கிராம புறங்களில் எல்லா வீடுகளிலும் கழிப்பறை கட்டிக்கொடுக்கும்
திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டுமென்று பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.
உத்திரபிரதேசத்தில்,
இரண்டு இளம் பெண்கள் , இயற்கை உபாதையை கழிக்க சென்ற
போது, அவர்கள் கற்ப்பழிக்கப்பட்டனர். அதற்கு
பிறகு வீடுகளில் கழிப்பறை இருந்தால் இது போன்ற செயல்கள் நடைப்பெறாது என்று ஒரு வாதம்
வைக்கப்பட்டு விவாதிக்கப்படுகிறது. எனவே, கிராம புற வீடுகளில் அரசே கழிப்பறை கட்டி தரும் திட்டம் ஏற்ப்படுத்தப்பட்டுள்ளது.
கற்பழிப்புகள் இந்த நேரங்களில் தான் நடைப்பெறுகிறது என்பது சுத்த
பைத்தியகாரதனம்.
பொது இடங்களில் எவ்வளவு தான் மறைவாக செய்தாலும் அது வெட்கப்பட
வேண்டிய விசயம். ரயில்வே தண்டவாளத்தின் ஓரத்தில் மக்கள் மலம் கழிப்பதை எல்லோரும் பார்த்திருக்கிறோம்.
இவ்வாறு, பொது இடத்தில் மலம் கழிக்க வேண்டியிருப்பதால்,
காலை நேரங்களிலும் அல்லது இருட்டிய பிறகும் செய்ய வேண்டியுள்ளது.
ஏதேனும் காரணங்களால் மற்ற நேரங்களில் மலம் கழிக்க வேண்டுமென்றால் மிகவும்
சிரமம். குறிப்பாக பெண்களுக்கு மிகவும் சிரமம்.
எனவே,
இந்த கழிப்பறை கட்டி கொடுக்கும் திட்டம் மிகவும் சிறந்தது.
இதில் உள்ள பிரச்சனைகளையும் பார்க்க வேண்டும்.
கிராம புறங்களிலும்,
சிறு நகரங்களிலும் பாதாள சாக்கடை திட்டம் கிடையாது. எனவே, வீடுகளில் கழிவறையில் இருக்கும் கழிவுகளை எப்படி
சுத்தம் செய்வது. வீட்டில் உள்ள நபர்கள் அவைகளை சுத்தம் செய்ய
மாட்டார்கள். யாரும் மலம் கழித்த பிறகு அதை திரும்பி கூட பார்க்க
விரும்புவதில்லை. அப்படியிருக்கும் போது, அந்த கழிவுகளை எப்படி அப்புறப்படுத்துவது. யார் அப்புறப்படுத்துவது.
மனித கழிவுகளை அகற்றும் குறிப்பிட்ட ஜாதியினரை அழைத்து அதை சுத்தம்
செய்ய சொல்வார்கள். கழிவுகளை எங்கே கொண்டு சேர்ப்பது.
மனித கழிவுகளை மனிதனே அள்ளும் கொடுமையை ஒழிக்க வேண்டும் என்ற
கோசமும் அவ்வப்போது எழுப்பப்படுகிறது.
தோட்டிகள்::
தோட்டிகள் என்று சென்னையில் குறிப்பிட்ட வகுப்பினர் அழைக்கப்பட்டனர். நான் சென்னையில் வாழ்ந்ததால்
, சென்னை என்று குறிப்பிடுகிறேன். தமிழ்நாடு முழுவதும்
அவர்களுக்கு தோட்டிகள் என்று தான் பெயர் என்று நினைக்கிறேன். மற்ற மாநிலங்களில் வேறு பெயர்கள்.
வீடுகளில் கக்கூஸ் என்கிற கழிவறை கட்டப்படுவதற்க்கு முன்பு எல்லோரும்
வெளியில் தான் , காலை நேரங்களிலும் இரவுகளிலும் மலம் கழித்து கொண்டிருந்தோம். இன்றைக்கும் கிராமபுறங்களில் இந்த பழக்கம் தான் இருக்கிறது.
