Friday 27 February 2015

அப்தக் சப்பன் 2 - இந்தி திரைப்படம்



அப்தக் சப்பன் 2 – 
(இதுவரை 56 பேரை சுட்டு வீழ்த்தியுள்ளேன் என்பது பொருள்) – இந்தி திரைப்படம்

அப்தக் சப்பன் பகுதி 2 படக்கதை 

காவல் துறை அதிகாரி – நானா பாட்டேக்கர் வில்லன்களை சுட்டு வீழ்த்துவதில் கெட்டிக்கார். முதல் படத்தில் இதே வேடத்தில் நடித்தவர். அந்த படத்தில் அவரது மனைவி கொல்லப்படுவதுடன் படம் முடிகிறது.
இந்த படத்தில் அவர் கோவா கிராமத்தில் மகனுடன் அமைதியாக வாழ்வதாக கதை ஆரம்பிக்கிறது. 

மீண்டும் மும்பையில் ரவுடிகளின் நடமாட்டத்தை ஒடுக்க உள்துறை அமைச்சர் அழைப்பு விடுக்கிறார். முதலமைச்சரும் ஒப்புக்கொள்கிறார். மகனுடன் மும்பை வருகிறார். ரவுடிகளை வேட்டையாடுகிறார். அவரது பழைய நண்பரின் மகள் (குல் பங்க் ) பத்திரிக்கையாளராக வருகிறார். அவரது அப்பா தனது காவல்துறை வாழ்க்கையை புத்தகமாக எழுதும் போது இறந்து விடுகிறார். அதை முடிக்க இவரது உதவியை நாடுகிறார்.
ஒரு நாள் கடற்க்கரையில் பேசிக்கொண்டிருக்கும் போது இவரை பழிவாங்க வருபவர்கள் இவரது மகனை சுட்டு வீழ்த்துகின்றனர்.

இதற்க்கிடையில் முதலமைச்சர் கொல்லப்படுகிறார். இதன் குறித்த விவரங்களை சேகரிக்கும் பத்திரிக்கையாளர் சுடப்படுகிறார்.

உள்துறை அமைச்சர் முதலமைச்சராக பதவியேற்க்கவே  முதலமைச்சரை கொன்ற செய்தி கிடைக்கிறது. உள்துறை அமைச்சரும் ஒப்புக்கொள்கிறார். அரசியலில் இது சகஜம் என்றும் தன்னுடன் இருக்கும் படி கூறுகிறார். விலகி சென்றாலும் பரவாயில்லை என கூறுகிறார்.

உள்துறை அமைச்சர் பொதுக் கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் போலிஸ் அதிகாரி மறைந்த முதலமைச்சரை பற்றி தானும் சில வார்த்தைகள் பேச வேண்டும் என கூறி பேசுகிறார்.

இது வரை 55 பேரை சுட்டுக் கொன்றுள்ளேன். அவை மறைவாக செய்தவை. இப்போது உங்கள் முன் ஒருவரை சுட்டுக்கொள்கிறேன் ஒன்று பேனா போல் இருக்கும் ஒரு கருவி மூலம் உள்துறை அமைச்சர் கழுத்தில் குத்துகிறார்.

கைது செய்யப்பட்டு வாக்கு மூலம் கொடுக்கும் போது, இது வரை என்னவெல்லாம் நடந்தது என வாக்கு மூலம் கொடுக்கிறார்.

எந்த வித பெரிய திருப்பங்களும் இல்லாமல் கதை சொல்லப்படுகிறது. நடிப்புக்கு பெரிதாக வாய்ப்பு இல்லை. துரத்துவது சுடுவது இவை தான் கதை. கதாநாயகி என்று ஒருவர் இதில் தேவையில்லை என்பதால் ஒரு பெண் பத்திரிக்கையாளர் என்று ஒருவர் சில காட்சிகளில் வருகிறார்.
முதல் காட்சியிலிருந்து இறுதி காட்சி வரை ஒலி ஒரே விதமாக இருக்கிறது. மிகவும் உச்ச கட்ட ஒலியாக இருக்கிறது. துப்பாக்கியால் சுடும் காட்சியில் நமது மண்டையில் சுடுவது போல இருக்கிறது. தலைவலி வருகிறது.

இந்த படத்தில் ஒளிப்பதிவு என்று ஒன்றும் இல்லை. பழைய சந்து பொந்துகளில் ஓடுவது மற்றும் ஒரு  வீடு. . இதில் பாடல்கள் இல்லை. ஒளிப்பதிவாளருக்கு எந்த வேலையும் இல்லை. 

