Monday, 20 October 2014

பரிசு - சிறுகதை



குளிர் பதனப்படுத்தப்பட்ட அறை. முதல் முறையாக சென்றான். தொலைபேசியில் பேசி, அவர்கள் கொடுத்த நேரத்துக்கு சென்றான். பெரிய வரவேற்ப்பு அறை. எல்லா பக்கங்களிலும் கண்ணாடி சுவர். மெத்தை நாற்காலியில் உட்கார்ந்தான். முன்புறம் கண்ணாடி வட்ட மேஜை. தினசரிகள் மற்றும் புத்தகங்கள். ஆண்களின் கட்டுடல் புகைப்படங்களுடன் பல  புத்தகங்கள். புத்தகத்தை புரட்டினான். பல வித விளம்பரங்கள். பாதி விளம்பரங்கள் எதை விற்பனை செய்ய முயற்சிக்கிறது என்று புரியவில்லை.

சின்ன சின்ன ஜட்டிகளுடன் ஆண்கள் பல வித கோணங்களிள் நின்று கொண்டிருந்தார்கள். பல ஆண்கள் அது கூட இல்லாமல் இருந்தார்கள். குறிகள் தெரியாதவாறு புட்டங்களை கான்பித்து கொண்டும் , புணரும் நிலை போன்ற நிலைகளிலும் நின்றும் குனிந்து படுத்தும் கானப்பட்டார்கள். ஒருவரது உடலிலும் துளி கூட ரோமங்கள் இல்லை. கண்ணிமைகள், புருவங்கள் தவிர மொத்தமாக வழிக்கப்பட்டிருந்தது. ஆறு மடிப்புகள் எட்டு மடிப்புகள் கொண்ட வயிற்றுடன், கனிந்த நாவல் பழம் போன்ற முலைகளுடன் தங்களை காட்சிபடுத்தியிருந்தனர்.

மனிதன் தனது உடம்பில் உள்ள மொத்த ரோமங்களையும் புருவம், கண்ணிமை உட்பட நீக்கிவிட்டால் உயிர் வாழ முடியாது என எப்போதோ கேள்விப்பட்ட செய்தி நினைவுக்கு வந்தது. அது உண்மையா என தெரியவில்லை

அழகிய பெண்ணொருத்தி மெழுகு பொம்மை போல் இருந்தவள் அருகில் வந்தாள். முன்பதிவு இருக்கிறதா என நுனி நாக்கு ஆங்கிலத்தில் கேட்டாள். இருக்கிறது என்றவுடன் மீண்டும் திரும்பி நடந்தாள். இரண்டு மத்தளங்கள் ஓசை எழுப்பாமல் நடப்பது போல் இருந்தது. ரோமம் நீக்கப்பட்ட பகுதிகள் எப்படியிருக்கும் என்ற கற்பனையில் இருந்த போது, அழகன் ஒருவன் கண்ணெதிரே தோன்றினான்.

கை குலுக்கி விட்டு போதை நிறைந்த கண்களுடன் பார்வையை வீசினான். உங்களுக்கு எந்த வகையில் நான் உதவ வேண்டும் என்று கேட்டான். சவரம் செய்ய வேண்டும் என்றான். நிச்சியமாக செய்து விடலாம் என்று கூறினான்.

உள்ளே அழைத்து சென்றான். சிறிய சிறிய கண்ணாடி அடைப்புகளில் சுற்றும் நாற்காலிகளில் இளைஞர்கள் அமர்ந்திருந்தனர். பலர் படுக்கும் வசதி கொண்ட கட்டில்களில் படுத்து கொண்டிருந்தனர்.

அங்கிருந்த பெண்ணிடம் சென்று என்ன செய்ய வேண்டும் என்று சொல்லி பணம் கட்டி விடுங்கள் என்றான். கூச்சமாக இருக்கிறது நீயே சொல்லி விடு என்றான். சவரம் செய்ய வேண்டும் என்றான். எங்கே என்றான். பேசாமல் இருந்தான். முழுவதுமா என்றான். புரியாமல் விழித்தான். உடல் அமுக்கி விட வேண்டுமா என கேட்டான். எல்லாம் ஆங்கிலத்தில் கேட்டான். ஆங்கிலம் தெரிந்தாலும் அதன் அர்த்தங்கள் புரியவில்லை. அமைதியாக இருந்தான்.

அவனே அவளருகில் அழைத்து சென்றான். எதோ சொன்னான். அவர்களுக்குள் பேசிக்கொண்டார்கள். பணம் கட்ட சொன்னார்கள். அவனிடமிருந்ததை கொடுத்தேன். புன்னகையுடன் வாங்கி கொண்டாள். அவன் உள்ளே அழைத்து சென்றான்.

தலையை நுரை சவுக்காரம் போட்டு குளிப்பாட்டி துடைத்து விட்டான். தலை உலர்வதற்க்காக சூடான காற்றை முடிகளுக்கு இடையே செலுத்தினான்.

சுற்றும் நாற்காலியில் உட்கார வைத்து தலைமுடியை , ஆங்காங்கே வெட்டினான். அரை மணி நேரம் சுற்றி சுற்றி வந்து தலைமுடியை வெட்டினான். பின்பு தாடியை வழித்தான். மீசையை முழுவதுமாக வழிக்க வேண்டுமா என கேட்டான். இல்லை திருத்தம் மட்டும் செய்தால் போதும் என்றான். அவன் சொன்ன படி செய்து விட்டு சென்று விட்டான்.

மீண்டும் ஒருவன் வந்தான் . வேறு ஒரு அறைக்கு அழைத்து சென்றான். அழகன். பெண்களின் கனவு நாயகன். பார்த்த மாத்திரத்தில் பெண்களின் உள்ளாடையை நனைய வைப்பவன்.

சிறிய அறை. சிறிய நீச்சல் குளம். ரோஜா இதழ்கள் தூவப்பட்டிருந்தது. பல வித வண்ண மெழுகுவர்த்திகள் வாசனையுடன் எரிந்து கொண்டிருந்தது ஒளி எங்கிருந்து வருகிறது என்று தெரியவில்லை. மெல்லிய இசை. அதுவும் எங்கிருந்து வருகிறது என்று தெரியவில்லை. மனதை மயக்கும் வாசனை. இதமான ஒலி ஒளி. மது அருந்தாமலேயே போதை தரும் சுகம்.

