Tuesday 30 September 2014

ஜீவா - திரைப்படம்



ஜீவாதிரை விமர்சனம்


11வது படிக்கும் மாணவனுக்கும் பக்கத்து வீட்டில் பள்ளியில் படிக்கும் மாணவிக்கும் காதல். முதலில் அண்ணா என்று கூப்பிடும் பெண் சில காட்சிகளுக்கு பிறகு அவனை காதலிக்க ஆரம்பிக்கிறாள். ஊர் சுற்றுவது, பாடல் காட்சிகள் வழக்கம் போல் உள்ளது. பெற்றோருக்கு தெரிகிறது. பிரிகிறார்கள்.

தோல்வியை சந்திக்கும் மாணவன் குடிக்க போகிறான். அதை மாற்ற அவன் விரும்பும் கிரிகெட் விளையாட அவனை கிளப்பில் சேர்க்கிறார்கள்.

கிரிகெட் கிளப் நண்பன் தன் காதலை ஒரு பெண்ணிடம் சொல்ல இவனுடன் போகும் போது, அந்த பென் இவனை கல்யாணம் செய்து கொள்ள விரும்புவதாக சொல்ல, அதை மறுத்து விடுகிறான். பழைய காதலியை தேடி பேசுகிறான்.

இதற்கிடையில் நன்றாக விளையாடி ரஞ்சி அணியில் பெயர் சேர்க்கப்படுகிறது. பின்பு நீக்கப்படுகிறது. நண்பன் கிளப் தேர்வாளர்களை கடுமையாக விமர்சிக்கிறான். அவர்கள் சமூகத்தை சார்ந்தவர்களுக்கு மட்டும் தான் வாய்ப்பளிக்கப்படுகிறது மற்ற சமூகத்தினருக்கும் மறுக்கப்படுகிறது என்று வாதிடுகிறான். மனம் உடைந்த நண்பன் தற்கொலை செய்து கொள்கிறான்.

இவனது ஆட்டத்தை பார்த்த ராஜஸ்தான் ஆணி வாய்ப்பு கொடுக்கிறது. IPL விளையாடுகிறான்.
==========================================================================
இந்த படத்தில் விளையாட்டில் ஜாதி பார்த்து தான் வீர்ர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்று கூறிப்பிட்டிருப்பதால், இந்த படம் பாரட்டப்பட்டுள்ளது.

தேர்வு குழ தலைவர் பிராமணர் என்பதை அவர் நெற்றியில் உள்ள நாமத்தின் மூலம் அடையாளப்படுத்துகிறார். தேர்வு செய்யப்படாத வீரர் எந்த சமூகத்தை சேர்ந்தவர் என்பதை குறிப்பிடவில்லை. இவரும் மேல் ஜாதியை சேர்ந்தவராக ஏன் இருக்க கூடாது. பிராமணர் மட்டுமே ஏன் மேல் ஜாதி என்று கூற வேண்டும். சரி. வீரர் கீழ் ஜாதிகாரர் SC என்றே வைத்துக்கொள்வோம்.

மேல் ஜாதிகார பிரமணர் மட்டுமே ஜாதி பார்த்து வாய்ப்பு கொடுத்தார் என்று ஏன் குறிப்பிட வேண்டும் வேறு ஒரு மேல் ஜாதிகாரரை பெயரை அடையாளப்படுத்தி  ஏன் அறிமுகப்படுத்தியிருக்க கூடாது. பிராமணர்கள்  அவர்கள் மீது இது போன்ற எத்தனை விமர்சன்ங்களை வைத்தாலும் எதிர்வினை செய்து காலத்தை வீனாக்குவதில்லை.

ராஜஸ்தான் அணியில் இவர் சிபாரிசின் பேரில் தான் சேர்த்து கொள்ளப்படுகிறார். அது போன்றே இவரை சேர்த்துக்கொள்ளாத தமிழக அணி பல நிர்பந்தங்களுக்கு அடிபணிந்து பலரை சேர்ப்பதால் இவர் போன்றவர்கள் வாய்ப்பு இழக்க நேரிடுகிறது. இவர் ராஜஸ்தான் அணியில் சேரும் போது ராஜஸ்தான் மாநிலத்தை சார்ந்த ஒருவர் வாய்பை இழக்கிறார். அவரும் ஏதேனும் குற்றம் சாட்ட முடியும்.இதை இந்த கண்ணோட்டத்திலும் பார்க்கலாம். இவை எல்லாம் நடைப்பெறுகிறது என்றே வைத்துக்கொள்ளலாம்.

வேறு மொழி பேசும் வேறு மாநிலத்தவர் வாய்ப்பு கொடுத்திருப்பது வேறு மதத்தை சார்ந்தவரின் சிபாரிசுன் பேரில். அப்படிப்பட்டவரை புகழ்ந்து பாரட்டி சில வசனங்களை சேர்த்திருக்கலாமே. சேர்க்க மாட்டார்கள். வேற்று மொழி பேசுபவரை வேற்று மதத்தை சேர்ந்தவரை பாரட்டினால் தமிழ் உணர்வாளர்கள் பொங்கி எழுவார்கள்.

ஊருக்கு இழைத்தவன் யாரோ அவனை குற்றம் சொல்லுவது எளிது என்ற காரணத்தால் பிராமண சமுதாயத்தை சாடியுள்ளார்கள். இது ஜாதிய வெறியை காட்டும் படம் தான். உயர் ஜாதிகாரனின் ஜாதியை குறை கூறுவதன் மூலம் கீழ் ஜாதிகாரர்கள் அவர்களது ஜாதியை தூக்கி பிடிக்கிறார்கள். கீழ் ஜாதிகாரர்கள் பல பேர் திறமை காரணமாகவும், சலுகைகள் காரணமாகவும் சிறந்த நிலையை அடைந்துள்ளனர். அவர்கள் தங்கள் ஜாதியை சார்ந்தவர்கள், சமூகத்தில் முன்னேற ஏன் வழி காட்டவில்லை. பணத்துக்கும் பதவிக்கும் ஆசைப்பட்டு, யாரை குறை கூறுகிறார்களோ அவர்களை போலவே நடந்து கொள்கிறார்கள் . பல சமயம் அவர்களுக்கு இருக்கும் தாழ்வு மனப்பான்மை காரணமாகவும் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள்.

