Showing posts with label கடவுள் வழிபாடு. Show all posts
Showing posts with label கடவுள் வழிபாடு. Show all posts

Saturday, 14 September 2013

பிள்ளையார்


கடவுள் வழிபாடு::


நான் பிள்ளையார் சதுர்த்தி அன்று அவரைபபற்றி ஒரு பதிவும் பாட்டும் போட்டேன். கடவுள் என்றால் என்ன என்பதும் ஏன் இப்படி என்பதும் தான் கேள்வியாக்கினேன்.

என் மீது அக்கறை கொண்ட நண்பர்கள் கடவுளை குறித்து இப்படியெல்லாம் பேச வேண்டாம், எழுத வேண்டாம் என்றும் கடவுள் மீது நம்பிக்கை வைக்கும்படியும், மேலும் கடவுள் தண்டிப்பார் என்றும் அறிவுரை கூறினர். அவர்கள் அனைவருக்கும் நன்றி.

கடவுளை நான் நிந்திக்கவில்லை. கடவுளை பற்றி சிந்திக்கிறேன். ஆத்திகன் என்று சொல்லும் நபர்களைவிட , நாத்திகன் என்று குறிப்பிடபடும் நான் உயர்ந்தவன்.

ஆத்திகன் என்று சொல்லிகொள்பவர்கள், விஷேச தினங்களிலும் மற்றும் தங்களுக்கு ஏதேனும் வேண்டும் என்கிற போதும் அல்லது தங்களுக்கு நேரும் துன்பங்களின் போதும் மட்டுமே கடவுளை நினைக்கிறார்கள்.

மேலும், எனது துனபத்தை நீக்கினால், அல்லது எனக்கு இதை அதை கிடைக்க செய்தால்  நான் உனக்காக இதை செய்கிறேன் அதை செய்கிறேன் என்று பேரம் பேசுகிறார்கள். மொட்டை அடித்து கொள்கிறேன் என்று பிராத்தனை செய்கிறார்கள். மயிர் வளர்ந்து விடும் என்பதால் அதை இழக்க தயாராக இருக்கிறார்கள். ஏன் கையை காலை வெட்டிகொள்கிறேன் என்று வேண்டிகொள்வது தானே அல்லது இருக்கும் சொத்தில் பாதியை தானம் செய்கிறேன் என்று வேண்டிகொள்வது தானே.

நான் முன்பு எல்லோரையும் போல கோவிலுக்கு போய் கொண்டிருந்தேன். பின்பு சிந்தித்து பார்க்கும் போது, கடவுளும் , புஜை முறைகளும் மக்களை நல்வழிபடுத்துவதற்க்காகவும் , மக்கள் பிறருக்கு துன்பம் இழைக்காமல் இருப்பதற்க்காகவும், பயமுறுத்தி  ஏற்படுத்தப்பட்ட முறை என்று அறிந்து கொண்டேன். பிறகு ஒரு சாரர் அதை தங்களுக்கான பிழைப்பாக வைத்துகொண்டு அநியாயம் செய்வதை உணர்ந்துகொண்டேன். கடவுளை வணங்குவதற்க்கு கூட பல நிபந்தனைகள், முன் உரிமைகள் மற்றும் கடவுளின் இடைதரகர்களாக இருப்பவர்கள் செய்யும் அடாவடி தனங்கள்
இவற்றை உணர்ந்த பிறகு கடவுளின் மேல் நம்பிக்கையும் பயமும் போய்விட்டது.

அதனால் தான் கடவுளை பற்றி என்ன சொல்லியிருக்கிறது என்று அறிந்து கொண்டு, சிந்தித்து பல கேள்விகளை எழுப்பி கேலி செய்கிறேன்.இதனால் கடவுளை பற்றி அதிகம் படிக்கிறேன். தினமும் கடவுளை நினைக்கிறேன்.

நான் நல்லவன். யாருக்கும் கெடுதல் செய்யவில்லை. எதையும் கடவுளிடம் கேட்பதில்லை. பேரம் பேசுவதில்லை. எப்படியிருப்பினும் நான் கடவுளை பற்றி நினைப்பதால், அவர் எனக்கு நல்லது தான் செய்வார்.(கடவுள் என்று ஒருவர் இருந்தால்)

நான் தினமும் பலமுறை சொல்வது: அப்பனே முருகா ஷண்முகா, ஞ்னா பண்டிதா வேலாயுதா கந்தா கடம்பா கதிர்வேலா என்னை மட்டும் காப்பாத்து அல்லது என்னை என் பொண்டாட்டியிடமிருந்த காப்பாத்து என்று சொல்லிகொண்டேயிருப்பேன்.