மன்னிக்கவும். உடை மாற்றி கொள்ளுங்கள் என்று ஒரு சிறிய வெள்ளை துவாலையை கொடுத்தான். அப்போது தான் அவனை சரியாக கவனித்தான். கடைந்தெடுத்த சிற்பம் போல இருந்தான்.  ஜீன்ஸ் கால்சட்டையும் மெல்லிய வெள்ளை சட்டையும் அணிந்திருந்தான். விம்மி புடைத்த மார்பகங்கள் அப்பட்டமாக தெரிந்தது. உடையை மாற்ற சொல்லி மறைவிடத்தை.கான்பித்தான். துண்டை கட்டினால் சரியாக இடுப்பளவுக்கு மட்டுமே இருந்தது. நடந்தால் துண்டு விலகி உள்ளே இருப்பது தெரியும் என்பதால் உள்ளாடையின் மேல் கட்டிக்கொண்டு வந்தான்.

அவன் ஆடைகளை களைந்து விட்டு மிகச் சிறைய உள்ளாடையுடன் இருந்தான். அதுவும் ஒற்றை கால் உள்ளாடை. இது வரை அந்த மாதிரியான உள்ளாடையை பார்த்ததில்லை. ஆன்களும் ஆசைப்படும் அளவுக்கு கிளர்ச்சியை ஏற்ப்படுத்தும் உடல் கட்டு. 

நல்ல கற்பனை சக்தி உள்ள கவிஞர் பார்த்தால் தேக்கு மர கட்டையில் செய்த சிற்பம் என்று வர்ணிப்பார். உடலில் ஏதோ தடவி மெருகேற்றியிருப்பார்கள் போல வளைந்து செல்லும் நரம்புகள் தெரிந்தது. அச்சு பதித்தது போன்ற முலைகள் அவையும் விரைத்திருந்தன. மெல்லிய புகை பிடிக்காத உதடுகள், சுருங்கிய வயிறு பருத்த தொடைகள் புடைத்த பிட்டங்கள். பெரிய  கால் விரல்கள். துணியால் ஆன செருப்பு போட்டிருந்தான்.

படுப்பதற்க்கு சிறிய படுக்கை போன்ற வசதி இருந்தது. குப்புற படுக்க சொன்னான். மேல் தண்டு வடத்தில் எண்ணெய் உற்றி தண்டு வடத்தை மேலிருந்து கீழாக நீவி விட்டான். முதுகு புறத்தை பலவாறாக நீவி விட்டு பிட்டம் வரை கைகளை கொண்டு வந்து நிறுத்தினான். துண்டை நீக்கினான். உள்ளாடையை பார்த்து இதை நீக்கி விடுங்களேன் என்று கூறி பதிலுக்கு காத்திராமல் நீக்கி விட்டான். அதற்கு பிறகு அவன் எங்கெங்கு எப்படியெல்லாம் உருவி விட்டான் என்பது புரியவில்லை. முதுகுக்கு பின்புறம் அவனது இரு கால்களையும் போட்டுக்கொண்டு மீண்டும் முதுகை தேய்த்து விட்டான். அவனது தொடைகள் இவனது இடுப்பின் இரண்டு பகுதிகளையும் உரசிக்கொண்டிருந்த்து. அவனது பிட்ட பிளவில் உரசிக்கொண்டிருந்தது

திரும்பி படுக்க சொல்லி முகம் முதல் கால் பாதம் வரை நீவி விட்டான். சுய நினைவு இல்லை முழு நிர்வாணமாக இருப்பதை கூட இவனால் உணர முடியவில்லை.

பின்பு சிறிய குளியலறையில் ஆவியில் குளிக்க சொன்னான். ஆளுயுர கண்ணாடி பெட்டி . எல்லா பக்கங்களிலிருந்தும் வெந்நீர் ஆவி வந்து கொண்டிருந்தது. அவன் வெளியிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தான். பின்பு கதவை திறந்து வெளியில் வர சொன்னான். தலை முதல் பாதம் வரை துடைத்து விட்டான். அவன் கூச்சமே இல்லாமல் முன் தோல் உயர்த்தியும் சுத்தம் செய்து விட்டான்.

சேவை பிடித்திருக்கிறதா என கேட்டான். வேறு ஏதும் தேவையா என கேட்டான். இவன் வேண்டாம் என தலையாட்டினான். முன்பு முன்புறம் முட்டிக்கால் போட்டு உட்கார்ந்து வெள்ளரி பிஞ்சை மென்மையாக முத்தமிட்டான்.

ஆடை அனிந்து கொண்டு வெளியே வாருங்கள் என்று சொல்லி விட்டு அவன் வேகமாக அவனது ஆடைகளை அணிந்து கொண்டு வெளியே சென்று விட்டான். முற்றின வெள்ளரிக்காயை மடக்கி, உள்ளாடையில் அடக்கி ஆடை அணிந்து கொண்டு வெளியே வந்தான்.
.
காசு வாங்கும் பெண் சிரித்த முகத்துடன் காத்திருந்தாள். கையில் பெரிய பில் இருந்தது. சேவை செய்த இருவரும் அருகில் இருந்தார்கள். பில் தொகை நாப்பதி ஏழாயிரத்து சொச்சம். வரிகளும் சேர்ந்திருந்தது. இனாம் என்ற பகுதி காலியாக இருந்தது. அதில் எழுத பேனாவும் கொடுத்தாள்.

அவன் , நான் எனது பரிசு கூப்பனை உபயோகித்து செய்து கொள்ள வந்தேன். நீங்கள் பில் கொடுப்பது ஏன். என்னுடைய பரிசு கூப்பன் தொகை பத்தாயிரத்துக்கு தானே செய்ய வேண்டும் என்று கேட்டான். அவள் பரிசு தொகை கூப்பனின் 10 சதவீகிதத்தை இந்த பில் தொகையில் கழித்து விடுவோம். மீதி உள்ள பரிசு தொகையை நீங்கள் மீண்டும் மீண்டும் வரும் போது 10% விதமாக கழித்து கொண்டே வருவோம். ஒரே முறையில் பத்தாயிரம் ரூபாயை கழிக்க மாட்டோம் மேலும் நீங்கள் நாப்பதி ஏழாயிரம் சொச்சம் ரூபாய்க்கு எங்களது சேவையை பெற்றுள்ளீர்கள் என கூறினாள். இந்த நிபந்தனைகள் எல்லாம் பரிசு கூப்பனில் எழுதப்பட்டுள்ளது என்று காட்டினாள். மிகச் சிறிய எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்தது. அங்கிருந்த வெளிச்சத்தில் படிக்க முடியவில்லை.

