Sunday, 13 October 2013

கவிதை என்றால் என்ன ?

தன்னை தானே புணர்ந்து பிரசவிப்பது தான் கவிதை



சூத்திரங்களும் சூட்சுமங்களும் இல்லாததும் கூட தான் கவிதை

- "சுதந்திரபறவை"

நான் மேலே கூறியுள்ள விளக்கம் யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டீர்கள். குறிப்பாக இன்று, கவிஞர்கள் என்று அறிமுகமாகி உள்ளவர்களும், அறிமுகமாக துடித்துகொண்டிருப்பவர்களும், தங்களுக்கு தாங்களே பட்டப்பெயர்களை சூட்டிக்கொண்டு கவிஞர்களாக, எழுத்தாளர்களாக பவனி வந்து கொண்டிருப்பவர்கள் நிச்சியமாக ஏற்றுக்கொள்ளமாட்டீர்கள்.

கவிதை பற்றி மற்றவர்கள் சொல்லியிருக்கும் கருத்துக்களை கீழே பகிர்ந்துள்ளேன். ஒவ்வொரு கவிஞரும், எழுத்தாளரும் பல்வேறு விதமாக கூறுகின்றனர். ஒரே கவிஞரே கூட பல்வேறு தருணங்களில் பல்வேறு கருத்துக்களை கூறியுள்ளனர்.


 
கவிதையில் எல்லாம் அனுமதிக்கப்பட்டிருக்கிறது
சந்தேகமின்றி, இந்த நிபந்தனையுடன்
வெற்றுத்தாளில் நீ முன்னேற வேண்டும்.


-
நிக்கனார் பாரா (சிலி)
 
லத்தின் அமெரிக்கக் கவிஞர்


அற்ப ஆயுள் கொண்டதானாலும், மகத்தானதானாலும், கவிதை ஒரு செயல்பாடு என்றே நம்புகிறேன்.
 பாப்லோ நெரூதா 



"மிக உயர்ந்த சொற்கள் மிகச் சீறிய மு​றையில் உள்ளடக்கியது கவி​தை" என்கிறார்​

கோல்ரிட்ச்.



ற்றல் நிரம்பிய ​சொற்கள் இயல்பாகப் ​பொங்கி வழிவது கவிதை

வோர்ட்சு​வொர்த்து. 


"கால்வாய் இல்லாத இடத்தில் ​​பெய்யும் ஒளிம​ழை​யே கவி​தை"
கீட்ஸ் .
 

 



வாசிக்கலாம், ஏற்கலாம், நிராகரிக்கலாம், சிலாகிக்கலாம், புறக்கணிக்கலாம் என்பதற்கு மேல் கவிதைகளில் செய்வதற்கு ஒன்றும் இல்லை என்பது எப்போதும் என் கருத்து. ஏனெனில் கவிதை என்பது, உரைப் புனைவுகளைப் போலல்லாமல், மனதின் மொழியில் எழுதப்படுபவை. அது இருவருக்கு அல்லது பலரிடையே நடக்கிற உரையாடல் அல்ல. உள்மனதுடனான தியானம்.


மாலன்


உலகின் சிறந்த கவிதைகள் தனி மனித அனுபவம் சார்ந்தவை.தனி மனித அனுபவங்கள் எவ்வளவு சரியாய்ச் சொல்லப்படுகிறது என்பதே முக்கியம்.

 கவிஞர் விக்ரமாதித்யன்


கவிதை எனில் சங்கக் கவிதைக்கு நிகராக இருக்கவேண்டும். சங்கக் கவிதையின் தொடர்ச்சியே, இன்றைய நவீன கவிதைகள் என்று நம்புகிறேன்.  

கவிஞர் விக்ரமாதித்யன்


விதை என்பது கனவுகளை எழுதுவது. நல்ல கனவுகளை மட்டுமே கவிதைகள் கொண்டிருக்கும். 

கவிஞர் விக்ரமாதித்யன்


கவிதை ஏதாவது செய்ய வேண்டும்

ஒரு கவிதை உங்களை ஏதாவது செய்ய வேண்டும்.
சந்தோசப்படுத்த வேண்டும் அல்லது கலவரப்படுத்த வேண்டும்.
குறைந்த பட்சம் வாழ்வைப் பற்றி யோசிக்க வைக்கவாவது வேண்டும்.

விக்ரமாதித்யன்


கவிதை ஒரு சமூக ஆவணம். சங்கக் கவிதைகள் அந்த காலத்திய ஆவணம். கவிதை எழுதி முடிச்ச பிறகு ஆவணமாகிறது. ஒரு இனத்தின் ஆவணமாகிறது. இதைத்தாண்டி மனித மனங்களைப் பண்படுத்துகிறது.

 விக்ரமாதித்யன்

 
கவிதை என்பது மாயம்மொழியில் கட்டப்படும் மாயம்
கவிஞன் என்பவன் மாயக்காரன் நல்ல கவிஞன் நல்ல மாயக்காரன்
விக்ரமாதித்யன் 


கவிதை என்பது ஒரு நுட்பமான, ஆழமான ஒரு ஆளுமையைப் பாதிக்கிற ஒரு சிறு பொறி முதல் பெரும் காட்டுத் தீ வரையான ஒரு பெரிய விஷயம். நம்ம பாரதி, பாப்லோ நெருதா போல ஒரு தேசியத்தையே பாதிக்கிற காட்டுத் தீ போன்ற ஒரு விஷயம்தான் கவிதை.

சமயவேல்

பெரிய தோட்டத்திலே ஒரே ஒரு
பூதான் பூத்திருக்கிறது. ஆயிரக்கணக்கான
பட்டுப்பூச்சிகள் அந்த ஒரு பூவை
கண்டுகொள்கின்றன. தேடிக் காண்பதுதான்
கவிதை. தேடாமல் காண இயலாது.


க. நா. சு

"என்னைப் பொறுத்தவரை மொழியும் எழுதுகிறவனின் மனமும் இணைந்து முயங்குகிற போதுதான் கவிதை பிறக்கிறது"

வண்ணநிலவன்

கவிதை ஒரு கலை. கவிதையை விட நுட்பமான மொழி சார்ந்த வெளிப்பாடு வேறொன்று கிடையாது. சிக்கனமான சொல்லமைப்பு கொண்ட கவிதை நூற்றுக்கணக்கான பக்கங்களில் கூறிவிட முடியாதவற்றை, காண்பிக்க முடியாதவற்றை, ரத்தினச் சுருக்கமாக வெளியீடு செய்து விடுகிறது 
ரா.ஸ்ரீனிவாசன்

"கவிதையின் ஊற்றுக்கண் ஆசையல்ல; கற்பனை அல்ல; கவி என்பவன் தனது சுய வியாபகத்துக்காக உற்பத்தியாக்கும் சரக்கு அல்ல. கவிதை உண்மையில் நடைமுறை வாழ்வில் சம்பவிப்பது. இக்கவித்துவத்தை கவிஞனாக இயங்கும் மனிதனில் உணர்ந்து கொள்ள வேண்டும். கவிதைக்கு அப்போதுதான் உரிய நியாயம் கிடைக்கும்."
 பிரமிள்

இயற்கை ஒளியை விசிறும் மின்சாரம் கவிதை

சிருஷ்டி முழுவதிலும் ஊறி அதை இயக்கும் சக்திக்கு மறுபெயர்தான் கவிதை.
கவிஞனுடைய வேலை இந்தச் சக்திக்குத் தன்னை ஊற்று கண்ணாகத் திறந்து கொள்வதுதான். இயற்கை என்ற ஒளியை விசிறும் மின்சாரம் தான் கவிதை.

