Tuesday, 27 January 2015

BABY இந்தி திரைப்பட விமர்சனம்



BABY இந்தி திரைப்பட விமர்சனம்


தற்காலிக உளவு படையின் பெயர் பேபி எனப் பெயரிடப்படுகிறது. இறுதியில் அது நிரந்தரமாக்கப்படுகிறது. இதன் உறுப்பினர்கள் தலைவராக  Feroz Ali Khan (Dany Denzongpa) முக்கிய ஏஜன்டாக Ajya (Akshay Kumar ) இவரது மனைவியாக அஞ்சலியாக ( Madurimal Tuli ) மற்றும் அனுபம் கேர், ரானா , டாப்ஸி, கே.கே, மேனன், சுசாந் சிங் மற்றும் பலர்.

துருக்கியில் மாட்டியுள்ள இந்திய ஏஜன்ட் ஐ காப்பற்றும் முயற்சியில் ஈடுப்படும் போது, டெல்லி மால் ஒன்றில் நிகழ்த்தவிருந்த குண்டு வெடிப்பு தகவல் குறித்து தகவல் அறிந்து அதை தடுக்கின்றனர். ஆனால் அது முதல் திட்டம் என்றும் அடுத்தடுத்து குண்டு வெடிப்புகள் நிகழ்த்த இருக்கின்றனர் என்று அறிகின்றனர். 

தப்பியோடிய தீவிரவாதியை(கே.கே.மேன்ன் ) கண்டுபிடிக்க ஏற்படுத்தப்படும் படைக்கு “ பேபி “ என்று பெயரிடப்படுகிறது. அவனை பிடிக்கப்போகும் போது அஜய் தவிர மற்றவர்கள் உயிரிழக்கின்றனர்.

தீவிரவாதிகளுக்கு உதவி செய்பவனை பிடிக்க நேபாள் செல்கின்றனர். பிர்யா(டாப்ஸி ) மற்றும் அஜய் கணவன் மனைவியாக நேபாள் செல்கின்றனர். இந்த முயற்சியில் பிரியா தனியாக மாட்டிக்கொள்கிறாள். அவளை காப்பாற்ற அஜய் வருவதற்க்கு முன் பிரியா தனியாக சண்டையிட்டு அவனை வீழ்த்தி விடுகிறாள். இவர்கள் அரசு அனுமதியில்லாமல் மந்திரிக்கு மட்டும் தெரிவித்துவிட்டு நேபாள் செல்கின்றனர். மாட்டிக்கொண்டால் அஜய் இந்தியன் அல்ல என்றும் அவனுக்கும் இந்தியாவுக்கும் சம்மந்தமில்லை என்று சொல்வதாக முடிவு செய்து விட்டு செல்கின்றனர்.

தப்பியோடிய கைதி மேனன் சவுதி அரேபியாவிலிருந்து சதி வேலைகளுக்கு திட்டம் தீட்டி வருவதாக அறிந்து, அவனை பிடிக்க ரகசியமாக அஜய்,(Akashy) ஜெய், (Rana)ஒம் பிரகாஷ் (Anupam Kher)  சவுதி செல்கின்றனர். மேனனை சுட்டுக்கொல்கின்றனர். எதிர்பாராத விதமாக தீவிரவாதிகளின் தலைவன் மௌலானா ( Naz) அங்கிருப்பதை கண்டு அவனை சுட்டு இந்தியா கொண்டு வருகின்றனர். அவனை இந்தியா கொண்டு வர இவர்களுக்கு உதவி செய்யும் உள்ளுர்காரனின் சித்தப்பா என்றும் மருத்துவ சிகிச்சைக்கு சென்னை செல்வதாக கூட்டி வருகின்றனர். இதற்க்கிடையில் கே.கே மேனன் சுட்டுக்கொல்லப்பட்டவுடன் உள்ளூர் போலிஸ் விசாரனை செய்கிறது. இவர்கள் இந்தியா திரும்ப விமானத்தில் உட்கார்ந்திருப்பது வரை அறிந்து கொண்டு, அவர்களை பிடிக்க வசதியிருந்தும் இவர்களை தப்பிக்க விடுகிறான்.

இந்தியா கொண்டு வந்து விசாரனைக்கு பிறகு காஷ்மீர் அனுபப்ப்பட்டு வழக்கம் போல நடைப்பெறுவது போல கூறப்படுகிறது.

இது மாதிரியான கதையுடன் பல படங்கள் வந்து விட்டது இதுவும் வழக்கமான கதை தான். இயக்குனர் எந்த சிக்கலும் இல்லாமல் கதையை தெளிவாக எடுத்து செல்கிறார்.