சேவை செய்த இளைஞர்களை பார்த்தான். அவர்கள் புன்னகையுடன் நின்று கொண்டிருந்தார்கள்.  அவர்களை சிறிது தள்ளிக்கொண்டு போய் பேசினான். அவர்களும் இது தான் விதி என்று கூறினார்கள். இனாம் சேர்த்து மொத்தம் ஐம்பதாயிரம் என எழுதிவிடுங்கள். ஆயிரம் ரூபாய் கழித்து கொண்டது போக நீங்கள் 49,000 கொடுத்தால் போதும் என்றார்கள்.

ஒப்புக்கொள்ளவிட்டால் என்ன செய்வார்கள் என கேட்டதற்க்கு, அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு மெதுவாக புன்னகை புரிந்தனர். இன்று இரவுக்குள் 10 முறையாவது நீங்கள் குனிந்து நிற்க வேண்டியிருக்கும் அதற்கு நாங்கள் இப்போதே பயிற்சி கொடுக்க ஆரம்பிப்போம் என்றனார்.

அவன் அமைதியாக திரும்பி வந்து கடன் அட்டை மூலம் காசை செலுத்தி விட்டு வெளியே வந்தான்.

பரிசு கொடுத்த தொலைக்காட்சி நிகழ்ச்சியாளர்கள் மேல் கோபம் வந்தது. குனிவதை பற்றி நினைத்து பயந்து கொண்டு பல நாட்கள் தொலைக்காட்சி பார்பதையே நிறுத்தி விட்டான்.




 

Monday, 13 October 2014

தாய் – மாக்ஸிம் கார்க்கி Maxim Gorky – மொழிபெயர்ப்பு-ரகுநாதன்

தாய்மாக்ஸிம் கார்க்கி Maxim Gorky – 
தமிழ் மொழிபெயர்ப்பு திரு.ரகுநாதன்


கதை சுருக்கம்:

ஒரு தொழிற்சாலைக்கு அருகில் இருக்கும் தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் கதை ஆரம்பிக்கிறது. ஆலையிலிருந்து சங்கு ஊதியவுடன் தொழிலாளர்கள் வேலைக்கு செல்கின்றனர். அனைவரும் ஏழைகள். சுகாதாரமற்ற குடியிருப்பு பகுதி.

வேலை செய்து விட்டு வீட்டுக்கு வரும் தொழிலாளர்களின் பெரும் பகுதி வோட்கா மதுபானம் அருந்திவிட்டு மனைவிகளை துன்புறுத்துகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு குடும்பத்தின் மனைவியே தாய் என்ற கதாபாத்திரமாக இதில் உருவாக்கப்பட்டுள்ளது

தாயின் கணவர் இறந்துவிடுகிறார். அவனால் அதிக துன்பத்திற்க்கு உள்ளானதால் அது குறித்து கவலைப்படவில்லை.

தாய்க்கு ஒரு மகன் இருக்கிறான். கணவனிடம் துன்பப்படும் கால கட்டத்தில் அவனது தேவைகளையும் கவனிப்பதிலும் அவனிடமிருந்து அடி உதை வாங்காமல் தப்பிக்க முயற்சி செய்வதிலுமே காலம் கழித்ததால் மகனை சரியாக கவனிக்கவில்லை.

தாய்,  கணவன் இறந்து பிறகு மகனை கவனிக்கிறாள். அவன் மிகவும் அமைதியாய் இருக்கிறான். மிகவும் அன்பாக நடந்து கொள்கிறான். புத்தகங்கள் கொண்டு வந்து மறைத்து வைத்து படிக்கிறான். எந்த கெட்ட பழக்கமும் இல்லை.நிறைய நல்ல மாறுதல்கள் தெரிகிறது. அதுவே தாயை கவலை கொள்ள செய்கிறது.

மகன் தாயின் கவலையை அறிந்து அவளது சந்தேகத்தை போக்குகிறான். தொழிலாளர்கள் ஏன் ஏழைகளாகவே இருக்கிறார்கள் என்றும் பணக்காரர்கள் தொழிலாளிகளை அடிமைப்படுத்தி சுரண்டுகிறார்கள் என விவரிக்கிறான். புத்தகங்களை படித்து கான்பிக்கிறான். தாய்க்கு சரியாக புரியவில்லை ஆனால் இது போல் பேசுவதால் ஆபத்து இருக்கிறது என்பதை மட்டும் உணருகிறாள்.

அவனை தேடி நிறைய பேர் வருகிறார்கள். நிறைய விவாதம் செய்கிறார்கள். விவாதம் தீவிரமாக இருந்தாலும் தனிப்பட்ட முறையில் எல்லோரும் நட்புடன் இருக்கின்றனர். அவனை பார்க்க வருபவர்களில் பல தரப்பட்ட மனிதர்கள் இருக்கிறார்கள். இளம் பெண்களும் இருக்கிறார்கள். பணக்கார வீட்டு பெண்களும் அரசு அதிகாரியின் பெண்ணும் இருக்கிறாள்.

இவர்களது தொடர் வருகையாலும் அவர்களது விவாதங்களை தொடர்ந்து கேட்பதன் மூலம் தாய் அவர்களது பேச்சுக்களையும் அவர்களது நல்ல குணங்களையும் புரிந்து கொள்கிறாள். அவர்கள் அனைவரையும் மிகவும் நேசிக்கிறாள். சிலரது தோற்றமும் பேசும் முறையும் அவளுக்கு பிடிக்கவில்லையென்றாலும் அவர்களது சிந்தனையும் விவாத திறமையும் அவளை மிகவும் கவர்கிறது.