எனவே ஆத்திகனை விட நாத்திகன் என்று சொல்லப்படும் நான் கடவுள் என்று சொல்லபடுபவன்  பெயரை அதிகம் சொல்கிறேன்.

கடவுளை எதிர்கிறேன் என்பதை விட , அவனது பெயரால் செய்யப்படும் அநியாயங்களை எதிர்கிறேன். அப்போது கடவுள் என்று சொல்லப்படுகிறவனையும் எதிர்கிறேன்.

கடவுளுக்கு ஏன் இத்தனை உருவ வழிபாடு. எத்தனை வேறுபாடுகள். எத்தனை பிரச்சனைகள். எனவே அவனிடமிருந்து விலகியிருப்பதே மேலானது என முடிவு செய்துவிட்டேன்.

இதற்கு மேலும் எனக்கு உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ துன்பங்கள் ஏற்பட்டால், அது இயற்கையான நிகழ்வுகளாகவே இருக்கும். அல்லது முன் ஜென்மத்தில் செய்த பாவத்தை அனுபவிக்கிறோம் என்று சொல்வார்களே அதுவாக தான் இருக்கும். எனது கடவுள் நிந்தனைக்காக இருக்காது.

எதற்கு இத்தனை கடவுள்கள்.கோயில்கள்.பிரச்சனைகள்.

உணரகூடிய நிலையில் உள்ள ஐம்பெரும் பூதங்கள் எனப்படும் இயற்கையை வணங்கினால் போதாதா. ஒரு செங்கல்லை வணங்கினாலும் போதுமானது.

நிலம்.நீர்,வாயு, ஆகாயம், நெருப்பு -களிமண்ணை எடுத்து நீர் கலந்து, நெருப்பில் சுட்டு, காற்றில் காய வைத்து, ஆகாயத்தை கூறையாக வைத்து ஒரு செங்கல்லை வைத்து கும்பிட்டாலும் அதுவும் கடவுள் தான்.
எந்த வித நோன்பும் விரதமும், கொடுக்கல் வாங்கல் இல்லாமல் நமது மனசுமையை இறக்கி வைக்கும்  சுமைதாங்கியாய் பயன்படுத்தலாம்.
மற்றவை எல்லாம் வெளிவேசமே.

ஒரு கோவில் கட்டுவதற்க்காக இரு மதங்கள் சண்டையிட்டுகொள்கின்றன. எத்தனை மனித உயிரிழப்பு. எத்தனை சொத்துக்கள் நாசம். எத்தனை குடும்பங்கள் அனாதையாகின்றன.
இரு மதங்களையும் சார்ந்த கடவுள் ஏன் அதை தடுப்பதில்லை. தண்டிப்பதில்லை.
கடவுள், கோயில், பண்டிகை இன்ன பிற விசயங்களை பற்றி என்னுடன் பேசும் போதும், என்னை கடவுளை நம்பு என்று வற்புறுத்தும் போதும் எனது கடவுள் நிந்தனை தொடரும்.

எனது வீட்டில் புசை மடம் இருக்கிறது.முருகன் சிலையும் இன்ன பிற சிலைகளும் கடவுள் படமும் உண்டு. என் மனைவி தினமும் சாமி கும்பிடுவாள். எனது பிள்ளைகளையும் கும்பிட சொல்வேன். எனக்கு நம்பிக்கை இல்லையென்பதற்காக மற்றவர்கள் நம்பிக்கையை கெடுப்பதில்லை. அதே சமயம் எனது கடவுளுக்கு எதிரான கருத்துக்களை சொல்லிகொண்டேயிருப்பேன்.

நவராத்திரி தீபாவளி வருகிறது . அந்த கடவுள்களை பற்றி எழுத வாய்புள்ளது

Saturday, 7 September 2013

பிள்ளையாருக்கு பிரச்சனைகள்

கடவுள் வழிபாடு::


நேற்று என் கனவில் பிள்ளையார் வந்து புலம்பிய புலம்பலை, உங்களிடம் புலம்பா விட்டால், எனக்கு பைத்தியமே பிடித்துவிடும். அவரது புலம்பல்கள்.