பிரமிள்
 
புதுக்கவிதை என்ற பெயர் தற்காலிகமானது.
கவிதையின் பெயர் கவிதையே.
இப்பெயர் பெறத் தகுதியற்ற யாவும் செய்யுள்கள். செய்யப்பட்டவை.
கவிதை எல்லா வகையான சொற்களையும் உதறுகிறது.
நிதர்சனத்தில் திளைக்கிறது.
பிரமிள்

அநித்தியத்திற்கெதிரான சதிதான் கவிதை. எனவே கவிஞனைக் காலம் காலமாய் தீர்க்கதரிசி என்று வரலாறு கூறி வருவது மிகைப்படுத்தல் அல்ல.
 பிரம்மராஜன்

சொல்லைக் குறுக்கக் குறுக்க, அதுக்கு ஒரு அசாத்திய பிரஷர் ஏற்படும். அந்த சொல்லைப் பிரயோகம் பண்ணும்போது பட்டாசு மாதிரி "படார்னு" வெடிக்கும். பட்டாசு சிதைஞ்சு போயிடும்...போகட்டும். இது உண்டாக்கற வெடிப்பு இருக்கே அதுதான் முக்கியம்.

சங்கப் பாடல்களின் தொடர்ச்சிதான் இன்றைய புதுக்கவிதை என்பதை, படம் வரைந்து என்னால் விளக்க முடியும்.

நம் இன்றைய கவிஞர்களுக்கு நான் சொல்வது, சங்கம் பயின்றால்தான் கவிதை எழுத முடியும் என்றில்லை. சங்கம் பயின்றால் சில கவிதைகளை எழுதாமல் இருக்க முடியும்.

சுஜாதா



நல்ல கவிதை உடனே பளிச்சென்று தெரிந்து விடும், குப்பையில் கிடக்கும் பொற்காசு போல. உலகின் கவிதைக்கணங்கள் ரேஷன் செய்யப்பட்டிருக்கின்றன. அதனால், நல்ல கவிதை அரிது. கிடைக்கும்போது நாம் தவற விடக்கூடாது. கவிஞர்களையும் பாராட்டத் தயங்கக்கூடாது.

சுஜாதா
 

கவிதைக்கு அப்படிப்பட்ட வார்த்தைகள் தேவை. ஆனாலும் கவிதைங்கிறது வெறும் வார்த்தையில இல்லை...கவிதை என்பது ஜீவனில் உறைவது.
லா. ச. ராமமிருதம்

"Basic emotions" ஒரு சரியான கணத்தில், அடி வயிற்றிலிருந்தோ, முதுகுத்தண்டிலிருந்தோ, உக்ரம் ததும்ப எழும்பித் தன் முகம் காட்டும். உக்ரத்தால் எழுச்சி. எழுச்சிதானே கவிதை. 
 லா. ச. ராமமிருதம்
 
கவிதையின் தனித்தன்மை என்ன? - economy of expression - என்கலாமா?
 ஜி.நாகராஜன்



ஒரு கவிதையைப் படிக்கத் தொடங்கும்போதே "உண்மையின் குரல் இது" என்ற நம்பிக்கையை அது தீவிரமாக உருவாக்கவேண்டும். கவிதையைத் தீர்மானிக்கும் வேறு குணங்கள் அதற்கு இல்லாமல் இருக்கும் நிலையிலும் அல்லது அவை சற்று மங்கலாக இருக்கும் நிலையிலும் கவிதையுடன் நாம் முதல் உறவு கொள்ள இந்த உண்மை உணர்ச்சிதான் அதிக பங்காற்றுகிறது."

சுந்தர ராமசாமி

சிறுகதைகள், நாவல்கள் ஆகியவை செயல்படும் தளங்களுக்கு அப்பால் சில மேல்நிலைத் தளங்கள் இருக்கின்றன. இந்தத் தளங்களில் கவிதை செயல்படுகிறது. இது மிகவும் சூட்சுமமான தளம். அதிக அதிர்வுகள் கொண்ட தளம். படைப்பின் அளவிற்குச் சம்பந்தமில்லாத விரிவை மனதில் உருவாக்கும் தளம்.

சுந்தர ராமசாமி.

இன்று எழுதப்படும் பெரும்பான்மையான கவிதைகள் அனுபவத்தின் ஈரமில்லாதவை. ஒரு நிகழ்வின் அல்லது ஒரு சொல்லின் அடுக்குகள், போலியான ஜென் மனநிலை, இழந்த காலத்தைப் பற்றிய கூற்றுகள், மேம்போக்கான சோதனைகள் ஆகியவைதாம் இன்றைய கவிதையின் பொதுச் சூத்திரங்களாக மாறியிருக்கின்றன என்ற சந்தேகம் கவிதை ஆர்வலனாக எனக்கு இருக்கிறது. கவிதை - குறிப்பாகத் தமிழ்க் கவிதை - அனுபவத்தின் மண்ணிலிருந்துதான் முளைவிடுகிறது என்று பிடிவாதமாக நம்புகிறேன். சங்க இலக்கியம் முதல் இன்றைய கவிதைவரை இதுவே கவிதையின் இயல்பு என்று நம்புகிறேன். வாழ்வின் ஏதோ ஒரு கணத்தைத் திறப்பதாகவே தமிழ்க் கவிதை இன்றுவரை இருந்திருக்கிறது.

சுகுமாரன்




இன்றைய கவிதை சிக்கல்கள் நிரம்பியது. வாழ்க்கையை வியாக்கியானம் செய்யும் கோட்பாடுகளின் மறைவு; மனித இருப்புக்குப் பொருள் சேர்க்கும் கருத்தாடல்களின் மீதான நம்பிக்கையின்மை; முன்பு செப்பனிட்டு வைத்திருந்த பாதைகளில் நடக்க விதிக்கப்படும் தடைகள்; மேலோட்டமான படைப்பாக்க மல்யுத்தங்கள் - எல்லாம் வாழ்க்கையையும் அதன் உடன் நிகழ்வாகக் கவிதையையும் சிக்கலுக்கு உள்ளாக்கியிருக்கின்றன. அந்த சிக்கலின் மையத்தைப் பேசுகிற ஒன்றாக இன்று கவிதை ஆகியிருக்கிறது. எல்லாக் காலத்திலும் கவிதை கோரி நின்றது அதைத்தான். இப்போது வேண்டி நிற்பதும் அதைத்தான். முன்னர் எதைச் சொல்வது என்பது கவிதையின் சிக்கலாக இருந்தது. இன்றைய கவிதையில் எதையும் சொல்லலாம். ஆனால் சிக்கல், எப்படிச் சொல்வது என்பதில்தான்.

சுகுமாரன்




கவிதை என்பது  இன்றின் ஒளி””

கவிதையின் இளமை தீராதது. தேவதைகளுக்கு வயதாகாது என்று நம்புவதுபோல. வயதாக வேண்டாம் என்று விரும்புவது போல. வயதாகி விட்ட தேவதைகள் பார்க்கச் சகிக்காதவையாக ஆவதுபோல. இளமை தீர்ந்தது கவிதை அல்ல; செய்யுள். கவிதை எப்போதும் நிகழ்காலத்தின் பொருள். நிரந்தரமான நிகழ் காலத்தின் பொருள். அதற்குள் நேற்றின் நிழலும் நாளையின் சாயலும் இருந்தாலும் அது இன்றின் ஒளி. தன்னுடைய நிகழ் மனதை இன்றும் நிகழ்த்திக் கொண்டிருப்பவற்றைத்தான் ' ஆகச் சிறந்த கவிதைகள்' என்று நம்பவும் விரும்புகிறேன்.

