Friday, 6 September 2013

ஒரு மனித நிறுவனம் - ONE PERSON COMPANY

ஒரு மனித நிறுவனம்::


அண்மையில் மாற்றியமைக்கபட்டுள்ள இந்திய நிறுவனங்கள் சட்டத்தில் சேர்க்கபட்டுள்ள ஒரு புதிய அம்சம்:
ஒரு மனித நிறுவனம் (ONE PERSON COMPANY-OPC)
ஒரு மனித நிறுவனம் என்றால் ஒரே உறுப்பினரை கொண்ட நிறுவனம்
தனியார் நிறுவனமாக பதிவுசெய்யலாம் (AS PRIVATED LIMITED COMPANY)
வாரிசுதாரரை நியமிக்கலாம். நிறுவனர் இறந்துவிட்டாலோ அல்லது செயல்படமுடியாத நிலையில் இருந்தாலோ வாரிசுதாரர் நிறுவனத்தை தொடர்ந்து நடத்தலாம். வாரிசுதாரருக்கு முன் கூட்டியே தெரிவித்து, அவரிடம் எழுத்து மூலம் சம்மதம் பெற்று, பதிவாளருக்கு தெரிவிக்கவேண்டும். வாரிசுதாரரை எப்போது வேண்டுமானலும் மாற்றலாம்.
நிறுவனத்தை குறிப்பிடும் எல்லா இடங்களிலும், ஒரு மனித நிறுவனம் என்பதை அவசியம் குறிப்பிட வேண்டும்.
நிறுவனங்கள் வருடாந்திர கூட்டத்தை நடத்த வேண்டிய அவசியமில்லை.
நிறுவனரே இயக்குனராக இருக்கலாம். குறைந்தபட்சம் ஒரு இயக்குனர் இருக்கவேண்டும்.
நிறுவன அமைப்பு விதி குறிப்பு(MEMORANDUM OF ASSOCIATION) கையெழுத்தாளரே முதல் இயக்குனராக கருதப்படுவார்.
ஒரே ஒரு இயக்குனர் இருக்கும்பட்சத்தில், ஆலோசனை கூட்டங்கள் நடத்த வேண்டிய அவசியமில்லை. வேறு ஒரு நிர்வாகியை நியமிக்கலாம். அப்படி வேறு ஒரு நிர்வாகி இருக்கும் பட்சத்தில், வருடத்தில் 2 ஆலோசனை கூட்டங்கள் நடத்த வேண்டும். இரண்டு கூட்டத்திற்க்கும் இடையில் 90 நாட்கள் கால அவகாசம் இருக்க வேண்டும்.
கூட்டத்தின் தீர்மானங்களை/ குறிப்புகளை தேதியிட்டு கையெழுத்திட்டு பதிவு செய்து வைத்தால் போதுமானது.
நிதிநிலை அறிக்கையில் நிதி பயன்பாடு(CASH FLOW) விவரங்கள் குறிப்பிடவேண்டிய அவசியமில்லை.
வருட இறுதி நாளுக்கு பிறகு 180 நாட்களில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்.
நிதிநிலை அறிக்கையும், வருடாந்திர அறிக்கையும் ஒரு இயக்குனரால் கையொப்பம் இடப்பட்டால் போதுமானது.

சாதரண அலுவல் ஒப்பந்தம் தவிர வேரு ஒப்பந்தங்கள்
) எழுத்து மூலமாக இருக்கவேண்டும்
) நிறுவன அமைப்பு விதி குறிப்பில் (MOA) குறிப்பிடபட வேண்டும்.
) கூட்ட குறிப்புகளில் இடம் பெற வேண்டும் மேலும் ஒப்பந்தம் கையெழுத்தான 15 நாட்களுக்குள் பதிவாளருக்கு தெரிவிக்க வேண்டும்.

விதிமுறைகள், சட்டதிட்டங்கள், படிவங்கள் மற்றும் இதர விவரங்கள் விரைவில் வெளியாகும்.

இதில் உள்ள நன்மை திமைகள் பற்றியும்,நடைமுறை சிக்கல்கள் பற்றியும் இது எவ்வாறு மற்ற நிறுவன்ங்களிடமிருந்து வேறுபடுகிறது என்பதை பற்றியும் அடுத்த பதிவில் பார்க்கலாம்.

இந்திய நிறுவனங்கள் சட்டம்தோற்றமும் மாற்றங்களும்::
1. இந்தியாவில் முதன் முதலில் 1857வது வருடம் நிறுவனங்கள் சட்டம்    இயற்றப்பட்டது.
2. அடுத்த நிறுவனங்கள் சட்டம் 1866ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.
3. அதற்கு பிறகு 1882ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது அது மீண்டும் 1913 இந்திய நிறுவனங்கள் சட்டமாக மாற்றப்பட்டது.
இதற்கு பிறகு 1950ஆம் ஆண்டு நிறுவனங்கள் சட்ட அமைப்பு பரிந்துரையின் பேரில் , 1956ஆம் ஆண்டு இந்திய நிறுவனங்கள் சட்டம் இயற்றப்பட்டது.( இது தான் இன்று வரையில் அமுலில் உள்ளது)
5. 1956,ம் ஆண்டு முதல் இதுவரை 24 முறை சட்ட திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது.
6. 1988ஆம் ஆண்டு பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டு , நிறுவனங்கள் சட்டம் 1988 இயற்றப்பட்டது.
7. அடுத்து 2002ஆம் ஆண்டு பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டு, நிறுவனங்கள் சட்டம் 2002 இயற்றப்பட்ட்து.

இந்த சட்டங்களின் நோக்கங்கள்:
1, அரசின் சமூக மற்றும் பொருளாதர கொள்கைகளை செயல் படுத்துவதற்காக இயற்றப்பட்டது.
2. நாட்டின் பொருளாதாரத்தில் நிறுவனங்கள் பெரும் பங்காற்றுவதால், நிறுவனங்களை ஆரோகியமான முறையில் மேம்படுத்த இயற்றப்பட்டது.
3. தவறு செய்யும் நிறுவனங்களின் நிர்வாகத்தை கட்டுபடுத்தி, அதில் சம்மந்தப்பட்டுள்ள அனைவரது நலன்களை காக்கும் பொருட்டு இயற்றப்பட்டது.
4. நிறுவனரின் ஆதிக்கத்திலிருந்து நிர்வாகத்தை பாதுகாத்து, அனைத்து பங்குதாரர்களின் நலனை பாதுகாப்பதற்காக இயற்றப்பட்டது.
5. நிறுவனத்திற்க்கு கடன் கொடுத்தவர்களின் பாதுகாப்புக்காகவும் இயற்றப்பட்டது.