மௌலானா பிடிபடுவதையும் அவனை இந்தியா கொண்டு வரும் பகுதியையும் விறு விறுப்பாக கொண்டு செல்கிறார். கடைசி நிமிடங்களில் பரபரப்பை கூட்ட, காட்சிகளை அமைத்து ரசிகர்களை அமைதியாக உட்கார வைக்கிறார்.

சவுதி அரேபிய போலிஸ்காரர் இவர்களை ஏன் தடுத்து நிறுத்தவில்லை என்ற காரணத்தை கூறவில்லை. இது ஒரு சொதப்பல்.

இது போன்ற கதைகளில் கதாநாயகனின்  அம்மா, அப்பா, தங்கை, காதலி, மனைவி குழந்தை இப்படி யாராவது வில்லனால் கடத்தப்படுவார் ஆனால் இந்த படத்தில் அப்படிப்பட்ட காட்சிகள் இல்லை. பாசத்தை பிழியும் காட்சிகளோ அல்லது அவற்றுக்கான பிளாஸ் பேக் காட்சிகளோ ஆடல் பாடல்களோ இல்லை. அதனால் படம் விறுவிறுப்பாக செல்கிறது. தனியாக பாடல் காட்சிகள் இல்லை. பின்னனியில் பாடல் ஒலிக்கிறது

 ( நான் படம் முடித்து வெளியே வரும் போது பாடல்கள் இல்லாத படம் என நினைத்திருந்தேன்.) .

Akshay தனது வழக்கமான நடிப்பிலிருந்து மாறுப்பட்டுள்ளார். அவருக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை முழுமையாக செய்திருக்கிறார். அவரது வழக்கமான ஈறுகளை காட்டி கேனத்தனமாக சிரிக்கும் சிரிப்பு காட்சிகள் இல்லை. தேவையில்லாமல் சட்டையை கழட்டி கான்பிக்கவில்லை. அவரது வழக்கமான குதித்து சண்டை போடும் பாணியில் சண்டையிடாமல் தேவையான இடங்களில் மட்டும் சிறப்பாக சண்டை காட்சிகளில் நடித்துள்ளார். 

இவரது மனைவியாக வருபவருக்கு அதிக காட்சிகள் இல்லை. இவர் என்ன வேலை செய்கிறார் என்பது சரியாக தெரியாவிட்டாலும் இவர் செய்வதாக கூறும் வேலை செய்யவில்லை என்பதை மட்டும் அறிவார். ஒவ்வொரு முறை வெளியே போகும் போது, “ செத்து விடாதே “ என்று மட்டும் கேட்டுக்கொள்கிறார். இந்த காட்சிகளில்  நியாயமாக அனுதாபம் வர வேண்டும். ஏனோ வரவில்லைல். கவர்ச்சி காட்டவில்லை. அழவில்லை. பாடல் பாடவில்லை. முத்தமிடவில்லை.

இவருடன் செல்லும் தாப்ஸி ஒரு காட்சியில் மட்டும் வந்தாலும் சிறப்பாக செய்து ஒரு சண்டை காட்சியிலும் அசத்தியுள்ளார். இவரும் தேவையில்லாமல் கவர்ச்சி காட்டவில்லை.

இவருடன் செல்லும் ரானாவும், அனுபம் கேரும் சிறப்பாக செய்துள்ளனர். நடிப்பில் அனைவரும் சிறப்பாகவே செய்துள்ளனர்.

ஓளிப்பதிவு (சுதீப் சேட்டர்ஜி ) டெல்லியில் நடப்பதாக காட்டப்படும் காட்சிகள் டெல்லிக்கு அருகில் உள்ள கிரேட்ட நொய்டா பகுதில் அமைந்துள்ள பல்கலைகழகத்தில் படபிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

துருக்கி (இஸ்தான்பூல்) நேபாள், சவுதி அரேபியா போன்ற இடங்களின் ஒளிப்பதிவு மிகவும் சிறப்பாக இருந்தது. குறிப்பாக சவுதி அரேபிய பாலைவன காட்சிகள் மிக மிக அருமை. பாலைவனத்தை கூட கண்ணுக்கு குளிர்ச்சியாக காட்டியிருக்கிறார்.

இசையும் பின்னனியும் அருமை. தலைவலி வருவது போல சண்டை காட்சிகளில் பின்னனி இசை அமைக்காமல் மிகவும் கச்சிதமாக உள்ளது. தனியாக பாடல் காட்சிகள் இல்லாமல் கவிதை போல படத்துடன் பாடல்கள் வருகிறது இதமாக உள்ளது.