இன்னும் எத்தனை காலங்களுக்கு தான் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் காதலிப்பதாக காட்டுவார்கள். பள்ளி சீருடையில் இவர்கள் ஊர் சுற்றுகிறார்கள். முத்தமிட விரும்புகிறார்கள்.

திரைப்படங்களில் பள்ளி மாணவர்களின் காதலை காண்பிப்பதால் தான் சமூகத்தில் இது போன்ற காதலும் காமமும் நடைப்பெறுகிறது என கூறினால் சமூகத்தில் நடப்பதை தான் கான்பிக்கிறோம் என்று வாதாடுவார்கள். விவாதங்களுக்கு முடிவே இருக்காது. மேலும், திரைப்படத்தை பொழுது போக்காக பார்த்து விட்டு போக வேண்டுமே தவிர தீவிரமாக ஆராய கூடாது என சப்பை கட்டு கட்டுவார்கள்.

அப்படியானல் நான் சாதிய கொடுமைகளை பற்றி திரைப்படத்தில் கருத்து கூறியுள்ளேன் என்று சாதி ஒழிப்பு பிரச்சாரம் செய்வது எவ்வளவு போலித்தனமான விவாதம். ஜாதியத்தை தூக்கி பிடிப்பவர்கள் தான், ஜாதி ஒழிப்பு என்று விசயத்தை தங்களுக்கு சாதகமாக பயன் படுத்தி கொள்கிறார்கள்.

ஜாதியத்தை பேசும் படங்கள் வெற்றிகரமாக அமைய , சமூகம் ஜாதிய பாகுபாட்டை விரும்புகிறது என்று காட்டுகிறது.  ஜாதி ஒழிப்பு என்று பேசுபவர்கள் தங்களது ஜாதியில் பிரபலமாக உயர முடியாத நிலையில் ஜாதி எதிர்ப்பு என்ற முகமூடியில் பிரபலமாக முயற்சி செய்கின்றனர். மீண்டும் மீண்டும் திரைப்படங்களில் ஜாதியத்தை பேச காரணம் என்ன. அது நன்றாக விரும்பி பேசப்படும் விசயமாக இருப்பதுடன் அதை கட்டி காக்கும் சமுதாயத்தில் நன்றாக விலை போகும் என்பது தான் காரணம்.

உண்மையிலேயே ஜாதி பார்க்க தேவையில்லை என்பவர்கள் தங்களவில் ஜாதி பார்க்காமல் காரியம் செய்தாலே போதுமானது. பிறருக்கு எந்த வழியிலும் போதிக்க தேவையில்லை. பிறர் போதித்து ஒருவரும் திருந்தியதில்லை. தாங்களாவே திருந்தினால் உண்டு. வேறு ஒன்றும் செய்ய இயலாத நிலையில் ஜாதி மறுப்பு கொள்கையை ஏற்றுக்கொள்பவர்கள் தாங்கள் ஜாதி ஒழிப்பு நம்பிக்கை வைத்திருப்பதாகவோ, ஜாதி ஒழிப்புக்கு பாடு படுவதாகவோ கூறினால் அது சுத்த ஏமாற்று வேலை.

இன்றைய இளைய சமுதாயத்துக்கு குறிப்பாக நகரத்தில் வசிப்பவர்களுக்கு ஜாதி என்றால் என்னெவென்று தெரியாது. பாகுபாடு பார்ப்பதில்லை. அதன் வீரியம் என்ன அதனால் ஒரு குறிப்பிட்ட சமூகம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பது தெரியாது. திரைப்படங்கள் அவற்றை சொல்வதன் மூலமாக தான் அவர்கள் அறிந்து கொள்கிறார்கள் அவர்களும் ஜாதியை கடைப்பிடிக்க ஆரம்பிக்கிறார்கள். இவர்கள் சொல்லாமல் இருந்தால் கனிசமான இளைய சமூதாயத்துக்கு ஜாதி வேறு பாடு தெரியாது.

ஜாதிய ஏற்ற தாழ்வுகளையும் அதன் கொடுமைகளையும் மக்களுக்கு புரிய வைத்து அதை நீக்க பாடுபடுகிறோம் என்பது அயோக்கியதனம். இவர்கள் புரிய வைப்பதன் மூலம் ஜாதி ஒழிக்க முடியாது. மேலும் ஜாதியை பற்றி தெரியாதவர்களுக்கு கூட ஜாதி என்று ஒன்று உண்டு என்பதை சொல்லி கொடுக்கிறார்கள். இதன் மூலம் ஜாதி பற்றில்லாதவர்களை கூட ஜாதி அபிமானியாக மாற்றுகிறார்கள்.

இவர்கள ஜாதிய கொடுமைகள் என்று கூறாமல் இருந்தாலே , சமூகத்தில் ஜாதி வேறுபாடு ஒழிந்து விடும்.

ஜாதி வேறுபாட்டால் பாதிக்கப்படுகிறார்கள் என்றால் நேரடியாக களத்தில் இறங்கி அவர்களுக்கு உதவி செய்யலாம் அல்லது ஜாதிய கொடுமைகளை செய்யும் அமைப்புகளிடம் நேரடியாக களத்தில் இறங்கி தீர்வு கானலாம்.

இன்றைக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்த மாநில முதலமைச்சர் கோயிலுக்கு சென்று வந்த பிறகு கோயில் சுத்தப்படுத்தப்படுகிறது. இதை களத்தில் இறங்கி தான் சரி செய்ய வேண்டுமே ஒழிய, திரைப்படம் எடுப்பதாலோ அல்லது பத்திரிக்கைகளில் எழுதுவதாலோ ஒழித்து விட முடியாது.

இதை படிப்பவர்கள் இவ்வளவு நீளமாக எழுதி நீ ஜாதியை ஒழித்து விட போகிறாயா என் கேட்கலாம். என்னை பொறுத்த அளவில் ஜாதி ஒழிய வேண்டும் என்று எப்போதும் கூறவில்லை அதே சமயம் ஜாதி வெறி பிடித்து அலைய வேண்டாம் என்பதே எனது நிலை. சமரசம் செய்து வாழ பழகி கொண்டவன்.