வீடுகளில் பெரிய அறை போன்று கட்டப்பட்டு பொதுவாக மேற்கூரை இல்லாமல் , இரண்டு சுவர் புறமும் உட்காருவகற்க்கு
ஏதுவாக சற்று மேலே தூக்கி கட்டப்பட்டு, அதன் மீது உட்கார்ந்து
அதன் பின் பகுதியில் மலம் கழிக்கப்படும். பின்பு, சிறிய அறை போல கட்டப்பட்டு, தற்போது Wester
Toilet என்று கூறப்படுவதை போல ஒரு அமைப்பை கட்டி, அதற்கு கீழே ஒரு பக்கெட் வைக்கப்பட்டிருக்கும் . அதில்
உட்கார்ந்து குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் மலம் கழித்தனர்.
நாமே நமது மலத்தை திரும்பி பார்க்காமல், அவசர அவசரமாக கழுவிக்கொண்டு
வெளியே வருவோம்.
இந்த அறைகளிலிருந்து மலத்தை அள்ளி செல்ல காலையில் சிலர் வருவார்கள். அவர்களை தோட்டிகள் என்பார்கள்.
அதற்கு அடுத்தப்படியாக தற்போதைய நவின கழிப்பறைகள் வந்தது. அங்கு கழுவிக்கொண்டு,
தண்ணிர் ஊற்றினால், அவை தொட்டிகளில் வந்து சேரும்.
அவைகளுக்கு செப்டிக் டாங்க் என்று பெயர்.
ஆரம்பத்தில் தண்ணிரை மண் உறிஞ்சி விடும். திடக்கழிவுகள் மட்டும் தொட்டியில்
தேங்கும். தொட்டி நிறைந்தவுடன் , இந்த தோட்டிகள்
என்பவர்கள் பீப்பாய் ஒன்றை மாட்டு வண்டியில் கட்டிக்கொண்டு வருவார்கள். செப்டிக் டாங்கில் இருப்பதை அந்த பீப்பாயில் நிரப்பிக்கொண்டு போய் வேறு இடத்தில்
கொட்டுவார்கள். அடுத்து, இப்போது தண்ணீர்
லாரி போல் இருக்கும் வண்டி வந்து அதிலிருக்கும் குழாயை செப்டிக் டாங்கில் இறக்கி,
மோட்டரை இயக்கினால், தொட்டியில் இருக்கும் கழிவுகள்
லாரிக்கு சென்று விடும்.
இவ்வாறு மனித கழிவு அள்ளுபவர்களை தோட்டிகள் என்று அழைத்தார்கள். சமூகம்அவர்களை தீன்டதகாதவர்களாக
கீழ் சாதியினர் என்ற நிலையில் வைத்திருக்கிறது. இன்றைக்கும் அவர்கள்
கீழ் சாதியினராகவே வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது நாம் பட்டு
விட்டால் தீட்டு என்று கூறுவதும், உடனடியாக குளித்து தீட்டு கழிப்பதுமாக
இருந்தனர். இருக்கின்றனர். ஆனால்,
நகர்புறங்களில் நம்மோடு அந்த மக்களும் இனைந்து வசிப்பதால், அவர்களுடன் சேர்ந்து பழகுகிறோம். அவர்களை அடையாளம் காணமுடியாததால்,
குளித்து தீட்டு கழிப்பது என்ற செய்கை இல்லை. ஆனால்,
அவர்கள் தான் என்று தெரிந்தால், குளித்து தீட்டு
கழிக்கும் பழக்கம் இன்றும் நகர்புறங்களிலும்
கிராம பகுதிகளிலும் இருக்கிறது.
இன்றும் நம் வீடுகளில் சாக்கடை அடைத்துக்கொண்டால் அவர்கள் வந்து
தான் சுத்தம் செய்கின்றனர்.