சுகுமாரன்


து சிறந்த கவி​தை என்று எளி​மையாகச் ​சொல்லி விடுவது போல எது சிறந்த கவி​தை எனச் ​சொல்ல முடியாது "
பேராசிரியர் வையாபுரிபிள்​ளை.

நேர் ​கோடுகளும்   வ​ளை​கோடுகளும் வண்ணத்துடன் இ​ணைந்​தோ இ​ணையாம​லோ அழகியலாகும்​போது ஓவியமாவ​தைப்​ போல் உள்ளடக்கம் அழகியலோடு இ​ணைந்து உணர்​வைத் ​தொடும் போது கவி​தையாகிறது"
ப.தமிழ்ச்​செல்வன் (சென்​னைப் பல்க​லைக்கழக ஆய்வாளர் ப.தமிழ்ச்​செல்வன்)
 
  
 


கவிதைக்கு சூத்திரங்கள் இல்லையென்பதால், கைநாட்டும் கவிதையாகும்.

இந்த கவிதை குறித்த விளக்கம் எப்போது வருகிறது. தனது கவிதை நூலின் முகவுரையில் எழுதுகிறார்கள் அல்லது மற்ற கவிஞரின் கவிதை நூலுக்கு முகவுரை எழுதும் வாய்ப்பு கிடைக்கும் போது எழுதுகிறார்கள்.


மற்ற கவிஞரின் கவிதை நூலுக்கு முகவுரை எழுதும் போது, அதில் உள்ள கவிதைகளையும் கவிஞரையும் பாராட்டியே எழுத வேண்டியுள்ளது. உண்மையில் படித்து பிடித்து தான் எழுதுகிறார்களா அல்லது படிக்காமலேயே சம்பிதாயமாக எழுதுகிறார்களா என தெரியவில்லை. சில கவிதை தொகுப்புகளை படித்த போது, அதில் பிரபல கவிஞர்கள் எழுதியிருக்கும் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளது போல அந்த கவிதைகள் இருப்பதில்லை. கவிதைகளை படிக்காமலேயே எழுதிவிடுகிறார்கள் என தோன்றுகிறது.
பாராட்டி எழுத வேண்டியகட்டாயத்தில்இருக்கிறார்கள்.பிடிக்கவில்லையென்றோ அல்லது குறைகள் இருக்கிறது திருத்தங்கள் செய்யப்படவேண்டும் என்றோ கூட குறிப்பிடுவதில்லை



சில இலக்கிய கூட்டங்களிலும், புத்தக அறிமுக விழாக்களிலும், விமர்சன கூட்டங்களிலும் பேச்சாளர்கள் அந்த புத்தகங்களில் எழுதியிருப்பதை பற்றி பேசாமல் பொதுவாக பேசுவதும், தன்னுடைய பெருமைகளையும், அந்த விழாவுக்கு சம்மந்தமில்லாதவர்களை பற்றியும் பேசுவதாக அதிகமாக  இருக்கிறது.

நானும் கவிதை எழுதுவது என தீர்மானித்துவிட்டேன். எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேட்டால், இதுவரை எழுதியவர்களுக்கு என்ன தகுதி இருந்தது என்ற கேள்வி வரும்
இந்த கவிதை குறித்த விளக்கம் எப்போது வருகிறது. தனது கவிதை நூலின் முகவுரையில் எழுதுகிறார்கள் அல்லது மற்ற கவிஞரின் கவிதை நூலுக்கு முகவுரை எழுதும் வாய்ப்பு கிடைக்கும் போது எழுதுகிறார்கள்


30 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வாசக சாலை முழுவதும் படித்துள்ளேன்.(பொது நூலகம், மாநகராட்சி பள்ளி, ஆற்காடு சாலை, சென்னை)
எல்லா வகையான புத்தகங்களும், கதை, கட்டுரை, கவிதை, அரசியல், ஆண்மீகம், எல்லாம் எல்லாம் கிட்டதட்ட 500 புத்தகங்களுக்கு மேல் படித்திருப்பேன். இதை தவிர கன்னிமாரா நூலகத்திலும், பழைய வண்ணாரபேட்டையில் இருந்த மாநகராட்சி நூலகத்திலும் பல புத்தகங்கள் படித்துள்ளேன்.
இதை தவிர, வார இதழ்கள், மாத இதழ்கள், தினசரிகளில் வந்திருந்த கதை, கட்டுரை கவிதை ஏராளமானவை படித்துள்ளேன். மேலும் தனி இதழ்களாக வெளிவந்த (பொதுவாக யாரும் படிக்கவிரும்பாத இலக்கிய இதழ்கள்) கவிதைகளையும் படித்துள்ளேன். கடற்கரை கவியரங்களில் வாசிக்கப்பட்ட கவிதைகளையும், இலக்கிய கூட்டங்களில் வாசிக்கப்பட்ட கவிதைகளையும் கேட்டுள்ளேன்.
சமிப காலமாக இணையத்திலும், முக நூலிலும் பார்வைக்கு வரும் கவிதைகளையும், கதைகளையும் வாசித்து கொண்டிருக்கிறேன்.
இவைகள் அனைத்தையும் ஒரு வரையரைக்குள்  கொண்டு வர முடியவில்லை. எழுத்துக்களை ஒரு சூத்திரத்தில் அடக்க இயலவில்லை. அப்படி சூத்திரத்தில் அடக்கிவிட்டால், அதை பாட திட்டமாக அறித்து விடலாம். பின்பு தொழிற்சாலை பொருட்களை போல கவிதைகளையும் தயாரித்து, எழுதிய தேதி காலவதியாகும் தேதிகளையும் குறிப்பிட்டுவிடலாம்.
சோதனை கவிதைகள் - எழுதுவதற்க்கு முயற்சி செய்யும் போது எழுதப்படுபவையும், எழுதிய பிறகு வாசகனுக்கு சோதனையாக அமைவதும்.
வெளிவராத கவிதைகள் - வார்த்தைகள் வசபடாமல் எண்ணங்களாகவே தோன்றி மறைவது
வெளிவந்த கவிதைகள் - நிறை குறையுடன் வெளிவந்து , யாராலும் கவனிக்கப்படாமல் அனாதையாய் இருப்பது
சிறப்பு கவிதைகள் - குறையுடன் இருப்பதை சிறப்புற கவனித்து அதற்க்கும் அங்கீகாரம் செய்யப்படும் கவிதைகள்
விளம்பர கவிதைகள் - ஏழுத தெரியாவிட்டாலும், வேறு துறையில் சிறப்புடன் இருப்பவர் மற்றும் அதிகார வர்கத்தினரால் எழுதப்பட்டு செயற்க்கையாக சிறப்பிக்கப்படுபவர்)
தத்துவ கவிதைகள் - சுமாராக எழுத தெரிந்தவர், பிறரை எழுத சொல்லி தனது பெயரில் வெளியிடுபவர்
ஜனரஞ்சகமான கவிதைகள் - இன்றைய திரைப்பட பாடல்கள்
                                                      
கவிதைகள் ஆழ்மனதில் படிவதில்லை. அப்படி படிந்தால் அது என்றைக்கும் நினைவில் இருக்கும்.
எப்போழுதோ படித்த திருக்குறள் நினைவுக்கு வருகிறது. ஆத்தி சுவடி நினைவுக்கு வருகிறது. வழிபாட்டு பாடல்கள் சில நினைவுக்கு வருகிறது.
திரைபட கவிதைகள் எப்படி நினைவுக்கு வருகிறது. கவிதையின் சில வரிகளாவது நினைவுக்கு வருகிறது. எழுதியவரின் பெயரும் நினைவுக்கு வருகிறது.

