின் உதவியுடன் மிக விரைவில் நாட்டில் தீவிரவாத நடவடிக்கைகளை ஒடுக்க எடுத்துள்ள விவரங்களை புள்ளி விவரங்களுடன் எடுத்துரைத்தார்.
.
சங்கத்தின் தலைவரோ இந்த வழக்குக்கு உடனடியாக தீர்ப்பு வழங்கவிட்டால் மேன்மேலும் மக்கள் இப்படி சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொண்டு தண்டனை வழங்க ஆரம்பித்து விடுவார்கள் நாட்டில் அமைதி குலைந்து விடும் என வாதிட்டார்.

வழக்கு ஒரு மாதத்திற்க்கு ஒத்தி வைக்கப்பட்டது.

வழக்கின் தீர்ப்பு வழங்கபட இருந்த நாளில் , நீதிமன்றத்தில் பெரும் கூட்டம். தொலைகாட்சி நிறுவனங்கள் நேரடி ஒளிப்பரப்புக்கு ஏற்ப்பாடு செய்திருந்தது.

எழுதி வைத்திருந்த தீர்ப்பை நீதிபதி வாசிக்க ஆரம்பித்தார்.

உயிர்களை கொல்வது சட்டப்படி குற்றம் என்றும் அதற்க்காக வழக்கு தொடர்ந்த சங்கத்தை பாரட்டினார்.

அரசும் போதுமான நடவடிக்கைகளை எடுத்திருப்பதை ஏற்றுக்கொண்டாலும் துரித நடவடிக்கை எடுத்து தீவிரவாதத்தை முற்றிலுமாக ஒழிக்க  வேண்டும் என வலியுருத்தினார்.

எனவே,

இந்த நேரத்தில் நீதிபதி சிறிது தண்ணீர் குடித்தார். நீதி மன்றத்தில் பரபரப்பு கூடியது. நிச்சியமாக தண்டனை கிடைக்கும் என அனைவரும் காத்திருந்தனர்.

நீதிபதி கீழே குனிந்து கால்களை சொறிந்து கொண்டார். மீண்டும் கீழே குனிந்து செறிந்த இடத்தில் தடவி விட்டுக்கொண்டார்.

நீதிமன்றத்தில் பரபரப்பு கூடியது.

எனவே என்று ஆரம்பித்தவர், சற்று நிறுத்தி யோசித்து விட்டு ஆனால் என்று தொடர்ந்தார்.

ஆனால்,

தன்னை தாக்க வரும் தீவிரவாதிகளை தற்காப்புக்காக அழிப்பது சரியென்றும், உலகமுழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாக கூறினார்.

சங்கம் மிருக வதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்துள்ளது என்றும் கொசுக்கள் மிருக வகையை சார்ந்தது அல்ல என்றும் எனவே வழக்கை தள்ளுபடி செய்வதாகவும் கூறினார்.

Tuesday 24 June 2014

ஆண்மை எழுச்சி பெறாது



இன்று ( 24.06.2014 ) காலை பேருந்தில் ஏறி , மணி பர்ஸ்லிருந்து சில்லறை ரூ.5 எடுத்து பயணசீட்டு வாங்கினேன். இதற்கு 5 நிமிடம் ஆகியிருக்கும். திரும்பும் போது இது யாருடைய மணிபர்ஸ் என்று என் பக்கத்தில் நின்றிருந்த இளைஞன் கேட்டான். என்னுடையது என்று கூறினேன். என்னுடையது தானா என்று உறுதியாக கேட்டுவிட்டு கொடுத்துவிட்டான். 10 நிமிட பயணத்திற்க்கு பின்பு நோய்டா பகுதியிலிருந்து  2 மெட்ரோ ரயிலில் பயணித்து புதுதில்லி ரயில்வே நிலையம் வந்து அடைந்தேன். 

பின்பு 2 கி.மீ. தூரம் செல்ல வேண்டியிருந்ததால், மிதிவண்டியில் போகலாம் என்று எண்ணி, அதற்கு முன்பு சில்லறை இருக்கிறதா என பார்ப்பதற்க்கு மணி பர்ஸை திறந்து பார்த்தால் காலியாக இருந்தது. நான் வீட்டில் இருந்து புறப்படும் போது ரூ. 280/- சரியாக எண்ணி வைத்து தான் புறப்பட்டேன். அது காணவில்லை. 

பேருந்தில் அவண் மணிபர்ஸ்சை தரும் போது, சில்லறை எடுத்து விட்டு மீண்டும் கால்சட்டையில் வைக்கும் போது தவறி கீழே விருந்திருக்கும் , அதை இவண் பொறுப்புடன் எடுத்து தருகிறானே என மகிழ்ந்தேன். இப்போது புரிந்தது அது தவறி விழவில்லை என்பதும் அவண் மணிபர்ஸ்சை எடுத்து அதிலிருந்து பணத்தை எடுத்துவிட்டு காலி பர்ஸை கொடுத்திருக்கிறான் என்பது.