தனது மகன் மிகவும் அமைதியாகவும் ஆனித்தரமாகவும் பேசுவது குறித்து மிகவும் மகிழ்ச்சியடைகிறாள். அவனது கருத்தை அனைவரும் மிகுந்த ஆவலுடன் கேட்பது குறித்து மிகுந்த பெருமையடைகிறாள். தனது கணவனிடம் துன்பப்பட்ட கால கட்டத்தையும் இன்றைய கால கட்டத்தையும் ஒப்பிட்டு ஒரு சிறப்பான வாழ்க்கையை தாம் மகன் மூலம் பெற்றது குறித்து மகிழ்கிறாள்

இவையனைத்தும் காவலர்களுக்கு பயந்து ரகசியமாகவே நடக்கிறது. உளவாளிகளும் இவர்களை கவனிக்கிறார்கள்

இந்த நடவடிக்கைகள் ஜார் மன்னருக்கு எதிராக நடப்பதாக கருதி இவர்கள் கண்கானிக்கப்படுகிறார்கள். இதில் சிலர் ஏற்கனவே சிறை தண்டனை அனுபவித்தவர்கள். சிலர் சைபீரியாவுக்கு நாடு கடத்தப்பட்டு தப்பி வந்தவர்கள்.

தொழிலார்கள் அனைவரும் முதலாளிகளுக்கு எதிராக ஒன்று திரண்டு உரிமைகளை பெற வேண்டும் என்பதே எண்ணம். இவ்வாறு உலகின் பிற நாடுகளில் நடக்கும் செயல்களை குறித்து விவாதிக்கிறார்கள். உலக தொழிலார்கள் அனைவரும் ஒன்று திரண்டு புதியதோர் உலகை அமைக்க வேண்டுமென பாடுப்படுகிறார்கள். மகன் சிறைப்படுகிறான்.

இவர்களது எண்ணங்களை துண்டு பிரசுரங்களாக வெளியிட்டு, தாய் மறைத்து தொழிற்சாலைக்குள் எடுத்து சென்று விநியோகிக்கிறாள். தொழிற்சாலை நிர்வாகம் குழம்புகிறது. மகன் விடுதலையாகிறான்.

தொழிலாளர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி மே தினத்தில் சிவப்பு கொடியேந்தி ஊர்வலம் செய்வது என முடிவாகிறது. மகன் முன்னாள் கொடியேந்துவது என்றும் வேறு ஒருவன் அவனுக்கு துனையாக இருப்பது என்றும் முடிவாகி அதற்கான ஏற்ப்பாடு செய்யப்படுகிறது.

கொடி ஊர்வலம் நடக்கிறது. காவலாளிகள் கலைந்து செல்ல உத்திரவிடுகிறார்கள். மக்களிடையே இவர்களுக்கு ஆதரவும் எதிர்ப்பும் இருக்கிறது. மகன் கைது செய்யப்படுகிறான். அவன் சைபீரியாவுக்கு நாடு கடத்தப்படலாம் என உணருகிறாள். மகனின் கைதுக்கு பிறகு அவனது விருப்பப்படி அவனது நண்பர்களுடன் நகரத்தில் சென்று வசிக்கிறாள்.

அங்கிருந்து கொண்டு அவர்களுக்கு உதவியாக அனைத்து வேலைகளையும் துணிச்சலாக செய்கிறாள். மகனை சிறைச்சாலையில் தொடர்ந்து சந்தித்து வருகிறாள். அவனை தப்பிக்க வைக்க திட்டம் இருக்கிறது என்று தாய் சொல்லிய போதும் , மகன் தான் தப்பிக்க விரும்பவில்லையென்று கூறுகிறான். அவன் எவ்வித கவலையுமில்லாமல் விசாரணை தினத்தை எதிர்ப்பார்த்து கொண்டிருக்கிறான்.

மகன் தனது தனிப்பட்ட ஆசாபாசங்களை துறந்து வாழ்வது கண்டு நண்பனிடம் முத்தமிட்டு உறவு கொள்ள சொல்கிறாள்.

மகனை சக போராளி விரும்புகிறாள். தாய் அறிவாள். மகனும் அறிவான். சொல்லப்படாத காதல். அவர்கள் இனைந்து வாழ வேண்டும் என தாய் விரும்புகிறாள்.

தாயும் மற்றவர்களும் துண்டு பிரசுரங்கள் மூலமும்  பேச்சுகளின் மூலமும் தொழிலார்ளிடையே கொள்கையை பரப்புகின்றனர்.

விசாரணை ஆரம்பமாகிறது. நீதிமன்றத்தில் தனது வாதத்தில் அவர்கள் செய்யும் கொடுமையை விவரித்து தங்களது எண்ணத்தை கூறி அவர்கள் அழிவார்கள் என்றும் ஒன்றுப்பட்ட தொழிலாளி வர்கம் புதியதொரு உலகை படைக்கும் என்றும் கூறுகிறான்.

காமம் இல்லாத கதையாக சென்று கொண்டிருக்கும் கதையில், விசாரனை நிகழ்வுகளை குறிப்பிடும் போது, - " அந்த பசி வெறிகொண்ட மங்கிய கண்கள் அவனது உடம்பின் மீதும், மார்பின் மீதும் தோள்களின் மீதும், கைகளின் மீதும் ஊர்ந்து தவழ்ந்து, அவனது ஜீவ சக்தி நிறைந்த சதைக் கோளத்தின் ஸ்பரிசத்தை நாடி, அவன் உடம்போடு ஒட்டி உராய்ந்து தமது உடம்பிலும் , தங்களது தொய்ந்து தொள தொளத்துப் போன தசைக்கோளங்களிலும், வலியிழந்து போன நரம்புகளிலும் புது வலுவை ஏற்றிக்கொள்ளும் விருப்பத்தோடு பற்றிப் பிடித்துப் பார்த்துக் கொண்டிருப்பதாகவே அவளுக்குப் பட்டது " என்று நீதிபதிகள் குறித்து தாய் நினைக்கிறாள்.

அனைவரும் சைபீரியாவுக்கு நாடு கடத்தப்படுவதாக தீர்ப்பு கூறப்படுகிறது.

தாய் அதற்கு பிறகும் பிரச்சாரத்தை தொடர்கிறாள். மகனது நீதிமன்ற பேச்சை துண்டு பிரசுரம் மூலம் விநியோகிக்க செல்லும் போது, அவள் திருடி என்று குற்றம் சாட்டப்பட , அவள் தனது பையில் இருக்கும் பிரசுரங்களை காட்டி அதை வீசியெறிந்து பிரசங்கள் செய்கிறாள். பிரசுரங்களை வீசியேறிவதும் பேசுவதுமாக இருக்கிறாள். காவலர்கள் அவளை அமைதி காக்கும் படி கூறினாலும் இவள் தொடர்ந்து பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறாள்.