ஆனால், இப்போது படிக்கும் கவிதைகள் நினைவுக்கு வருகிறதா ? கவிதையை சொன்னால் கவிஞர் நினைவுக்கு வருவதில்லை. கவிஞர் பெயரை சொன்னால் அவர் எழுதிய கவிதை நினைவுக்கு வருவதில்லை. ஏன். படிக்கும் போது சுவையாய் இருக்கிறது. ஆனால், ஆழ்மனதில் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை.

ஏன் இந்த வேறுபாடு. மெய் எழுத்துக்கள் இருந்தாலும் உயிர்  எழுத்துகள் இல்லாம் வார்த்தைகள் கோர்வையாய் இருபதுதான் காரணமோ?
கவிஞன் எழுதிவிட்டான். யாருக்காக எழுதினான். அவண் படித்தானா. அவனுக்கு புரிந்த்தா இதை அறிய எழுத்தாளன் முயற்ச்சி செய்வதேயில்லை.
படித்தவனுக்கு மட்டுமே புரியும் படி எழுதினால், பாமரன் வசிக்கும் இடத்தில் பாடகூடாது. படித்தவனின் சபை வேறு. அங்கு எழுத வேண்டும்.பாட வேண்டும். ஆனந்த கூத்தாட வேண்டும்.
பாமரனுக்கு எழுதினால் அவனுக்கு புரியும் படி எழுத வேண்டும். நிலம் சார்ந்த மொழி எழுத வேண்டும்.
வாசகன், எழுத்தாளனின் கண்ணோட்டத்திலேயே புரிந்து கொள்வான் என்று எதிர் பார்க்க முடியாது. புரிந்து கொண்டால் சிறப்பு. வேறு பார்வையில் புதிய கோணத்தில் புரிந்து கொண்டால் கவிஞனுக்கு இன்னும் சிறப்பு. புரியாமல் போணால் எழுதியதில் என்ன பயன்.
கவிதையை பொதுவெளியில் பிரசவித்துவிட்டால், அனைத்து வாசகனும் அதற்கு அப்பன். அவண் அதை எப்படி வேண்டுமானாலும் பாராட்டலாம், சீராட்டலாம். விமர்சிக்கலாம்.
விமர்சனத்திற்க்கு விளக்கம் ஏற்க முடியாவிட்டாலும், விளக்கம் கொடுக்கமுடியாவிட்டாலும் விமர்சகனை ஏளனம் செய்வது, தனிமனித ஒழுக்கம் கற்றுகொடுப்பது தேவையற்றது. விமர்சகனை வேட்டையாடி விரட்டகூடாது.
ஒவ்வொரு கவிதைக்கும் அதனுடன் விளக்கவுரை, பொழிவுரை, கருத்துரை, கோனர் உரை தர வேண்டும் என வாசகன் கேட்பதில்லை. இதையெல்லாம் தந்து தான் அவனது கவிதையை சந்தைபடுத்த வேண்டுமெனில் அவண் எழுதாமலேயே இருந்து விடலாம்.  ஆனால் விமர்சனத்தை ஏற்கும் மன பக்குவம் வேண்டும்.
கவிதை விமர்சகனுக்கு சொந்தமானது. கவிஞனுக்கு சொந்தமானது

முகநூலில் அறிமுகமான நண்பர் திரு.செல்வராஜ் ஜெகதீசன் அவர்கள் கவிதையின் வழிதடங்கள் என்ற தொடர் மூலம் பல நல்ல கவிதைகளை வாசிக்க வாய்ப்பை ஏற்படுத்தினார். அதன் மூலம் கவிஞர்களையும் கவிதைகளையும் அறிய முடிந்த்து. அவருக்கு எனது நன்றிகள்
 


 
 

 
 

  















Thursday, 26 September 2013

சட்டங்கள்

சட்டம்::

கீழே இருப்பது முந்தைய பதிவு.இன்றைய நிலைபடி  இந்த அவசர சட்டம் வாபஸ் பெறபடும் என தெரிகிறது.

சட்டம் இயற்றப்பட்டாலும், இந்திய அரசியலில் பெரிய மாற்றம் ஏற்பட்டுவிடாது.
குற்றம் நிருபீக்கப்பட்டு தண்டனை பெற்றாலும் அரசியல்வாதிகள், அவர்கள் தேர்தலில் நிற்காமல் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மகன்,மருமகள், மகள், மருமகன், மனைவி, சின்ன வீடு இப்படி யாரையாவது நிறுத்தி தேர்தலில் நின்று ஜெயித்து பதவிக்கு வந்து செய்ய வேண்டிய அட்டுளியங்களை செய்துகொண்டிருப்பார்கள்.

இதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது. இதையாவது செய்ய முடிந்ததே என திருப்திபடவேண்டியது தான்.

குறை சொல்ல முடியாத அளவுக்கு எந்த சட்டமும் இயற்ற முடியாது என தோன்றுகிறது
அண்மையில் இந்திய உச்ச நீதி மன்றம், குற்றவியல் தண்டனை சட்டப்படி 2 ஆண்டு அல்லது அதற்கு மேற்பட்ட காலம் சிறை தண்டனை பெற்றவர்களது சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை உடனடியாக பறிக்க வேண்டும் என தீர்பளித்தது. அவர்கள் மீண்டும் தேர்தலில் நிற்கவும் தடை விதித்த்து.