பின்பு இரண்டு கி.மீ. நடந்து நான் செல்ல வேண்டிய வருமான வரி அலுவலகத்திற்க்கு சென்றேன். அங்கு நடந்தைவைகளை கூறும் முன்பு என் பணத்தை எடுத்தவனை வாழ்த்தி விடுகிறேன்.

என்னிடமிருந்து எடுத்த ரூ.280/- வட்டியுடன் 365ஆக மாற்றி, 365 நாட்களுக்கு அவனுக்கு ஆண்மை எழுச்சி பெறாமல் அவதிபட வேண்டும் என சபிக்கிறேன்.

வருமான வரி அலுவலகம் Civic Centre என்னும் கட்டிடத்தில் இருக்கிறது. இது வழக்கமான அரசு அலுவலகம் இயங்கும் பழைய கட்டிடம் போல இல்லாமல். I.T. மற்றும் தனியார் நிறுவனங்கள் இயங்கும் கண்ணாடி வைத்து கட்டிய புதிய கட்டிடமாக இருந்தது.

தேடிபிடித்து வாயிலை கண்டுபிடித்தால், வேறு ஒரு வாயில் வழியாக நுழைவு சீட்டு வாங்கி கொண்டு உள்ளே போக வேண்டும் என கூறினார்கள். தேடி பிடித்து அந்த நுழைவு வாயில் வழியாக சென்றேன். இரண்டு வாயில்களிலும் 4 வாயிற்காப்பாளர்கள் இருந்தார்கள். மிகவும் தன்மையாக பேசினார்கள். இது ஒரு அதிசிய நிகழ்ச்சி. உதவிகரமாகவும் இருந்தார்கள். நுழைவு சீட்டு வாங்க எங்கிருந்து போக வேண்டும் என முழித்து கொண்டிருந்த போது, உள்ளே இருந்த ஊழியர் பார்த்து விட்டு அவர் வெளியே வந்து உள்ளே அழைத்து சென்றார். இதுவும் ஒரு அதிசயம்.  எங்கே போக வேண்டும் என்று கேட்டு சீட்டு எழுதி கொடுத்து வழியும் சொன்னார். வருகை பதிவேட்டில் குறிப்பு எழுத உதவினார். இதுவும் அதிசயம். உள்ளே நடைபாதையில் எவ்வித குப்பையும் இல்லாமல் , அழகாக கற்கள் பதிக்கப்பட்டிருந்தது. தொட்டியில் பூச்செடிகள் வைத்து தண்ணீர் ஊற்றி அழகாக பராமரிக்கப்பட்டிருந்தது.

கட்டிடத்தின் வெளி பகுதியில் எங்கும் குப்பைகள் இல்லை என்பதை மீண்டும் குறிப்பிட வேண்டும். கட்டிடத்திற்க்குள் நுழைந்தேன். தரையை துடைத்து கொண்டிருந்தார்கள். Mall போன்ற கட்டிடங்களில் தொடர்ந்து சுத்தம் செய்து கொண்டிருப்பார்களே அவ்வாறு ஈர துணியால் சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். அங்கு உட்கார்ந்திருந்த ஊழியர் எங்கே போக வேண்டும் என கேட்டு வழி காட்டினார். 9 வது மாடிக்கு சென்றேன். அங்கிருந்த ஊழியர் விசாரித்து விட்டு நான் 13 வது மாடி போக வேண்டும் என கூறினார். 13வது மாடி சென்ற போது, 12 மாடி போக வேண்டும் என கூறினார். பின்பு 12 மாடி சென்று ஊழியரை சந்தித்தேன். இவ்வாறு மாடி மாறி போக காரணம் நானும் எனது தேவையை, சரியாக சொல்லாததும் காரணம். ஆனால், மிகவும் அன்பாக வழி காட்டினார்கள்.

12 வது மாடி ஊழியர் எனது குறைகளை விசாரித்து, பின்பு நேற்று வந்திருந்தால் உங்கள் வேலை முடிந்திருக்கும். இன்று முடியாது. மேலதிகாரி நேற்று மாற்றலாகி சென்று விட்டார் எனவே எந்த கனினியும் இயக்க முடியாது. எல்லோரும் வேலை பார்க்காமல் உட்கார்ந்து இருக்கிறோம். புதிய அதிகாரி வந்து computer server அவர் இயக்கிய பிறகு தான் எங்களால் வேலை செய்ய முடியும் என்றும் இன்னும் சில தினங்களில் புதியவர் பொறுப்பேற்ப்பார் என்றும் எனவே ஒரு வாரம் கழித்து வரும்படி கூறினார். அவருடைய அலுவலக தொலைபேசி எண்ணையும் கொடுத்தார். தனது தனிப்பட்ட அலைபேசி எண்ணையும் கொடுத்தார். அலைபேசி அலுவலக நேரத்தில் வேலை செய்யாது என்றும் , அலுவலக நேரத்தில் அலுவலக எண்ணில் பேசும்படியும், அப்படி இயலாத பட்சத்தில் மாலை நேரத்தில் அவரது அலைபேசியில் பேசி, கனினி இயங்குகிறதா என கேட்டுவிட்டு வரும்படி கூறினார். வீனாக அலையவேண்டாம் என்று கூறினார். அடுத்த முறை என்னென்ன ஆவணங்கள் கொண்டு வர வேண்டும் என்றும் கூறினார். மிகவும் பொருமையாகவும் அன்புடனும் பேசினார். 