இறுதி வரிகளாக

, முட்டாள்களே நீங்கள் வீணாக எங்கள் பகைமையைத் தான் தேடிக்கொள்கிறீர்கள். உங்களது கொடுமைகளெல்லாம் ஒரு நாள் உங்கள் தலையிலேயே வந்து விடியப்போகின்றன

ஒரு போலீஸ்காரன் அவளது தொண்டையைப் பிடித்து அவளது குரல்வளையை நெரித்துத் திணறடித்தான்.

அதிருஷ்டங்கெட்ட பிறவிகளேஎன்று அவள் திணறினாள்.

யாரோ ஒரு உரத்த பெருமூச்சால் அதற்குப் பதில் அளித்தார்கள்
மாக்ஸ்ம் கார்க்கியின் உண்மை பெயர் அலேக்ஸி மாக்ஸிமோவிச் பெஷ்கோவ்.1868ல் பிறந்து 1936ல் மறைந்தார். ரஷ்ய விடுதலை போரில் கலந்து கொண்டார். லெனின், ஸ்டாலின் மற்றும் எழுத்தாளர்கள் கொரொலெங்கோ, ஆன்டன் செகாவ், டால்ஸ்டாய் முதலியவரோடு பழகியவர்.  1905 வருடத்து ரஷ்ய புரட்சியின் போது வெளிநாட்டுக்கு தப்பி ஓடி , அமெரிக்காவில் வாழ்ந்த போது இந்த கதையை எழுதியுள்ளார். இது தடை செய்யப்பட்ட புத்தகமாக இருந்துள்ளது.

கார்க்கி படைத்த இலக்கியம் மக்களைக் கொண்டே மக்களுக்காகவே மக்களின் நலன் கருதியே சிருஷ்டித்த இலக்கியம். கார்க்கி மக்களை மறந்து இலக்கியம் செய்யவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
============================================================================
கதைகளம் நிஜ்னி நோவ்கிராடு. இது கார்க்கி பிறந்த இடம். இதில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் உண்மையானவை. தாய் என்ற கதாபாத்திரம் பல பெண்களின் தொகுப்பு. இவைகளை கொண்டு புனையப்பட்ட நாவல்.

இந்த நாவல் பிரபலமடைய காரணம் எந்த ஒரு தனிப்பட்ட தொழிலாளியின் வாழ்க்கையை பற்றியும் துயரங்களை பற்றியும் எழுதாமல் ஒட்டு மொத்த தொழிலார்கள் நலன் பற்றி எழுதியது. இவர் பழகிய மனிதர்களையே கதாபாதிரங்களாக உருவாக்கியதாலும் மேலும் இவரே ஒரு தொழிலாளியாக வாழ்ந்ததாலும் அவர்களின் வாழ்க்கை முறையை நன்கு அறிந்தவர்.

தொழிலாயின் அவல நிலையை மட்டுமே எழுதினால் அதன் தாக்கம் குறைவாகவே இருக்கும் என்பதால்,  அந்த காலத்தில் வாழ்ந்த தொழிலாளி வர்க வீட்டு பெண்களின் தொகுப்பாக தாய் என்ற கதாபாத்திரத்தை உருவாக்கியுள்ளார். கற்பனை பாத்திரம் என்பதால் சற்று மிகைப்படுத்துதலும் இருக்க கூடும்.

தொழிலாளிகளின் வாழ்க்கையை சித்தரித்து அவர்களை புரட்சிக்கு தயார் படுத்த எழுதப்பட்ட நாவலில் ஒரு தொழிலாளியை முக்கிய கதாபாத்திரமாக செய்யாமல் ஒரு பெண்ணை அதுவும் நடுத்தர வயதுள்ள பெண்ணை கதாபாத்திரமாக வடிவமைத்ததுக்கு காரணம் – (1) தாய் என்ற சொல்லுக்கு இருக்கும் மகத்துவம். அனைத்து மக்களும் தனது தாயை போற்றுவார்கள். அவளுக்காக இரக்கப்படுவார்கள். (2) ஒரு தாயின் துயரத்தை போரட்டத்தை அவளது துணிச்சலை விவேகத்தை சொல்வதன் மூலம் படிக்கும் தொழிலாளிகளை உணர்ச்சி வச பட செய்வதே முக்கிய நோக்கமாக இருந்திருக்கும். ஒரு தாய் இவ்வளவு தியாகம் செய்து உழைக்கும் போது, நாம் தொழிலார்கள் சும்மா இருப்பதா என்ற உணர்வை ஏற்ப்படுத்த செய்யப்பட்ட கதாபாத்திரம்.

ஆனால், இந்த உத்திகளை கையாண்டா எழுத்தாளர், ஜார் மன்னர் காலத்தில் தொழிலார்கள் எந்த வகையான அடக்கு முறைக்கு ஆளானர்கள் என்று எங்கும் குறிப்பிடபடவில்லை. பணக்காரர்கள் தொழிலாளிகளின் மூலம் சுகமாக வாழ்கிறார்கள் ஆனால் அந்த தொழிலார்கள் ஏழைகளாக வாழ்கிறார்கள் என்று கூறுகிறார். இந்த வாதத்தை இன்றும் உலகமெங்கும் சொல்ல முடியும்.

புரட்சி செய்து இவர்களின் சோசலிச ஆட்சி அமைந்த பிறகு ஏழைகள் எல்லாம் பணக்காரர்களாக மாறி விட்டார்களா என்றால் நிச்சயமாக இல்லை என்று கூறு முடியும். ஒரு அடக்கு முறையிலிருந்து அதை விட மோசமான அடக்கு முறைக்கு ஆளானர்கள் என்பது சரித்திரம். இன்றைக்கும் சோசலிச ஆட்சி நடக்கும் நாட்டில் தொழிலாளிகள் அடிமைகளாக தான் வாழ்கிறார்கள். இந்த காரணத்தால் தான் மீண்டும் புரட்சி ஏற்ப்பட்டு நாடு உடைந்து ஜனநாயக ஆட்சி அமைந்துள்ளது. இன்றைக்கும் சோசலிச ஆட்சியின் கீழ் இருக்கும் பகுதிகள் ஜனநாயகம் வேண்டும் என்று போராடி வருகிறது. கம்யுனிச ஆட்சியில் தொழிலார்கள் சுகமான வாழ்க்கை வாழ்ந்தால் அவர்கள் ஏன் ஜனநாயக ஆட்சியை விரும்ப வேண்டும்.