ஓளிப்பதிவுக்கே கொடுத்த காசு பூரணமாகி விடுகிறது.

படம் பார்க்கலாம்.


Friday, 16 January 2015

ஆஷாபூர்ணா தேவி எழுதிய “ ப்ரதம் ப்ரதிஸ்ருதி - மதிப்புரை



ஆஷாபூர்ணா தேவி எழுதிய ப்ரதம் ப்ரதிஸ்ருதி

ஆஷாபூர்ணா தேவி எழுதிய ப்ரதம் ப்ரதிஸ்ருதி ” எனும் வங்க மொழி கதை தமிழில் “ முதல் சபதம் “ எனும் பெயரில் புவனா நடராஜன் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது
                
வங்க தேசத்தில் பழமையான சம்பிரதாயங்களில் வாழும் ஒரு பிரமாண குடும்பத்தில் பிறந்த சத்தியவதி என்ற பெண், பல தடைகளை கடந்து வாழ்க்கையில் முன்னேறுவது தான் கதை.

சத்தியவதியின் தந்தை ராம்காளி வைத்தியர் வசதியானவர். பெரிய கூட்டு குடும்பம். சகோதரர்கள், சகோதரிகள், மருமகன்கள், மருமகள்கள் மற்றும் இவர்களில் விதவையானவர்கள், இவர்களது குழந்தைகள் பேரன் பேத்திகள் என கூட்டாக வாழும் குடும்பம்.

ஒவ்வொருவரது வாழ்க்கையும் விவரிக்கப்படுகிறது. அந்த காலத்தில் எட்டு வயதிலேயே குழந்தைகளுக்கு திருமணம் செய்து, பெரியவள் ஆன பிறகு கணவன் வீட்டுக்கு அனுப்பி வைக்கும் பழக்கம் இருந்ததையும் , அந்த முறையினால் பலர் குழந்தை பருவத்திலேயே விதவையான விவரங்களையும் அந்த பழக்கத்தை மாற்றி கொள்ள விரும்பாத மனிதர்களையும் பற்றிய கதை.

இதில் அவரது பெண் சத்தியவதி தானாகவே எழுத படிக்க கற்று, கணவன் வீட்டுக்கு மிகவும் தாமதமாக சென்று, அங்கு தனக்கு விதிக்கப்பட்ட தடைகளை கடந்து தனது படித்த கணவனுடன் கல்கத்தா நகரம் வந்து, ஆங்கிலேய அரசு பணியாளராக அமரும் கணவருடன் வாழ்கிறார்.

கல்கத்தாவில் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் நவாபாக இருந்தாலும் தாழ்த்தப்பட்ட வகுப்பாக இருக்கும் காரணத்தால், அவர் குடியிருப்பவர்களை தனது பிரஜைகள் என்று அழைப்பதை விரும்பவில்லை. பிராமண பெண்ணுக்கு நவாபாக இருந்தாலும் காலில் விழந்து வணங்க வேண்டுமென எதிர்ப்பார்க்கிறார். 

இவருக்கு இரண்டு ஆன் பிள்ளைகளும் ஒரு பெண் பிள்ளையும் பிறக்கிறார்கள். ஆன் பிள்ளைகள் கல்லூரி படிக்கும் வயதில் பெண் பிள்ளை சிறிய வகுப்பில் படிக்கிறார். பெண் பிள்ளைக்கு பதினெட்டு வயது வரை திருமணம் செய்ய கூடாது என்று முடிவெடுக்கிறார். அதை கணவரிடமும் தெரிவிக்கிறார். இந்த கால கட்டத்தில் குடும்ப சொத்துக்களை பகிர்ந்து கொடுத்து விட்டு தந்தை ராம்காளி காசிக்கு சென்று விடுகிறார்.

பெரிய மகனுக்கு திருமணம் நிச்சயிக்க , தந்தையும் எட்டு வயது சிறிய மகளும் கிராமத்துக்கு செல்கின்றனர். இவர் திருமணத்திற்க்கு முன்பு செல்வதாக திட்டம். ஆனால் கிராமத்துக்கு உடனடியாக புறப்பட்டு வரும்படி செய்தி வர கிளம்பி செல்கிறார். அங்கு தனது எட்டு வயது மகளுக்கு திருமணம் செய்திருப்பது கண்டு அதிர்ச்சியடைந்து யாரிடமும் பேசாமல் கல்கத்தா திரும்பி வருகிறார். தானும் காசிக்கு சென்று தனது தந்தையிடம் வாழ முடிவு செய்வதுடன் கதை முடிவடைகிறது.