பின்பு புறப்படும் போது, எனது மணிபர்ஸ் கானாமல் போய் பணம் திருடு போனது பற்றி கூறினேன். விரிவாக விசாரித்து விட்டு, தற்போது உடனடியாக ஏதாவது பணம் தேவையென்றால் உதவி செய்வதாக கூறினார். அவருடன் இருந்த ஊழியரும் உதவி செய்வதாக கூறினார். நான் சமாளித்து விடுவேன் தேவையில்லை என்று கூறி விட்டு வந்து விட்டேன்.

அரசு அலுவலகத்தில் ஊழியர்கள் அன்புடன் பொறுமையாக தெளிவாக பேசியது பெரிய ஆறுதல். இது ஒரு அதிசயம்.

இந்த பெரிய அலுவலகம், மற்ற அரசு அலுவலகங்கள் போல் குப்பையும் அசிங்கமாகவும் இல்லாமல் சுத்தமாக இருந்தது. எந்த ஒரு ஊழியரின் மேஜையுலும் கோப்புகள் இல்லை. ஒரு கனினி திரை மட்டுமே உள்ளது. 

வேறு ஒரு வருமான வரி அலுவலகம் உள்ளது. பழைய கட்டிடம். பல முறை புதுபிக்கப்பட்டுள்ளது.வழியெங்கும் அலமாரிகள் இருக்கும். அலமாரிகள் பூட்டியும் பூட்டாமலும் இருக்கும். கோப்புகள் வழிந்து கொண்டிருக்கும். அலமாரிகளின் மேற்புறமும் கோப்புகள் சிதறி கிடக்கும். அறை உள்ளே , மேஜையில் கோப்புகள் நிறைய இருக்கும். அந்த கோப்புகளின் நடுவே ஊழியர்களை தேடி பிடிக்க வேண்டும். சில அறைகளில் பெரிய மேஜை இருக்கும் அதில் நான்கு புறமும் நான்கு ஊழியர்கள் அமர்ந்து வேலை பார்த்துகொண்டிருப்பார்கள். எப்போதும், யாரையும் உட்கார வைத்து பேசுவதில்லை. ஒரு முறை சென்ற போது, ஒரு பெண் ஊழியர், நாற்காலியில் குத்துகாலிட்டு உட்கார்ந்து கொண்டு,  சமோசா சாப்பிட்டுக்கொண்டு என்னிடம் வேண்டா வெறுப்பாக பேசிக்கொண்டிருந்தார். கிட்ட தட்ட அரைமணி நேரம் பேசியும் உட்கார சொல்லவில்லை.
 
அங்கிருக்கும் ஊழியர்கள் என்னிடம் பணம் கிடைக்கும் என்ற நிலையில் மட்டுமே உட்கார வைத்து பேசுவார்கள்.  அதிகாரியை பார்க்க அறைக்கு செல்ல சீட்டு எழுதி கொடுக்க வேண்டும். அந்த சீட்டை உள்ளே எடுத்துகொண்டு தருவதற்க்கு பணம் கொடுக்க வேண்டும்.

இப்படிப்பட்ட அலுவலகங்களில் அனுபவப்பட்ட எனக்கு இன்றைய அலுவலகமும், அதன் ஊழியர்கள் தன்மையாக நடந்து கொண்டதும் ஆச்சரியத்தை கொடுத்ததுடன் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

எல்லா அரசு அலுவலகங்களும் இது போன்று சுத்தமாகவும், ஊழியர்கள் தன்மையுடனும் நடந்து கொண்டால் மக்கள் ஏன் குறை சொல்லப்போகிறார்கள்.

அடுத்த முறை செல்லும் போது எனது வேலை முடிந்து விடுமா என பார்க்க வேண்டும்.

எனக்கு உதவி செய்ய முன் வந்த ஊழியர்களுக்கு, தினமும் 2 முறை ஆண்மை எழுச்சி பெற்றி மகிழ்சியாக வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன்.

Monday 23 June 2014

இலக்கியம் என்றால் என்ன ?



அண்மையில் எழுத்துலகில் இரண்டு முக்கிய பிரச்சனைகள் பேசப்படுகிறது.