PLEASE LOGIN  sudhandhiraparavai.blogspot for more information

Monday, 26 August 2013

கவிதைகள்

கவிதைகள்::


வடிகட்டிய வெண் புகை ஊதுகுழலிருந்து
புறப்பட்ட மேகங்களில்
அமிழ்துன்ட அசுரன்
தேவதைகளை
தேடுகிறான்

====================================================================== 


 என்னை குழம்பு வைப்பாயா
பொறிப்பாயா
மீன் கேட்டது
நீ தான் செத்து விட்டாயே
உனக்கென்ன
இல்லை குழம்பென்றால்
இன்னும் கொஞ்ச நேரம்
மிதந்து கொண்டிருக்கலாமே

====================================================================
 மரம் ஒரு இலை உதிர்த்தது
அவன் சட்டையை உதிர்த்தான்
மீண்டும் ஒரு இலை உதிர்த்தது
அவன் பனியனை உதிர்த்தான்
மீண்டும் ஒரு இலை உதிர்த்தது
அவன் வேட்டியை உதிர்த்தான்
மீண்டும் ஒரு இலை உதிர்த்தது
அவன் கோவனத்தை உதிர்த்தான்
மரம் இன்னமும் குளிர்ச்சியாய் இருக்கிறது
அவன்வெப்பமாய் இருக்கிறான்
மரம் பச்சையாய் தான் இருக்கிறது
அவன் இச்சையாய் இருக்கிறான்

=====================================================================

====================================================================
பாவை
விளக்குக்கு
ஆடை
போர்த்துங்கள்
வருவோர்
போவோர்
எல்லாம்
கூட்டு
புணர்ச்சி
செய்கிறார்கள்

===================================================================== 

 செய்வதற்கு
ஓன்றுமில்லை
என்பதால்
எதை வேண்டுமானாலும்
செய்யலாம்
கவிதை எழுத
காகிதம் கூட தேவையில்லை

விரல்கள்
நடமாடினால்
எழுத்துக்கள்
கவிதையாகும்

======================================================================

 ஆசிரியர்களே
உங்களுக்கு தான்
பதில்கள் தெரியுமே
எங்களை ஏன்
கேட்கிறீர்கள்

======================================================================
=====================================================================
உளவுதுறை அறிக்கையும்
வானிலைதுறை அறிக்கை போலாகிவிட்டது

எல்லையில் போர் இல்லையாம்
குண்டுமழை மட்டும் பெய்கிறது.

=======================================================================
கால்கள் இல்லையென்பதற்காக
செருப்பு போடாமல்
இருக்க முடியுமா

கைகளில் போட்டுகொண்டு
தவழ்ந்து போகிறேன்

======================================================================
ஒற்றை செருப்பாய்
அலைந்துகொண்டிருக்கிறேன்

எவருக்கும் பொருந்தமல்,
எவருக்கும் தேவையில்லாமல்

என்னவள் வரும்வரை
ஏக்கத்துடன் காத்திருப்பேன்

======================================================================
மிருகங்கள் மீது
பவனி வரும்
தெய்வங்களை

மிருக வதை
தடுப்பு சட்டத்தின்
கீழ்
கைது செய்யமுடியுமா?
 
 
 
 

======================================================================


இயற்கை உபாதயை
இறக்கிய பின் கிடைக்கும்
நிம்மதிக்கு இணை
ஏதுமில்லை

கால் கழுவ
காகித உருளையை
சுழற்றினேன்

கண்டேன் காதலை
சிவப்பு நிற கிறுக்கலில்

எழுதியது யார்
எனக்கு முன் வந்தவனா

அதற்கு முன் வந்தவனா
அதற்கும் முன் வந்தவனா


எனக்கு பின் காத்திருப்பவன்

என்ன நினைப்பானோ
என்னை நினைப்பானோ

அப்பன் பேர் அவன் அறிய
அனுப்பிவைத்தேன்
 
அவனெழுதிய கவிதையை

" உனக்கானதை
   உமிழ்ந்து செல்கிறேன்
  கடலாவது
  கர்பம் தரிக்கட்டும்"












Wednesday, 21 August 2013

ஏற்றுமதி-இறக்குமதி

 பொருளாதாரம்::

வணிகம் இல்லேயேல் வாழ்க்கை இல்லை
வாழ்க்கை - பொருளை ஆதாரமாக கொண்டது - பொருளாதாரம்
மனிதன் எந்த பொருளையும் உருவாக்கவில்லை
அனைத்து பொருள்களும் இயற்கை நமக்கு இலவசமாக கொடுத்தது.
இயற்கையில் கிடைத்த பொருட்களை, எடுத்து, சுத்தப்படுத்தி,பிரித்து, பிறவற்றுடன் சேர்த்து உருவாக்கி , விற்று வாங்கி உபயோகிப்பதே வணிகம்.

பொருளாதரத்தில் ஏற்றுமதி இறக்குமதி ஒரு பகுதி

நமக்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் நாமே உற்பத்தி செய்து கொள்ள முடியாது. நாம் உற்பத்தி செய்யும் பொருட்கள் நமது உபயோகத்திற்க்கும், எஞ்சியவை மற்றவர்களின் உபயோகத்திற்க்கும் கொடுத்தால் தான் தொழிழ் வளரும். நாம் நமது உபயோகத்திற்க்கு மட்டுமே பொருட்களை உற்பத்தி செய்து கொண்டால் சுயநலம்.

அது போன்றே நம்மால் தாயரிக்கமுடியாத பொருட்களை, மற்றவர்களிடமிருந்து பெற்று நமது தேவையை பூர்த்தி செய்துகொள்ள வேண்டியுள்ளது.