காதலில் தோற்றவன் சாராய கடைக்கு போவதை எல்லா படத்திலும் கான்பிக்கிறார்கள்  தேவதாஸ் படத்தில் ஆரம்பித்து இந்த படம் வரை இதை தான் சொல்கிறது. காதலில் தோற்றவர்கள் அனைவரும் குடித்து தான் துனபத்தை மறக்கிறார்களா ? துன்பத்தை மறக்க வேறு வழியில்லையா. குடிப்பது தான் காதல் தோல்வியை மறக்க ஒரே வழி என்று தீர்மானித்து அதை திரைப்படத்தின் மூலமாக சொல்வதால் தான் இன்றைக்கு இளைய சமுதாயம் டாஸ்மாக் கடைகளில் அலைமோதுகிறது. இவர்கள் தான் மது ஒழிப்பு குறித்தும் பேசுகிறார்கள் . அவ்வாறு பேச எழுத கூட இவர்களுக்கு மது தேவைப்படுகிறது.

 பெண் காதலை சொல்வதாகட்டும் , அவனை நெருங்குவதில் பெண் எடுக்கும் முயற்சிகளை கான்பித்து விட்டு , பிரச்சனை ஏற்ப்படும் போது ஆன் தவறு செய்ய முயற்சிப்பதாக காட்டுவது, பெண்மையை போற்றுவதாக கருதுகிறார்கள். பெண் காதலிலும் காமத்துக்கும் முயற்சிப்பதாக கான்பித்தால் பெண்ணியவாதிகளின் எதிரிப்புக்கு ஆளாக வேண்டும் என்ற பயமா. இந்த போலி கலாச்சார காப்பாளர்கள் எப்போது திருந்துவார்கள் என தெரியவில்லை.



மத்திய தர வர்கத்திற்க்கு விளையாட்டு தேவையில்லை என்பது உண்மை. படிப்பு தான் வாழ்க்கைக்கு உதவும் என்ற வாதம் சரியானது. லட்சக்கனக்கான இளைஞர்கள் இன்றைக்கும் விளையாட்டு துறையின் முன்னேற துடிக்கிறார்கள். அதில் சிலர் மட்டுமே வெற்றி பெற முடிகிறது. அந்த வெற்றி பெறும் நபராக நான் இருப்பேன் என்பது தான் அனைவரது கனவும். ஆனால் அது நடைமுறை சாத்தியமில்லை.

விளையாட்டுக்காக படிப்படை புறக்கனித்தவன் விளையாடி வெற்றி பெற முடியாமல் சமூகத்தில் தள்ளப்படும் போது, படிப்பு இல்லாமல் அவனால் சமூகத்தில் போரடி வெற்றி பெற முடிவதில்லை. வசதி படைத்தவர்கள் விளையாட்டை தேர்ந்தெடுத்தால், விளையாட்டு துறையில் வெற்றி பெற முடியவில்லையென்றாலும் , தங்களிடமிருக்கும் தொழில் வியாபாரம் மூலம் சமூகத்தில் நிலை பெற முடியும். வசதி படைத்தவனுக்கும் நடுத்தர வர்கத்துக்கு வித்தியாசம் இது தான். இதை நினைத்து, தோல்வியை நினைத்து கொண்டு களம் இறங்கினால், தோல்வி தான் கிடைக்கும் , வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் களம் இறங்க வேண்டும் என்று தத்துவம் பேசலாம். முதல் இடம் இரண்டாம் இடம் என்பது சிலருக்கு மட்டும் தான். மற்றவர்கள் ஒதுக்கப்படுகிறார்கள். அங்கு  ஒதுக்கப்பட்ட பின் மீன்டும் முதலிலிருந்து வேறு துறையில் முயற்சிப்பது கடினம். அது காலம் கடந்த உழைப்பு.

ஒரு காதல் பாடல் கேட்கும் படி உள்ளது. குடித்து விட்டு பாடும் பாடல் அபத்தம். ஒலிப்பதிவாளருக்கு ஒளிப்பதிவாளருக்கு தனித்திறமை காட்ட எந்த வாய்ப்பும் இல்லை.

நடிகர் விஸ்ணு பல படங்கள் நடித்து அனுபவம் பெற்றுள்ளார். நடிப்பில் முன்னேற்றம் தெரிகிறது.
 


மலர் மஞ்சம் - தி.ஜானகிராமன்













எழுத்தாளர் தி.ஜானகிராமன் எழுதிய நாவல்களில் “ மலர் மஞ்சம் “ என்ற நாவலும் ஒன்று. 1961ஆம் ஆண்டு எழுதப்பட்ட 600 பக்கங்கள் கொண்ட நாவல்.

கிராமத்தையும் நகரத்தையும் இனைத்து எழுதிய நாவல். பெண்ணின் மனதில் சூழ்நிலை காரணமாக ஏற்ப்படும் மன மாறுதல்கள விவரிக்கும் கதை. வழக்கமான எளிய நடை. தொடர்ந்து படிக்கும் ஆவலை தூண்டும் நாவல்.

எளிமையாக சிக்கல் இல்லாமல் அனைவரும் விரும்பி படிக்கும் நாவல் என்பதை தவிர வேறு சிறப்பு அம்சங்கள் ஏதும் இல்லை.


மலர் மஞ்சம் – கதை சுருக்கம்:

 

ராமய்யாவின் நாலவது மனைவியின் பிரசவ நிகழ்ச்சியிலிருந்து கதை ஆரம்பிக்கிறது. முதல் மூன்று மனைவிகளும் இறந்து விட்டனர். அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. நாலாவது மனைவி அகிலான்டம் பெண் குழந்தை பெறுகிறாள். ராமையா பெண் குழந்தையா என்று கூறுகிறார். மனைவி அகிலான்டம் பெண் குழந்தை என்றால் என்ன நம்ம சொர்ணக்கா மகனுக்கு கட்டி கொடுத்து விடலாம் என்று சொல்லி அங்கேயே நிச்சயம் செய்து விடுகின்றனர். பிறந்த குழந்தை கண் விழிப்பதற்க்கு முன்பே குழந்தைக்கு கணவன் நிச்சயம் செய்யப்படுகிறது. மனைவி அகிலான்டம் அப்போதே இறந்து விடுகிறாள்,

குழந்தை பாலம்பிகை என்ற பெயரில் மிக அழகாகவும், புத்திசாலியாகவும் வளர்கிறது.

ராமையாவின் எதிர்வீட்டில் வசிப்பவர் வையன்னா ஊர் வம்பு பேசி அங்குள்ள மக்களுக்கு தொந்தரவு கொடுப்பவர். ராமையாவுக்கும் தொந்தரவு கொடுப்பவர்.