பிராமண குடும்பத்திலிருக்கும் பழக்க வழக்கங்களுக்கு எதிராக போராடி செயல்படும் இந்த பெண் மற்ற சமூகத்தாரை கீழாக நினைப்பதுடன் பிராமணர்களுக்கு மரியாதை தந்து தான் வாழ வேண்டும் என்ற நிலையில் இருப்பது மிகவும் முரண்பாடு. கல்வியினால் தான் சமூகம் முன்னேற்றமடையும் என்று கருதும் இவர், கல்வி கற்று தரும் ஆசான் எடுக்கும் முடிவுகளுக்கு பல சமயங்களில் எதிராக செயல் படுவதும் பின்பு தனது தூரத்து சொந்தகார மிக இளம் வயது பெண்ணை பாதுகாப்பு கருதி, வயதில் மிகவும் மூத்தவரான ஆசிரியருக்கு மனமுடித்து கொடுப்பது நேர் முரன்.

கதாசிரியர் ஆஷாபூர்ணா தேவியும் இளம் வயதில் கல்வி கற்காதவர். பின் பகுதி வாழ்க்கையில் கல்வி கற்று 250 நூல்களுக்கு மேல் எழுதியவர். இந்த கதை மிகவும் பிரபலமடைந்துள்ளது. இது ஞானபீட விருது பெற்ற நாவல்.

பதிப்பகத்தார் பிழை திருத்தம் சரியாக செய்யவில்லை.


 

Thursday, 15 January 2015

" ஐ " திரைப்பட விமர்சனம்

" ஐ " திரைப்பட விமர்சனம்

இயக்குனர் சங்கர் தனது திரைப்படங்கள் வெளியாவதற்க்கு முன்பே ஒரு பரபரப்பை உருவாக்குவதில் வல்லவர். அந்த எதிர்பார்ப்புடன் படம் பார்க்க செல்லும் ரசிகர்களை படம் திருப்திபடுத்தாத பட்சத்தில், பல விமர்சனங்களை அவர் எதிர் கொள்ள நேரிடுகிறது. அந்த வகையில் இந்ததிரைப்படம் ஹாலிவுட் படங்களுக்கு நிகரானது என்று விளம்பரப்படுத்தி வெளியிட்டுள்ளார். இசை வெளியீட்டு விழாவுக்கு ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் அவர்களை வரவழைத்து நடத்தி காட்டினார். படங்களில் பாடல் காட்சிகள் என்பதை கற்பனை செய்து கூட பார்க்காத ஹாலிவுட் நடிகரை வரவழைத்து நிகழ்த்தி காட்டியது, அவர் தரும் மோசமான படங்களுக்கு பழி வாங்கும் செயலாக தான் எனக்கு தோன்றியது.

படக்கதை

தமிழ்நாட்டு ஆன் அழகன் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருக்கும் விக்கிரமுக்கு , புகழ் பெற்ற மாடல் அழகி எமி  ஜாக்சன் மூலாமாக மாடல் உலகில் பிரபலமடைய வாய்ப்பு கிடைக்கிறது.. இவரது வருகையால் ஏற்கனவே பிரபலமாக இருந்த மாடல் உபேன் பட்டேல் பாதிக்கப்பட்கிறார். விக்கிரமுக்கு நடிப்பில் முன்னேற்றம் ஏற்ப்பட வேண்டுமென்பதற்க்காக காதலிப்பதாக கூற, பின்பு அது பொய் என்று அறிகிறார். பின்பு மீண்டும் உண்மையாக காதலிப்பதாக கூறுகிறார். விளம்பர படம் தயாரிப்பவருக்கும் விக்கிரமால் பிரச்சனை ஏற்படுகிறது. விக்கிரமால் பாதிக்கப்படும் ஒப்பானை கலைஞர் திருநங்கை, ஏற்கனவே சென்னை ஆனழகன் போட்டியில் இவரிடம் தோற்றவர் அனைவரும் சேர்ந்து . எமிலியின் குடும்ப நண்பர் மருத்துவரின் உதவியுடன் விக்கிரமின் அழகை கெடுத்து விடுகின்றனர். அதற்கு பழி வாங்குகிறார். இழந்த தனது உருவத்தை எமிலியின் உதவியுடன் மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபடுவதுடன் படம் முடிவடைகிறது.