1. திரு. நாஞ்சில் நாடன் அவர்கள் எழுத்தாளர்கள் பட்டியல் வெளியிட்டது குறித்து

2. திரு. ஜெயமோகன் அவர்கள் , அவரது எழுத்துக்களில் பெண் எழுத்தாளர்களை தரக்குறைவாக எழுதுவது குறித்து.

திரு. நாஞ்சில் நாடன் அவர்களின் பட்டியலில் பல பெயர்கள் விடுபட்டு விட்டது என்பது அதாவது தங்களது பெயர்கள் அதில் இல்லை என்று மறைமுகமாக கூறுவதுடன், தங்களால் எழுத்தாளர் என அங்கீகரிக்கப்படாத அல்லது தனிப்பட்ட முறையில் விரும்பாதவர்களின் பெயர்கள் அதில் இடம் பெற்றிருப்பது குறித்த குற்றச்சாட்டு.

ஆயிரக்கணக்கான எழுத்தாளர்கள் இருக்கும் சூழ்நிலையில் அவர் படித்த எழுத்தாளர்களின் அடிப்படையில் அவருக்கு பிடித்த எழுத்தாளர்களை பட்டியலிட்டிருப்பார் என்ற அடிப்படை புரிதல் இல்லாமல் அவரை விமர்சிப்பது எழுத்தாளர்களின் அறியாமையை காட்டுகிறது. அவர் தெரிந்தே பல பெயர்களை குறிப்பிடவில்லையென்றாலும், அவரிடம் சான்றிதழ் பெருவதன் மூலம் தான் அங்கீரக்கப்படுவீர்கள் என்றால் , உங்களுக்கு உங்கள் மீதும் படைப்புகளின் மீதும் நம்பிக்கை இல்லை என்று பொருள். எழுத்தாளன் வாசகனால் மட்டுமே அங்கீகரிக்கப்படவேண்டும். பட்டியலில் இடம் பெற்றோ, விருதுகளை வாங்குவதன் மூலமோ அங்கீகாரம் கிடைக்காது.

திரு. ஜெயமோகன் பெண் எழுத்தாளர்களின் எழுத்துக்களை ஏற்றுக்கொள்ளாமல் அவர்கள்பெண்என்று முன்னிலை படுத்தி கொண்டதன் மூலமே எழுத்தாளர்களாக வலம் வந்து கொண்டிருப்பதாக அவர் கூறியுள்ள கருத்துக்களுக்கு, பெண் எழுத்தாளர்கள் கூட்டாக கண்டன அறிக்கை தயாரித்து வெளியிட்டுள்ளனர். அதில் சில ஆண் எழுத்தாளர்களும், விமர்சகர்களும் ஆதரவு கருத்தை தெரிவித்துள்ளனர்.

இந்த சர்ச்சையை குறித்த அனைத்து தரப்பு வாதங்களையும் படித்தேன். சில சொற்களை திரு. ஜெயமோகன் பயன்படுத்தியிருக்க வேண்டாம் என தோன்றியது. ஆனால், அவரது கருத்துக்கள் அனைத்தும் எனக்கு ஏற்புடையதாக இருக்கிறது.

ஒரு தனி நபர் பெண்களின் எழுத்துக்களை அங்கீகரிக்கவில்லையென்றால். அவர்கள் எழுத்தாளர்கள் இல்லையென்று ஆகிவிடுமா. தொடர்ந்து எழுதி , வாசகர்களின் நன்மதிப்பை பெறும் போது, அவரது கருத்து தானாகவே மாறிவிடும்.

25 வருடங்களுக்கு பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து வாசித்து வரும் பழக்கத்தை கொண்டிருக்கிறேன்.

நான் வசிக்கும் டெல்லி பகுதியில் , தமிழ் வாசகசாலை இல்லாத நிலையில் இனையத்தில் இலவசமாக கிடைக்கும் அனைத்து எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் விருப்பு வெறுப்பின்றி படித்து வருகிறேன். புத்தகம் விலை கொடுத்த வாங்கலாம் என்றால் எந்த எழுத்தாளரின் எந்த புத்தகம் சிறந்தது என்று தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்ப்படுகிறது. மேலும், வாங்கிய பிறகு அந்த எழுத்து பிடிக்கவில்லையென்றால், சொத்துக்களை இழந்து விட்டது போன்ற மனநிலை ஏற்ப்படுகிறது.

எழுத்தாளர்கள் பரஸ்பரம் மற்றவர்களது எழுத்துக்களை தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்தாமல் அவர்களது கருத்துக்களை மட்டும் விமர்சனம் செய்தால் எழுத்தாளர்களிடையே மோதல் ஏற்ப்படாது.  எழுத்தாளர்கள குழுக்களாக செயல்படுகிறார்கள் என்ற எண்ணம் தோன்றுகிறது.

