Tuesday 26 August 2014

திட்டமா - தண்டனையா ?



பிரதம மந்திரி மக்கள்-இலவச திட்டம் – PRADHAN MANTRI JAN - DHAN YOJANA

கடந்த 15.08.2014 அன்று பிரதமர் திரு. நரேந்திர மோதி அவர்கள்  டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தின ( விடுதலை திருநாள் ? ) விழாவில் உரையாற்றும் போது, “ பிரதான் மந்திரி ஜன்-தான் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
நாட்டில் உள்ள ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்பது.
அரசு தற்சமயம் ஏழைகளுக்கு வழங்கும் உதவிகளை நேரடியாக எழை மக்களின் வங்கி கணக்கில் செலுத்துவதன் மூலம் அரசு அதிகாரிகளும் இடைத்தரகர்களும் செய்யும் முறைகேடுகளை தடுக்க முடியும் என்பதே நோக்கம் இந்த திட்டத்தின் மூலம் சமையல் எரி வாயுவுக்கு கொடுக்கும் மானியம், ஊரக வேலை வாய்ப்பு திட்டம் மூலம் கொடுக்கப்படும் பணத்தை, அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்துவதன் மூலம் முறைகேடுகள் பெருமளவு குறைக்கப்படும்.
ஏழைகளுக்கு வங்கி கணக்கு இல்லாத காரணத்தால், இந்த திட்டங்களை நிறைவேற்றுவதில் கால தாமதம் ஏற்ப்படுவதால், மேற் கூரிய வங்கி கணக்குகளை ஆரம்பிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.
அன்று அறிவிப்பு செய்ததுடன் நிற்காமல் அனைத்து வங்கி மேலதிகாரிகளுக்கு மின்னஞ்சல் மூலம் இந்த திட்டத்தை அமுல் படுத்த வற்புறுத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கிறது.

இந்த ஏழை எளிய மக்களுக்கு தொடங்கப்படும் வங்கி கணக்குகளின் என்ன விசேசம் உள்ளது.
எல்லா வங்கி கணக்குகளுக்கும் உள்ள வசதிகளுடன், ரூ.ஒரு லட்சத்துக்கான விபத்து காப்பீடு கிடைக்கும். ( காப்பீட்டுக்கான சந்தாபிரிமியம் இவர்களிடமிருந்து வசூலிக்கப்படுமா அல்லது இலவச காப்பீடா என குறிப்பிடப்படவில்லை ) இது மருத்துவ காப்பீடு அல்ல
இந்த வங்கி கணக்குகளில் குறைந்த பட்ச தொகை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. கணக்கு தொடங்கும் போது, எந்த தொகையும் செலுத்த வேண்டிய அவசியமில்லை.

இந்த திட்டம் அறிவிக்கப்பட்டவுடன், இதை வெற்றி பெற செய்வதற்க்காக எல்லா வங்கிகளும் இதை அமுல் படுத்த தொடங்கியுள்ளன. எல்லா வங்கி தலைமையகமும், ஒவ்வொரு கிளையும் எத்தனை கணக்குகளை தொடங்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
பொதுவாக கணக்கு தொடங்க பல வித அடையாளங்களை கேட்ப்பார்கள். புகைபடத்துடன் கூடிய அடையாள அட்டை(PHOTO IDENTITY), முகவரி சரிபார்க்க கூடிய ஏதேனும் ஒரு அடையாளம் (ADDRESS PROOF ) மற்றும் வரிமான வரி நிரந்தர கணக்கு எண் (PAN ). மேலும், அவர் வசிக்கும் பகுதியில் அல்லது அலுவலகம் உள்ள பகுதியில் தான் தொடங்கப்படும். கோடம்பாக்கத்தில் வசிப்பவர் கொருக்குப்பேட்டையில் வங்கி கணக்கு தொடங்க முடியாது. ( சில விதி விலக்குகள் உண்டு )
ஆனால், இப்போது தொடங்கப்படும் எழை மக்களின் வங்கி கணக்குகளுக்கு  ஏதேனும் ஒன்று இருந்தால் போதுமானது என்பதுடன் விதி முறைகள் சற்று தளர்த்தப்பட்டுள்ளது. மேலும் எங்கு வேன்டுமென்றாலும் வங்கி கணக்கு தொடங்கலாம்.
இவை ஏதும் இல்லாதவர்கள் கணக்கு தொடங்க முடியாது.
ஒவ்வொரு கிளையும் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய மிகவும் சிரமப்படுகின்றன. மக்கள் வங்கிகளை தேடி வரவில்லையென்றால், ஏழை மக்கள் வாழும் இடங்களில் முகாம் இட்டு அவர்களை வங்கி கணக்கு தொடங்க வைக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல வங்கி கிளைகளில் இதன் காரணமாக , வழக்கமான வேலைகள் பாதிக்கப்பட்டுள்ளன,