விக்ரம் இந்த படத்திற்க்காக தனது உடலை மிகவும் வருத்தியுள்ளார் என்பது தெரிகிறது. ஆன் அழகன் என்று பேச்சுக்கு சொல்லாமல் நல்ல உடல் அமைப்பை உருவாக்கி கொண்டிருக்கிறார். விரிந்த தோள்களும் பரந்த மார்பும் ஒட்டிய வயிரும் பருத்த தொடைகளும் உருவாக்க முடிந்தது. ஆனால் முகத்தில் இளமையை உருவாக்க முடியவில்லை. முதிர்ந்த முகம்  அப்பட்டமாக காட்டிக்கொடுக்கிறது. ஒப்பனை செய்திருந்தாலும் இளமையை கொண்டு வர முடியவில்லை.

கண்ணத்தில் மரு ஒட்டி கொண்டு திருடன் என்று கான்பிப்பதும், லுங்கி கட்டி தொப்பி அனிந்தால் இஸ்லாமியர் என்றும் வெள்ளை அங்கி அணிந்து சிலுவை மாட்டிக்கொண்டால் கிருஸ்துவர் என்று காட்டி பல வேடங்களில் நடித்ததாக சொல்லி ஏமாற்றிய காலம் போய், உண்மையிலேயே ஒப்பனை கலைஞர்களின் உதவியுடன் உடல் எடையை கூட்டியும் குறைத்தும் தன்னை தயார் படுத்தி கொள்ளும் கலைஞர்கள் வாழும் காலமிது.

அந்த வகையில் தன் உடல் அமைப்பை மாற்றிக்கொண்டு, அருவெறுப்பான தோற்றத்தை ஏற்றுக்கொண்டு நடிக்க உழைத்திருக்கும் விக்கிரமை பாரட்ட தான் வேண்டும்.

வட சென்னை மொழி பேசும் விக்கிரமின் உடல் மொழி அதற்கு ஏற்றார் போல் இல்லை. விறைப்பான உடல் தோற்றத்துடன் அனைத்து காட்சிகளிலும் வருகிறார். காதல் காட்சிகளில் கூட அவரது அங்க அசைவுகள் அப்படி தான் இருக்கிறது. முகம் விகாரமாக மாறிய பிறகு முக பாவங்கள் மூலம் நடிப்பை காட்ட முடியாத நிலையில் உடல் மொழியில் தான் காட்ட வேண்டியுள்ளது. கூன் விழுந்த முதுகுடன் முடிந்த அளவு முயற்சி செய்துள்ளார். 

வட சென்னை மொழி சரியாக அமையவில்லை. மிகவும் செயற்கையாக இருக்கிறது. பிற்பகுதியில் சாதாரண மொழியாக மாறுகிறது.

நடிகை எமி ஜாக்சன் சில காட்சிகளில் கவர்ச்சியாக வருகிறார். நடிப்பு என்றால் என்ன என்று கேட்கும் நிலையில் உள்ள நடிகை. குறிப்பிடும் படி ஒன்றும் இல்லை.

சந்தானம், பவர் ஸ்டார் தண்டம். சந்தானம் தானாக நடிப்பதை நிறுத்திவிட்டால் கொஞ்சம் மரியாதையாவது மிஞ்சும். நடிகர் ராம் குமார் நடிப்பு பரவாயில்லை. அவர் விஜய் மல்லையாவை நினைவுப்படுத்துகிறார். நடிகர் உபேன் பட்டேல் அழகான உடலமைப்பு கொண்ட நடிகர். இவருக்கு நடிப்பு வராதே தவிர அவர் வரும் காட்சிகளில் கவர்ச்சியாக இருப்பார். கொடுத்த வேலையை ஒழுங்காக செய்ய முயற்சி செய்துள்ளார்.

முதல் சண்டை காட்சி உடற்பயிற்சி கூடத்தில் நடைப்பெறுகிறது. அனைவரும் உடற்ப்பயிற்சி செய்வதால் ஜட்டி மட்டும் போட்டுள்ளனர். அங்கு சண்டை நடைப்பெறுகிறது. பலமான இரும்பு தடிகளுடன் சண்டை போடுகின்றனர். இரும்பு பொருட்களில் முட்டி கீழே விழுகின்றனர். ஆனால் ஒருவருக்கும் ஒரு சொட்டு ரத்தம் கூட சிந்தவில்லை. வட சென்னை உடற் பயிற்சி கூடத்தில் அருவாள் இல்லை. தமிழ் படத்தில் அருவாள் இல்லாத சண்டை காட்சி ரசிகர்களை கவருமா ? 