எந்த எழுத்தாளராக இருந்தாலும் தாம் எழுதுவது இலக்கியம் என்று கூறுகின்றனர். இங்கு  எழுத்தாளர்கள் என்று குறிப்பிடபட்டிருப்பவர்கள் அனைவரையும் இலக்கிய எழுத்தாளர்கள் என்று பொருள் கொள்ள வேண்டும்.

எழுத்தாளர்களை கீழ்கானும் முறையில் பிரித்து அவர்களுக்கான சலுகைகள் செயல் திட்டங்களை செயல்படுத்தினால் இப்பிரச்சனையை தீர்க்கலாம் என தோன்றுகிறது.

() ஆண் எழுத்தாளர்கள்
() பெண் எழுத்தாளர்கள்
() முன்றாம் பாலின எழுத்தாளர்கள்
இவர்களை மீண்டும்
() தமிழ் எழுத்தாளர்கள்தமிழில் எழுதுபவர்கள்
() தமிழ் எழுத்தாளர்கள்ஆங்கிலத்தில் / வேறு மொழியில்எழுத்தாளர்கள்    
() மொழிபெயர்ப்பு எழுத்தாளர்கள்

இவர்களை மீண்டும்
() முழு நேர எழுத்தாளர்கள்
() பகுதி நேர எழுத்தாளர்கள்
என்று வகைப்படுத்தலாம். மேலும், எழுத்தாளர்கள் என்றால், கதை, கட்டுரை, கவிதை எழுதுபவர்கள் அனைவரையும் குறிக்கும்.
மேலும், இவர்களை
() இடதுசாரி எழுத்தாளர்கள்,
() வலது சாரி எழுத்தாளர்கள்,
() நடுநிலை எழுத்தாளர்கள் ,
() பெண்ணிய எழுத்தாளர்கள்
() முற்போக்கு எழுத்தாளர்கள்
() தலித் இலக்கிய எழுத்தாளர்கள் என்று வகைப்படுத்தி அதில்
நவீனத்துவ எழுத்தாளர்கள், பின் நவீனத்துவ எழுத்தாளர்கள் என்றும் வகைப்படுத்தலாம்.
() சிறுகதை எழுத்தாளர்கள்
() தொடர் கதை எழுத்தாளர்கள்
() நெடுங்கதை எழுத்தாளர்கள்
() தொலைக்காட்சி தொடர் களுக்கு எழுதும் எழுத்தாளர்கள்
() திரைப்படத்திற்க்கு கதை / வசனம் எழுதுபவர்கள்
() இனைய எழுத்தாளர்கள் என்று வகைப்படுத்தலாம்.

எழுத்தாளர்களை ஒன்றினைக்கும் முயற்ச்சியாக பலமுறை எழுத்தாளர்கள் சங்கம் ஏற்ப்படுத்தப்பட்டாலும், இவர்களிடையே ஏற்ப்படும் சண்டை சச்சரவுகளால் அவை எதுவுமே செயல்படவில்லை.

தமிழக அரசும் , பல்வேறு தமிழ் அமைப்புகளும் எழுத்தாளர்களுக்கு விருதுகள் கொடுத்து கௌரவிக்கின்றன. இதழ்களிலும் அனைத்து தரப்பு எழுத்துக்களுக்கும் போட்டிகள் நடத்தி விருப்பு வெறுப்புடன் பரிசுகள் கொடுக்கின்றன.

இந்திய அரசும் சாகத்திய அகாதமி விருதுகளை வழங்குகிறது. உலக அளவிலும் பல விருதுகள் வழங்கப்படுகின்றன.

பல தரப்பட்ட எழுத்தாளர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் அங்கீகாரம் தேவைப்படுகிறது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பிரிவினருக்கும் ஒவ்வொரு ஆண்டும் விருதுகள் வழங்கப்பட வேண்டும்.

எழுத்தாளர்கள் எவ்வளவு எழுதினாலும், பதிப்பாளர்கள் பதிப்பித்து அதை வியாபாரமாக மாற்றுவதில்லை. மேலும், சில பல எழுத்தாளர்களின் எழுதுக்கள் பிரசுரிக்கப்பட்டாலும், எழுத்தாளர்களுக்கு அவர்களுக்கு உரிய தொகைகளை வழங்குவதில்லை.

பல எழுத்தாளர்கள் தங்களது சொந்த காசில் நூல்களை அச்சிட்டு, விழா ஏற்ப்பாடு செய்து வெளியிட்டு பின்பு சக எழுத்தாளர்களுக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் இலவசமாக வழங்கி வருகின்றனர்

சொந்த காசில் அச்சடிக்க அரசு உதவி தொகை வழங்க வேண்டும். மேலும், இவர்களுக்கு வங்கி கடன் வழங்க வேண்டும். புத்தகம் விற்பனை ஆகாத நிலையில் உடனடியாக வங்கி கடனை ரத்து செய்ய வேண்டும்

இந்த நிலையில் அரசு அனைத்து எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் அரசு அச்சகத்தில் அச்சிட்டு, மாநிலத்தில் உள்ள அனைத்து நூலகங்களிலும் புத்தகங்களை வைக்க வேண்டும். தனியார் அச்சகங்களில் அச்சிடப்படும் அனைத்து நூல்களையும் , நூலகங்களுக்கு வாங்க வேண்டும்.

மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆண்டு முழுவதும் புத்தக கண்காட்சி நடத்தி புத்தக விற்பனை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்.

மேலும், பதிபகங்களில் தேங்கி கிடக்கும் புத்தகங்களை அரசு மொத்தமாக கொள்முதல் செய்து, எல்லா அரசு விழாக்களிலும் விருந்தினர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் அவற்றை பரிசாக வழங்க வேண்டும். மேலும், பள்ளி குழந்தைகளுக்கு அந்த புத்தகங்களை இலவசமாக கொடுத்து கட்டாயமாக படிக்க உத்தரவிட வேண்டும்.

ஒவ்வொரு மாதமும் அரசே இலக்கிய கூட்டம் நடத்தி, அந்த மாதங்களில் அச்சிடப்பட்ட அனைத்து புத்தகங்களையும் அறிமுகம் செய்து வெளியிட வேண்டும். அரசு இதற்கென தனி வாரியம் அமைத்து, நலிந்த எழுத்தாளர்களுக்கு உதவி தொகை, ஓய்வுதியம், மருத்துவ காப்பீடு மற்றும் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும்.

இலக்கியம் படைக்கும் எழுத்தாளர்களை பற்றி எழுதியதை படித்த பலருக்கும் இலக்கியம் என்றால் என்ன என்ற அடிப்படை கேள்வி மனதில் தோன்றியிருக்கும்.

எழுத்தாளர்களுகிடையே இது குறித்து மாறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றன. ஒரே எழுத்தாளரே, பல் வேறு காலகட்டங்களில் இலக்கியம் என்பதற்க்கு பல்வேறு விதமான விளக்கங்களை தருகின்றனர்.
இலக்கியம் என்பதற்க்கு உறுதியான இறுதியான விளக்கம் எதுவும் தரப்படவில்லை. ஒவ்வொரு காலகட்டத்திற்க்கும் அதன் பொருள் வேறுபடுகிறது. இலக்கியம் உரை நடையாகவும் இருக்கலாம், கவிதையாகவும் இருக்கலாம், நாடகமாகவும் இருக்கலாம்.  

ஆரம்ப கால இலக்கியங்கள் எல்லாம் செய்யுள் வடிவாகவே இருந்துள்ளது. அவை செவி வழி செய்தியாகவே பாதுகாக்கப்பட்டன. அச்சு வடிவில் புத்தகங்களாக வெளியிட வாய்ப்பு ஏற்ப்பட்ட பின்பே பல பிரதிகள் எடுக்கப்பட்டு மக்களிடையே பிரபலப்படுத்தப்பட்டன. இலக்கியத்திற்க்கு முடிவான சூத்திரங்கள் இல்லாத நிலையில் ஒர் பிரிவினருக்கு இலக்கியமாக தோன்றுவது மற்றோரு பிரிவினருக்கு வெறும் சொற்களின் கூட்டஞ்சோறாக தோன்றுகிறது.

வாசகன் என்ற முறையில், இலக்கியத்தை எந்த வகையில் படித்தாலும், எழுத்தாளர் எந்த மனநிலையில் எதை குறித்து எழுதினாரோ அது உணரப்படவேண்டும். வேறு புதிய முறையில் வாசகன் புரிந்து கொண்டாலும், எதை படிக்கிறோமோ அது காட்சிகளாக பிம்பங்களை மனதில் தோற்றுவிக்க வேண்டும். அவ்வாறு பிம்பங்களை தோற்றுவிக்க தவறினால், அது எழுத்தாளனின் குறையே தவிர வாசகனின் குறையல்ல. அவ்வாறு மனத்திரையில் காட்சிகளை உருவாக்க முடியாத எழுத்துக்கள் இலக்கியங்கள் அல்ல என்பது எனது கருத்து.

இலக்கியத்தின் வகைகள், இலக்கியத்தின் வடிவங்கள், இலக்கிய கூறுகள், இலக்கியத்தின் முக்கியத்துவம், இலக்கியத்தின் பிரிவுகள் என்று இதை விரிவாக விவாதிக்கலாம்

இலக்கியம் எத்தனை வகைப்படும் என்று பார்த்தால், ஒருவர் எழுதும் சுய சரிதம் (Autobiography) , ஒருவருடைய சரித்திரத்தை மற்றவர் எழுதுவது (Biography) வீட்டு செல்ல பிராணிகள் மூலமாக நீதி கதைகள் சொல்வது ( Fable) புனைகதைகள் (Fantasy) குறிபிட்ட வட்டார வழக்கு கதைகள் ( Folk Tale) மாவிரனின் கற்பனை கலந்த நிஜ வாழ்க்கை வரலாறு (Legend) இனம் சார்ந்த நம்பிக்கை கதைகள் (Myth) அறிவியல் கதைகள் (Scientific) 

இலக்கியத்தின் வடிவங்கள் என்று பார்த்தால், உரைநடையாகவும், கவிதையாகவும் கட்டுரையாகவும், நாடகங்களாகவும் இருக்கலாம்.