நான் மாலை 4 மணி காட்சி பார்த்த போது 20 பேர் படம் பார்த்தோம்.
படம் பார்க்க வேண்டும் என்று அவசியமில்லை.
 

Tuesday 17 February 2015

சுஜாதா சிறு கதைகள்



நகரம்

மருத்துவ மனையில் தனது குழந்தையை சேர்க்க தெரியாத படிப்பறிவில்லாத ஏழை தாயின் அவலத்தை கூறும் கதை.

படிப்பறிவில்லாதது அவளது குற்றமல்ல. மருத்துவ மனை ஊழியர்கள் அனைவரும் அவரவர் வேலையில் மும்முரமாக ஈடுப்பட்டிருக்கும் போது தனிப்பட்ட ஒருவருக்கு உதவி செய்வது இயலாத காரியம். அங்குள்ள பொது மக்களுக்கும் அவர் அவர் பிரச்சனை அவர்களுக்கு. இதில் யாரும் யாரையும் குறை சொல்ல முடியாது.

கை வைத்தியமும் கடவுள் நம்பிக்கையுமே நோயளியை காக்க முடியும் என்ற நம்பிக்கையில் வாழ்க்கையை கடத்துவதே மனித வாழ்வின் யதார்த்தம்.

காரணம் 

தந்தையின் காமத்தை கானும் எட்டு வயது மகன் , தனது வகுப்பு மானவியிடம் சில்மிசம் செய்ய, அறிவுரை கூறும் ஆசிரியரை பழி வாங்க, அவர் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்ததாக தலைமை ஆசிரியருக்கு கடிதம் எழுத ஆசிரியர் வேலையிலிருந்து விலகுகிறார். 

ஒரு ஆண் மற்றோரு ஆணிடம் தவறாக நடந்து கொள்ள முடியுமென எட்டு வயது சிறுவனுக்கு தெரியுமளவுக்கு காமம் எங்கும் பரவியிருப்பதும் அதை தங்களுக்கு எந்த விதத்திலும் பயன் படுத்திக்கொள்ள முடியும் என்ற மன நிலை இருப்பதும், சமூக சீரழிவின் ஒர் அங்கமாக மாறிவிட்டது 

கால்கள் 

ஆங்கிலேய ஆட்சி காலத்தில் காவல் துறையில் பணியாற்றிய போது ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த மனிதர்களை சுட்டுக் கொல்லாமல், கால்களை குறி வைத்து சுட்டதை பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார். மக்கள் நொண்டி நொண்டி ஓடியதை ரசித்து  பேசுகிறார். சுதந்திரத்துக்கு பிறகு அனைத்தும் சீர்கேடு அடைந்து விட்டது என்பதும், ஆங்கிலேய ஆட்சியே சிறந்தது என்பது அவரது எண்ணம்.

அவரது கால்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு இயற்கை உபாதை கழிக்க கூட எழுந்து நடக்க முடியாத நிலையில் இருக்கிறார். 

இன்று இவர் நடக்க முடியாமல் இருக்க அவர் செய்த அந்த செயல்களுக்கு இறைவன் / இயற்கை கொடுத்த தண்டனையா ?

ஜன்னல் 

ஒரே விதமான வேலையை பல வருடங்களாக செய்து வரும் வங்கி ஊழியனுக்கு சாகும் எண்ணம் வருவதாக கூறி மருத்துவரை பார்க்கிறான். மருத்துவர் இது இயற்கை என்றும் தனக்கும் எல்லா நேரமும் நோயாளிகளை பார்த்து கொண்டிருப்பது சலிப்பு தருகிறது என்றும் தானும் இதிலிருந்து விலக நினைப்பதாக கூறிவிட்டு, அவனுக்கு மருந்து எழுதி தந்து விட்டு வெளியே அனுப்புகிறார். மற்றோரு நோயளியை பார்க்கும் போது தெருவில் வேகமாக செல்லும் வாகனம் ஒன்று தீடிரென நிறுத்தப்படும் ஓசை கேட்கிறது.

அந்த மனிதன் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தானா அல்லது விபத்து நேர இருந்ததா அதில் அவன் பிழைத்தான செத்தானா என்பதை வாசகனின் கற்பனைக்கு விட்டு விடுகிறார்.