ராமையா கூத்து கத்து கொடுத்து ஊரில் கூத்து நடத்துவார். ஊரில் அவருக்கு சொந்தமான தரிசு நிலத்தை அவர் ஒருவரே சரி செய்து, சோலையா மாற்றி அதில்  ஒரு குடிசையை கட்டிக்கொண்டு பகல் முழுக்க அங்கு வாழ்பவர். அவரது சொந்தக்காரர் வடிவு என்ற பெண்மணி வீட்டோடு இருந்து கொண்டு குழந்தையை வளர்க்கிறார்.

வையன்னா தன் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் பெண் தங்கம்மாளிடம் பல சொத்துகள் கொடுப்பதாக கூறி உறவு வைத்துக்கொள்கிறார். பின்பு ஏமாற்றி விடுகிறார். அவள் வழக்கு தொடுக்கிறாள். ராமையா சாட்சி சொல்கிறார். வையன்னாவுக்கு தண்டனை கிடைக்கிறது. வையன்னா ராமையாவின் தோட்டத்தை அழித்து விடுகிறார்.

தனது நிலபுலங்களை பழகியவர்களை பார்த்துக்கொள்ளும்படி சொல்லி விட்டு சென்னை வருகிறார். அவரது கிராமத்திலிருந்து வந்து ஏற்கனவே சென்னையில் வாழும் நாயக்கர் அவர்க்கு பலரை அறிமுகம் செய்து வைக்கிறார். அதில் வக்கீலும் ஒருவர். அவரது பேரன் ராஜா.

பாலம்பிகை வக்கீல் சொல்லியபடி பரதநாட்டியம் கற்றுக்கொள்கிறாள். சொர்னக்காவின் மகன் தங்கராஜ் ( குழந்தையாக இருக்கும் போது நிச்சியக்கப்பட்டவன்) கல்லூரியில் படிக்கிறான். ராஜாவும் வேறு கல்லூரியில் படிக்கிறான்.

பாலம்பிகைக்கு தங்கராஜ் பிடித்திருக்கிறது. திருமணம் செய்வதில் ஆட்சேபனையில்லை. அதே சமயம் ராஜா மீது ஈர்ப்பு ஏற்ப்படுகிறது.

நாயக்கரின் மகன் நாடகம் நடத்துவதாக கூறி சொத்தை அழித்து கடன்காரன் ஆகிறான். அவனை சந்திக்கும் பாலம்பிகை தான் நடனம் ஆடி அவனது கடனை அடைப்பதாக கூறுகிறாள். அதற்கு முன்னோட்டமாக ஊரில் உள்ள பெரிய மனிதர்கள் முன்பு நடனம் ஆடுகிறாள். தந்தை ராமையாவுக்கு தெரியாமல் பார்த்துக்கொள்கிறாள்.

பின்பு ராமையாவுக்கும் ஊருக்கும் தெரிகிறது. ராமையா எதிர்ப்பு சொல்லாமல் ஆதரிக்கிறார். வையன்னா தேவதாசியா என்று கேட்கிறார். வையன்னா கொலை செய்யப்படுகிறார்.  அவரால் கெடுக்கப்பட்ட பெண் அந்த நேரம் கானாமல் போகிறார்.

பாலம்பிகை தான் ராஜாவை விரும்புவதாக தந்டையிடம் கூறுகிறாள். ராமையா கிராமத்தில் உள்ள சொத்துக்களை விற்று நாயக்கர் மகன் கடனை அடைத்து விடுவதாகவும், கடனை அடைக்க அவள் நாட்டியம் ஆட வேண்டாம் என்று கூறி அவ்வாறே செய்கிறார்.

பாலம்பிகையிடம் தங்கராஜ் வையன்னாவை தான் தான் கொலை செய்ததாக கூறுகிறான். உன்னை தேவதாசி என்று கூறியதால், கோபம் கொண்டு கொலை செய்ததாக கூறுகிறான். நீ ராஜாவை விரும்புவதாக இருந்தால் அவனை திருமணம் செய்து கொள் என்கிறான். 

பாலாம்பிகை தங்கராஜை திருமணம் செய்து கொள்கிறாள். ராஜா வேறு ஊருக்கு வேலைக்கு போய் விடுகிறான்.

காசியிலிருந்து ராமையாவுக்கு கடிதம் வருகிறது, அங்கு அக்கா வடிவுடன் செல்கிறார். நாயக்கர் அங்கு சந்நியாசியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். வையன்னாவை கொலை செய்ததாக கூறப்படும் பெண் அங்கு இருக்கிறாள். நாயக்கர் அங்கு மரணமடைகிறார். அவர் விருப்பப்படி ராமையா அவருக்கு இறுதி சடங்கு செய்கிறார்.

Monday 29 September 2014

மோகமுள் - புத்தக ஆய்வு



எழுத்தாளர் திரு. தி.ஜானகிராமன் சக்தி வைத்தியம் என்ற சிறுகதைத் தொகுப்புக்காக தமிழுக்கான சாகித்ய அகாதமி பரிசு பெற்றவர். அவர் எழுதிய கதைகளில் மிகவும் புகழ் பெற்றது “ மோகமுள் “

இந்த கதை திரைப்படமாகவும் வெளி வந்துள்ளது.
1970களின் ஆரம்ப கால கட்டத்தில் எழுதப்பட்ட நாவல். கதை நடக்கும் காலம் இரண்டாம் உலக போர் நடக்கும் கால கட்டம்.

கிராமிய கதை நகர கதை என்று பிரிக்க முடியாது. குறிப்பிட்ட இனம், தொழில் சார்ந்த கதையல்ல. குறிப்பிட்ட இன மக்களின் வட்டார வழக்கில் எழுதப்பட்டதல்ல. ஆனாலும் மிக சில இடங்களில் பிராமண மொழி வருகிறது.

கதாபாத்திரங்கள் நேரடி உரையாடல்களின் மூலமாகவும், இவராகவும் கதையை நகர்த்தி செல்கிறார். 850 பக்கங்கள் கொண்ட நாவல். 

கதையில் எந்த போதனையும் சொல்லவில்லை. 20 வயது இளைஞனுக்கு 30 வயது பெண்ணிடம் ஏற்ப்படும் ஈர்ப்பு . அவனது ஈர்ப்பு அவனது 28 வயதில் அந்த பெண்ணுடன் “ உறவு “ கொள்வதுடன் முடிகிறது.