ஆனால், அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த தீர்ப்பை எதிர்த்தன. இந்த விசயத்தில் மட்டும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரே கருத்தை கொண்டுள்ளன.
இதை தடுப்பதற்க்காக ஒரு அவசர சட்டத்தை அமுல் படுத்தவும் தயாராய் உள்ளது. எல்லா அரசியல் கட்சிகளிலும் குற்றம் சாட்டப்பட்டவர்களும், தண்டனை பெற்று மேல் முறையீடு செய்த நிலையிலும் உள்ளவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இதற்கு அரசியல் கட்சிகள் கூறும் காரணங்கள் சரியானது போல தோன்றுகிறது.
1. கீழ் நீதிமன்றத்தில் தண்டனை பெற்றாலும், மேல் முறையீடு செய்வதன் மூலம் உயர்நீதி மன்றத்திலும், உச்ச நீதி மன்றத்திலும் தண்டனை ரத்து செய்யப்படவோ அல்லது குறைக்கப்படவோ சந்தர்பம் இருப்பதால், இந்த தீர்ப்பு சரியானது அல்ல என வாதாடுகிறார்கள்.
அதற்கு பதிலாக, கீழ்நீதிமன்றத்தில் தண்டனை பெற்றவர்களது பதவியை பறிப்பதை விட, அவர்கள் பதவியில் இருக்கலாம் மற்றும் சட்டமன்ற, பாராளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்கலாம் ஆனால் அங்கு அவர்களுக்கு ஒட்டளிக்கும் உரிமையை நிறுத்தி வைக்கலாம் மற்றும் சம்பளத்தை நிறுத்தி வைக்கலாம் என வாதிடுகிறார்கள்.
இது சரியான வாதமாக தோன்றுகிறது. மேலும், ஒருவரை தேர்தலில் போட்டியிடாமல் தடுப்பதற்க்காக பொய் வழக்கு பதிவு செய்து, சாட்சியங்களை ஏற்படுத்தி, நீதியை விலைக்கு வாங்கி தண்டனை அறிவிக்க செய்தால் ஒருவர் நிரந்தரமாக தேர்தலில் போட்டியிடும் உரிமையை இழந்து விடுவார். குறிப்பாக பாலியல் வழக்குகள் பதிவு செய்வது இன்றைய நிலையில் அதிகரித்து வருகிறது. இதன் மூலம் மிக எளிதாக  மக்களிடையே உணர்சிகளை தூண்டிவிட்டு, நீதிமன்றங்களுக்கு நெருக்கடி கொடுத்து, தண்டனை வாங்கி தர முடியும்.
ஆனால், கீழ் நீதிமன்றங்களில் மேல் முறையீடு செய்து தீர்ப்பு வர 20-30 வருடங்கள் ஆகும் நிலையில், குற்றவாளிகள் ஆட்சியில் இருப்பதும், அவர்களுக்கு நாம் அடிபணிவதும் கேவலமாக தோன்றுகிறது.
அரசியல்வாதிகள் பொதுவாக குற்றவாளிகள் என்ற அபிப்பிராயம் மக்களிடையே உள்ளது. அதற்கு காரணம் ஊடகங்கள் தொலைகாட்சிகள் செய்யும் பிரசாரமமே காரணம். ஊடகங்கள் நினைத்தால் ஒருவனை குற்றவாளி கூண்டில் நிறுத்தாமலேயே , அவனுக்கு தன்டனை வழங்ககூடிய நிலையில் உள்ளன. ஊடகங்கள் பரப்பும் செய்திகளின் அடிப்படையில் தான் நாம் அபிப்பிராயத்தை உருவாக்கி கொள்கிறோம். ஊடகங்கள் சொல்வதெல்லாம் உண்மையாய் இருக்க வேண்டிய அவசியமில்லை.

எனவே நீதிமன்ற தீர்பையும், அரசியல்வாதிகள் எழுப்பும் வாதங்களையும் கருத்தில் கொண்டு, யாருக்கும் பாதிப்பு வராமலும் அதே சமயம் குற்றவாளிகள் நம்மை ஆட்சி செய்யாமலும் இருக்கும் படி சட்டம் இயற்ற வேண்டும்.

எந்த சட்டம் இயற்றினாலும், ஒரு சாராருக்கு சாதகமாகவும் மறு சாராருக்கு பாதகமாகவும் முடிகிறது.
குறை சொல்ல முடியாத அளவுக்கு எந்த சட்டமும் இயற்ற முடியாது என தோன்றுகிறது.

லோக்பால் சட்டத்தை அவசரமாக சட்டமாக  இயற்ற வேண்டும் என குரல் கொடுத்தபோது, சட்டம் பாரளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு இயற்ற முடியுமே தவிர , அவசர சட்டமாக இயற்ற முடியாது என கூறிய அரசு இன்று வரை அந்த சட்டத்தை இயற்றவில்லை. ஆனால், அவர்களுக்கு பாதகமான தீர்ப்பு வந்தவுடன் , அவசர சட்டம் இயற்றுகிறது.

நமது ஜனநாயக ஆட்சிமுறை மீதே நம்பிக்கையின்மையை ஏற்படுத்துகிறது.

Sunday, 15 September 2013

கற்பழிப்பு குற்றமும் தண்டணையும்



கற்பழிப்பு குற்றமும் தண்டனையும்::
டெல்லி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது குற்றம் நிருபிக்கப்பட்டு அவர்கள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை கொடுக்கப்பட்டவுடன் மகிழ்சியடைந்து இனிப்பு கொடுத்து கொண்டாடி மக்கள் நிகழ்சியை முடித்து வைத்தனர்.
ஊடகங்கள், நீதிமன்ற தீர்ப்பு நாளை நேரடி ஒளிபரப்பு செய்வதாக கூறி பின்பு சில பல விவாதங்களுடன் தங்களது கடமையை செய்து முடித்தது. அவர்களுக்கு இப்போது நரேந்திர மோதி விசயம் இருப்பதால் இதை இனிமேல் பேசமாட்டார்கள்.
ஒருசிலர் வித்தியாசமாக சொல்லவேண்டும் என்பதற்காக தூக்கு தண்டனை தேவையா என கேட்டுவிட்டு ஒதுங்கிவிட்டார்கள். இந்த வழக்கு விசயத்தில் அது தேவையில்லை என கூற தைரியம் வேண்டும். அப்படி கூறினால் அவனும் இந்த குற்றத்திற்கு உடந்தை என்பது போல கருந்து வெளியிட்டு தங்களது நமைச்சலை தீர்த்து கொள்வார்கள்.
வேறுசிலர் இந்த வழக்கை இவ்வளவு சீக்கிரம் விசாரித்து தீர்ப்பு வழங்கியதை போல மற்ற வழக்குகள் ஏன் விசாரிக்கப்படவில்லை என்ற கேள்வியையும், டெல்லியில் நடந்தால் தான் முன்னுரிமையா என்றும் எங்களது மாநிலத்தில் நடந்தவைகளை ஏன் இதுபோல் விசாரிக்கவில்லை என்று அரசியல்வாதிகள் போல் கருத்து தெரிவித்துள்ளனர்.
கற்பழிப்பு நிச்சியமாக தவறான செயல். அது தண்டிக்கப்பட வேண்டிய செயல். இதில் கருத்து வேறுபாடு இருக்கமுடியாது. ஆனால் இந்த விசயத்தில் எல்லாம் சரியாக நடந்திருக்கிறதா என்பது தான் கேள்வி.

கற்பழிப்பு என்றால் என்ன. முதலில் கற்பு என்றால் என்ன?. பெண்ணின் சம்மதம் இல்லாமல் ஆண் அவளிடம் உடல் உறவு கொண்டால் அது கற்பழிப்பு என்று பொருள்படுகிறது. பெண் சம்மதித்து உடல் உறவு கொண்டால் அது கற்பழிப்பு ஆகாது. செய்கை ஒன்று தான். அதில் பெண்ணின் சம்மதத்தை பொறுத்து பொருள் மாறுபடுகிறது. கணவன் மனைவி தினமும் உறவு கொண்டாலும், மனைவி மறுக்கும் போது கணவன் கட்டாயமாக உறவு கொண்டால் அதையும் கற்பழிப்பு என்று தான் சட்டம் சொல்கிறது.. அதாவது பெண்ணின் சம்மதம் இல்லாமலும், அல்லது சடங்குகள் சம்பிராதயங்கள் இல்லாமலும் ஆண் பெண் உடல் உறவு கொண்டாலும் கற்பு போய்விட்டது என பொருள் கொள்ளப்படுகிறது. மொத்தத்தில் உடல் உறவுதான்  கற்பு என்று பொருள் படுகிறது  அதாவது, பெண் மட்டுமே உறவை தீர்மானிக்கும் உரிமையை பெறுகிறாள்.
பெண் பலவந்தபடுத்தி ஆணை இணங்க செய்தால் அது கற்பழிப்பு குற்றத்தில் வருவதில்லை. ஆண் அதை வெளியில் சொல்வதில்லை. மக்கள் என்ன சொல்கிறார்கள் நீ விரும்பி உடல் உறவு கொண்டாலும் அல்லது பெண் உன்னை பலவந்தம் செய்து உறவு கொண்டாலும் உனக்கு இன்பம் தானே என்று சமாதானம் சொல்கிறார்கள். பெண்ணுக்கு உறவு கொள்வதற்க்கு விருப்பம் இல்லாத போது ஆண் உறவு கொள்ளகூடாது என்றால் பெண்ணும் அப்படி தானே.  ஆண் உறவு கொள்ள மறுத்தாலும், பெண்கள் அதையும் குறை கூறி ஆணை அவமானப்படுத்துகிறார்கள். இன்பம் அடைவது இருவரும் தான். துன்பம் அடைவதும் தான் இருவரும் தான். ஆனால், ஆண் மட்டும் தான் இன்பம் அடைகிறான் என்பது போல சித்தரிக்கப்படுகிறது. இதை ஆண் வர்கமும் ஒப்புகொள்கிறது. நியாயம் இருவருக்கும் சமமானதாக இருக்கவேண்டும். இருவரது சம்மதத்துடன் நடைபெற வேண்டும்.
கற்பழிப்பு என்ற நிகழ்சியில் பெண்ணின் சம்மதம் இல்லாமல் உடல் உறவு நடைபெறுவதால் அது தண்டனைக்குரிய செயலாக மாறுகிறது. அதிலும் பலர் சேர்ந்து வன்முறையுடன் உறவு கொள்வது மிகவும் தவறான செயல் .நிச்சியமாக தண்டிக்கப்பட வேண்டிய குற்றம்.