இளநீர் 

இரு மாநிலங்களுக்கு இடையில் ஏற்ப்பட்டுள்ள பிரச்சனையால் ஊர் அடங்கி இருக்கும் இடத்தில் ஒரு கிழவன் இதை அறியாமல் இளநீர் விற்றுக் கொண்டிருக்கிறான்.ஒரு மாநிலத்தில் வன்முறையில் ஈடுப்படும் கும்பல் அந்த கிழவனிடம் தகராறு செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த சமயம் இளம் தம்பதிகள் காரில் வருகிறார்கள். இளநீர் குடிக்க நிற்கும் போது இந்த வன்முறை கும்பல் அவர்களை கொல்கிறது.

எங்கோ யாரோ பிரச்சனையை கிளம்பினால் அதற்கு சம்மந்தமில்லாதவர்கள் பாதிக்கப்படுவதை குறிப்பிடுகிறார்.

எப்படியும் வாழலாம்

விலை மாதுவை பேட்டி எடுப்பது போன்ற கதை. அவளுக்கு தனது வயது தெரியாது. ஏன் இந்த தொழிலுக்கு வந்தாய் என்று கேட்டால் திமிர் பிடித்து வந்ததாக கூறுகிறாள். வறுமையோ அல்லது நிர்பந்தமோ 
இல்லையென்றும் ஆரம்பத்தில் தனக்கு பிடித்தே பல ஆண்களுடன் தொடர்பு கொண்டதாகவும் பின்பு இந்த தொழிலுக்கு வந்ததாகவும் கூறுகிறாள் . கேவலம் என்றோ இழிவு என்றோ கருதவில்லை. இதை விட்டு விட்டு வேறு கவுரவமான தொழில் செய்யலாம் என்றும் மறு வாழ்வு மையத்துக்கு செல்லலாம் என்று கூறினாலும், மறுவாழ்வு மையத்தில் நடக்கும் ஊழலை சொல்கிறால். தன்னிடம் வந்தவர்களை பற்றியும் கூறுகிறாள்.

இறுதியாக பேட்டியில் தன்னை யாரவது கல்யாணம் செய்து கொண்டு வாழ்க்கை கொடுப்பதாக கூறினால் அவ்வாறு வாழ தான் தயார் என்று பேட்டியில் பிரசுரிக்கும் படி கூறுகிறாள்.

இதன் மூலம் இந்த தொழிலில் ஈடுப்படுவர்கள் எல்லாம் வஞ்சிக்கப்பட்டவர்கள் அல்ல என்றும் விரும்பியே இதில் ஈடுப்பட்டுள்ளவர்கள் இருக்கிறார்கள் என கூற முயற்சி செய்கிறார்.

எல்டோராடா

எட்டு வருடங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய மகன் தந்தை சாக கிடக்கும் நிலையில் அவரை பார்க்க வருகிறான். வீட்டில் அவனை யாரும் மதிக்காமல் வெளியேற்ற நினைக்க  , அவன் தந்தையை பார்க்கிறான். தந்தை தான் இங்கு இருக்க விருப்பம்மில்லையென்றும், தன்னை அவனுடன் அழைத்து செல்லும் படியும் கூறிகிறார். பழைய இனிய விசயங்களை பேசுகிறார்கள். அன்று இரவே இறந்து விடுகிறார்.
சொத்தெல்லாம் தனது பெயருக்கு எழுதி வைத்திருப்பதாகவும் , அதை அண்ணன் பெயருக்கு மாற்றி தருவதாகவும் கூறி வெளியேறுகிறான்.
தந்தைக்கும் மகனுக்கும் இருக்கும் இனிய உணர்வுகளை பதிவு செய்துள்ளார்.

கர்ஃபுயூ 

கர்ஃப்யூ இருக்கும் நேரத்தில் ஹைதராபாத் வருபவர்கள், கடைத்தெருவில் பொருட்கள் வாங்கி கொண்டிருக்கும் போது, கலவர கும்பல் கணவனை தாக்க வரும் போது, அதில் ஒருவன் அவண் தன் அண்ணன் போல் இருப்பதாக கூறி காப்பாற்றி விடுகிறான்.