இந்த கதையில் கம்யுனிசம் என்ற வார்த்தையை பயன் படுத்தவில்லை. தோழர் என்ற சொல்லும் காம்ரேட் என்ற சொல்லும் ஒரே ஒரு முறை பயன் படுத்தப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட இயக்கம் என்பதால் இவை தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

இந்த கதையில் மொழிபெயர்ப்பாளர் இவரை பற்றி குறிப்பிடுகையில் “கார்க்கி படைத்த இலக்கியம் மக்களைக் கொண்டே மக்களுக்காகவே மக்களின் நலன் கருதியே சிருஷ்டித்த இலக்கியம்" என்று கூறுகிறார். இந்த சொல் ஜனநாயகத்துக்கு உபயோகப்படுத்த படும் சொல். 

ஜனநாயகம் என்றால் “ மக்களுக்காக மக்களால் மக்களே ஆட்சி செய்யும் முறை. இதையே சோசலிச தத்துவத்தை விளக்கும் புத்தகத்துக்கு முன்னுரையில் பயன் படுத்தியிருப்பதன் மூலம், ஜனநாயக ஆட்சியே சிறந்தது என்பதை அவரே அறியாமல் ஒப்புக்கொள்கிறார்.

உலகம் முழுவதும் உள்ள தொழிலார்களை ஒன்று திரட்டி புதியதோர் உலகை படைப்போம் என்று கூறுவது எவ்வளவு நடைமுறை சாத்தியமென்பது இவர்களுக்கு புரியாமல் போனது ஆச்சரியமானது. குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களையே ஒன்று சேர்த்து ஒரு முடிவுக்கு வர முடியாமல் இருக்கும் கால கட்டம்.

இந்த கம்யுனிச சித்தாந்தத்தின் அடிப்படையில் உருவான நன்மை என்று பார்த்தால் தொழிலார்கள் எல்லாவற்றையும் பொறுத்து போக வேண்டும் என்ற நிலை மாறி, நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி அல்லது வேலை நிறுத்தம் செய்து உரிமைகளை பெற வழி வகுத்துள்ளது. 

இந்த செய்கைகளுக்கு கம்யுனிஸ்டுகள் தலைமை தாங்கி, தொழிலாளிகள் முதலாளிகளுக்கு இடைத்தரகர்களாக இருந்து அவர்கள் கொழுத்த லாபம் அடைகின்றனர். இதனால் கம்யுனிச தொழிற் சங்கங்கள் தவிர்த்து, அரசியல் கட்சி ரீதியாக பல தொழிற் சங்கங்கள் தோன்றியுள்ளன. இவை அனைத்து ஒரே மாதிரியாக சிந்தித்து செயல் படுவதில்லை. 

இந்த கதையில் கார்க்கி இந்த சித்தாந்தத்தை மதமாக உருவகப்படுத்துகிறார். (page 59) கம்யுனிஸ்டுகளுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. கடவுள் என்பதே மத அடிப்படையானது. அப்படியிருக்கும் போது தங்களது சித்தாந்தத்தை ஒரு மதமாக உருவாக்கினால் பின்பு கடவுள் என்பவரும் உருவாகும். ஒரு வேளை ஸ்டாலினும் லெனினும் கடவுளாக உருவாக்கப்படுவார்களோ என்னவோ. அவர்களுக்கு கம்யுனிச நாடுகள் அனைத்திலும் பொது இடத்தில் பெரிய சிலைகள் உருவாக்கப்பட்டது. அவை இன்று இடித்து தரை மட்டமாக்கப்படுகிறது.

இதில் வரும் தாய் கதாபாத்திரம் கதை முழுவதும் கர்த்தரை தினமும் பிராத்திக்கிறாள். மகனும் மற்றவர்களும் பிராத்திக்கவில்லை என்று வருத்தப்படுகிறாள்.

மொழி பெயர்ப்பாளர் ஒரு தவறு செய்துள்ளார். கதை முழுவதும் கர்த்தர் என்று குறிப்பிடும் அவர் ஒரு இடத்தில் ஈசன் என்று குறிப்பிடுகிறார்.(page 195) மொழிபெயர்ப்பாளர் இந்து மதத்தை சார்ந்தவர் என்பதால் அவரையும் அறியாமல் இந்த பிழை ஏற்ப்பட்டுள்ளது.

ஒரு இடத்தில் தாய் என்ற கதாபாத்திரம் “ பெண்களாகிய எங்கள் அன்பு பரிசுத்தமான அன்பு அல்ல; நாங்கள் எங்களுக்காகத்தான் பிறரை நேசிக்க வேண்டியிருக்கிறது. (page 135) இந்த கருத்தில் எனக்கு முழு உடன்பாடு உள்ளது. ( இது குறித்து வேறோரு பதிவில் எழுதுகிறேன் ) 

“ உலகில் எத்தனையோ பேர், அத்தனை பேரும் அவரவர் துக்கத்தால் அழுதுகொண்டே இருக்கிறார்கள். ஆழாமல் இருக்கும் அந்தப் பாக்கியசாலிகள் எங்கே தான் இருக்கிறார்களோ ‘ என்ற கார்க்கியின் சிந்தனை உண்மை.

 உலகை யார் எந்த கொள்கையின் அடிப்படையில் எந்த காலத்தில் ஆட்சி செய்தாலும் எல்லா மனிதர்களின் துயரங்களையும் ஒழித்து விட முடியாது. இதை ஆட்சியாளர்களின் தவறு என்று சொல்வதை விட, இறை நம்பிக்கை உள்ளவர்கள் சொல்லும் விதிப்பயன் என்று தான் கொள்ள வேண்டும்.

இறுதியாக, எல்லா காலங்களிலும் ஆட்சியாளர்களிடம் அதிருப்தி அடையும் மக்கள் இருந்து கொண்டேயிருப்பார்கள். ஏதேனும் ஒரு சித்தாந்தத்தை சொல்லி அவர்களை ஒன்றினைத்து ஆட்சி மாற்றம் செய்ய விரும்பும் மக்களும் இருப்பார்கள். 

இவை ஆள்பவனுக்கும் ஆள துடிப்பவனுக்கும் நடக்கும் போராட்டமாகவே இருக்கும். இந்த போரட்டத்தில் துன்பப்படும் எவரும் அதை விட்டு வெளிவருவதில்லை. சந்தர்ப்பங்களை பயன் படுத்தி சுய புத்தியுடன் உழைக்கும் மக்களே முன்னேற்றம் கான முடியும். எந்த ஆட்சியாளரும், எந்த சித்தாந்தமும் மக்களை முன்னேற்ற முடியாது. அது ஒரு மாயை.

