Showing posts with label பரவசம். Show all posts
Showing posts with label பரவசம். Show all posts

Saturday, 21 June 2014

பரவசம் தரும் தமிழ் மொழி



தமிழ் மொழியின் சிறப்பை பற்றி பலரும் பலவிதமாக எழுதி வருகின்றனர். அதை படிப்பதற்க்கும் கேட்பதற்க்கும் நன்றாக இருக்கிறது.
ஆனால் சில சமயங்களில் மிகைப்படுத்தப்பட்டதாக தோன்றுகிறது. சில பதிவுகளில் படித்த சில வரிகளின் அடிப்படையில் இதை கூறுகிறேன்.

1. தமிழ் தான் உலகில் தோன்றிய முதல் மொழி என்றும் தமிழன் தான் உலகில் தோன்றிய முதல் மனிதன் என்று கூறும் தமிழர்களிடம், மனிதன் குரங்கிலிருந்து தோன்றினான் என்று கூறினால் நம்ப மாட்டார்களாம். ஆனால் அந்த குரங்கு தமிழ் குரங்கு என்று சொன்னால் ஏற்றுக்கொள்வார்களாம்.

இது நகைச்சுவையாக கூறியதாக தோன்றினாலும், தமிழனின் மடமையை இதை விட கேவலமான முறையில் எடுத்துரைக்க முடியாது.

இதை படிப்பவர்கள் தமிழ் தான் முதல் மொழி என்பதற்க்கும் தமிழன் தான் முதல் மனிதன் என்பதற்க்கும் பல உருவாக்கப்பட்ட ஆதாரங்களுடன் விவாதிப்பார்கள். அந்த விவாதத்தில் கலந்து கொள்ள விருப்பமில்லை.

தமிழ் எனக்கு பிடித்த மொழி. அதை நேசிக்கிறேன். எனக்கு அந்த மொழி தெரியும் என்பதில் பெருமையடைகிறேன்.

2. தமிழின் பெருமையை கூற வேறு ஒருவர் இப்படி கூறுகிறார். உலகில் எந்த நாடாக இருந்தாலும், எந்த மொழி பேசுபவராக இருந்தாலும் உடல் உறவு கொள்ளும் போது அவர்கள் எழுப்பும் ஒலி “ அ , ஆ “ என்ற தமிழ் எழுத்தின் ஓசையாம். 

இதை எந்த பொருளில் எழுதினார் என தெரியவில்லை. மனித இனம் பரவச நிலை அடையும் போது உலகில் தோன்றிய முதல் மொழியான தமிழ் மொழியின் முதல் எழுத்தை உச்சரிக்கிறாராம். பரவசத்தை தரும், வெளிப்படுத்தும் ஒலி தமிழ் மொழியை சார்ந்தது என்பதன் மூலம் தமிழ் மொழி பரவசப்படுத்த கூடியதும், இனிமையானதும் என்று கூறுகிறார்.

மனிதன் பரவசம் அடைவது உடல் உறவின் போது மட்டும் தானா ? பரவசம் அடையும் நிலைகள் பல உள்ளது. எல்லா தருணங்களிலும் “ அ ஆ என்ற எழுத்தின் ஒலியை எழுப்பி வெளிப்படுத்துவதில்லை.

தமிழ் மொழியின் சிறப்பை கூற எத்தனையோ விசயங்கள் இருக்கும் போது இதை அவர் தேர்ந்தெடுத்தது வியப்பை அளிக்கிறது.

உடல் உறவின் பரவச நிலையில் அந்த ஒலி எழுகிறது என்பது உண்மை என்றாலும், அந்த ஒலிக்கான மொழி அதனால் சிறப்படைகிறது என்பது அந்த தமிழ் குரங்கு கதையாக இருக்கிறது.

இவர் சொல்லிய பிறகு, அந்த பரவச நிலையில் வேறு ஏதேனும் ஒலி எழுப்புபவர்கள் இருப்பார்களா என எண்ண தோன்றுகிறது. சுய பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். இதை பாலியல் சம்மந்தப்பட்ட விசயமாக பார்க்காமல், மொழி பெருமை என்ற அளவில் அவரவர் சுய பரிசோதனை செய்து கருத்துக்களை தெரிவிக்கலாம்.

“ ஆஆஆஆஆஆஆஆஆஆஆ “ இது அந்த பரவச நிலையில் எழுந்த ஒலி அல்ல.

உடலில் வாயு தொல்லை அதிகமாகும் போது இடுப்பில் ஒரு பயங்கரமான வலி எனக்கு உண்டாகும். அப்போது நான் இப்படி ஒலி எழுப்புவது வழக்கம். இதனால் நான்.  இதை வேதனையை வெளிப்படுத்தும் ஒலியை எழுப்பும் எழுத்தை கொண்ட தமிழ் மொழி வேதனை தரும் மொழி என்று கூற முடியுமா.

தமிழ் மொழியின் பெருமை என கண்டதையும் கூறி அதனை இழிவுபடுத்தாமல் இருப்பது நலம்