அரிசி

காரை பழுது பார்க்க வந்த இடத்தில் விபத்தை பார்க்கிறான். போலிசுக்கு போன் செய்கிறான். இன்ஸ்பெக்டர் சாட்சி சொல்ல இவனது விவரங்களை கேட்க சாட்சி சொல்ல மனமில்லாமல் தான் வெளியூர்காரன் என விலகி விடுகிறான். போன் செய்யும் போது சாட்சி சொல்வதால் வரும் பிரச்சனைகளை அங்கு ஒருவர் சொல்வதால் இவன் விலகி கொள்கிறான். ஆனால் ஒன்பது வருடமாக இதே ஊரில் இருப்பவன்.

விபத்து சமயத்தில் அங்கு சிந்திய அரிசியை கூட மக்கள் அள்ளி செல்லும் அவலத்தையும் பதிவு செய்கிறார்.

நமது போலிசும் நீதி மன்றமும் சாட்சிகளை படாத பாடு படுத்துவதால் யாரும் சாட்சியாக இருக்க விரும்புவதில்லை.

அம்மா மண்டபம் 

நாத்திக வாதம் பேசும் கணவனுடன் திருவரங்கம் வரும் மனைவி தனது கணவனை கோயிலுக்குள் அழைத்து சென்று தரிசனம் செய்ய வைத்து அன்று உறவு கொண்டால் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கையுடன் எப்படி அழைத்து செல்வது என நினைத்திருக்கும் போது, காவேரி கரையில் கணவன் குளிக்கும் போது நகை பணம் கையில் வைத்திருக்கிறாள். திருடன் திருடி கொண்டு ஓடுகிறான். புகார் கொடுக்க காவல் நிலையம் சென்றால், இன்ஸ்பெக்டர் கோவில் சன்னதியில் இருப்பதை அறிந்து புகார் செய்ய போகிறார். அங்கு ரங்கநாதனிடம் புகார் அளிக்கப்படுகிறது. இரவு உறவும் ஏற்ப்படுகிறது.

கடவுள் நாத்திகனையும் தன்னிடம் வரும் படி அழைத்து விடுகிறார்
















Friday 13 February 2015

ROY – இந்தி திரைப்பட விமர்சனம்



ROYஇந்தி திரைப்பட விமர்சனம்

ரொமான்டிக் திரில்லர் என்ற விளம்பர வரிகளை பார்த்து திருடன் போலிஸ் விளையாட்டு கதை என்ற முன் முடிவுடன் படம் பார்க்க சென்றேன். 

இதில் காதல் சிறிதளவே உள்ளது. திரில்லர் என்ற வார்த்தைக்கு இந்த படக்கதையில் என்ன வேலை என்றே புரியவில்லை.

கண்ணில் கானும் காட்சி அப்படியே ஓவியமாக உறைந்து விட்டால் கான கண் கோடி வேண்டும். அப்படி உறைந்த ஓவியங்களை திருடும் ஒரு திருடனின் கதையை திரைப்படமாக தயாரித்து வெற்றி பெறுபவனின் கதை.

அவரின் அடுத்த படத்திற்க்கு கதை எழுதும் போது , கற்பனை திறன் மழங்கிய நிலையில் யோசிக்க மலேசியா செல்கிறார். அங்கு வேறு படத்தை தயாரிக்கும் பெண்ணுடன் காதல் கொள்கிறார். அது அவரது 23வது காதலி என அறிமுகமாகிறார். காதலிப்பதும் விலகுவதுமாக வாழும் அவரை பற்றி குறிப்பிடும் போது அவரது நிகழ்கால காதலியை பெயர் சொல்லி குறிப்பிடாமல் எண் குறிப்பிட்டே ஊடகங்கள் குறிப்பிடுகிறது. இவரது போக்கை கண்டு அவள் விலகுகிறாள்.

பல நாடுகளில் ஓவியங்களை திருடுபவனை பிடிக்க பல முயற்சிகள் நடந்தாலும் அவனது முகம் தெரியாத காரணத்தால் பிடிபடாமல் இருக்கிறான்.

இயக்குனரிடமிருந்து விலகிய 23 இந்த திருடனை சந்திக்க அவர்களுக்குள் காதல் ஏற்ப்படுகிறது. இவளுக்கு அவன் திருடன் என்று தெரியாது.
இருவரில் யாருக்கு காதலி என்பது தான் கதை.

கதாநாயகி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். மிகவும் சுமாரான நடிப்பு.
இயக்குனராக நடிக்கும் அர்ஜீன் ராம்பாலை சுற்றியே கதை நகர்கிறது.. திருடனாக நடிக்கும் ரன்பீர் கபூர் பாத்திரம் சிறியது. இருவருமே சிறப்பாக செய்துள்ளனர்.