சமூகத்தில் எல்லா கால கட்டங்களிலும் இது போன்ற உறவுகள் இருக்கிறது. வெளிப்படையாக யாரும் சொல்லிக் கொள்வதில்லை. 1970ல் இதை வெளிப்படையாக கதையாக எழுதியிருப்பதால் மிகவும் பிரபலமடைந்துள்ளது. இந்த உறவை சொல்ல , கிட்ட தட்ட 700 பக்கங்கள் கதையை இழுத்து வந்து அவர்களிடையே உறவு ஏற்ப்பட்டதை சொல்கிறார்.

சமூகம் அங்கீகரிக்காத உறவை வாசகனுக்கு சொல்லி எற்க வைக்க 700 பக்கத்திற்க்கு சூழ்நிலைய உருவாக்கி இறுதியில் அந்த உறவை வாசகனை ஏற்க வைக்கிறார்.

அனைத்து கதாபாத்திரங்களையும் மனதில் பதிய வைக்கும் வகையில் சரளமான எளிய நடையில் கதையை நகர்த்தி செல்கிறார். தேவயற்ற வர்ணனைகள் கிடையாது.

கதை எழுதப்பட்ட காலத்தில் இது முற்போக்கு கதையாக கருதப்பட்டதால் மிகவும் பிரபலமடைந்துள்ளது. இன்றைய கால கட்டதில், காதலும் காமமும் பொது வெளியில் தாரளமாக கிடைப்பதால் இன்றைய வாசகனுக்கு புதுமையாக தெரிய வாய்ப்பில்லை. இது போன்ற கதைகளையும் நிகழ்வுகளையும் நேரிடையாக பார்க்க முடிகிறது.

மோகமுள் – தி. ஜானகிராமன் – கதை சுருக்கம்



 

பாபு – 20 வயது கல்லூரி மாணவர். இவரது அம்மா அப்பா மற்றும் விதவை அக்கா பாபநாசத்தில் வாழ்பவர்கள்

பாபுவின் அப்பாவின் சிநேகிதர் சுப்புரமணி – அவருக்கு இரண்டு குடும்பங்கள். முதல் மனைவி அவரது வாரிசுகள் கிராமத்தில் வசிப்பவர்கள்.

இரண்டாவது குடும்பம் – மனைவி பார்வதி மற்றும் மகள் யமுனா. இவரகள் மராட்டியர்கள் இரண்டு குடும்பங்களும் தனித்தனியாக வாழ்ந்தாலும் , இரண்டையும் காப்பாற்றுகிறார். 

பாபுவின் அப்பா வைத்தி , சுப்புரமனியத்தின் விவசாய நிலங்களை பார்த்துக் கொள்கிறார். வைத்தியின் குடும்பமும் பார்வதியின் குடும்பமும் ஒருவருக்கொருவர் நன்றாக அறிந்தவர்கள்.

பாபுவின் உயிர் நண்பன் ராஜம்.

பாபு கல்லூரியில் படிக்கிறான். யமுனா குடும்பமும் அதே ஊரில் இருக்கிறது. இருவருக்கும் வயது வித்தியாசம் 10 ஆண்டுகள். பாபுவுக்கு 20 வயது. யமுனாவுக்கு 30 வயது. 

பாபுவுக்கு யமுனா மீது ஈர்ப்பு வருகிறது. நண்பன் ராஜத்திடம் சொல்கிறான். எதையும் ஆராய்ந்து அறிவுரை சொல்லும் ராஜம் இந்த எண்ணம் வேண்டாம் என்கிறான். அவன் பெண்களை தெய்வமாக நினைக்கிறான். ( ஒரு முறை தவறான எண்ணத்துடன் ஒரு பெண்ணை அனுக, அவள் கூறும் அறிவுரை மூலம் மாறியவன்)

அதே ஊரில் இசை மேதை ஒருவர் இருக்கிறார். அவரிடம் பாபு இசை கற்றுக்கொள்கிறான்.

பாபு தங்கியிருக்கும் வீட்டிற்க்கு பக்கத்து வீட்டில் ஒரு பெரியவர் இளம் பெண்ணை திருமணம் செய்து குடியேறுகிறார். இளம் பெண் பாபுவுடன் மையல் கொண்டு திருட்டு தனமாக மொட்டை மாடி வழியாக வந்து பாபுவை கட்டாயப்படுத்தி உறவு கொள்கிறாள். இதை ராஜத்திடம் சொல்கிறான். அந்த பெண் தொடர்ந்து உறவு கொள்ள முயற்சிக்கையில் பாபு மறுத்து விடுகிறான். அவள் தற்கொலை செய்து கொள்கிறாள்.

யமுனாவுக்கு திருமணம் தடைப்பட்டுக்கொண்டேயிருக்கிறது. அந்த நேரம் பாபு யமுனாவிடம் தனது காதலை சொல்கிறான். அவள் மறுத்து விடுகிறாள். இதிலிருந்து மீள இசைப் பயிற்சியில் கவனம் செலுத்துகிறான். யமுனாவை சந்திப்பு குறைகிறது. வட இந்திய இந்துஸ்தானி பாடகர்கள் வருகிறார்கள். பாபு அவர்களது திறமையை கண்டு வியக்கிறான். அவர்களிடம் இசை கற்றுக்கொள்ள வேண்டும் என விரும்புகிறான். அவர்கள் எப்போது வேன்டுமானலும் பூனா வந்து இசையை கற்கலாம் என கூறுகிறார்கள்.

இந்த நிலையில் யமுனாவின் தந்தை சுப்புரமனி இறந்து விடுகிறார். அவரது மகன் யமுனா குடும்பத்திற்க்கு  தொடர்ந்து உதவி செய்ய மறுத்து விடுகிறான். இவர்கள் தங்களிடமிருக்கும் நகைகளை விற்று வாழ்க்கையை ஓட்டுகின்றனர்.

கல்லூரி படிப்பையும் இசை பயிற்ச்சியையும் முடித்த பின்பு சென்னையில் இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலை செய்கிறான். அங்கு யமுனா பாபுவை தேடி வருகிறாள். அவளது அம்மா திருமணம் செய்து கொள்ளாமல் ஒரு பணக்காரருக்கு மனைவியாக இருக்கும் படி வற்ப்புறுத்துவதால் சென்னை வந்துள்ளாள். பாபு அவளை ஒரு சமூக சேவை நிறுவனத்தில் சேர்த்து விடுகிறான்.