இந்தியா விளை பொருட்களையும் , கலை பொருட்களையும் மட்டுமே ஏற்றுமதி செய்து,  இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு விலை கொடுக்கமுடியாது.
ஏற்றுமதி அதிகமாகவும் இறக்குமதி குறைவாகவும் இருந்தால் தான் அந்நிய செலவானி கையிருப்பில் இருக்கும். பொருளாதாரத்தின் ஒரு பகுதி, அந்நிய செலவானி கையிருப்பு. அப்படியில்லாத நிலையில் தான் தங்கத்தை அடகு வைத்து, BALANCE OF PAYMENT  சரி செய்யப்பட்டது.

நம்முடைய பொருளாதாரம் வலுவானதாகவும், அந்நிய செலவானி கையிருப்பு வைத்திருப்பதற்க்காகவும் நாம் ஏற்றுமதி மட்டும் தான் செய்வோம் என்றால் மற்ற நாடுகள் ஒப்புக்கொள்ளாது. அப்படி வைத்திருந்தால் அதை எதற்கு உபயோகபடுத்த முடியும். நாய் தேங்காயை வாயில் வைத்திருப்பது போலதான்.

தங்கத்தை வைத்து ஈடுகட்டிய பிறகு ஆட்சிக்கு வந்தவர்கள்  ஆட்சியை விட்டு விலகிய போது, நாங்கள் இவ்வளவு அந்நிய செலவானி கையிருப்பு வைத்துவிட்டு போகிறோம் என்று அறிவித்தார்கள். அதற்கு பின்பு வந்த ஆட்சியாளர்களால் அதை சமன் நிலையில் வைத்திருக்க முடியவில்லை.

அதில் ஒரு காரணம், புதிய பொருளாதார கொள்கை மற்றும் தாரளமயமாக்குதல் என்ற கொள்கையை உலக  நாடுகளின் வற்றுபுறுத்தலின் காரணமாக(அமெரிக்கா) ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டதால்.

புதிய பொருளாதார கொள்கையின் ஒரு பிரிவாக அந்நிய நாட்டு முதலீட்டு கொள்கை. 
இந்த கொள்கை தான் இப்போது மிகவும் விமர்சிக்கப்படுகிறது. அந்நிய முதலீடு காரணமாக (அவர்களுக்கு கொடுக்கப்படும் சலுகைகள்) உள்நாட்டு தொழில் வளர்ச்சி பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இதே கொள்கையின் மூலம் தான் இந்திய நிறுவனங்கள வெளிநாடுகளீல் தொழில் செய்கின்றன , வெளி நாட்டு நிறுவனங்களையும் விலைக்கு வாங்குகின்றன என்பதை நாம வசதியாக மறந்து விட்டு ஆட்சியாளர்களை விமர்சித்தி கொண்டிருக்கிறோம். இவர்கள் மூலம் நாம் நாட்டுக்கு வரும் அந்நிய செலவானியால் ஏற்படும் நன்மைகளை மறந்து விடுகிறோம்.

ஏற்றுமதி இறக்குமதி விசயத்திற்க்கு வருவோம்:

நம் நாட்டில் உபயோகபடுத்தபடாத கனிமங்கள் ஏராளமாக உள்ளன. அவை இப்போது தான் கண்டுபிடிக்கப்பட்டு அதை வெளிகொணர்வதற்க்கு முயற்சிகள் எடுக்கப்படுகிறது.

கனிமத்தை வெளியே எடுத்து, இருதியாக உபயோகபடுத்த கூடிய பொருளாக மாற்றுவதற்க்கு தொழில்நுட்பம், இயந்திரங்கள் மற்றும் மனித வளம் தேவைப்படுகிறது.

இதற்கு தேவைபடும் மூலதனம் அரசாங்கத்திடமிருந்து மட்டுமே வரமுடியும். அரசுக்கு இந்த பணம் மக்களிடமிருந்து தான் வர வேண்டும். இவைகளை தொடர்ந்து செய்தால் தான் , பொருளாதார வளர்ச்சி ஏற்படும். 8 முதல் 9 சதவிகிதம் இருந்த வளர்ச்சி இன்று 5க்கும் 6க்கும் நடுவில் தள்ளாடுகிறது. காரணம் அரசு தொழிலை தொடங்கவில்லை அல்லது தனியார் தொழில் தொடங்க சாதகமான சூழ்நிலையை உருவாக்கவில்லை. தனியார் தொழில் தொடங்க வேண்டுமென்றாலும் அவர்களுக்கும் பணம் தேவைபடுகிறது. அவர்கள் அரசாங்கத்திடமிருந்து சலுகைகளும், முதலீடும் கேட்கிறார்கள். அரசாங்கத்தால் சலுகைகளை கொடுக்கமுடியுமே தவிர பணம் கொடுக்கமுடியாது(உதாரணமாக நிலக்கரி சுரங்கம்) தனியார் நிறுவனங்கள் மக்களிடமிருந்து பணம் திரட்டுகிறது. அப்படி முடியாத பட்சத்தில் அந்நிய மூதலிட்டை நாடுகிறது. எற்கனவே புதிய பொருளாதார கொள்கை மூலம், அந்நிய நாட்டு நிறுவனங்களுக்கு நமது நாட்டில் தொழிழ் தொடங்க அனுமதி அளிக்க வேண்டிய நிலை இருப்பதால், சில பல நிபந்தனைகளுடன் அவர்களுக்கு இந்திய நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து, தொழில் தொடங்க அனுமதியளிக்கப்படுகிறது. அப்படி வருபவர்களுக்கு லாபம் ஒன்றே குறிக்கோள். 