6 பேர் சேர்ந்து செய்த கற்பழிப்பு. ஒருவன் சிறுவன். 3 ஆண்டு தண்டனையுடன் தப்பித்துவிட்டான். ஒருவன் தூக்குமாட்டிகொண்டு செத்துவிட்டான். மற்ற 4 பேருக்கு தூக்கு தண்டனை.இந்த தண்டனை கற்பழிப்பு குற்றத்திற்க்காக மட்டுமல்ல. உயிரிழப்புக்கும் சேர்த்துதான். இதில் உயிரிழப்பு ஏற்படவில்லை என்றால், இந்த தண்டனை கிடைத்திருக்க வாய்பில்லை.
18 வயது நிரம்பாதவன் என்பதற்காக குறைந்தபட்ச தண்டனை சரிதனா. இவன் உடல் உறவு மட்டும் கொள்லவில்லை. உயிர் பிரிவதற்கான காரியத்தையும் செய்துள்ளான். இரண்டு தவறுகளையும் செய்த பின்பும்  வயதின் காரணமாக கடும் தண்டனையிலிருந்து தப்பி விட்டான். சிறுவனுக்கு காமம் செய்ய தெரிகிறது, கொடுரமான முறையில் செயல்களை செய்ய தெரிகிறது . ஆனால் சிறுவன், செயலின் தன்மையை அறியாமல் செய்துவிட்டான் என்ற நியாயத்தின் கீழ் அவண் தண்டனையிலிருந்து தப்பிவிட்டான்.
நியாயம் வயதை பொறுத்த அல்லது குற்றத்தை பொறுத்த?. வயதை பொறுத்து என்றால் ஒருவன் 18 வயது அடையும் வரை இது போன்ற எத்தனை கற்பழிப்பு குற்றங்கள் செய்தாலும் அவண் தண்டனையிலிருந்து தப்பிவிடலாம். இது எப்படி நியாயம். இந்த சட்டம் உலகம் முழுவதும் இருக்கிறது.
18 வயதுக்கு உட்பட்டவன் எந்த குற்றம் செய்தாலும் இப்படி தான் தண்டனையளிக்கப்படுகிறது. கொலை குற்றத்திற்க்கும் இது தான் தண்டனை.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெண்ணுக்கு 18 வயதுக்கு உட்பட்ட சகோதரன் இருந்து, குற்றம் செய்தவர்களை பழி வாங்குவதற்க்கு  அவர்களை கொலை செய்தால், சட்டம் என்ன செய்யும். அவனையும் சிறுவன் என்று கருதி அதிகபட்ச தண்டனையாக 3 ஆண்டு சிறைதண்டனை தானே தரும். ஏன் இவ்வளவு சிரமப்பட்டு வழக்கை நடத்தி  தண்டனை வாங்கி தரவேண்டும். இந்த தண்டனை நிறைவேற்றப்பட பல ஆண்டுகள் ஆகும். தண்டனை குறைக்கப்படவும் வாய்புண்டு. இந்த குற்றத்திற்க்கு மரண தண்டனை தான் சரியானது என்றால், அதை பாதிக்கப்பட்டவர்கள் செய்ய என்ன தடை. அந்த சுதந்திரத்தை அவர்களுக்கு வழங்க என்ன பிரச்சனை.
இந்த வயது வரம்பை வைத்து தான் தண்டனை என்றால், பழிவாங்க நேரடியாக கொலை செய்பவர்களும்,  கூலிபடையை வைத்து கொலை செய்பவர்கள் ஏன் 18 வயதுக்கு உட்பட்டவர்களை வைத்து கொலை செய்யமாட்டார்கள். 3 ஆண்டுகளுக்கு பிறகு அவண் வசதியான வாழ்க்கை வாழலாம்.
இப்படி அனுமதிக்கபட்டால், சமுதாயத்தில் அமைதி இருக்காது.
எனவே , இந்த பாலியல் குற்றத்திற்க்கு அவனுக்கு வழங்கப்பட்ட தண்டனை தவறானது. மரண தண்டனை வழங்கவில்லையென்றாலும் ,ஆயுள் தண்டனையாவது வழங்கியிருக்கலாம்.
சட்டப்படி தான் சிறுவனுக்கு தண்டணை வழங்கபட்டது சரியென வாதாடினால், மற்ற 4 பேருக்கு வழங்கப்பட்ட தண்டணை சரியானதா.?
நமது சட்டத்தில் கற்பழிப்பு குற்றத்திற்க்கு மரண தண்டனை கிடையாது. எந்த குற்றத்திற்க்கும் மரண தண்டனை கூடாது என்ற விவாதமும் இருக்கிறது.
இந்த 4 பேர் கற்பழிப்பு குற்றம் மட்டுமே செய்துள்ளார்கள். சட்ட்த்தின் படி இவர்களுக்கு மரண தண்டனை பொருந்தாது. எது அதிக பட்ச தண்டனையென்று நிர்ணயிக்கபட்டுள்ளதோ அதை தான் வழங்கியிருக்க வேண்டும்.
பழிக்கு பழி உயிருக்கு உயிர் பழிவாங்கபடும் என்பது என்ன நியாயம். இது சட்டமா. காட்டுமிராண்டிதனமா ?
மேலும், ஒரு உயிரிழப்புக்கு, 4 உயிரை பறிப்பது சரியா.? இது மறுபரிசீலனை செய்ய வேண்டிய தீர்ப்பு.
ஏன் இவ்வளவு அவசரமாக வழக்கு முடிக்கப்பட்டது. தொலைகாட்சி மற்றும் ஊடகங்கள் இதை பெரிது படுத்தின. அந்த சமயத்தில் அவர்களுக்கு ஒளிபரப்புவதற்க்கு வேறு செய்திகள் இல்லை. மக்களின் குறிப்பாக இளைய தலைமுறையின் உண்ர்சிகள் தூண்டிவிடப்பட்டது. அரசுக்கு நிர்பந்தம் கொடுக்கப்பட்டது. புதிய சட்டம் இயற்றவும் நெருக்கடி கொடுக்கப்பட்டது. மக்களை சமாதனபடுத்த வேண்டிய நிலையில் அரசும் இதை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
இதே காரணத்திற்காக தான், நீதீ மன்றமும் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த நீதிமன்றத்திற்க்கு தெரியும். எப்படியும் மேல் முறையீடு செய்யப்படும். மற்ற நீதிமன்றங்கள் இறுதி தீர்ப்பு கொடுக்கட்டும். நாம் மக்களின் கோபத்திற்க்கு ஆளாகமல், நமது இடத்திலிருந்து இந்த வழக்கு விலகி செல்லட்டும் என்ற நிலைபாட்டின் காரணமாகவே இந்த நீதிமன்றம் இத்தகைய தீர்ப்பை வழங்கியுள்ளது.இதை தான் குற்றவாளிகளின் சார்பாக வாதாடிய வழக்கறிங்கரும் கூறியுள்ளார். இதற்காக அவர் விமர்சனத்திற்க்கு ஆளாகியுள்ளார்.
அப்துல் கசாப் வழக்கில் எத்தனை ஆண்டுகள் விசாரிக்கப்பட்ட்து. அவண் செய்தது ஒரு கொலையா இல்லையே. பல கொலைகள் செய்தான். அவனுக்கு எல்லா வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு அவனுக்காக வாதட வாய்பும் அளிக்கப்பட்ட்து.
பல கொலைகள் செய்தவனுக்கு ஒரு மரண தண்டனை. ஆனால் ஒரு கொலைக்கு 4 பேருக்கு மரண தண்டனை. அப்துல் கசாப்பை எத்தனை முறை தூக்கிலிடவேண்டும். மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் யோசித்து பாருங்கள்.
இதுதான் நியாயமா. இதுதான் தர்மமா. இதற்கு சட்டமும் நீதிமன்றங்களும் தேவையா.
பின்பு என்ன தண்டனை வழங்கியிருக்க வேண்டும். ஆயுள் தண்டனை வழங்கியிருக்கவேண்டும். ஆயுள் தண்டனையென்றால் சட்டம் சொல்லும் 14 வருட தண்டனையல்ல. அவண் உயிரோடு இருக்குவரை சிறையில் இருக்கவேண்டும். மரண தண்டனை உடனடியாக நிறைவேற்றினாலும் அத்துடன் கதை முடிந்துவிடுகிறது. அப்படியில்லாமல் செய்த குற்றத்திற்க்காக வாழ்நாள் முழுவதும் வருந்த வேண்டும். எந்த இன்பத்திற்காக இந்த குற்றத்தை செய்தானோ அந்த இன்பம் வாழ்நாள் முழுவதும் கிடைக்காமல், ஏங்கி ஏங்கி வருத்தப்பட்டு உயிரிழக்கவேண்டும்.
இந்த வழக்கில் எக்காரணம் கொண்டும் மரண தண்டனை கூடாது.
மரண தண்டனைதான் சரியானது என்று சொல்லும் மக்களிடம் நான் கேட்கும் இரண்டு கேள்வி.
1)இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள் அரசியல்வாதியின் மகனாகவோ அல்லது பெரிய பணகாரரின் மகனாகவோ இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்.
நண்பன் என்கிற காதலன் சாட்சியம் அளித்திருக்கமாட்டான். விலை பேசப்பட்டிருப்பான். நீதியும் விலை பேசபட்டிருக்கும். அப்படியே விலைக்கு அவர்கள் வரவில்லையென்றால், சாட்சியத்திற்க்கு விபத்து ஏற்பட்டு உயிர் இழந்திருப்பார். நீதி உறங்கியிருக்கும்.
2) விதி வசத்தால்,விதி வசத்தால் (அப்படி யாருக்கும் நேரவேண்டாம்) தூக்கு தண்டனையை ஆதரிக்கும் ஆண்/பெண்ணின் தந்தையோ, கணவனோ, மகனோ, சகோதரணோ இந்த மாதிரி குற்றத்தை செய்திருந்தால், மரண தண்டனை கொடுங்கள் என்று கூறுவார்களா ? மாட்டார்கள். என் உறவு இது போன்ற குற்றங்களை செய்யவில்லை என்பார்கள். செய்ய மாட்டான் என்பார்கள்.அவனது கூட்டாளிகள் சிக்க வைத்து விட்டார்கள் என்பார்கள். சிறந்த வக்கீலை பார்த்து வாதாடுவார்கள். சாட்சியிடம் கெஞ்சுவார்கள். மிரட்டுவார்கள். தண்டனையை கருனையுடன் பரிசீலித்து குறைந்தபட்ச தண்டணை வழங்க வேண்டுவார்கள்.காரணம் அது அவர்களது உறவு.