இந்த படம் ஓளிப்பதிவில் மிகவும் சிறந்து விளங்குகிறது. மலேசியாவில் எடுக்கப்பட்டுள்ள காட்சிகள் பிரமாதம். இந்த காட்சிகளை மலேசிய அரசாங்க சுற்றுலா துறை பயன்படுத்திக்கொள்ளலாம்.

பொதுவாக எனக்கு படம் பார்க்கும் போது, கதையுடன் ஒன்றுவதை விட காட்சிகள் எப்படியிருக்கிறது என்பதில் தான் கவனம் அதிகமாக இருக்கும். காட்சியில் இருக்கும் ஓவியங்கள், அழகு பொருட்கள், கேமரா கோணங்கள், ஆடை வடிவமைப்பு போன்றவைகளை அதிகமாக கவனிப்பேன். இதனால் சில சமயம் வசனங்களை கவனிப்பதை தவற விட்டு விடுவேன்.

இந்த படத்தில் கடற்கரை, கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள வீடு, வீட்டின் உள் அரங்க வேலைப்பாடு, அங்கு இருக்கும் பொருட்கள், வீடு அதன் அமைப்பு, பெரிய ஹோட்டல் அமைப்பு இவைகள் என்னை மிகவும் கவர்ந்தது.

திருடப்படும் ஓவியங்கள் அல்லது காட்டப்படும் ஓவியங்கள் எதுவும் மனதை கவரும் அளவுக்கு இல்லை. திருடப்படும் ஓவியங்களின் சிறப்பு என்று ஏதும் கூறப்படவில்லை அல்லது பிரபல ஓவியர் வரைந்தது என்றும் கூறப்படவில்லை. ஏதற்க்காக அவ்வளவு விலை கொடுத்து ஒருவர் வாங்க முயற்சி செய்கிறார் என விளக்கம் அளிக்கவில்லை  திருடப்படும் நிகழ்ச்சிகளை எவ்வித பரபரப்பும் இல்லாமல் காட்டியுள்ளர்.
இயக்குனர் அவரது திரைப்பட கதைக்கு வறட்சியுடன் அல்லாடும் காட்சிகளை விவரிப்பது படத்தில் தொய்வு ஏற்ப்படுத்துகிறது.

படம் மிகவும் மெதுவாக நகர்கிறது. எடிட்டிங் சரியாக அமையாததால் கதையை புரிந்து கொள்வதில் சிரமம் ஏற்ப்படுகிறது.

ஒளிப்பதிவை தவிர்த்து இந்த பட்த்தில் வேறு சிறப்புகள் ஏதும் இல்லை.
 


Friday 6 February 2015

SHAMITABH – சமிதாப் – இந்தி திரைப்பட விமர்சனம்



SHAMITABH – சமிதாப் – இந்தி திரைப்பட விமர்சனம்

தனுஷ் கிராமத்து ஊமை சிறுவன் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுபவன். வளர்ந்த பிறகு அம்மா இறந்த பிறகு மும்பை வந்து நடிக்க முயற்சி செய்கிறான். உதவி இயக்குனர் அக்சரா ஹாசன் (Akshara Hassan ) அவனது நடிப்பு திறமையை அறிந்து, மருத்துவரின் உதவியுடன் வெளிநாடு சென்று , தொன்டையில் சிறு கருவியை பொருத்துவதன் மூலம் பேச ஏற்ப்பாடு செய்கிறார்.

தொன்டையில் சிறு கருவி பொருத்தப்படுகிரது. காதில் புளூ டூத் போல் ஒரு கருவி பொருத்தப்படுகிறது. இவருக்கு பதிலாக சற்று தொலைவில் இருந்து கொண்டு வேறு ஒருவர் பேச அது தொன்டை கருவியில் பதிவாகும். அதே சமயம் இவர் காதிலும் கேட்கும்  இவர் வாய் அசைத்தால் அந்த சத்தம் வெளியே கேட்கும். வாயை திறக்காமல் இருந்தால் சத்தம் கேட்காது. அழிந்து விடும். எதை இவர் பேசுவதாக வெளியில் கேட்க வேண்டுமோ அதற்கு ஏற்றார் போல் இவர் வாயசைக்க வேண்டும். இதை நமக்கு விளக்க 10 நிமிடம் காட்சியமைக்கப்பட்டுள்ளது.