இலக்கிய கூறுகள் என்பது, சுருங்க சொல்லி நிறைய புரிய வைப்பது. தான் சொல்லியதை மட்டுமல்லாமல், படிக்கும், கேட்கும், பார்க்கும் அனைவருக்கும் மாற்று பொருளை சிந்திக்க கூடியதாகவும் இருக்க வேண்டும். அன்றாட வாழ்க்கையில் உபயோகப்படுத்தும் வார்த்தைகளாகவும் அல்லது புது வார்த்தைகளை உருவகப்படுத்தி வாசகனை இன்ப நிலைக்கு அல்லது துயர நிலைக்கு அழைத்து செல்வதாக இருக்கவேண்டும். உலக அளவில் துயரங்களை சொல்வதை தான் இதுவரை இலக்கியமாக ஏற்றுக்கொண்டுள்ளது. .

இலக்கியத்தின் முக்கியத்துவம் என்று பார்த்தால், இன்றைய நிலையில் அது பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இலக்கியங்கள் பொதுவாக மக்களிடையே படிக்கப்படுவதில்லை. இன்றைய நிலையில் தொலைக்காட்சிகளில் காட்சிகளாக பார்க்க நேரிடுவதால், எழுத படிக்க தெரியாதவர்களுக்கு கூட புரிந்துவிடுகிறது. புத்தகத்தை படிக்க எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். நேரமின்மையும் ஒரு காரணம். பல் இலக்கியங்கள் துயரத்தை சொல்கிறது. வாழ்கையில் தினமும் துயரங்களை அனுபவிக்கும் மனிதன் மீண்டும் ஒரு துயரத்தை படித்து மன வலியை அதிகமாக்கி கொள்ள விரும்புவதில்லை. மேலும், பல இலக்கியங்கள் சாதாரண மனிதனின் வார்த்தைகளில் சொல்லப்படுவதில்லை. சாதாரண மனிதனின் வார்த்தைகளால் சொல்கிறேன் என்று வட்டார வழக்கு மொழியில் சொல்லும் போது , அது அனைத்து வட்டார மக்களாலூம் புரிந்து கொள்ள முடிவதில்லை. ஒரு கலாச்சாரத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட இலக்கியம் மற்ற கலாசாரத்தை சார்ந்த வாசகனால் புரிந்து கொள்ள முடிவதில்லை. இப்படி பல காரணங்களை சொல்லிகொண்டே போக முடியும்.

இலக்கியத்தின் மூலம் மனித மனங்களில் மாற்றங்களை ஏற்ப்படுத்த முடியும். உணர்ச்சிகளை தூண்ட முடியும். அந்த மனித மன மாற்றங்களின் மூலம் சமுதாயத்தில் மாற்றங்களை உருவாக்க முடியும்

இடதுசாரி எழுத்துக்கள், எழுத்தாளர்கள் என்றால், குடியாட்சிக்கு ஆதரவு, சமூகத்தில் ஏற்ற தாழ்வு அற்ற சமுதாயம் அமைய வேண்டும் என்பதும், சமூகவுடமை, பொதுவுடமை, அரசின்மை, மனித உரிமைகள், போர் எதிர்ப்பு, இயற்கை சுற்றுபுற சூழல் பாதுகாப்பு, தொழிற்சங்கம், பெண்களுக்கு சொத்துரிமை,  இவைகளுக்கு ஆதரவாக எழுதுபவர்களை இடதுசாரி எழுத்தாளர்கள் என்கிறார்கள்.

வலதுசாரி எழுத்துக்கள், எழுத்தாளர்கள் என்றால், பழமை கட்டி காப்பது, குறிப்பிட்ட இனம் மேன்மையானது என்கிற இனவாதம், சர்வதிகாரம், நிற வேறு பாடு காண்பது மற்றும் மதவாதம் போன்றவற்றை ஆதரிப்பது.

நடுநிலை எழுத்துக்கள் எழுத்தாளர்கள் என்றால் இடது மற்றும் வலது கொள்கைகள் இரண்டையும் கலந்து, மத சார்பற்ற முறையில் சிந்தித்து செயல்படுவது.

இடது சாரி எழுத்தாளர்கள் வலது சாரி எழுத்தாளர்கள் என்று அணி பிரிந்து நிற்க்கின்றனர். இடது வலதை வசைபாடுவது, வலது இடதை வசைபாடுவதும் நிகல் கால நிகழ்வு. தங்களுக்கு ஆதாயம் என்றால் இருவரும் கை கோர்த்து கொள்வார்கள்.