இப்போது தண்டனை பெற்றவர்களின் உறவுகளுக்கும் அப்படிதான் இருக்கும். அவர்களும் குற்றம் செய்தவர்கள் உயிருடன் இருக்கவேண்டும் என்று தான் விரும்புவார்கள்.
எனவே யாராக இருந்தாலும் இந்த இரட்டை வேடம் போடதான் செய்வார்கள். எனவே மரண தண்டனை அவசியமா என்று எல்லோரும் யோசிக்க வேண்டும். எல்லோரும் உணர்ச்சி வேகத்தில் மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று தான் கூறுவோம். சற்று யோசித்து முடிவுசெய்தால் உங்கள் எண்ணங்கள் மாறக்கூடும்.

இறுதியாக, உடன் இருந்த நண்பனின்/காதலனின் இன்றைய மனநிலை என்னாவாய்யிருக்கும். அவனால் இந்த நிகழ்சியை மறக்கமுடியாது. காலபோக்கில் அவண் திருமணம் செய்துகொண்டு, மணைவியுடன் உடல் உறவு கொள்ளும் போது இந்த நிகழ்ச்கி நினைவுக்கு வரும். நாம் இயற்கையான உறவு கொள்கிறோமா அல்லது பாலியல் பலாத்காரம் செய்கிறோமா என மனஉளைச்சல் ஏற்படும்.
அவனுக்கு ஆறுதல் சொல்லி அறிவுரை கூறி நல்ல மனநிலைக்கு திரும்ப அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. நீதிமன்றமும் எந்த பரிந்துரையும் செய்யவில்லை.

இந்த நிகழ்சி நடந்த பின்பும்  பல கற்பழிப்பு நிகழ்சிகள் இந்தியா முழுவதும் நடந்துள்ளது. இனிமேலும் நடக்கும்.
ஆண்களே திருந்துங்கள் இல்லையெனில் திருத்தப்படுவீர்கள். உங்களுக்கு காமம்  தேவைப்பட்டால், விலைமாந்தரிடம் செல்லுங்கள். அப்பாவியான பெண்களை துன்புறுத்தாதீர்கள்
பாதிக்கப்பட்ட பெண் ஆன்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன்.
உங்கள் கருத்துக்களை அறிந்துகொண்ட பின்பு தேவைப்பட்டால் மீண்டும் எனது கருத்துகளை கூறுகிறேன்
.









Saturday, 14 September 2013

பிள்ளையார்


கடவுள் வழிபாடு::


நான் பிள்ளையார் சதுர்த்தி அன்று அவரைபபற்றி ஒரு பதிவும் பாட்டும் போட்டேன். கடவுள் என்றால் என்ன என்பதும் ஏன் இப்படி என்பதும் தான் கேள்வியாக்கினேன்.

என் மீது அக்கறை கொண்ட நண்பர்கள் கடவுளை குறித்து இப்படியெல்லாம் பேச வேண்டாம், எழுத வேண்டாம் என்றும் கடவுள் மீது நம்பிக்கை வைக்கும்படியும், மேலும் கடவுள் தண்டிப்பார் என்றும் அறிவுரை கூறினர். அவர்கள் அனைவருக்கும் நன்றி.