இவருக்கு குரல் கொடுக்க சுடு காட்டில் வசிக்கும் குடிகாரன் (அமிதாப் பச்சன்) தேர்வு செய்யப்படுகிறார். அவர் தனுஷ்ன் வேலைக்காரனாக அவர் அருகிலேயே சற்று தொலைவில் இருந்து கொண்டு வசனங்களை பேச இவர் நடித்து முதல் படத்திலேயே புகழ் பெருகிறார். Dhanush – Amitabh என்ற இரண்டையும் இனைத்து தனுஷ்ன் பெயர் சமிதாப்பாக Shamitabh கா மாறுகிறது.

அவரது தினசரி வாழ்க்கையின் எல்லா இடங்களிலும் அமிதாப் மூலமாகவே தனுஷ் பேசுகிறார்.

உண்மையான உடல் உறவில் ஈடுப்பட்டிருக்கும் போதும், முக்கல் முனகல் சப்தங்களை அமிதாப் பக்கத்து அறையில் இருந்து கொண்டு  செய்கிறார்.

அடுத்த படத்தின் கதை தேர்வுகளில் , அமிதாப்புக்கு பல கதைகள் பிடிக்கவில்லையென நிராகரிக்கப்படுகிறது. அதையும் மீறி தனுஷ் ஒரு கதையை தேர்வு செய்கிறார். அமிதாபுக்கு பிடிக்கவில்லை. பிரச்சனை ஆரம்பமாகிறது. குரல் இல்லாமல் உடல் (நடிப்பு) இல்லை என்றும், உடல் இல்லை என்றால் குரலுக்கு மதிப்பில்லை என்றும் வாக்கு வாதம் ஏற்ப்பட்டு ஈகோ பிரச்சனை ஆரம்பமாகிறது.

தனுஷ் அடுத்த படத்தில் ஊமையாக நடிக்கிறார். அதே சமயம் அமிதாப் குரல் கொடுக்க வேறு ஒரு தயாரிப்பாளரின் திக்குவாய் மகன் நடிக்க வேறு ஒரு படம் வெளியாகிறது . இரண்டு படங்களும் தோல்வியடைகின்றன.

இந்த நிலையில் ஒரு பத்திரிக்கையாளர் இந்த விசயத்தை கண்டுப்பிடிக்கிறார். அதை sms  மூலம் இவர்களுக்கு தெரிவிக்கிறார்.

அக்சரா இருவருக்கும் ஒருவர் மற்றோருவருக்கு துணை என்று புரிய வைத்து சேர்த்து வைக்கிறார்.

உண்மையை அனைவருக்கும் தெரிவித்து விடுவது என்றும் அதனால் எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்ப்படாது என்றும் புகழும் பணமும் கிடைக்கும் என்றும் முடிவெடுத்து, அதற்க்கான கூட்டம் கூட்டப்படுகிறது.

நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருவரும் வரும் போது, விபத்து ஏற்ப்பட்டு தனுஷ் இறக்க அமிதாப் குரல் இழக்கிறார்.

அமிதாப் நடிப்பு சிறப்பானது என்று அனைவருக்கும் தெரியும்.அவருக்கு ஈடு கொடுத்து தனுஷ் நடித்திருப்பது பாரட்ட கூடியது. சிறப்பாக நடித்துள்ளார். தனுஷ் ரசிகர்களுக்கு வித்தியாசமான நடிப்பை பார்க்க கூடிய வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் முடிவை ஏற்றுகொள்வர்களா என தெரியவில்லை.

தனுஷின் வழக்கமான ஆடல் பாடல்  சண்டை காட்சிகள் கிடையாது. உறவுகளுக்கு ஏங்கி தவிக்கும் உணர்ச்சி மிக்க காட்சிகள் கிடையாது. குத்து பாட்டு கிடையாது. வழக்கமான லுங்கி தாடி மீசை இல்லாமல், கண்ணை உறுத்தாத ஆடைகளுடன் ஆர்பாட்டம் இல்லாமல் நடித்துள்ளார். வசனங்கள் இவர் பேசவில்லையென்றாலும் அதற்கேற்ற முக பாவனைகளுடன் நடிப்பதுடன், அவர் பேசாமல் ஊமையாக நடிப்பதும் சிறப்பாக உள்ளது.