உபேன் பட்டேலும் விக்கிரமும் மோதும் சண்டை காட்சி நல்ல நகைச்சுவை காட்சி என்று கூறலாம். இரண்டு கட்டுடல் கொண்ட நடிகர்கள் மிகவும் விறுவிறுப்பான சண்டை காட்சியை நிகழ்த்தியிருக்கலாம்.

சீனாவில் நடக்கும் சண்டை காட்சியில் கூரை வீட்டின் மீது சைக்கிளில் பறந்து பறந்து சண்டையிடுகின்றனர். நமது கிராம புறங்களில் இருக்கும் நாட்டு ஓடு வேய்ந்த ஓட்டு வீடு போல கானப்படுகிறது. அவ்வளவு ஆக்ரோசமான சண்டை காட்சியிலும் ஒரு ஓடு கூட உடையவில்லை. யாருக்கும் ரத்த காயம் ஏற்ப்படவில்லை.

ஓளிப்பதிவு P.C.Shreeram . அழகான படப்பிடிப்பு. வட சென்னை பகுதியாக இருந்தாலும் சரி, சீனாவின் தெருக்கள் பூந்தோட்டம், செயற்கை அரங்கம் எதுவாக இருந்தாலும் சரி அனைத்தையும் ஓவியமாக பதிவு செய்துள்ளார். கவிதை பேசும் காட்சிகள். பாரட்டுதலுக்கு  உரியவை. இந்த படத்திற்க்கு ஓவியமும் கவிதையும் பொருத்தமற்றது. மிரள வைக்கும் கோணங்களில் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த அழகான ஓவியங்கள் இந்த படத்தில் கூவம் நதியோரம் வைக்கப்பட்ட ஓவிய கண்காட்சி போல அமைந்துள்ளது. திருவையாரு விழாவில் அழகிய கவிதையை கும்பலாக பாடியது போல உள்ளது.

ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசை என்பதால் பாரட்டியே தீர வேண்டும் என்று துப்பாக்கி முனையில் மிரட்டினால் பாராட்டியே தீர வேண்டும்.  மற்றப்படி இசை என்பது பாடல் காட்சிகளில் ரசிக்கும் படி இல்லை. ஒரு பாடலில் தலையில் சுத்தியால் அடிப்பது போல இருந்தது. கிராமப்புற பாடல் காட்சி ஏன் அமைக்கப்பட்டது என்று தெரியவில்லை. ஒரு வேளை எனக்கு இசையை ரசிக்க தெரியவில்லை என்று கூறலாம். பின்னனி இசை பராவாயில்லை. ஒரு பிரமாண்டாமான பாடல் காட்சியில் பலூன்களும் பிளாஸ்டிக் தண்ணிர் குடங்களும் காட்சி படுத்தி தனது பிரமாண்ட பெருமையை கெடுத்துக்கொண்டுள்ளார்.

படத்தொகுப்பு சில இடங்களில் குழப்பம் ஏற்ப்படுத்துகிறது. சற்று தெளிவாக இருந்திருக்கலாம்.

விக்கிரமின் உடல் தோற்றம் மாறும் விதத்தை படிப்படியாக காட்டும் போது ஒப்பனை கலைஞர்களின் கை திறமை பளிச்சிடுகிறது. அதே போல பழி வாங்கிய பிறகு அனைவரது உடலும் வித்தியாசமான உடல் அமைப்பை பெறுகிறது. இதில் ஒப்பனை கலைஞர்கள் சிரத்தையுடன் உழைத்துள்ளனர் அவர்கள் பாரட்டுக்குரியவர்கள்..

இயக்குனர் எவ்வித திருப்பங்களும் இல்லாமல் கதையை சீராக சொல்லியிருக்கிறார். அடுத்தது என்ன என்ற எதிர்ப்பார்பை எந்த இடத்திலும் உருவாக்கவில்லை. உருவ மாற்றம் நிகழும் விசயத்தையும் மிகச் சர்வசாதாரணமாக சொல்லி விட்டார். அதே போல் அதை சரி செய்யும் விசயத்தையும் மிகவும் இலகுவாக காட்சிப்படுத்தி விட்டார்.

ஒரு பாடல் காட்சியில் எல்லா வீடுகளுக்கும் நீல நிறமடித்து படமாக்கப்பட்டுள்ளது. வட சென்னை இளைஞர், நீல நிற பாடல் காட்சிகளின் மூலம் தலித்தியம் காட்டப்பட்டிருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.