1. நான் பிறந்து உயிர் பெற்ற விதம் விசித்திரமானது. எனது அம்மா பார்வதி அதாவது சிவபெருமானின் மனைவி, மண்ணால் என்னை செய்து(சிலர் என் அம்மா தனது உடலில் இருந்த அழுக்கை சேர்த்து உருட்டி) உயிர் ஊட்டி , பின்பு என்னை காவலுக்கு வைத்துவிட்டு குளிக்க சென்றார்களாம்.
என்ன கொடுமடா இது. உலகை ஆளும் சக்தி படைத்த பார்வதி எத்தனை வருடங்கள் குளிக்காமல் இருந்தார்கள் இவ்வளவு அழுக்கு சேர்வதற்க்கு  ?
அது சரி, என் அம்மா குளிப்பதற்க்கு காவல் எதற்கு ? முக்கோடி தேவர்களும் வந்து அம்மா குளிப்பதை வேடிக்கை பார்ப்பார்கள் என்ற பயமா? மறைந்திருந்து புகைபடம் எடுத்து வலைதளங்களில் வெளியிட்டுவிடுவார்கள் என்ற பயமா? அல்லது அதற்கும் மேலாக யாரவது அவரிடம் தவறாக நடந்து கொள்வார்கள் என்ற பயமா ?

இன்றைக்கு பூலோகத்தில், ஒரு பெற்றோர்(SINGLE PARAENT) என்ற முறை உள்ளதாம். அதாவது, அம்மாவோ அல்லது அப்பாவோ யாராவது ஒருவர் தனியாக குழந்தை வளர்த்தால் அதற்கு ஒரு பெற்றோர் என்று பெயராம்.
உண்மையில் ஒரு பெற்றோர் முறையை அறிமுகப்படுத்தியதே எனது அம்மா தான். ஆண் பெண் உறவு இல்லாமல் தான் ஒருவரே என்னை உருவாக்கி வளர்த்ததால் எனது அம்மா தான் உண்மையிலேயே ஒரு பெற்றோர் முறையை உருவாக்கியவர் என்ற பெருமையை அடைகிறார். ஆனால், பூலோகவாசிகள் அவர்கள் உருவாக்கியதாக கூறிக்கொண்டு என் அம்மா அறிமுகபடுத்திய முறைக்கு உரிய மரியாதையை கொடுக்கவில்லை.

2) சரி. நான் காவலுக்கு இருந்த போது, பார்வதியின் கணவர்(எனது அப்பா அல்ல) வந்தார் . நான், அவர் உள்ளே சென்ற போது தடுத்ததாகவும், அதனால் கோபம் கொண்டு என் தலையை வெட்டி சாய்த்து விட்டு உள்ளே சென்றதாகவும் கூறுகிறப்படுகிறது.
முக்காலமும் உணர்ந்த சிவபெருமானுக்கு, தனது மனைவி பார்வதி குளித்து கொண்டிருப்பது தெரியாதா ? அல்லது நான் யார் என்பது தான் அவருக்கு தெரியாதா ?
மேலும், பார்வதி என்ன முதன் முறையாக குளித்தாரா. என்னை உருவாக்குவதற்க்கு முன்பு, அவர் குளித்ததே இல்லையா ? அப்போதெல்லாம் யாரை காவலுக்கு வைத்துவிட்டு குளிக்க சென்றார். அல்லது என்னை உருவாக்கி அதன் மூலம் எழுந்த விளைவுகளுக்கு பின்பு மீண்டும் குளித்தாரா இல்லையா. அப்போது யாரை காவலுக்கு வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு பின்பு தான் பார்வதி குளிக்கும் குளியலறைக்கு தாழ்பாள் போடப்பட்டதா.