தாய் – மாக்ஸிம் கார்க்கி Maxim Gorky

 – மொழிபெயர்ப்பு-ரகுநாதன்

ஸ்டார் பிரசுரம் 1968 பதிப்பு
நிறைய பிழைகள் உள்ளது. பிழை திருத்தம் பார்த்திருக்க வேண்டும்.



 Михаил Трояновский

Friday, 10 October 2014

ஹைதர் HAIDER - இந்தி திரைப்படம்.



 ஹைதர் HAIDER


அண்மை காலத்தில் நான் பார்த்த சிறந்த படங்களில் ஒன்று தற்போது திரையரங்குகளில் ஒடிக்கொண்டிருக்கும் ஹைதர் HAIDER என்ற இந்தி திரைப்படம்.

ஷேக்ஸ்பியரின் HAMLET  கதையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம்.

1995ஆம் ஆண்டுகளில் காஷ்மீரில் தீவிரவாதம் (சுதந்திர போராட்டம் ? ) உச்ச நிலையில் இருந்த கால கட்டத்தை அடிப்படடையாக கொண்டு படமாக்கப்பட்டுள்ளது.

அன்றைக்கும் இன்றைக்கும் காஷ்மீரில் உள்ள நிலையை அருமையான வசனங்கள் மற்றும் காட்சியமைப்புகளின் மூலம் விளக்கியுள்ளார்.

நகரில் எங்கு பார்த்தாலும் முள் வேலி தடுப்புகள், எல்லா இடங்களிலும் இராணுவத்தால் சோதனை செய்யப்படுதல் என்பவற்றை மிக அழகாக காட்சிப்படுத்தியுள்ளார்.

தீவிரவாதிகளை அடையாளம் காண ஒலிப்பெருக்கி மூலம் அனைத்து ஆன்களையும் வீட்டிலிருந்து வெளியே வர சொல்ல அனைவரும் தங்களது அடையாள அட்டையுடன் வந்து வரிசையில் நிற்பதன் மூலம் மக்கள் எத்தகைய வாழ்க்கையை வாழ்கின்றனர் என்பதை விவரித்துள்ளார்.,

ஒருவன் தன் வீட்டு வாசலிலேயே மணிக்கனக்காக காத்திருந்து விட்டு திருப்பி போவதாக வீட்டு பெண்மனிகள் கூறும் போது, அவனது உடலை தடவி சோதனை செய்து, உன் அடையாள அட்டை எங்கே என்று கேட்டவுடன் கான்பித்து விட்டு வீட்டுக்கு உள்ளே செல்கிறான். இன்றைக்கு இது தான் காஷ்மீர் மக்களின் மன நிலையாக மாறிவிட்டது என்கிறான். சக மனிதனை அவனது அடையாள அட்டை மூலமே அறிய முடியும் என்பதை செருப்பால் அடித்தது போல சொல்லியிருக்கிறார்.

Armed Forces Special Act  என்ற சட்டம் மக்களின் அன்றாட வாழ்க்கையை அலோங்கோலப்படுத்தியுள்ளது என்பதையும் நன்றாகவே சாடியுள்ளார்.

தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்படும் நபர்கள் அனுபவிக்கும் கொடுமைகளையும் சித்தரித்துள்ளார்.

அதே சமயம் சமூக ஆர்வலகள் என்ற பெயரில் தீவிரவாதிகள் (விடுதலை போராட்ட வீரர்கள்) வைக்கும்  வாதத்தையும் சாடியுள்ளார். இது வரை 8000 பேர் கானாமல் போய் உள்ளனர் என்ற வாதத்திற்க்கு, இங்கிருந்த 80000 பிராமணர்கள் கானாமல் போய் உள்ளதை இந்த கணக்கில் சேர்த்துக்கொள்ளவில்லை என்று அவர்களையும் வசை பாடியுள்ளார்.

இவர்கள் இந்தியாவிடமிருந்து சுதந்திரம் பெற போராடவில்லை பாக்கிஸ்தானிடம் அடிமையாக போராடுகின்றனர் என்று தனது தேச பக்தியையும் வெளிப்படுத்தியுள்ளார். 

இது இந்திய எதிப்பு பிரச்சாரமாக உள்ளதே என்ற விமர்சனத்துக்கு இயக்குனர் விசால் பரத்வாஜ் கூறும் பதில் நானும் இந்தியன் தான் எனக்கும் தேசப்பற்று உள்ளது என்றும் நான் மனித உரிமை மீறல்களையே கேள்வியாக்கியுள்ளேன் என்று தைரியமாக பதில் கூறுகிறார்.

படப்பிடிப்பு சமயத்தில் காஷ்மீர் பல்கலை கழக மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையும் , தணிக்கை துறை ஆட்சேபித்த காட்சிகளை நீக்கியதையும் வருத்தத்துடன் பதிவு செய்கிறார்.

கதாநாயகனாக ஷாகித் கபூர் Shahid Kapoor தனது வழக்கமான வணிக திரைப்படத்திலிருந்து விலகி இந்த படத்தில் நடித்திருப்பது சிறப்பு. சிறந்த இயக்குனர் கிடைத்து தனக்கு விருப்பமான கதையில் நடிக்கும் போது, சிறந்த நடிப்பை வெளிப்படுத்த முடியும் என உணர்த்தியுள்ளார். நடிப்பில் நல்ல முன்னேற்றம். தொடர்ந்து முயற்சி செய்தால் அவரது தந்தை திரு. பங்கஜ் கபூர் போல சிறந்த நடிகராக உருவாக வாய்ப்புள்ளது.

கதாநாயகனின் காதலி அல்லது மனைவியை தான் திரைப்படத்தில் கதாநாயகி என்று கூற வேண்டிய அவசியமில்லை. இதில் நாயகனுக்கு அம்மாவாக வரும் தபு கதாநாயகியாக மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஒரு காட்சியில் கணவனின் தம்பியுடன் பாடி சிரித்து மகிழ்ச்சியாக இருக்கும் தருணத்தில் மகன் வந்து விட அந்த மகிழ்ச்சியை நொடிப்பொழிதில் சோகமாக மாற்றிக்கொண்டு, மகனிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் தடுமாறும் இடத்தில் அவரது அனுபவம் பேசுகிறது.