அமிதாப் மீண்டும் ஒரு முறை தான் நடிகன் என நிருபீத்துள்ளார். இயக்குனர் பால்கியின் இயக்கத்தில் வெளிவந்த “ சீனிகம் “ மற்றும்  “ பா “ திரைப்படத்தில் எவ்வளவு சிறப்பாக நடித்தாரோ அதை விட சிறப்பாக நடித்துள்ளார். இறுதி காட்சிகளில் மிக மிகச் சிறப்பு.

கதாநாயகி கமலஹாசனின் மகள் என்ற பெயரை தவிர வேறு ஒன்றும் சிறப்பு இல்லை. இதில் நடிப்பதற்க்கு வாய்ப்பும் இல்லை. அப்படியேயிருந்தாலும் ஒரு எழவும் நடிக்க தெரிந்திருக்காது. இந்த வேடத்திற்கு யார் வேண்டுமானாலும் நடித்திருக்கலாம். இவர் கருப்பு உடை மட்டுமே அணிவார் என்று கூறி எல்லா காட்சிகளிலும் ஒரு ஜீன்ஸ் மற்றும் ஒரு பக்கம் தோளில் தொங்கும் பனியனை போட்டுக்கொண்டு எல்லா காட்சிகளிலும் வருகிறார்.

ஒளிப்பதிவு P.C. ஸ்ரீராம். மிக நல்ல ஓளிப்பதிவு. அவரது திறமையை காட்டக்கூடிய அளவுக்கு காட்சியமைப்புகள் இல்லாத திரைக்கதை என்பதால் அவரது சிறப்புகள் அதிகமில்லை.

இசை இளையராஜா அவரது 1000வது படம். இது திரையுலக சாதனை. ஆறு பாடல்கள். மிகவும் சிறப்பான இசை என்று சொல்ல முடியாது அதே சமயம் மோசம் என்று கூற முடியாது. இசை நன்றாக இருந்தது.

ஒப்பனை விசயத்தில் அமிதாப்புக்கு சரியாக உடை உடுத்தாத குடிகாரன் உடை அதிலும் சுடுகாட்டில் வசிப்பவர். அந்த உடையிலும் அவரது கனத்த குரலிலும் கம்பீரத்தை கொண்டு வந்துள்ளார்.

அவருடன் சுடுகாட்டில் இருப்பவராக நடித்தவரும் தனது பகுதியை சிறப்பாக செய்துள்ளார்.

இயக்குனர் புதிய கதையை கூறியுள்ளார். இப்படி குரல் மாற்று சிகிச்சை செய்ய முடியுமா என தெரியவில்லை. இந்த விசயத்தை விளக்க நீண்ட நேரம் எடுத்துக்கொள்கிறார். அதை செயல்படுத்தும் காட்சிகளை நமக்கு உணர்த்த அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளின் காட்சிகள் நீளமாக இருப்பதால் அங்கு தொய்வு ஏற்ப்படுகிறது. வசனங்களை சிறப்பாக எழுதியுள்ளார்.

இந்தி திரைப்படத்தில் கதாநாயகன் இறந்தால் ஏற்றுக்கொள்வார்கள். தமிழ் படத்தில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் குறிப்பாக தனுஷ் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்தியில் அமிதாப்பை கதாநாயகனாக முன்னிறுத்தி அவரை உயிருடன் இருப்பது போல முடித்துள்ளார்.

இந்த முடிவை தவிர இந்த கதைக்கு வேறு முடிவு சொல்ல முடியாது அல்லது முடிவை சொல்லாமல் ரசிகர்களின் முடிவுக்கு விட்டிருக்கலாம். அப்படி செய்திருந்தாலும் இயக்குனர் விமர்சனத்திற்க்கு ஆளாவார்.

தனுஷ் மற்றும் அமிதாப் நடிப்புக்காக படத்தை பார்க்கலாம்
..
 தனுஷ் பற்றிய பொது அபிப்பிராயங்களை ஆரம்ப காட்சியில் கூறப்படுகிறது. நிறம் இல்லை உயரம் இல்லை பார்ப்பதற்க்கு நன்றாக இல்லை என்றாலும் திறமையில் பிரபலம் அடைந்துள்ளார் என்று வசனம் வருகிறது. அதற்க்கு திறமை இருந்தால் மட்டும் போதாது, அதை சரியாக உபயோகித்து கொள்ள அறிவு வேண்டும் என கூறுவதாக காட்சி அமைத்துள்ளார்.