1) அரசே அனைத்து தொழிழ்களையும் செய்ய முடியாது. செய்ய கூடாது. அது உற்பத்தியிலும், பொருளாதார வளர்சியிலும் தேக்க நிலைய ஏற்படுத்தும். மனித வளம், தனியார்  நிறுவனங்களுக்கு அளிக்கும் முழு திறனையும் கொடுப்பதில்லை. எப்படியிருப்பினும் வேலை நிரந்தரம், சம்பளம் நிரந்தரம் என்கிற மனப்பான்மை. நிர்வாக அதிகாரிகளும் சுயமாக கொள்கை முடிவுகளை எடுக்க முடியாத நிர்பந்தம் மற்றும் அலட்கிய போக்கு மற்றும் அரசியல் குறுகீடுகள். இதனால் இன்று பொது துறை நிறுவனங்கள் பல நட்டத்தில் நடந்து கொண்டு இருக்கின்றன. தனியாரிடம் ஒப்படைக்கும் கொள்கை வகுக்கப்படுகிறது.
(அ) டாட்டா நிறுவனத்திடமிருந்து கைப்பற்றப்பட்ட விமான போக்குவரத்து இன்று சீரழிந்துள்ளது. (ஆ) தனியார்களிடமிருந்து  கையகபடுத்திய வங்கிகள் பல நட்டத்திலும், பல ஒன்றுடன் ஒன்று இனைக்கப்பட்டு நடத்தப்படுகின்றன. பெருகிவரும் தேவையை மனதில் கொண்டும், அரசு அதை பூர்த்தி செய்ய முடியாது என்ற நிலையிலும் தான் இந்த இரண்டு துறைகளிலும் தனியார் தொழில் தொடங்க அனுமதித்தனர். அயல் நாட்டு நிறுவனங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


2) தனியாயாருக்கு தொழிழ் தொடங்க அனுமதிக்கும் போது, பெரிய அளவில் மூதலிடுகள் தேவைபடுகிறது.அதற்காக சலுகைகலும், பொதுமக்களிடம் பணம் திரட்ட அனுமதியும், வெளிநாட்டு நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து தொழில் தொடங்க அனுமதியளிக்கப்படுகிறது.
அவ்வாறு தொழில் தொடங்கும் தனியார் நிறுவனங்கள் லாப நோக்கை மட்டுமே குறிகோளாக கொண்டுள்ளது. மேலும் மேலும் சலுகைகளை கேட்கிறது. அரசு தர இயலாத நிலையில் அவை உற்பத்தியை குறைத்து அல்லது நிறுத்தி பொருளாதாரத்தை பாதிக்கசெய்கிறது. தொழிலை நிறுத்தினால் தனியாருக்கு எந்தவித நட்டமும் இல்லை. அவர்கள் மூதலீடு செய்த பணம் மிக குறைவு.அதை அவர்கள் தொழில் தொடங்கும் முன்பே பல வழிகளில் எடுத்து விடுகிறார்கள். அந்த தொழிலில் சிக்கியிருப்பது, பொதுமக்களின் பணமும் வங்கிகளின் பணம் மட்டுமே. இதற்க்கு அண்மை கால உதாரணம் KINGFISHER விமான சேவை. நட்டம் ஏற்படுத்திவிட்டார். அவரிடமிருந்து, கடனாக கொடுத்த பணத்தி திருப்பி பெற முடியாது.அவரது வேறு தொழிலில் இருக்கும் பணத்தையோ அல்லது தனிப்பட்ட சொத்துக்களையோ பறிமுதல் செய்ய முடியாது.

மற்றோரு உதாரணம். நமது அந்நிய செலவானி அதிகமாக உபயோகிக்கபடும் துறை கச்சா எண்ணை இறக்குமதிக்கு. அதை குறைக்க வேண்டும் என்பதற்க்காகவும் நமது இயற்க்கை வளத்தை உபயோகிக்கவேண்டும் என்பதற்காகவும்,  கச்சா எண்ணெய் இருக்கும் இடங்களை தேடிபிடித்து உற்பத்தி செய்ய அம்பானிக்கு அனுமதியளிக்கப்பட்டது.  குறைவான விலைக்கு உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய், நமது உபயோகத்திறிக்கு வந்தால் அந்நிய செலவானி மிச்சமாகும்.அதை வேறு தொழிழ்களுக்கு உபயோகப்படுத்தலாம். ஆனால் என்ன நடக்கிறது. அம்பானி கூறுகிறார். அரசு கச்சா எண்ணயெய் வெளிநாடுகளிடமிருந்து என்ன விலைக்கு வாங்குகிறதோ அந்த விலையை எனக்கு தர வேண்டும் என உற்பத்தியை நிறுத்தி வைத்துள்ளது. நாட்டுபற்று, சமூக அக்கறை சிறிதளவும் இல்லை. இவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. இவரால் துறை சம்மந்தப்பட்ட அமைச்சரை நீக்க முடியும் அரசையும் மாற்ற கூடிய வல்லமை படைத்தவர். எந்த கட்சி அரசாங்கமாக இருந்தாலும் இவரையும் இவரை போன்ற பலரையும் பகைத்து கொள்ள முடியாது.

3) நமது இந்திய நிறுவனங்கள் தான் இப்படி தேச பக்தி இல்லாமல் நடந்து கொள்கிறதே என்று வெளிநாட்டு நிறுவனங்களை தொழில் செய்ய அழைத்தால், அவர்கள் சொல்வது உங்கள் நாட்டு சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தொழில் செய்யமுடியாது என்றும் எங்களுக்கு ஏற்றவாரு சட்ட திட்டங்களை மாற்றும்படியும் கூறுகிறது. பல்வேறு நிர்பந்ததினால் அதை செய்ய வேண்டிய் நிலையில் அரசு இருக்கிறது. அவர்களுக்கு சலுகை கொடுப்பதால் உள்நாட்டு நிறுவனங்களுக்கும் சலுகை கொடுக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்நிலையில் சிறிய, மத்திய வர்க்க தொழில்கள் நசுக்கப்படுகிறது. பெரிய தொழில்களை மட்டுமே நம்பி அரசின் பொருளாதார கொள்கைகள் வகுக்கப்பட்டால், அந்நாடு விரைவி திவாலாகிவிடும். அண்மை காலத்தில் வெளிநாட்டு மூதலீடுகளை மற்றும் அவர்களின் தொழில் நிறுவனங்களை மட்டுமே நம்பி பொருளாதார கொள்கைகளை வகுத்துகொண்ட நாடுகள் திவாலான நிகழ்சிகள் அண்மை கால வரலாறு.