கடவுளை நான் நிந்திக்கவில்லை. கடவுளை பற்றி சிந்திக்கிறேன். ஆத்திகன் என்று சொல்லும் நபர்களைவிட , நாத்திகன் என்று குறிப்பிடபடும் நான் உயர்ந்தவன்.

ஆத்திகன் என்று சொல்லிகொள்பவர்கள், விஷேச தினங்களிலும் மற்றும் தங்களுக்கு ஏதேனும் வேண்டும் என்கிற போதும் அல்லது தங்களுக்கு நேரும் துன்பங்களின் போதும் மட்டுமே கடவுளை நினைக்கிறார்கள்.

மேலும், எனது துனபத்தை நீக்கினால், அல்லது எனக்கு இதை அதை கிடைக்க செய்தால்  நான் உனக்காக இதை செய்கிறேன் அதை செய்கிறேன் என்று பேரம் பேசுகிறார்கள். மொட்டை அடித்து கொள்கிறேன் என்று பிராத்தனை செய்கிறார்கள். மயிர் வளர்ந்து விடும் என்பதால் அதை இழக்க தயாராக இருக்கிறார்கள். ஏன் கையை காலை வெட்டிகொள்கிறேன் என்று வேண்டிகொள்வது தானே அல்லது இருக்கும் சொத்தில் பாதியை தானம் செய்கிறேன் என்று வேண்டிகொள்வது தானே.

நான் முன்பு எல்லோரையும் போல கோவிலுக்கு போய் கொண்டிருந்தேன். பின்பு சிந்தித்து பார்க்கும் போது, கடவுளும் , புஜை முறைகளும் மக்களை நல்வழிபடுத்துவதற்க்காகவும் , மக்கள் பிறருக்கு துன்பம் இழைக்காமல் இருப்பதற்க்காகவும், பயமுறுத்தி  ஏற்படுத்தப்பட்ட முறை என்று அறிந்து கொண்டேன். பிறகு ஒரு சாரர் அதை தங்களுக்கான பிழைப்பாக வைத்துகொண்டு அநியாயம் செய்வதை உணர்ந்துகொண்டேன். கடவுளை வணங்குவதற்க்கு கூட பல நிபந்தனைகள், முன் உரிமைகள் மற்றும் கடவுளின் இடைதரகர்களாக இருப்பவர்கள் செய்யும் அடாவடி தனங்கள்
இவற்றை உணர்ந்த பிறகு கடவுளின் மேல் நம்பிக்கையும் பயமும் போய்விட்டது.

அதனால் தான் கடவுளை பற்றி என்ன சொல்லியிருக்கிறது என்று அறிந்து கொண்டு, சிந்தித்து பல கேள்விகளை எழுப்பி கேலி செய்கிறேன்.இதனால் கடவுளை பற்றி அதிகம் படிக்கிறேன். தினமும் கடவுளை நினைக்கிறேன்.

நான் நல்லவன். யாருக்கும் கெடுதல் செய்யவில்லை. எதையும் கடவுளிடம் கேட்பதில்லை. பேரம் பேசுவதில்லை. எப்படியிருப்பினும் நான் கடவுளை பற்றி நினைப்பதால், அவர் எனக்கு நல்லது தான் செய்வார்.(கடவுள் என்று ஒருவர் இருந்தால்)

நான் தினமும் பலமுறை சொல்வது: அப்பனே முருகா ஷண்முகா, ஞ்னா பண்டிதா வேலாயுதா கந்தா கடம்பா கதிர்வேலா என்னை மட்டும் காப்பாத்து அல்லது என்னை என் பொண்டாட்டியிடமிருந்த காப்பாத்து என்று சொல்லிகொண்டேயிருப்பேன்.

எனவே ஆத்திகனை விட நாத்திகன் என்று சொல்லப்படும் நான் கடவுள் என்று சொல்லபடுபவன்  பெயரை அதிகம் சொல்கிறேன்.

கடவுளை எதிர்கிறேன் என்பதை விட , அவனது பெயரால் செய்யப்படும் அநியாயங்களை எதிர்கிறேன். அப்போது கடவுள் என்று சொல்லப்படுகிறவனையும் எதிர்கிறேன்.

கடவுளுக்கு ஏன் இத்தனை உருவ வழிபாடு. எத்தனை வேறுபாடுகள். எத்தனை பிரச்சனைகள். எனவே அவனிடமிருந்து விலகியிருப்பதே மேலானது என முடிவு செய்துவிட்டேன்.

இதற்கு மேலும் எனக்கு உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ துன்பங்கள் ஏற்பட்டால், அது இயற்கையான நிகழ்வுகளாகவே இருக்கும். அல்லது முன் ஜென்மத்தில் செய்த பாவத்தை அனுபவிக்கிறோம் என்று சொல்வார்களே அதுவாக தான் இருக்கும். எனது கடவுள் நிந்தனைக்காக இருக்காது.

எதற்கு இத்தனை கடவுள்கள்.கோயில்கள்.பிரச்சனைகள்.

உணரகூடிய நிலையில் உள்ள ஐம்பெரும் பூதங்கள் எனப்படும் இயற்கையை வணங்கினால் போதாதா. ஒரு செங்கல்லை வணங்கினாலும் போதுமானது.

நிலம்.நீர்,வாயு, ஆகாயம், நெருப்பு -களிமண்ணை எடுத்து நீர் கலந்து, நெருப்பில் சுட்டு, காற்றில் காய வைத்து, ஆகாயத்தை கூறையாக வைத்து ஒரு செங்கல்லை வைத்து கும்பிட்டாலும் அதுவும் கடவுள் தான்.
எந்த வித நோன்பும் விரதமும், கொடுக்கல் வாங்கல் இல்லாமல் நமது மனசுமையை இறக்கி வைக்கும்  சுமைதாங்கியாய் பயன்படுத்தலாம்.
மற்றவை எல்லாம் வெளிவேசமே.

ஒரு கோவில் கட்டுவதற்க்காக இரு மதங்கள் சண்டையிட்டுகொள்கின்றன. எத்தனை மனித உயிரிழப்பு. எத்தனை சொத்துக்கள் நாசம். எத்தனை குடும்பங்கள் அனாதையாகின்றன.
இரு மதங்களையும் சார்ந்த கடவுள் ஏன் அதை தடுப்பதில்லை. தண்டிப்பதில்லை.
கடவுள், கோயில், பண்டிகை இன்ன பிற விசயங்களை பற்றி என்னுடன் பேசும் போதும், என்னை கடவுளை நம்பு என்று வற்புறுத்தும் போதும் எனது கடவுள் நிந்தனை தொடரும்.

எனது வீட்டில் புசை மடம் இருக்கிறது.முருகன் சிலையும் இன்ன பிற சிலைகளும் கடவுள் படமும் உண்டு. என் மனைவி தினமும் சாமி கும்பிடுவாள். எனது பிள்ளைகளையும் கும்பிட சொல்வேன். எனக்கு நம்பிக்கை இல்லையென்பதற்காக மற்றவர்கள் நம்பிக்கையை கெடுப்பதில்லை. அதே சமயம் எனது கடவுளுக்கு எதிரான கருத்துக்களை சொல்லிகொண்டேயிருப்பேன்.

நவராத்திரி தீபாவளி வருகிறது . அந்த கடவுள்களை பற்றி எழுத வாய்புள்ளது