பாபுவுக்கு காய்ச்சல் வருகிறது. அவனுக்கு உதவி செய்ய யமுனா வருகிறாள். பாபு மீண்டும் தனது ஆசையை கூறுகிறான். அன்று இரவு அவர்கள் உடல் உறவு கொள்கிறார்கள். இப்போது பாபுவுக்கு வயது 28 யமுனாவுக்கு 40 யமுனா இதற்கு தானே ஆசைப்பட்டாய் என்று பாபுவை திரும்ப திரும்ப கேட்கிறாள். தான் இவைகளை கடந்து விட்டதாக கூறுகிறாள் 

வேலையில் திருப்தியில்லாமல் விட்டு விடுகிறான். பூனா சென்று இந்துஸ்தானி இசை கற்க விரும்பி அவருக்கு கடிதம் எழுதுகிறான். அவர் இசையை கற்க நாலு வருடத்திற்க்கு வர வேண்டும் என்று கூறுகிறார். ஒப்புக்கொண்டு கடிதம் எழுதுகிறான். கிராமத்திற்க்கு சென்று அம்மா அப்பாவிடம் விடை பெறுகிறான்.

புகை வண்டி நிலையத்தில் யமுனா வழியனுப்ப வருகிறாள். பாபுவுடன் இருக்கும் நண்பர் யார் என கேட்கிறார். வயதான பெண்ணாக இருக்கிறாள் அவளது கணவன் எங்கே என கேட்கிறார். பாபு அவளுடைய கணவனுடன் தான் பேசிக்கொண்டிருக்கிறிர்கள் என்று கூறுகிறான்.

யமுனா பாபுவுடன் தனியாக பேசும் போது, எல்லா விவரங்களையும் பாபுவின் அப்பாவுக்கு கடிதம் மூலம் தெரிவித்து விட்டதாக கூறுகிறாள்.

இத்துடன் கதை நிறைவு பெறுகிறது.


 http://upload.wikimedia.org/wikipedia/ta/c/c4/TJanakiraman.jpg

Thursday 25 September 2014

மங்கல்யான் - செவ்வாய் கிரகம்



நவகிரகங்கள் : தேவந்திரா தேவந்திரா ,என்ன செய்கிறாய் எங்கள் நிலைமையை பார்த்தாயா ? இனி எங்கள் கதி என்ன ?

தேவந்திரன் : அட, சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ராகு , கேது எல்லோரும் ஒன்றாக வந்துள்ளீர்கள். என்ன விசயம் ஏன் இந்த கூச்சல்

செவ்வாய் : என்ன இந்திரா ஒன்றும் தெரியாதது போல் கேட்கிறாய். பூமியிலிருந்து என்னை வேவு பார்க்க செயற்கைகோள் வந்துள்ளது

தேவந்திரன்: சரி , வரட்டும் அதற்கென்ன. உன்னை சுற்றி விட்டு சில வருடங்கள்  கழித்து கீழே விழ போகிறது.

புதன்: என்ன இந்திரா விளையாடுகிறாயா ? இன்று வேவு பார்த்து விட்டு சென்று பின்பு என் இடத்தில் வந்து குடியேறுவார்கள். பிறகு என்னுடைய அதிகாரத்தில் உள்ள இடம் என்னை விட்டு போய்விடும்.

தேவந்திரன்: அது எப்படி போய்விடும். அவர்கள் வந்து எப்படி குடியேறுவார்கள். அவர்கள் தான் உங்களை கட்டம் கட்டி, நீங்கள் அங்குமிங்கும் போவதை வைத்து அவர்கள் வாழ்க்கையை கனித்து விளையாடுகிறார்களே. அப்படியிருக்கும் போது, அவர்கள் இங்கு எப்படி வர முடியும்.

புதன்: தேவந்திரன், எல்லாம் தெரிந்தும் ஒன்றும் தெரியாதது போல் பேசுகிறார். முதலில் சந்திரனிடம் வந்தார்கள். இப்போது, பூலோக மக்களை குடியேற்ற, ஆட்களை அனுப்ப ஆயுத்தம் செய்து கொண்டிருக்கிறார்கள். இடம் வாங்கலாம் என்றும் விளம்பரம் செய்தும் , பணம் வசூலிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

தேவந்திரன்: இது எங்கே எப்போது நடந்தது.

புதன் : அமெரிக்காவில் இதெல்லாம் நடக்கிறது. உனக்கு தெரியாதா.

தேவந்திரன்: சந்திரனில் மக்களை குடியேற்ற அமெரிக்க முயற்சி செய்கிறது.  ஆனால், இப்போது செவ்வாயை பார்க்க இந்தியா செயற்கை கோள் அனுப்பியுள்ளது. அவர்களிடம் மக்களை இங்கு அனுப்பு வசதியில்லை. அது சரி, சந்திரனே சும்மாயிருக்கும் போது நீ ஏன் குதிக்கிறாய். உனக்கு என்ன இவ்வளவு கரிசனம்.

புதன்: என்ன தேவந்திரா இது கூட தெரியாதது போல் பேசுகிறாய். சந்திரனுக்கு அடுத்து செவ்வாய்க்கு வந்தவர்கள் அடுத்து என்னிடம் தானே வருவார்கள்.  நான் என்னை வரும் முன் காப்பாற்றி கொள்ள வேண்டாமா ?

தேவந்திரன்:  சரி என்ன செய்ய வேண்டும். என்ன ஆபத்து வந்து விடும்.

செவ்வாய்: என்ன ஆபத்தா ? இப்போது செயற்கை கோள் அனுப்பியிருப்பது இந்தியா. அது தான் ஆபத்து. வெள்ளைகாரனை சமாளிக்கலாம். ஆனால், இந்தியனை அதுவும் தமிழனை சமாளிக்க முடியாது.

தேவந்திரன்: புதன் நீ ரொம்பவும் பயப்படுகிறாய். ஒன்றுமாகாது. கவலைப்படாதே.

புதன்: இல்லை தேவந்திரா. உனக்கு புரியவில்லை. கீழே பார் நாட்டில் என்ன நடக்கிறது என்று பார்.