கனிமங்களை குறைந்த விலைக்கு கொடுத்து இறுதி பொருளை அவர்களிடமிருந்தே அதிக விலைக்கு வாங்குவதலும் அந்நிய செலவானி கையிருப்பு சீரழிகிறது என்கிற வாதம் சரியானதாக தோன்றினாலும்.  அதே கனிமங்களை வைத்து இறுதி பொருடகளை தாயரிப்பதில் உள்ள சிக்கல்களை மேலே கூறியுள்ளேன். பல சமயங்களில் , வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருளின் விலை, உள்நாட்டு பொருளின் விலையை விட குறைவாக உள்ளது. நமது மக்களும் கண்மூடிதனமாக வெளிநாட்டு பொருளின் மீது உள்ள ஆர்வத்தால் அதேயே வாங்குகிறார்கள். அதனால் உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்பட்டு, இறக்குமதியை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளும் வைக்கப்படுகிறது. இதை அரசு பாரபட்சமற்ற நிலையில் அனைவரையும் திருப்திபடுத்தும்படி கொள்கைகளை வகுக்க வேண்டியுள்ளது. எப்படி கொள்கைகளை வகுத்தாலும், அதற்கான விமர்சனங்களும் எதிர்ப்புகளும் கூடவே வருகிறது.

உள்நாட்டுக்கு உற்பத்திக்கு தேவைபடும் மூலதன கட்டமைப்புகளுக்கு இறக்குமதி அவசியமாகிறது. இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு பணம் கொடுக்க , ஏற்றுமதியின் மூலம் பணம் சம்பாதிக்க வேண்டியுள்ளது.

தேவையற்ற பொருட்களை இறக்குமதி செய்வதன் மூலமும் அந்நிய செலவாணி வீணடிக்கப்படுகிறது. 50 ரூபாய் விலைகொடுத்து இறக்குமதி செய்யப்பட்ட ஆணுறைகளை உபயோகிக்கும் நாட்டில் , பொருளாதார கொள்கைகள் சீரழிகிறது. 300% அளவுக்கு இறக்குமதி வரி விதிக்கப்பட்டாலும், வெளிநாட்டு மதுவகைகளை வாங்கி குடிக்கும் குடிமக்களும் இந்த நாட்டில் இருக்கிறார்கள் 
இவர்கள் அனைவரையும் அரவனைது ஏற்றுமதி-இறக்குமதி கொள்கைகளை வகுக்க வேண்டியுள்ளது. சில சமயம் அது தவறாகவும் முடிந்து விடுகிறது. அதன் விளைவை சாதாரண பொதுமக்கள் அனுபவிக்க வேண்டியுள்ளது.






எனக்கு தெரிந்த அளவில், நாட்டின் பொருளாதார கொள்கைகள் , மொத்த உள்நாட்டு உற்பத்தியின் GDP அடிப்படையில் அமைக்கவேண்டும். புதிய பொருளாதார கொள்கை அறிமுகத்திற்க்கு முன்பு GDP , விளைபொருள், தொழிற்சாலை உற்பத்தி பொருள் மூலமாகவே கணக்கிடபட்டது. விளைபொருளில் உற்பத்தி என்பது, 1 பொருள் பல பொருளாக மாறுவது.ஒரு நெல் தானிய விதை 100 தானியங்களை உற்பத்தி செய்கிறது. தொழிற்சாலை பொருட்கள் ஒரு பொருள் பிரிக்கப்பட்டோ, பிற பொருள் சேர்க்கப்பட்டோ பல பொருட்களாக வெளிவருகிறது. இயற்கையில் இலவசமாக கிடைக்கும் கனிமங்களிடமிருந்து இறுதி பொருள் தாயாரிக்கும் முன்பு பல வேறு விதமான பொருட்கள் வெளிவருகிறது. கச்சா எண்ணையிலிருந்து, petrol  வெளிவருவதற்க்கு முன்பும் பின்பும் 11 துனைபொருட்கள் வெளிவருகிறது. இப்படி விளைபொருகளின் மூலத்தையும்  , தொழிற்சாலைகளின் உற்பத்தி திறனின் அடிபடையில் GDP கணக்கிடப்பட்டு, பொருளாதர கொள்கைகள் வகுக்கப்பட்டது.  நிலையாக நீடித்து நின்றது. ஆனால், புதிய பொருளாதார கொள்கையின் படி, சேவையையும் உற்பத்தியாக (service sector) உள்ளடக்கி GDP யை கணகிடபட்டதால் தான் , இன்றைய பணவீழ்ச்கிக்கு வழிவகுத்தது. பொருளாதாரமும் சரிந்தது.

அமெரிக்க பொருளாதாரமும் மற்ற ஐரோப்பிய நாடுகளின் பொருளாதரமும் மிகவும் மோசமான நிலைக்கு சென்ற போதும், பெருமளவு ஜனதொகை கொண்ட இந்தியாவும், சீனாவும் தப்பி பிழைத்ததற்க்கு காரணம் இரண்டு.
1) Service Sectorsஐ மிகவும் சார்ந்து இந்த இருநாடுகளும் பொருளாதார கொள்கைகளை வகுக்கவில்லை.
2) இந்தியா விளைபொருள் உற்பத்தியாலும், சீனா தொழிற்சாலை உற்பத்தி பொருட்களால் சாம்பாதித்த அந்நிய செலவானி மூலமும் நிலைத்து நின்றது.
3)மேலும், இருநாட்டு மக்களுக்கும் உள்ள ஒரு அடிப்படையான குணம். அதாவது பணம் சேர்த்த பின்பு பொருள் வாங்குவது. பணம் சேமிக்கும் போது அந்த பணம் தொழில் வளர்ச்சிக்கு பயன்படுகிறது. சேமித்த பணத்தில் பொருள் வாங்கும் போது தாயரித்த பொருள் விற்பனையவதன் மூலம் பண சுழற்சி ஏற்பட்டு , பொருளாதரம் நிலைக்கிறது. சேமிப்பு-உற்பத்தி-உபயோகம்-உற்பத்தி-சேமிப்பு...................(பல நாடுகளில் , பொருளை முதலில் கடனாக வாங்கி பின்பு பணம் கட்டுவது)

நமது பொருளாதரம் பெருகிய போது, அறிவு ஜீவிகள் வைத்த வாதம் அமெரிக்க பொருளாதாரம் வளர்கிறது அதனால் நமது பொருளாதாரம் வளர்கிறது என்றும் நமது பொருளாதாரம் அமெரிக்க பொருளாதரத்துடன் நேரடி தொடர்புடையது )]direct propociation என கூறினார்கள்.