திருநங்கையின் காதல் என்ற காம இச்சையை காட்டியதுடன் அவரை வில்லியாக காட்டியதன் மூலம் மூன்றாம் பாலினத்தாரை கேவலப்படுத்தியதாக யாரும் வழக்கு பதிவு செய்யவில்லை. 

எல்லா விசயங்களும் நன்றாக இருந்தும் அனைத்தையும் இனைத்து ஒரு பிரமாண்டத்தை படைக்க தவறி விட்டார்.

அனைவரது உழைப்பையும் அங்கீகரிக்கும் விதமாக இந்த படத்தை பார்க்கலாம்
 Image result for ஐ படம்


Saturday, 3 January 2015

கயல் - திரைப்பட வமர்சனம்



கயல் - திரைப்பட வமர்சனம்



கயல் திரைப்படம் சாதாரண காதல் கதை என்று தெரிந்திருந்தால் பார்த்திருக்க மாட்டேன். விமர்சனம் எதுவும் படிக்காத காரனத்தால் பார்த்தேன். நீங்கள் அவசரப்பட்டு பார்க்க வேண்டும் என்ற அவசியமில்லை. நீங்கள் இந்த விமர்சனத்தை பார்க்கும் போது திரையரங்குகளிலிருந்து வெளியேறியிருக்கலாம். தமிழ் புத்தாண்டு அன்று (ஏப்ரல் மாதம் ? ) ஏதாவது தொலைக்காட்சியில் வந்து விடும்.

படம் பார்த்த பிறகு இது குறித்து என்ன மாதிரியான விமர்சனங்கள் எழுதப்பட்டிருக்கிறது என பார்த்தேன்.

வழக்கம் போல இயக்குனர் தனது மதம் சார்ந்து அதற்கு வலுவூட்டும் படி இயக்கியிருப்பதாக கூறப்படுகிறது. படத்தில் கதாநாயகன் அல்லது கதாநாயகி குறிப்பிட்ட மதம் சார்ந்தவர்களாக குறிப்பிடப்பட்டிருந்தால் அது மதம் சார்ந்த மத வாதிகளால் எடுக்கப்பட்ட படம் என்று குறிப்பிட்டு தங்களது மத நம்பிக்கையை அல்லது மத வெறுப்பை வெளிப்படுத்துகின்றனர்.

கிருஸ்துவ மத பெயர்களோ அல்லது இஸ்லாமிய மத பெயர்களோ  படத்தில் குறிப்பிடப்பட்டிருந்தால் அது அந்த மதத்தை தூக்கி பிடிக்க எடுக்க பட்ட படம் என்றும் இந்த மத பெயர்கள் இல்லையென்றால் அது இந்து மத படமாக பார்க்கும் கண்ணோட்டம் என்று நிறுத்தப்படும் என்று தெரியவில்லை.

இந்து மத பெயர்கள் இருந்தால் அதில் ஜாதிய பிரச்சனையை குறிப்பிட்டு எழுதுகிறார்கள். பிராமணர்கள் ஆதிக்க சாதியினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் ( தாழ்த்தப்பட்டோர் மட்டுமே தமிழர்கள் என்று குறிப்பிடும் அளவுக்கு இப்போது சாதி வெறி முற்றியுள்ளது ) என்ற பாகுபாட்டை கான்பித்து அது வரவேற்க்கதக்கது என்றும் வெறுக்க தக்கது என்றும் குறிப்பிடுகிறார்கள்.

இயக்குனர்கள் உண்மையில் அந்த வகையில் தான் சிந்தித்து படம் எடுக்கிறார்களா அல்லது பார்ப்பவர் மனதில் குறிப்பாக விமர்சகர்கள் மனதில் அப்படி தோன்றுகிறதா என தெரியவில்லை.

இப்படி கதாபாத்திரங்களின் பெயர்கள் அல்லது அவர்கள் அணிந்திருக்கும் குறியீடுகள் மூலம் அவர்களது மதமும் சாதியும் அடையாளப்படுத்தப்படும் என்றால் , கதாபாத்திரங்களுக்கு 1,2,3 ………. இப்படி எண்களை தான் அடையாளப்படுத்த வேண்டும். இதிலும் 1 என்பது பிராமணர் என்றும் 2 என்பது ஆதிக்க சாதியினர் என்றும் 3 என்பது தாழ்த்தப்பட்ட தமிழர்கள் என்றும் அடையாளப்படுத்துவார்கள்.