கோமான்: என் இனிய மக்களே, இப்போது இங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது. தமிழனுக்கு எதிராக சதி நடந்து கொண்டிருக்கிறது. செவ்வாய் கிரகத்திற்க்கு செயற்கை கோள் போய் சேர்ந்து விட்டதாம். பெருமை பேசுகிறது ஆரிய கூட்டம். அதில் ISRO என்று ஆங்கிலத்தில் எழுதியுள்ளனர். பழமையான செம்மொழியில் ஏன் எழுதவில்லை. நமது தமிழின தலைவர் செம்மொழி மாநாடு நடத்தினர் என்பது தான் காரணம்.

வலைஞர்: உடன்பிறப்பே, நான் உனக்கு கடிதம் எழுதுவது  புதிதல்ல. 27ஆம் தேதிக்கு பயந்து கடிதம் எழுதாமல் இருப்பவர்களை போல நான் இருக்க முடியாது. கடிதம் எழுதுபவர்கள் அதை அனுப்புகிறார்களா இல்லையா என்பது கூட தெரியாது. நான் பத்திரிக்கை மூலம் உனக்கும் உலகத்தாற்கும் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் வெளிப்படையாக எழுதுகிறேன்.

இவர்கள் ஏன் இப்போது செயற்கை கோள் அனுப்பினார்கள். நமது தமிழன் சிறுபான்மை இனத்தவராக இருந்தாலும், அபதுல் கலாம் அவர்கள் அங்கிருந்த போது ஏன் அனுப்பவில்லை. இது குறித்து இன்றைய தமிழக முதல்வர் ஏன் இன்னமும் கடிதம் எழுதவில்லை. தம்பி, கோமானுக்கு ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். கொள்கை வேறு கூட்டணி வேறு. எத்தனை இடங்கள் கிடைக்கும் என்று பார்க்காமால், கழகத்திற்க்கு வலுவூட்டும் வகையில் கூட்டணியில் இடம் பெறும் காலம் அதிகமில்லை.

திருவிநாயகம்: நேரு கொடுத்த வாக்குறுதி படி ISRO என்பதை 22 மொழிகளிலும் எழுதியிருக்க வேண்டும். தமிழர்களின் தாழ்வாரத்தை இடித்த போது, நான் இது அநீதி என்று குரல் எழுப்பினேன்.

வைத்தியர்: அங்கு காதல் திருமணங்கள் நடத்த விட மாட்டோம்.

கோவை: நாங்கள் இனைந்தாலும் இதற்காக நடைப்பயணம் மேற்க்கொள்வேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

அங்க பிரதிஸ்டர்கள்: அகிலான்ட பரமேஸ்வரியின் ஆட்சி தான் அகிலமெங்கும் நடக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

வலைஞர்: மோதி எனது நண்பர் அதனால் அவர் மோடி மஸ்தான் வித்தை காண்பிக்கிறார் என்று கூற மாட்டேன். நானும் அவரும் அமைதியாக காரியம் ஆற்றுவதில் ஒரு மித்த கருத்து உடையவர்கள். மாநிலத்தில் கலவரம் நடந்த போது அவர் எப்படி அமைதி காத்தாரோ அது போல நான் இனம் அழிந்த போதும் அமைதி காத்ததன் மூலம் நாங்கள் ஒருமித்த கருத்து உடையவர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள்.  என்றைக்குமே மத்திய அரசுடன் இனைந்தே செயல்பட விரும்புகிறது. எங்களது அனுபவங்களை பயன்படுத்தி கொள்ள அவர்கள் விரும்பினால், அவர்களது அமைச்சரவையில் பணிபுரிய எனது மனைவியின் மகள்  எப்போதும் தயாராக இருக்கிறார் என்பதை அவர்கள் கவனத்திற்க்கு எடுத்து செல்கிறேன்.

பப்பு : எங்களை பாராளூமன்றத்தில் யாரும் மதிக்கவில்லையென்பதற்க்காக நான் உண்மையை கூறாமல் இருக்க முடியாது. நாங்கள் செய்து வைத்திருந்த அனுகுண்டை தான் இவர்கள் பொக்ரானில் வெடித்து பேர் வாங்கி கொண்டார்கள். இப்போது, நாங்கள் நாட்டை விட்டு வெளியேற செய்து வைத்திருந்த ராக்கெட்டில் சில மாற்றங்கள் செய்து செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி விட்டார்கள். நான் வழக்கம் போல கட்சிக்கு தோல்வியை வாங்கி தர  மகாராஷ்ட்ரா மாநில தேர்தல் வேலைகளில் ஈடுப்பட்டிருக்கிறேன்.

அக்னிபுத்திரன்.: டெல்லியில் தேர்தல் நடத்தி வெற்றி பெற முடியாதவர்கள், செவ்வாய்க்கு செயற்கை கோள் அனுப்பி விட்டோம் என்று மார் தட்டுகிறார்கள்

கோமான் : தமிழர் வரலாறு அறியாதவர்கள் குழந்தை தனமாக பிதற்றுகிறார்கள். எனது பாட்டன் முப்பாட்டான் என்றோ அனைத்து இடங்களுக்கும் வின்பல்லக்கு அனுப்பி விட்டான். அதில் ஏறி சென்ற தமிழச்சி தான் அங்கு வடை விற்றுக்கொண்டிருக்கிறாள் என்பது தான் சாட்சி. தமிழனின் வரலாற்றை மறைக்க ஆரிய கூட்டம் சதி செய்கிறது. தமிழனுக்கு தனியாக நாடு இருந்தால், அனைத்து வரலாற்று உண்மைகளையும் வெளிக்கொணர முடியும். அதற்கு முதல் கட்டமாக தமிழ் நாட்டை தமிழன் ஆள வேண்டும். வரும் தேர்தலில் அனைத்து இடங்களிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழனின் பெருமையை ஈரேழு உலகத்துக்கும் பறை சாற்றுவோம்.

வடை சுட்டுக்கொண்டிருக்கும் தமிழச்சியை அழைத்து வந்து விழா எடுப்போம்.

ஆரியர்களின் சூழ்ச்சியை முறியடிப்போம். திங்கள் முதல் வெள்ளி வரை தமிழனின் ஆட்சியே இருக்கும்.