இன்று பணவீழ்ச்சிக்கு காரணம், மந்த நிலையிலிருந்த அமெரிக்க பொருளாதாரம் மீண்டு வருவதால் நம நாட்டில் பணவீழ்ச்சி ஏற்படுவதாக கூறுகிறார்கள் இப்போது indirect prpociation

இவர்களால், பணவீழ்சிக்கான சரியான காரணங்களை கண்டறிய முடியவில்லை.அவர்களும் குழம்பி, மற்றவர்களையும் குழப்புகிறார்கள்.

திரு. மன்மோகண் சிங் அரசுக்கு தலைமை ஏற்ற போது, மிகவும் மகிழ்சியடைந்தேன்.மேலும், திரு. சிதம்பரத்தை நிதி அமைச்சராக நயமித்து கொண்ட போது , குருவும் சீடனும் ஒரே பல்கலைகழகத்தில் படித்தவர்கள், இருவருக்கும் புரிதல் சரியாக இருக்கும், இருவருமே பொருளாதாரம் வணிகம் மற்றும் நிதி துறையில் அனுபவமுள்ளவர்கள் எனவே நாட்டை பொருளாதார துறையில் முன்னேற்றத்தை உருவாக்கி நாட்டை உயர்ந்த நிலைக்கு கொண்டுவருவார்கள் என நினைத்தேன். ஆனால், என்னதான் படிப்பும் அறிவும் இருந்தாலும் இருவருமே அரசியலுக்கு அடிபணிய வேண்டிய நிலை ஏற்ப்பட்டது.

அரசியல் கட்சி தலைமையும், ஆட்சி தலைமையும் இனைந்து செயல்பட்டால் தான் முன்னேற முடியும் என்பதையே இன்றைய பொருளாதாரம் நமக்கு சொல்லி கொடுக்கும் பாடம்.

நான் சாமானிய பாமரன். எனக்கு தெரிந்தவற்றை கூறியுள்ளேன். தவறுகள் இருந்தால் சுட்டிகாட்டவும். விவாதிக்க  விரும்பினால், கருத்துக்களை தெரிவிக்கவும்.













Thursday, 4 July 2013

கற்பு என்பது என்ன?



கற்பு என்பது என்ன?

கற்பு என்ற சொல் அனைத்து நாடுகளிலும், அனைத்து மொழிகளிலும், அனைத்து இனத்திலும் மற்றும் அனைத்து சமயங்களிலும் உள்ளதா ?

கற்பு என்பதற்க்கு எல்லா இடங்களிலும் ஒரே விதமான விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளதா ?

கற்பு என்பது விவாத பொருளா? 
கற்பு ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானதா ?
இன்றைய அறிவியல் உலகில்(கலிகாலத்தில்) கற்பு என்ற சொல்லுக்கு பொருள் உள்ளதா ?

இந்தியாவில் கற்பின் விளக்கம் என்ன ?

1) ஒரு ஆணும் ஒரு பெண்ணும் திருமணம் எனும் சடங்கின் மூலம் அல்லது சட்ட ரீதியான முறையில் இணைந்த பின்பு , உடல் உறவு கொள்ள வேண்டும். அதன் பின்பு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமென்பது மரபு

அப்படியில்லாமல் திருமணத்திற்க்கு முன்பு ஆணும் பெண்ணும் உடல் உறவு கொண்டால், பெண் கற்பிழந்தவள் என கருதப்படுகிறது. இது குறித்து பல்வேறு விதமான கருத்துக்களும, விவாதங்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. நான் விவாதத்திற்க்கு எடுத்து கொள்ளும் பொருள் வேறு.

இன்றைய நாளில் எவ்வாறெல்லாம் குழந்தை பெற்றெடுக்கப்படுகிறது என பார்ப்போம்.

1. திருமணம் என்ற சடங்கிற்க்கு பின்பு இயற்க்கையான முறையில் உறவு கொண்டு குழந்தை பிறக்கிறது.

பெண்(மணைவி) குழந்தை பெற்றெடுக்கமுடியாத சூழ்நிலைகள்.

) பெண்ணிற்க்கு கருமுட்டை உருவாகத நிலை
) பெண்ணிற்க்கு கருப்பை பலவினமாக இருக்கும் நிலை/கருவை சுமக்க இயலாத நிலை
) பயத்தின் காரணமாக அல்லது இளமை குறைந்துவிடும் என்ற காரணத்திற்க்காக     குழந்தை பெறாமல் இருப்பது.
) பெண்ணிற்க்கு உடல் உறவில் விருப்பமின்மை
) காரணம் அறிய முடியாத நிலை

ஆண்(கணவன்) குழந்தை பெற்றெடுக்கமுடியாத சூழ்நிலைகள்

) விந்து உருவாகாத நிலை
) விந்து வீரியம் இல்லாமை
) மணைவியின் இளமை குறைந்து விடும்/பிரசவத்தில் மனைவி இறந்துவிடுவாள் என்ற பயம்
) பெண்ணிடம் ஈர்ப்பு இல்லாமை(ஓரின சேர்கையாளனாக இருப்பது)
) காரணம் அறிய முடியாத நிலை

இன்றைய அறிவியல்/விஞ்ஞான முறைப்படி எப்படி பிள்ளை பெறுகின்றனர்.

1) பெண்(மணைவி) கருவை சுமக்க முடியாத நிலையில்/சுமக்க விரும்பாத நிலையில்

பெண்ணின் கருமுட்டையை வெளியே எடுத்து மற்றும் ஆணின் விந்துவையும் வெளியே எடுத்து, இதற்கென உள்ள மருத்துவ மனைகளில் குப்பிகளில் இரண்டையும் சேர்த்து செயற்கையாக கருவை உருவாக்கி, வேறு ஒரு பெண்ணின் கருப்பையில் வைத்து கருவை வளர்த்து, இயற்கையாகவோ அல்லது அறுவை சிகிச்சை மூலமாகவோ குழந்தை பிறக்க செய்து, அந்த தம்பதிகளிடம் ஒப்படைத்தல். இப்படி பிறருக்காக குழந்தை பெற்றுக்கொடுப்பவர்களுக்கு வாடகை தாய் என்று பெயர்.

