இலக்கிய கூட்டம்::
அவை மரபுபடி, பேசுவதற்க்கு முன்பு அவையோருக்கு வண்க்கம் சொல்ல முவருமே தவறி விட்டனர். வேண்டிமென்றே செய்தார்களா அல்லது எதேட்சையாக நேர்ந்து விட்டதா என தெரியவில்லை. அல்லது இலக்கிய சந்திப்பில் இதுதான் மரபா என தெரியவில்லை.
நேற்று 13.04.2013 அன்று புதுதில்லியில், தில்லிகை
அமைப்பின் சார்பில் தில்லி தமிழ் சங்கத்தில் நடைபெற்ற இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சிக்கு
சென்றிருந்தேன். சுமார் 25 ஆண்டுகளுக்கு
பின்பு இது போன்ற கூட்டத்திற்க்கு சென்றேன். யாரும் தனிப்பட்ட
முறையில் அழைக்கவில்லை. முக நூலில் அழைப்பிதல் பார்த்து சென்றேன்.
தமிழ் சங்கத்தின்
பாரதி அரங்கம் நிரம்பி இருந்தது. (மொத்த இருக்கைகளே
50 தான்) அங்கு கூடியிருந்தவர்களில் ஒருவரையும்
எனக்கு தெரியாது. நிகழ்சி முடியும் வரை அங்கு இருந்தேன்.
மேடை அமைப்பு ஏதும்
இல்லை. பேச்சாளார், பார்வையாளர்
அனைவரும் ஒன்றாக அமர்ந்திருந்தது சிறப்பு.
ஊர் என்ற தலைப்பில்
நிகழ்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
1) திரு.ஜெயபால் அவர்கள் – தெருக்கூத்து பற்றி பேசினார்.
வெவ்வேறு ஊர்களில் நடத்தபடும் தெருகூத்து பற்றி பேசினார். மேடை தமிழ், பேச்சு தமிழ் நடைமுறையை பின்பற்றாமல் எளிய
முறையில் பேசியது சிறப்பு.
2) முனைவர் ராஜன் குறை
கிருஷ்ணன் – ஊருக்குள் சினிமா – சினிமாவுக்குள்
ஊர் என்பது குறித்து பேசினார். ரசிகனின் பார்வையில் சினிமா என்பது
போல அவரது பேச்சு அமைந்திருந்தது.
3) திருமதி.ஷமிம் அன்வர் அவர்கள் – இலக்கியத்தில் பயனித்த ஊர்கள்
என்ற தலைப்பில் பேசினார். குறிப்பிட்ட ஒரு எழுத்தாளரின் கதையில்
ஊர் எவ்வாரு விவரித்து கையாளாப்பட்டிருந்தது என்பது குறித்து விவரித்தார்.
4) திரு.தட்சணமூர்த்தியின் ஊர் என்ற தலைபில் அமைக்கப்பட்டிருந்த புகைபட கண்காட்சி சிறப்பாக
இருந்தது.
கலந்துரையாடல்
நிகழ்ச்சி சுமாராக இருந்த்து. அதற்கு காரணம்,
பேச்சாளார்களின் பேச்சு சிந்தணையை தூண்டும் அளவுக்கு இல்லை என்பதும்
காரணமாக இருக்கலாம்.
அணைவரும் ஒதுக்கப்பட்ட
நேரத்திற்க்குள் அவர்களது தலைப்பில் மட்டுமே பேசியது சிறப்பு. அனைத்து பேச்சாளார்களும் இயனற அளவு தமிழ் மொழியிலேயே பேசியது
சிறப்பு. சில இடங்களில் ஆங்கில சொற்கள் பயன்படுத்தப்பட்டாலும்,
இந்தி மொழி வார்த்தைகள் பயன்படுத்தப்படவில்லை என்பது சிறப்பு.
தமிழ் பேச்சாளார்கள், எழுத்தாளார்கள் அனைவரும் வேற்று மொழி கலப்பில்லாமல் தமிழ் மொழியை
மட்டுமே உபயோகிக்க வேண்டும்மென்பதே எனது விருப்பம்.
அவை மரபுபடி, பேசுவதற்க்கு முன்பு அவையோருக்கு வண்க்கம் சொல்ல முவருமே தவறி விட்டனர். வேண்டிமென்றே செய்தார்களா அல்லது எதேட்சையாக நேர்ந்து விட்டதா என தெரியவில்லை. அல்லது இலக்கிய சந்திப்பில் இதுதான் மரபா என தெரியவில்லை.
இந்நிகழ்ச்சியில்,
அரசியல்வாதிகள், சினிமாகாரர்கள் வேறு எந்த பிரபலங்களும்
கலந்து கொள்ளவில்லை. எனினும் நான் ஏன் சென்றேன் என்று யோசிக்கிறேன்.
ஒரு வேளை , அழைபிதழின் கவர்ச்சியை கண்டு சென்றேனோ.
ஆம். அதுவும் ஒரு காரணம். அழைப்பிதழ் வடிவமைபாளருக்கு வாழ்த்துக்கள்.
இக்கூட்டத்திற்க்கு பின்பு, இலக்கியம் என்றால் என்ன என்ற கேள்வி என்னுள்
எழுந்துள்ளது. விடை தேடுகிறேன்.
தில்லிகை என்பதன்
பொருள் என்ன?
No comments:
Post a Comment