இலக்கை அடைய , அடையாளங்களை சரி பார்க்காமல் கணக்குகள் தொடங்கப்படுகின்றன.
ஊதாரனமாக, பல வெளி மாநில தொழிலாளர்கள் சென்னையில் வசிக்கின்றனர். அவர்கள் எவரிடமும் உள்ளுர் அடையாள அட்டை கிடையாது. அவர்களது சொந்த ஊர் அடையாள அட்டை ஏதேனும் இருக்க கூடும். அந்த அடையாள அட்டை அடிப்படையில் கூட வங்கி கணக்கு தொடங்க முடியும்.
இவ்வாறு இடம் பெயர்ந்து கொண்டேயிருக்கும் மக்களுக்கு அரசின் திட்டங்கள் அவர்கள் வாழும் பகுதியில் கிடைப்பதில்லை.
எழுத படிக்க தெரியாத ஏழை மக்களுக்கு தங்களது கணக்கை எப்படி இயக்குவது என்று தெரிவதில்லை. பணம் போடவோ அல்லது எடுக்கவோ அவர்களுக்கு பிறரது உதவி தேவைப்படுகிறது. எல்லா வங்கி கிளைகளிலும் எப்போது கூட்டம் உள்ளது. வங்கியில் ஒரு வேலை செய்ய வேண்டுமென்றால் குறைந்தது ஒரு மணி நேரமாகிறது. அன்று ஏழை தொழிலாளி வேலைக்கு போக முடியாது. கூலி கிடைக்காது.
இவர்களுக்கு கணக்கு தொடங்கப்பட்டால், அரசின் பணம் இதில் போடப்படாது. இவர்களும் தங்களது சொந்த பணத்தை சேமிப்பு என்று நினைத்து அதில் வைத்திருக்கப் போவதில்லை. கணக்கு தொடங்கப்படும் ஆனால் அதில் ஒன்றும் செயல் பாடு இருக்காது.

வங்கி ஊழியர்களோ அல்லது மற்றவர்களோ நிறைய வழிகளில் இதை முறை கேடாக பயன் படுத்த முடியும். உங்கள் வாடிக்கையாளரை அறியுங்கள் – KNOW YOUR CUSTOMER KYC)  பின்பற்றப்படுவதில்லை.

இதில் முறைகேடுகள் நடந்தால், கணக்கு தொடங்கப்பட்ட கிளையிலிருந்து, தொடங்கிய அலுவலகரிடமிருந்து விசாரணை தொடங்கும். நல்ல ஊழியர்கள் மீது கூட சந்தேகம் வரும். அவர்கள் மீது ஒழங்கு நடவடிக்கை எடுக்க வாய்ப்பு ஏற்ப்படும். சிரமத்திற்க்கு உள்ளாவர்கள்
ஊழியர்கள் இந்த மாதிரி பாதிப்பு எற்ப்படும் என்ற காரணத்திற்க்காக கணக்குகளை தொடங்காமலும் இருக்க முடியாது.

சாதாரண நாட்களில் எழைகள் வங்கி கணக்கு தொடங்க எந்த வங்கிக்கு சென்றாலும் , ஏதேனும் ஒரு காரணத்தை சொல்லி தட்டிக்கழிக்க தான் பார்க்கிறார்கள். எனவே, இது போன்ற திட்டங்களும் அவசியமாகிறது.

10 லட்சம் ஏழைகள் ஒவ்வொருவரும் ஒரு லட்சம் ரூபாய் வீதம் ஏமாற்றினாலும், மொத்தம் ஏமாற்றப்படும் தொகை பத்தாயிரம் கோடி. இந்த பணத்தை ஒரு தொழிலதிபர் சர்வ சாதரணமாக ஏமாற்றி விடுகிறார். எனவே ஏழைகள் ஏமாற்றி விடுவார்கள், வாங்கிய பணத்தை திரும்ப செலுத்த மாட்டார்கள் என்ற காரணம் காட்டி வங்கி கணக்கு தொடங்காமலிருப்பதோ அல்லது கடன் வழங்காமல் இருப்பதோ சரியல்ல.

பணக்கார தொழிலதிபருக்கு இருக்கும் மனசாட்சியை விட ஏழைக்கு அதிகமாக இருக்கிறது. ஏழை பணம் திருப்பி தரவில்லையென்றால், அவனது சம்பாதிக்கும் திறன் இல்லாத காரணம் தான் அதிகமேயொழிய திட்டமிட்டு ஏமாற்ற வேண்டுமென்பதல்ல.

எந்த ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டாலும் அதில் சாதக பாதகங்கள் உள்ளது. அது போலவே இந்த வங்கி கணக்கு தொடங்குவதிலும் உள்ளது. வங்கி ஊழியர்கள் தங்களை பாதுகாத்துக்கொண்டு, ஏழைகள் வங்கி கணக்கு தொடங்க உதவி செய்ய வேண்டும்


No comments:

Post a Comment