மகன் ,  கணவன் கானாமல் போன சில தினங்களில் அவரது தம்பியுடன் சல்லாபம் செய்கிறாயா இது இப்போது தான் ஆரம்பித்ததா அல்லது அவர் இருக்கும் போதே ஆரம்பித்ததா என்ற கேள்விக்கு பதில் சொல்லும் தருணத்தில் அவரது நடிப்பு அருமை.

நாயகனின் காதலியாக வரும் சரதா கபூர் Shraddha Kapoor தனக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார்.

கே.கே.மேனன் , இர்பான் கான் இருவருமே தங்களது பாத்திரத்தை மிகவும் சிறப்பாக செய்துள்ளனர்.

பங்கஜ் கபூரின் ஒளிப்பதிவு காஷ்மீரை மிக அழகாக நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது. இவ்வளவு அழகான நிலப்பரப்பு மனிதனின் வீம்பின் காரணமாகவும் சுய நலத்தின் காரணமாகவும் அரசியல் காரணங்களுக்காகவும் யுத்த பூமியாக இருப்பது மிகவும் வருத்தத்தை ஏற்ப்படுத்துகிறது.

பாடல்களும் இசையும் விசால் பரத்வாஜ் செய்துள்ளார். சற்று உருது வார்த்தைகள் கலந்த பாடல்கள்.

நார்வே நாட்டு நடன கலைஞரை கொண்டு வடிவமைக்கப்பட்ட நடன காட்சி நன்றாக உள்ளது.

மொத்த படமும் 54 நாட்களில் 37 கோடியில் கபூர், பரத்வாஜ் மற்றும் UTV நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. வணிக ரீதியில் வெற்றியடைந்துள்ளது.


கதைச்சுருக்கம்:

காயம் பட்ட தீவிரவாதிக்கு மருத்துவர் சிகிச்சையளிகிறார். மருதுவர் கைது செய்யப்படுகிறார். வீட்டை தகர்த்து தீவிரவாதி கொல்லப்படுகிறான். மருத்துவர் கானாமல் போகிறார். அவரை மகன் காவல் நிலையங்களிலும் முகாம்களிலும் தேடுகிறான்.

அவனது அம்மா சித்தாபாவுடன் உறவாடுவதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அம்மாவை நம்புவதா வெறுப்பதா அன்பு செலுத்துவதா கொல்வதா என குழம்புகிறான். ஆனால் அம்மா அவன் மீது அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறாள்.

ராணுவ அதிகாரியின் மகளை காதலிக்கிறான். தீவிரவாதி இயக்கத்தில் இருக்கும் ஒருவன் தன்னை சந்திக்கும் படி செய்தி அனுப்புகிறான். அவனும் சந்திக்கிறான். உன் அப்பாவுடன் சிறையில் இருந்தேன் என்றும் உன் அப்பா உன் சித்தப்பாவை பழி வாங்க சொன்னதாகவும் கூறுகிறான். உன் அம்மாவின் மனதை மாற்றி உன் சித்தப்பா அவளை அபகரித்துள்ளான் என்று கூறுகிறான். உன் அப்பா இறந்துவிட்டார் என்றும் உன் அப்பா இறப்பதற்க்கு காரணம் உன் சித்தப்பாவின் சதி தான் காரணம் என்றும் கூறுகிறான். துப்பாக்கி கொடுத்து உதவுகிறான்.

மகன் அம்மாவிடம் அப்பா இறந்து விட்டதை கூறுகிறான் இறந்தவருக்கு சடங்குகள் செய்யும் போது, சித்தப்பா விதவையை (அண்ணி) தான் மனந்து கொள்வதாக கூறி மணந்து கொள்கிறான்.

தான் சித்தப்பாவை கொல்ல நினைத்திருப்பதை காதலியிடம் சொல்ல அவள் எதேச்சையாக அவள் அப்பாவிடம் சொல்ல, ராணுவ அதிகாரியான அவளது தந்தை அவனது சித்தாப்பாவிடம் சொல்ல ( சித்தப்பா தேர்தலில் வெற்றி பெற்று MP ஆகி விடுகிறார்) அவன் சிறைபடுகிறான். அவனை மனநோய் மருத்துவமனையில் சேர்க்க முயற்சி மேற்க்கொள்ளப்படுகிறது. தப்பி விடுகிறான். சித்தப்பா அவனை கொல்ல ஏற்பாடு செய்கிறார். எல்லை கடந்து பயிற்சி எடுத்துக்கொண்டு வந்தால் உன் சித்தப்பாவை எளிதில் கொன்று விடலாம் என தீவிரவாதிகள் சொல்ல ஒப்புக்கொள்கிறான். அதை அம்மாவிடம் தொலை பேசி மூலம் தெரிவிக்கிறான். போவதற்க்கு முன்பு கடைசியாக ஒரு முறை பார்த்து விட்டு போ என அம்மா வேண்டுகிறார். ஒப்புக்கொள்கிறான்.

இந்த கட்டத்தில் காதலி இறந்து அவளை புதைக்கும் காட்சியை பார்க்கும் இவன் அங்கு செல்ல காதலியின் அண்ணன் சித்தாப்பாவுக்கு தகவல் கொடுக்க அவர் அங்கு வந்து அவனை கொல்ல முயற்சி செய்கிறார். இதற்கிடையில் மகனை சந்தித்து அவன் மனதை மாற்றுகிறேன் என்று அம்மா கூற ஒப்புக்கொள்ளப்படுகிறது. அம்மாவின் வேண்டுகோளை புறக்கணிக்கிறான். துப்பாக்கி சூடு நடைபெறுகிறது. தீவிரவாதிகள் அங்கு வர கடுமையான சண்டை நடைப்பெறுகிறது. அம்மா மனித வெடிகுண்டாக மாறி தன்னை மாய்த்து கொள்ள , சித்தாப்பா கால்களை இழந்து தவிக்கிறார். மகன் அவரை கொல்ல முயற்சிக்கிறான்

அப்பா பழி வாங்க சொன்னதை நினைவு படுத்திக்கொண்டு கொல்ல முயற்சி செய்யும் போது, பழிக்கு பழி வாங்குவதால் பிரச்சனை தீர்ந்து விடாது என்று அம்மா சொன்னதை நினைத்து கொண்டு கொல்லாமல் விட்டு விடுகிறான்.
. ========================================================================