2) பெண்ணிற்க்கு (மனைவிக்கு) கருமுட்டை உருவாகாத நிலையில்

பெண்ணின் கருப்பை கருவை சுமக்கும் நிலையில் இருந்து அதே சமயம் கருமுட்டை உருவாகாத நிலையில் வேறு ஒரு பெண்ணின் கருமுட்டையை விலைக்கு/தானமாக வாங்கி அதனுடன் ஆணின் (கணவன்) விந்துவையும் வெளியே மருத்துவமனையில் சேர்த்து பின்பு பெண்ணின்(மணைவி) கருப்பையில் வைத்து, குழந்தை பெற்றுக்கொள்வது.

கருமுட்டையை தானம் செய்பவர்கள் உண்டு.

இந்த முறை ஏன் கையாளப்படுகிறது

1) ஆண்(கணவன்) வேறு பெண்ணுடன் இயற்கையான முறையில் உடல் உறவு கொள்வது தடுக்கப்படுகிறதாம். ஆணின் கற்பு நிலை காக்கப்படுகிறதாம்.

2)கருமுட்டைதானமாக/கருப்பையை வாடகைக்கு  கொடுத்த பெண் யார் என்ற ரகசியம் காப்பாற்றப்படுகிறதாம்.

3) எதிர்காலத்தில் கருமுட்டையை தானம்செய்த/கருப்பையை வாடகைக்கு  கொடுத்த  பெண், குழந்தையை உரிமை கொண்டாடி வரும் நிலை தவிர்க்கப்படுகிறதாம்.

ஆண் (கணவன்) கருவை உருவாக்க முடியாத நிலையில்

1) வேறு ஒரு ஆணின் விந்துவை விலைக்கு வாங்கி பெண்ணின்(மணைவியின்) கருமுட்டையுடன் வெளியே சேர்த்து, அதை மனைவியின் கருப்பையில் செலுத்தி குழந்தை பெறுவது அல்லது வாடகை தாயின் மூலம் குழந்தை பெறுவது.
இந்த முறை ஏன் கையாளப்படுகிறது

1) பெண்(மனைவி) வேறு ஆணுடன் இயற்கையான முறையில் உடல் உறவு கொள்வது தடுக்கப்படுகிறதாம்.பெண்ணின் கற்பு நிலை காக்கப்படுகிறதாம்.

2)விந்துவை தானமாக கொடுத்த ஆண் யார் என்ற ரகசியம் காப்பாற்றப்படுகிறதாம்.

3) எதிர்காலத்தில் விந்துவை தானம் செய்த ஆண், குழந்தையை உரிமை கொண்டாடி வரும் நிலை தவிர்க்கப்படுகிறதாம்

ஆண்-பெண்(கணவன்-மணைவி) இருவருமே குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில், அனாதை குழந்தைகளை தத்து எடுக்காமலும்/மறுமணம் செய்யாமலும் தனக்கு தேவையான குழந்தையை உருவாக்கி கொள்ளும் முறை.


1.விந்து தானம் செய்யும் நபரை தேர்வு செய்தல்

2) கருமுட்டையை தானம் செய்யும் பெண்ணை தேர்வு செய்தல்

3) கருவை சுமக்கும் பெண்ணை தேர்வு செய்தல்

இவை மூன்றையும் குழந்தை வேண்டுபவர் தேர்வு செய்து, மருத்துவமனையில் கூறினால் அவர்கள் குழந்தையை உருவாக்கி தருவார்கள்.(order to make)
இவ்வாறு பிறக்கும் குழந்தைகளை சமூகமும் சட்டமும் ஒப்புக்கொள்கிறது.

என்னுடைய  சந்தேகங்களும் கேள்விகலும்::

1) ஒரு குழந்தையின் உயிரில் கணவன்-மணைவி இருவரின் உயிரும் சரிசமமாக கலந்து 50:50 இருக்கவேண்டும். அப்போது தான் அது அவர்கள் குழந்தை.

2) 50% மட்டுமே ஒரு குழந்தையின் உயிரில் கணவன்-மணைவி பங்கு இருந்தால் , அது எப்படி அவர்களின் குழந்தையாக இருக்கமுடியும்.?

3) 50% பங்கு உள்ள குழந்தையை ஏன் செயற்கை முறையில் உருவாக்க வேண்டும். 50% இயற்கையான முறையில் உறவு கொண்டு உருவாக்கினால் என்ன தவறு.
இதில் எங்கே கற்பு பறி போகிறது.

விந்து வேறு ஒருவருடையது என்கிற போது, பெண் கற்பிழந்தவள் தானே
கருமுட்டை வேறு ஒருவருடையது என்கிற போது, ஆண் கற்பிழந்தவள் தானே?

கருமுட்டையும் விந்துவும் தங்களுடையது அல்ல(இரண்டும் விலைக்கு வாங்கியது) என்கிற போது, அது அவர்கள் குழந்தை எப்படி ஆகும். அது தத்து/வளர்ப்பு பிள்ளை தானே?

50% தங்களுடைய பங்கு உள்ள குழந்தைக்கு சமூக அங்கிகாரமும், சட்ட ஆங்கிகாரம் கிடைக்கிறது.

இதே நியாயம், விலை மகளிர் பெறும் குழந்தைகளுக்கும் ஏன் பொருந்துவதில்லை. சமூகமும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. சட்டமும் ஏற்க மறுக்கிறது. இது என்ன நியாயம். விலை மகளிரிக்கு தனது குழந்தையின் ஆண் பங்களிப்பு யாருடையது என்று தெரியாவிட்டாலும் அவளது கருவில் உருவானது. அந்த குழந்தைகு அனைத்து உரிமைகளும் கிடைக்க வேண்டாமா?

மேலும், வாடகை தாயின் நிலை என்ன?. ஆணின் விந்து யாருடையது என்று தெரியாத  நிலையில் குழந்தை பெற்றுக்கொடுத்தால், அவள் கற்பிழந்தவளா? அந்த குழந்தை தகாத முறையில் பிறந்த குழந்தை என கூறப்படுமா? வாடகை தாய் பெற்ற குழந்தையும், விலை மகளிர் பெற்ற குழந்தையும் ஒன்று தானே ?