3)எனக்கு யானை தலையை வெட்டி கொண்டு வைத்தார்கள். சரி. எனக்கு ஏன் தொப்பை வயிறு இருப்பதாக காட்டுகிறார்கள். நான் யானையை போல நிறைய சாப்பிட்டதால், அப்படி வயிறு இருப்பதாக காட்டீனார்களா ?
இப்போது, பூலோகத்தில் எனது உருவத்தை பலவிதமாக வரைகிறார்கள். பல்வேறு உலோகங்களில் எனது சிலைகளை செய்கிறார்கள். Cartoon character விட மோசமாக செய்கிறார்கள்.
நான் நல்ல உடற்பயிற்சி செய்து, நீங்கள் எல்லாம் சொல்வது போல 6 pack உடல் அமைப்புடன் இருக்கிறேன். எனக்கு ஒரு jeans pant  போட்டு 6 pack  உடல் அமைப்புடன் இருப்பது போல் ஏன் வரைவதில்லை. சிலை செய்வதில்லை. கொஞ்சம் யோசியுங்கள. எனக்கும் இது போன்ற ஆசைகள் இருக்கிறது.
4) நாரதர் கொண்டு வந்த மாம்பழத்தை பெறுவதற்க்காக வைக்கப்பட்ட போட்டியில் நான் பார்வதி-சிவபெருமான் அவர்களையே உலகமாக கூறி அவர்களை சுற்றி வந்து பழத்தை பெற்று கொண்டதாக கூறுகிறார்கள். அதவாது நான் ஏமாற்றி பழத்தை வாங்கி கொண்டேன் என்பதை நாசூக்காக கூறுகிறார்கள். என்ன ஒரு பித்தலாட்டம்.
பெரிய உருவம் உள்ள எனக்கு, ஏன் சிறிய மூஞ்சூரை வாகனமாக ஒதுக்கினார்கள். எனது பெரிய உருவத்தை சுமக்கும் அளவுக்கு பலம் கொண்ட உயிரினத்தை ஏன் உருவாக்கி கொடுக்கவில்லை.
இப்போது நிங்கள் செய்யும் உருவத்திலாவது மூஞ்சூருக்கு பதிலாக நீங்கள் உபயோகிக்கும் வேகமாக செல்லும் நவீன வாகனத்துடன் சிலை செய்யுங்கள்
(முருகனும் புலம்பிகொண்டிருக்கிறான். அவனுக்கு சேவலை வாகனமாக ஒதுக்கிவிட்டார்களாம். அவன் அதன் மீது உட்கார்ந்து கொண்டு அதை பாதுகாக்க வேண்டியுள்ளதாம். கொஞ்சம் ஏமாந்து பிடியை தளர்த்தினாலும் அது கோழியை தேடிகொண்டு சென்று விடுகிறதாம். அதனால் சேவலை எப்போதும் கவட்டுக்குள் வைத்து கொண்டு கவனமாக இருக்க வேண்டியிருக்கிறதாம். இதனால், “ கந்தனுக்கு புத்தி கவட்டுக்குள்ளே” என்ற பழமொழியே ஏற்பட்டு விட்டதாக புலம்பிகொண்டிருக்கிறான். எனவே எனது பிரச்சனையை தீர்த்து விட்டு , அவனது பிரச்சனையையும் கவனியுங்கள்)

5)நான் இந்து மத கடவுள், தமிழ்நாட்டிலும் இந்தியா பூராவும் வணங்கபடுகிறேன்.
ஆனால், எனது உருவத்தை ஏன் சீனாவில் இருந்து இறக்குமதி செய்து உபயோகிக்கிறிர்கள். இந்தையாவிலேயே செய்ய கூடாதா. ?
6) எனக்கு ஏன் எப்போதும் சாப்பிடுவதற்க்கு கொழுகட்டையும் சுண்டலும் மட்டும் தருகிறிர்கள். நீங்கள் மட்டும் வகைவகையாக செய்து சாப்பிடுகிறீர்கள். எனக்கு ஒரே மாதிரி உணவை சாப்பிட்டு அஜிரினம் ஆகிவிட்டது. சம விகித்த்தில் உணவை கொடுங்கள். அப்போது தான் எனக்கு உடல் நிலை சரியாய் இருக்கும். மேலும், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யும் எனக்கு கொழுகட்டை போல் இருக்கும் அவர்கள் உணவு “மோமோ” கொடுக்கலாமே.
எனக்கு கல்யானம் ஆகிவிட்டதா இல்லையா. தெளிவாக சொல்லுங்கள். நான் கல்யானம் ஆகாமல், பிரம்மசாரியாக மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு ஏங்கி கொண்டிருப்பதாக ஒரு சாரார் சொல்கிறார்கள்.
மறுசாரார், எனக்கு கல்யானம் ஆகிவிட்டது என்றும், 2 மனைவிகள் உள்ளர் என்றும் கூறுகிறார்கள். எது உண்மை.
எனக்கு கல்யானம் ஆகிவிட்ட்து என்றால் எனது வாரிசுகள் எங்கே. கல்யானம் ஆகியும், எனது உருவத்தின் காரணமாக “உறவு” கொள்ளாமல் இருக்கிறேனா அல்லது எனக்கு உருவாகும் வாரிசு என்னை போல இருப்பானா அல்லது மற்றவர்களை போல சாதாரனமாக இருப்பானா. என் மனைவியால் எனது குழந்தையை சுமக்க முடியுமா. அல்லது, நான் அந்த விசயத்திற்க்கு லாயக்கு இல்லாதவனா. செயற்கை முறையிலாவது எனது மனைவிகளை கரு தரிக்க செய்து , எனக்கு வாரிசுகளை உருவாக்குங்கள்.

அவரது புலம்பல்களுக்கு என்னால் பதில் சொல்லமுடியவில்லை. நீங்களாவது பதில் சொல்லுங்கள்.
எங்கள் வீட்டு பூஜையில் சுண்டல் நிச்சியம். கொழுகட்டை செய்வது பற்றி யோசிக்கப்படுகிறது.