ஏதேனும் பிரானிகள் வீட்டிலோ அல்லது தெருவிலோ இறந்து விட்டாலும் அவர்களை
அழைத்து தான் அகற்ற சொல்லுகிறோம்.
நமது மலத்தை நாம் பார்க்க கூட விரும்புவதில்லை. ஆனால், நமது மலத்தை மற்றவர் வந்து அள்ளி சுத்தப்படுத்த வேண்டும் என்ற பழக்கத்தை இன்றளவும்
விரும்புகிறோம். தெருவில் ஓடும் பாதாள சாக்காடையை இன்றளவும் அவர்கள்
தான் சுத்தப்படுத்துகிறார்கள். அதில் அந்த பகுதியில் உள்ள அனைத்து
வீட்டு மனிதர்களின் மனித கழிவுகளும் உள்ளன.
மனித கழிவுகளை மனிதரே அள்ளுவது ஜாதி கொடுமையின் உச்ச கட்டம்
என்று தலைவர்கள் மேடையில் முழங்கினாலும் அவர்கள் வீட்டு கழிவை அகற்ற அந்த ஜாதியினரை
தான் அழைக்கிறார்கள். இது குறித்து பொது மக்களும் ( நான் உட்பட ) பலவேறாக பேசினாலும் அந்த ஜாதியினரை அழைத்து தான் சுத்தப்படுத்துகிறோம்.
எல்லோரும் இதை ஜாதி கொடுமை என்று பேசினாலும், அவர்களின் உடல் நலத்திற்க்கு
கேடு விளைவிக்க கூடியது என்று எவரும் பேசுவதில்லை. அதற்காக
அவர்களுக்கு சிறப்பான மருத்துவ வசதிகள் எதுவும் செய்து தருவதில்லை.
அவர்களுக்கு அதற்கான ஊதியமும் சரியாக தருவதில்லை. ஏதோ நாம் பார்த்து கொடுப்பதை
அவர்கள் வாங்கி கொள்ள வேண்டும் என்ற மனநிலையில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
அவர்கள் அவர்களது கூலியை நிர்னயித்து கேட்டால், அதற்கு பேரம் பேசுகிறோம்.
ஒரு முறை கூட,
நீ கேட்கும் கூலி அதிகம் நானே என் வீட்டை சுத்தம் செய்து கொள்கிறேன்
என்று கூற முடிவதில்லை. அப்படியிருக்கும் போது, அவர்களுக்கு நியாயமான கூலியை வழங்க வேண்டும்.
மனித கழிவுகளை சுத்தம் செய்பவர்களை கீழ் சாதியினர் என்று ஒதுக்கி
வைப்பது என்பது எவ்வளவு முட்டாள் தனம்.
எல்லா மனிதர்களும் மனித கழிவுகளை சுத்தம் செய்கின்றனர். தனது குழந்தையின் கழிவுகளை
சுத்தம் செய்கின்றனர். மலம் கழித்த இடத்திலிருந்து அவைகளை அகற்றி
வெளியே போடுகின்றனர்.
சில சமயம் வீட்டில் பெரியவர்கள் படுத்த படுக்கையாக ஆகி விடும்
போது, அல்லது
சிறு வயதினரே உடல் நலம் சரியில்லாத போது, மலம் கழிக்கும் இடத்திற்க்கு
செல்ல முடியாமல் படுக்கையிலேயே மலம் கழித்தால் அதை சுத்தம் செய்கிறோம். அந்த சமயங்களில் அந்த ஜாதியினரை வீட்டிற்க்குள் அழைத்து சுத்தம் செய்ய சொல்வதில்லை.
எனவே,
பிறரது மலத்தை சுத்தம் செய்வதன் மூலம் நாமும் கீழ் சாதியினரே.
அவர்கள் தீண்டதகாதவர்கள் என்றால் நாமும் ஒருவருக்கொருவர் தீண்டதகாதவர்களே.