இவ்வாறு குழந்தை பெறுவது சமிப காலமாக அதிகரித்து வருகிறது.
சில வருடங்களுக்கு முன்பு, பிரபல இந்தி திரைப்பட நடிகர் அமிர்கான் செயற்கை முறையில் (வாடகை தாய் மூலம்) குழந்த பெற்றார்.

இந்த வாரம் பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் 3வது குழந்தை இந்த முறையில் பெற்றுள்ளார்.

இதில் இவருடைய பங்கும் அவரது மனைவியின் பங்கும் எவ்வளவு என்று தெரியவில்லை.

வருங்கால சட்ட சிக்கல்கள்

கடந்த பல ஆண்டிகளாக ஒரு வழக்கு நடைபெற்று வருகிறது. முன்னாள் உத்திரபிரதேச முதல்வர் N.D. Tiwari மீது ஒரு வாலிபர் வழக்கு தொடர்ந்தார். அதாவது, N.D. Tiwari தனது தந்தை என்றும் அதை அவர் அங்கிகரிக்க வேண்டும் என்றும் வழக்கு தொடர்ந்தார். பல வருடம் நடைபெற்றது. முடிவு எட்ட முடியாத நிலையில், நீதிமன்ற உத்தரவின் பேரில், மரபணு சோதனை (DNA test) மேற்கொள்ளப்பட்ட்து. அதன் மூலம் அவர் தான் தந்தை என முடிவாகியுள்ளது. நீதிமன்றம் இன்னும் தீர்ப்பு வழங்கவில்லை.

இன்றிலிருந்து, 20 வருட்த்துக்கு பின்பு, யாரேனும் இப்படி வழக்கு தொடர்ந்து, மரபணு சோதனை மூலம் நீருபிக்கப்பட்டாலும், குற்றம் சாட்டப்பட்ட நபர் இவ்வாறு வாதடலாம். அதாவது தனது இளமை பருவத்தில், மருத்துவமனையில் விந்து தானம் செய்ததாகவும், அதை மருத்துவமணை யார் உபயோகத்திற்க்கு கொடுத்து என்று தனக்கு தெரியது என்றும், அதன் மூலம் வழக்கு தொடர்ந்த நபர் பிறந்திருக்கலாம் எனவே இவர் எனக்கு பிறந்தவர் இல்லை என்றும் எனது வாரிசாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் வாதிட முடியும்.

வழக்கு தொடுப்பவர் உண்மையில் சமுக அந்தஸ்து வேண்டும் என்றும் வழக்கு தொடரலாம். மிரட்டி பணம் பறிப்பதற்க்காகவும் அல்லது பிரபலங்களை அவமானப்படுத்துவதற்ககாவும் வழக்கு தொடர்லாம். அப்போது சட்டம் இதை எப்படி கையாளும். (மருத்துமனைகளோ அல்லது பணி புரிந்த மருத்துவரோ அல்லது விவரம் தெரிந்த ஊழியரோ இதற்கு உடந்தையாகவும் இருக்கலாம். பணத்திற்க்காக எதையும் செய்யும் நபர்கள் உண்டு)

இதை படிக்கும் வாலிபர்களுக்கு நற்செய்தி:

வாலிபர்கள் விந்து தானம் செய்யலாம்.(சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு) ஒருமுறை விந்து தானம் செய்தால் ரூ.1000 /- முதல் ரூ.10000/- வரை கிடைக்கிறது.) ஏதேனும் பிரபலம் உங்கள் விந்துவை விரும்பி கேட்டு வாங்கினால் லட்சகணக்கிலும் சம்பாதிக்கலாம். டெல்லியில் கல்லூரி மாணவர்கள் கைசெலவுக்கு மருத்துவமனைகளில் கைதொழில் செய்து பணம் சம்பாதிக்கிறார்கள். பிரபலங்கள் குறிப்பாக Models விந்து தானம் / கருமுட்டை தானம் செய்தும் நிறைய சம்பாதிக்கிறார்கள்.

(அண்மையில் ஒரு இந்தி திடைபடம் வெளிவந்த்து. திரைபடத்தின் பெயர் VICKY DONOR – இதில் கதாநாயகன் விந்து தானம் செய்பவர். திருமணத்திற்க்கு பிறகும் விந்து தானம் செய்தவர். இவருக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்பு இல்லாமல் போகிறது. இவரது விந்து தானம் மூலம் 52 குழந்தைகள் பிறந்துள்ளதாக கூறி அனைவரையும் காட்டுகிறார் மருத்துவர். அந்த குழந்தைகளில் ஒரு குழந்தை அனாதையாக உள்ளது. அதை அவர் தத்து எடுத்து கொள்கிறார்இந்த படத்தை தமிழில் எடுக்க இன்னும் யாருக்கும் துணிவு வரவில்லை)

அடுத்த முறை கழிவறையில் கை குலுக்குவதற்க்கு முன்னால் ஒரு முறை யோசியுங்கள்.
மருத்துவமனை எங்கிருக்கிறது என தேடிபிடியுங்கள்.


ராசாத்தி அம்மாள் எனது மகள் கனிமொழியின் தாயார்
 இந்த பொன்மொழிக்கும் கட்டுரைக்கும் சம்மந்தம் இல்லை.



மகாபாரத கதையில் வரும் குந்தி தேவி எந்த முறையில் கர்ணனை பெற்றேடுத்தார்??.
சூரிய பகவானை நினைத்து மந்திரம் சொல்லி குழந்தையை பெறமுடியுமா. மந்திர தந்திரத்தால் குழந்தை பெற முடியுமா??.

மகாபாரதத்தில் வரும் துரோபதை 5 பேருக்கு மனைவி. அவளுக்கு குழந்தை உண்டா? உண்டெனில் அது யாருடைய குழந்தை ? 5 பேருடன் வாழ்ந்தவள் கற்புக்கரசியா. எதற்க்காக அவளுக்கு கோயில்.

இன்று யாரேனும் 5 பேருடன் வாழ்ந்தால், அவளுக்கு கோயில் கட்டி கும்பிடுவார்களா???????