இதற்கு மேல் இயக்குனர் மற்றும் படத்தயாரிப்பாளர் எந்த நாட்டை சேர்ந்தவர் என்பதும் அவர் எந்த இன மொழியாளர் என்று அடையாளப்படுத்தி விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர்.

மதம் சாதி இவைகளை படம் பார்க்கும் போது அடையாளப்படுத்தி கொள்ளாமல் என்று திரைப்படத்தை பார்க்க கற்றுக்கொள்கிறார்களோ அன்று தான் திரைப்படத்தை உண்மையாக ரசிக்க முடியும்.

பொதுவான ரசிப்பு தன்மையுடைய ரசிகர்களை பார்த்து உங்களுக்கு படத்தை பார்க்க தெரியவில்லையென்றும் ரசிக்க தெரியவில்லையென்றும் உலக திரைப்பட தரத்துக்கு இல்லையென்றும் வேறு சிலர் நச்சரிக்க தொடங்குகின்றனர்.

புது கதாநாயகன் நாயகி அறிமுகம் ஆகும் போது பொதுவாக முதல் படத்தில் சிறப்பாக செய்கின்றனர். அந்த விதத்தில் இந்த படத்தில் அறிமுகமாகியுள்ள சந்திரன் வின்சென்ட் மற்றும் ஆனந்தி சிறப்பாக செய்துள்ளனர்.

ஓளிப்பதிவு மிகச் சிறப்பாக இருந்தது. என்னை போன்று நகரத்திலேயே பிறந்து வளர்ந்து இயற்கையையும் பசுமையும் பார்க்காதவர்களுக்கு இது போன்று காட்சியமைப்புகள் பிடித்து போவது இயற்கையானது. இயற்கை அழகை கானும் போது கண்கள் கூசுவதில்லை. செயற்கையாக பல வண்ண அரங்கங்கள் அமைத்து பாடல் காட்சிகளை அமைத்து மனிதனின் ரசிப்பு தன்மையை கெடுப்பதை விட இது போன்ற இயற்கை காட்சிகளை கான்பது சுகமாக இருக்கிறது.

இமான் அவர்களின் இசையில் பாடல்கள் நன்றாக இருக்கிறது. குத்து பாடல்கள் இல்லை. இறுதியில் கிருஸ்மஸ் தினத்தன்று சார்ச் வாசலில் பாடப்படும் பாடல் மிகவும் அபத்தம்.

காதலன் காதலியை சந்திக்கும் காட்சிகளை பல விதங்களில் காட்டப்பட்டு விட்டது. இதில் கதாநாயகனும் அவனது நண்பனும் தவறாக அடையாளம் கானப்பட்டு அழைத்து வரப்பட்டு அடி வாங்கும் நிலையில் அந்த ஜமின் மாளிகை வீட்டு வேலைக்கார பெண்ணை பார்த்து காதல் ஏற்ப்படுகிறது. அதை வெளிப்படையாகவும் சொல்லி விடுகிறான்.

ஒரே காட்சியில் கண்டதும் காதல் என்பது போல காதல் வருகிறது. அந்த பெண்ணுக்கும் காதல் வருகிறது. பல வருடங்களாக அந்த பெண்ணை காப்பாற்றி வரும் பாட்டி அதை ஏற்று அவனை தேடி போகும் படி சொல்லும் அபத்தமும் நடைப்பெறுகிறது. வந்தவன் யார் எந்த ஊர் என்று எதுவும் தெரியாமல், அவன் கன்னியாகுமாரி செல்வதாக கூறியதை நம்பி அவனை தேடி தன்னந்தனியாக செல்வது அபத்தம் என்று சொல்ல தோன்றுகிறது. ஆனால் இன்று இனையத்தில் பழகியவர்களை நம்பி வீட்டை விட்டு வெளியேறும் பெண்கள் இருப்பதால் இந்த மாதிரி காட்சிகளை சகித்துக்கொண்டு பார்க்கதான் வேண்டும். அவர்கள் இனைந்தார்களா இல்லையா என்பது தான் கதை. இனைந்து விடுகிறார்கள் என்பது தான் முடிவு.

2004ல் ஏற்ப்பட்ட சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டு எழுத்து மறு வாழ்வு அமைத்து கொண்டார்களா என்பது இது வரை விவாதத்துக்குரியது. ஆனால் அந்த சுனாமியை அடைப்படையாக வைத்து அதன் பின்னனியில் கதை காட்சிகள் அமைத்து பல திரைப்படங்கள் வந்து விட்டது. இந்த சுனாமி இவர்களுக்கு வாழ்க்கையை அமைத்து கொடுத்துள்ளது.