சனி, ராகு, கேது சூரியனை அவர்கள் ஆளட்டும். தமிழன் மற்றவர்களையும் ஆள வைப்பான் என்பதை இதன் மூலம் அறியட்டும்.

தேவந்திரன் : புதன் பார்த்தேன். இந்தியாவில் இது போன்று பிதற்றுவது தான் வழக்கம். நாம் பொழுது போக்குக்காக இதை தானே பார்த்து சிரித்து கொண்டிருக்கிறோம். இவர்களால் நமக்கு என்ன கெடுதல் ஏற்ப்பட்டு விடும்.

புதன்: இல்லை தேவந்திரா, இவர்கள் இனி ஒரு புதிய
ஆயுதத்தை கையிலெடுப்பார்கள். மலையாளி தலைமையில் செயற்கை கோள் வந்துள்ளது. அதனால் அவர்கள் முதலில் மலையாளிகளை தான் இங்கு குடி அமர்த்துவார்கள். நாயர் டீக்கடையும் ஆரம்பிக்கப்படும். பிறகு தேயிலை தோட்டங்கள், ரப்பர் தோட்டங்கள் பயிருடுவார்கள். அங்கு வேலை செய்ய தமிழர்கள் வருவார்கள். செவ்வாய் செழித்து வளர நாங்கள் தான் உதவினோம் என்று கூறி பாதி செவ்வாய் கிரகத்தை அவர்கள் கேட்ப்பார்கள். சண்டை வரும். செவ்வாய்க்கு நான் உதவிக்கு செல்ல வேண்டி வரும். என்னை துரோகி என்பார்கள். தேவேந்திரா, உனக்கு நான் சொல்வது புரிகிறதா. எதாவது செய்து தடுத்து நிறுத்த வேண்டும்.

தேவேந்திரன்: நவகிரகங்களே, உங்களில் ஒருவன் புதன் இவ்வளவு கவலைப்படுகிறான். நீங்கள் ஏன் அமைதியாய் இருக்கிறிர்கள்.

சந்திரனே, முதலில் உன்னிடம் தான் வந்தார்கள். வரப்போகிறார்கள். ஏதாவது ஆபத்து ஏற்ப்படும் என்று கருதுகிறாயா. சொல் சந்திரா சொல். தமிழச்சி உன் இடத்தில் தான் கடை போட்டிருக்கிறாளா. அப்படியென்றால் அதற்கு பக்கத்தில் நாயர் டீக்கடை போட அவர்கள் வருவதில் என்ன தவறு. பெண்களை மயக்கும் புன்னகையை தந்து மழுப்பாதே. பதில் சொல்.

சந்திரன்: தேவேந்திரா, புதன் மிகவும் பதட்டமடைந்துள்ளான். அவர்கள் இவ்வளவு தூரம் வரமுடியாது. அவர்கள் வரும் முன்பே எங்களது பங்காளிகள் பஞ்ச பூதங்களாக வாழும், - நிலம், நீர், வாயு, நெருப்பு, ஆகாயம் இவர்களை அடைய அடக்கி ஆள செய்த முயற்சியில் அவர்கள் அழிந்து கொண்டிருக்கிறார்கள்.

எனது சகோதரர்கள் நினைத்தால் இந்த மானிடர்களை அழித்து விட முடியும். பரம்பொருளின் அவதாரத்தில் தான் கல்கி யுகம் முடியும் என்று அவர்கள் நம்பி கொண்டிருப்பதால், இவர்கள் அந்த அழிவு செயலை செய்யவில்லை.

அவ்வப்போது, மக்களுக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கிறார்கள். அக்னி எரிமலையாக வெடித்தும், காட்டு தீயாக பரவியும், வெப்ப நிலையை உயர்த்தியும் அவர்களை எச்சரிக்கிறான்.


நீர் கன மழையாக பொழிந்தும் ஆறுகளில் கட்டுக்கடங்காமல் ஓடியும், சுனாமிகளை ஏற்ப்படுத்தியும் எச்சரித்துக்கொண்டிருக்கிறார்.

வாயு சூறாவளியாக சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கிறான். மனிதர்களின் உடம்பில் புகுந்து அவ்வப்போது தொந்தரவு கொடுத்துக்கொண்டிருக்கிறான்.

நிலம் மனிதர்களின் எதிர்ப்பார்ப்புக்கு ஏற்ப உணவு பொருள் உற்ப்பத்திக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல்  மேலும் அவ்வப்போது நிலச்சரிவின் மூலம் தனது சக்தியை வெளிப்படுத்துகிறார்.

ஆகாயம் இவர்கள் பயணிக்கும் விமானங்களை மறைய வைத்தும் இவர்கள் ஆகாயத்தில் சேமித்து வைக்கும் தகவல்களை கொண்டு அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இவ்வாறு இவர்களது வாழ்வுக்கு உதவி செய்ய படைக்கப்பட்டிருக்கும் ஐம்பெரும் பூதங்களை அவமதித்து, அவைகளை அழித்து வருகின்றனர். மனிதர்கள் இவர்கள் மூலமே அழிந்து விடுவார்கள். அதையும் மீறி இவர்கள் இங்கு வந்தால்,………………………………………………….. வேண்டாம் தேவேந்திரா, தேவ ரகசியங்களை இதற்கு மேல் சொல்லக்கூடாது. அதற்கு அவசியமும் ஏற்ப்படாது.

தேவந்திரன் : நவகிரகங்களே, சந்திரன் சொல்வது எனக்கு சரியாக படுகிறது. மனிதர்கள் தங்களது அறிவுத் திறமையை பரிசோதித்து கொள்ள இது போன்ற செயல்களில் ஈடுப்படுகிறார்கள். அதனால் ஒன்றும் பாதகமில்லை. யாரும் அஞ்ச வேண்டாம்.

இயற்கையை அழிப்பதோ, ஆராய முற்ப்படுவதோ அவர்களுக்கு அழிவாக முடியும் என்பதை அவர்கள் அறிவார்கள் அவர்களுக்கு வாழ அனுமதிக்கப்பட்ட இடத்தை விட்டு வேறு இடத்திற்க்கு குடி பெயர நினைத்தால், அகதிகளாக ஆகாயத்தில் அவதிப்படுவார்கள்.

தற்சமயம் அவர்களுக்கும் நமக்கும் எந்த ஆபத்தும் இல்லை. அவரவர் இடத்தில் அமைதியாக இருக்க பழகி கொள்வோம்.