கிராமபுறங்களில் வீடுகளில் கழிவறை கட்டிக்கொடுக்கும் தீட்டத்தின்
கீழ் எட்டு கோடி வீடுகளில் கழிவறை கட்ட வேண்டியுள்ளது.
முந்தைய காங்கிரஸ் மத்திய அரசு ஒவ்வொரு கழிவறைக்கும் 10000 ரூபாய் என நிர்னயித்துள்ளது.
இப்போதைய அரசு அது மிகவும் குறைந்த தொகை என்று உயர்த்த முடிவெடுத்துள்ளது.
அநேகமா 15000 ரூபாயாக மாறும்.
மொத்தம் எட்டு கோடி கழிபறை என்றால் 80000000 X 15000 = 1200000000000 அதாவது ஒரு லட்சத்து இருபதாயிரம் கோடி திட்டம்.
இவ்வளவு பெரிய திட்டத்தில் அரசியல்வாதிகள் அதிகாரிகள் பணம் சம்பாதிக்காமல்
விடமாட்டார்கள். இதில் தொழிலதிபர்கள் களத்தில் இறங்குவார்கள். கழிவறைகள் தாயரித்து விற்கும் நிறுவனங்கள்
இருக்கிறது. அவர்களும் களத்தில் இறங்குவார்கள். நேரடி அந்நிய முதலீடு இதிலும் அனுமதிக்கப்படலாம்.
சில வருடங்களுக்கு பிறகு TOILET
SCAM என்று CAG அறிக்கை கொடுக்கும். பிறகு TIMES NEWS தொலைக்காட்சியில் அர்னவ் கோஸ்சுவாமி TOILETGATE என்று
நிகழ்ச்சி நடத்துவார். தமிழ் தொலைக்காட்சிகள் கழிவறை ஊழல் என்று
விவாதம் செய்வார்கள். கழிவறை நாற்றத்தை விட இந்த நாற்றம் அதிகமாக
இருக்கும்
ஒரு வீட்டில் நாலு பேர் என்றால், மொத்தம் 32 கோடி மக்கள். ஒரு மனிதன் ஒரு நாளைக்கு சராசரி அரை கிலோ திடக்கழிவு
வெளியேற்றுகிறான். மொத்த கழிவு 16 கோடி
கிலோ திடக்கழிவு. ஒரு
மனிதனால் சராசரி மூன்று லிட்டர் திரவ கழிவு வெளியேற்றப்படுகிறது. மொத்த திரவ கழிவு 96 கோடி லிட்டர் கழிவு. ஏற்கனவே கழிவறை உள்ள வீடுகளில் உள்ள மனிதர்களின் கழிவுகளையும் சேர்தால் இந்த
கனக்கு மிகப்பெரியது. 100 கோடி மக்கள் கணக்குப்படி பார்த்தால்
……………………………………
இவை சேகரிக்கப்பட்டு திறந்த வெளி கால்வாய்கள் மூலம் நதிகளில்
கலக்கப்பட்டு கடலை அடையும்.
இப்போது இந்த கழிவுகள் நிலத்தில் கலக்கிறது. இது நிலத்தில் இயற்கையான
முறையில் உரமாக மாறுகிறது.
மனித கழிவுகளிலிருந்து எரிவாயுவும் (மீத்தேன் வாயு) உரமும் தயாரிக்க முடியும். இவ்வளவு கழிவுகளும் அங்காங்கே
சேகரிக்கப்பட்டு எரிவாயு தயாரிக்கப்பட்டு சிலின்டர்களில் அடைக்கப்பட்டு உபயோகிக்கலாம்.
அதற்கு பிறகு திட கழிவுகளை காய வைத்து உரம் தயாரிக்கலாம்.
இதுவும் மிகப்பெரிய தொழிலாக மாறும். எரிவாயுவாக மாற்ற கூடிய
கொதிகலன்கள் மற்றும் உரமாக மாற்ற தேவைப்படும் தொட்டிகள் இவையும் பெரிய தொழிழ்கள்.