இவர்கள் இருவரும் நடுநிலைவாதியை எப்போதும் வசை பாடிக்கொண்டிருப்பார்கள்.  நடுநிலைவாதியின் கருத்துக்கள் தங்களுடைய கருத்துக்களுடன் ஒத்து போனால் அப்போது நடுநிலை வாதிகளுக்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிடுவார்கள்.

தாழ்த்தப்பட்ட மக்கள் ஒடுக்கப்பட்ட மக்கள் ஆதிவாசிகள் மற்றும் வறுமையில் வாடும் மக்கள் ( உயர் ஜாதி வகுப்பினர் தவிர்த்து) இவர்களை குறித்து எழுதுவது தலித் இலக்கியம்

முற்போக்கு எழுத்துக்கள் எழுத்தாளர்கள் என்றால் ஆரம்ப காலகட்டங்களில், விதவை திருமணம், குழந்தை திருமண எதிப்பு மற்றும் காதல் திருமணம் போன்றவற்றை ஆதரித்து எழுதியவை. தற்போது, காமத்தை பற்றி வெளிப்படையாக எழுதுவது , தகாத உறவு முறைகளை நியாயப்படுத்துவது போன்றவை என்ற அளவில் கருதப்படுகிறது.

பெண்ணிய எழத்துக்கள் எழுத்தாளர்கள் என்றால் பெண்கள் பிரச்சனை பற்றி எழுதுவது, அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்வது என்ற நிலையிருந்த பெண்ணியம் என்பது இன்று வெறுமனே எல்லாவற்றுக்கும் ஆண்களை எதிர்த்து, ஆணாதிக்க மனப்பான்மை என்று கூக்குரலிடுவது என்ற அளவில் நிற்கிறது.

இவைகளை கடந்தும் நல்ல இலக்கியங்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அவை வாசகனை அழ வைக்கிறது. கோபப்பட  வைக்கிறது. கழிவிரக்கம் செய்ய வைக்கிறது. இப்படி எல்லா உணர்ச்சிகளையும் தூண்டுகிறது. இந்த உணர்ச்சிகள் படிக்கும் போது ஏற்ப்படுகிறது. அதன் தாக்கம் சில நாட்கள் நீடிக்கிறது. பின்பு வாசகன் தனது தினசரி வேளைகளில் முழ்கி இவற்றை மறந்து விடுகிறான். எத்தனை உபதேசங்களை கேட்டாலும் நடைமுறையில் பின்பற்றப்படுவதில்லை. அது சாத்தியமில்லை. ஒரு துயரத்திற்க்காக சிறிது நேரம் வருந்தாலாம். சிறிய அளவில் ஏதெனும் உதவிகள் செய்யலாம். அதை நிரந்தரமாக போக்கிவிட முடியாது.

இலக்கியத்தை படித்து அதன் மூலம் பாதிக்கப்பட்டு தனது வாழ்க்கையில் கடைபிடித்ததாகவோ அல்லது அதன் மூலம் தான் திருந்தி விட்டதாகவோ அல்லது சமூகத்தை சமுதாயத்தை திருத்தி விட்டதாகவோ கூறமுடியாது. அப்படி சில சமயங்களில் நடந்திருந்தாலும் அவை மீண்டும் சமூகத்தில் புகுந்து விடுகிறது. 

தீண்டாமை, விதவை திருமணம் , பிறன் மனை நோக்குதல், கள் உண்ணுதல் இப்படி பல விசயங்கள் போதிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அவை நின்று விட்டதாக கூற முடியாது. உடன்கட்டை ஏறும் பழக்கம் நின்று விட்டதாக வாதத்திற்க்காக குறிப்பிடலாம். அவை இலக்கியங்களால் நிற்க்கவில்லை. மக்களின் மன மாற்றத்தாலும் சட்டங்களாலும், கல்வியறிவு போன்ற காரணங்களாலும் நின்றதே தவிர இலக்கியங்களால் நின்று விட்டதாக கூற முடியாது.

இலக்கியங்கள் உணர்ச்சிகளை தட்டி எழுப்பினாலும் அவை சமூகத்தில் தனிமனிதனிடத்திலோ அல்லது சமூகத்திலோ மாற்றங்களை ஏற்ப்படுத்த முடியவில்லை என்பதே உண்மை.

இலக்கியங்கள் குறித்த வாசகனின் கருத்தை இலக்கியவாதிகள் அறிய முயற்சி செய்வதுமில்லை அவ்வாறு விமர்சிக்கப்பட்டாலும், எதிர்வாதம் செய்து வாசகனை தன்னை விட ஒரு படி தாழ்ந்தவன் என்று காட்டவே முயற்சி செய்கின்றனர்.