இதிலும் அரசும் தொழிலதிபர்களும் களத்தில் இறங்கி காசு பார்ப்பார்கள்.
இப்படி பொதுமக்களின் கழிவிலிருந்து அரசியல்வாதிகளும் தொழிலதிபர்களும்
காசு பார்த்தாலும், மக்களுக்கு எதுவும் கொடுக்க மாட்டார்கள். மக்களும் தங்களது
கழிவுகளுக்கு காசு கொடுக்க வேண்டும் என்பார்கள் அல்லது அரிசி கோதுமையை ஏழைகளுக்கு இலவசமாக
வழங்க வேண்டும். நிறைய சாப்பிட்டு நிறைய கழிவுகளை வெளியேற்றினால்
நீங்கள் நிறைய எரிவாயுவும் உரமும் தயாரித்து பயன் அடையலாம் என்று போராடலாம்.
கழிவுக்கு கால் கிலோ அரிசி திட்டம் என்று அடுத்து வரும் சுதந்திர
தின நிகழ்ச்சிகளில் என்று பிரதமர் அறிவிக்க கூடும்
தஞ்சை மாவட்டத்தில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டம் தொடங்க
உள்ளது. ஒரு
வேளை சோழர்கள் அவர்களது கழிவுகளை சேகரித்து வைத்தார்களோ என்னவோ. அந்த கழிவுகளிலிருந்து உருவாகியிருக்கும் மீத்தேன் வாயு தான் இப்போது வெளியே
எடுக்கப்படுகிறதோ. எப்படியோ ஏதேனும் ஒரு ஒலைச்சுவடி /
கல்வெட்டு ஆதாரம் ஏற்ப்படுத்தி , அது சோழர்களின்
அதாவது தமிழர்களின் கழிவுகளிலிருந்து வெளியேறும் மீத்தேன் வாயு என்று கூறி
, மொத்த வாயுவையும் தமிழ் நாட்டு மக்களின் உபயோகத்திற்க்கு கொடுக்க வேண்டும்
என்று போராடலாம்.
ஒரு வேளை இவ்வாறு கழிவுகள் சேகரிக்கப்பட்டு
எரிவாயுவும் உரமும் தயாரிக்கவில்லையென்றால் அவை நதிகளில் கலக்கப்படும்.
நதிகளில் இனைக்கும் திட்டமும் அரசிடம் உள்ளது. வட மாநில கழிவுகள் அதாவது
தமிழ் உணர்வாளர்களின் பேச்சுப்படி ஆரியர்களின் கழிவுகள் கங்கையிலும் அதன் உபநதிகளிலும்
கலக்கும்.
கங்கையும் காவேரியும் இனைக்கப்பட்டால், கங்கையில் கலந்த ஆரியர்களின்
கழிவுகள் காவேரியில் கலக்கும். ஆரியர்களின் கழிவுகள் தமிழன் ஆறுகளில்
வருகிறது. தமிழன் ஏமாளி என்பதற்க்காக தான் இப்படி திட்டமிட்டு
செய்கிறார்கள் என்று போராடலாம்.. கங்கை தண்ணிர் காவேரி நதியில்
கலக்க கூடாது என்று போராட்ட குழு அமைத்து போராடி காசு பார்க்கலாம். இதை காரணம் காட்டியும் தனி தமிழ்நாடு வேண்டும் என்று கேட்கலாம்.
உணவு சாப்பிடுதல்
– மலம் கழித்தல் – எரிவாயு உரம் தயாரித்தல்
– உரம் விவசாயத்திற்க்கு பயன்படுத்துதல் – உற்பத்தி
அதிகரித்தல் – நிறைய சாப்பிடுதல் – மலம்
கழித்தல் - இப்படி ஒரு சுழற்ச்சி திட்டம் உருவாகும்