Saturday 26 April 2014

அவனி சுந்தரி - சாண்டில்யன்



அவனி சுந்தரி – சாண்டில்யன் 

திரு. சாண்டில்யன் எழுதிய அவனி சுந்தரி எனும் நாவல் ராணி முத்து பதிப்பகத்தின் சார்பில் ரூ.1.25 வெளியிடப்பட்டிருக்கிறது. எப்போது வெளியிடப்பட்டது என தெரியவில்லை. 

புறநானூறு நூலிலிருந்து கண்ட முக்கிய பாடல்களின் அடிப்படையில் திரு.கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியாரும் டாக்டர்,என் சுப்பிரமணியமும் எடுத்து தந்த ஆதாரங்களின் அடிப்படையில் இந்த நாவல் எழுதப்பட்டதாக திரு. சாண்டில்யன் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

சோழர் குலத்து பங்காளி சண்டையின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ள நாவல். ஒரு பங்காளிக்கு உதவும் வகையில் கன்னர நாட்டு இளவரசி மற்ற பங்காளி நாட்டுக்கு வந்து , அந்நாட்டை ஆளும் சகோதரர்களுக்கிடையே பகைமையை ஏற்படுத்தி, சோழ நாட்டை அடைவதே கதையின் கரு. கன்னர நாடு என்பது எந்த பகுதி என தெரியவில்லை. ஒரு வேளை இன்றைக்கு கர்நாடகம் என்று அழைக்கப்படும் பகுதியாக இருக்கலாம்.

இதில் நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி என்ற பெயர் மாறி மாறி வருவதால் சற்று குழப்பம் ஏற்ப்படுகிறது. மேலும், பொதுவாக இது மாதிரி சரித்திர நாவல்களில் மன்னனின் போர் திறமையும் அவனது அறிவு திறமையையும் வைத்தே கதை முன்னெடுத்து செல்லப்படும். சில சமயங்களில் அவரது மந்திரி அல்லது தளபதி அல்லது மன்னரின் மனைவி, தமக்கை போன்றோரின் அறிவு திறனில் அடிப்படையில் அந்த மன்னனின் புகழ் பாடப்படும்.

இந்த நாவலில் கோவூர் கிழார் எனும் புலவரின் அறிவுதிறன் அடிப்படையில் மன்னன் வெற்றி கொள்வதாக அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக எதிரி மன்னன், இந்த புலவர் எழுதிய ஒரு பாடலால், தனது பெயர் சரித்திரத்தில் அவப்பெயருடன் குறிப்பிடப்படும் என பயந்து ஓடி விடுவதாகவும், பின்பு அவனை துரத்தி சென்று அவனை கொன்று வருவதாகவும் எழுதப்பட்டுள்ளது.

நாட்டை பிரிக்க வந்த கன்னரக இளவரசி மேல் காதல் கொண்டு அவளையே மணப்பதாக கூறி கதை முடிவடைகிறது.

திரு.சாண்டில்யனின் தலைசிறந்த சரித்திர நாவல்களை படித்தவர்களுக்கு இது மிகவும் ஏமாற்றம் தரும் நாவல். 

இவர் சரித்திர நாவல்கள் எழுதிய தருணங்களில் மிகவும் புகழ் பெற்றவர். காற்றுள்ள போதே தூற்றிகொள் என்பது போல புகழின் உச்சியில் இருந்த போது தனக்கு கிடைத்த சந்தர்பங்களை எல்லாம் பயன்படுத்தி கொண்டு, சரித்திர நாவல் என்ற பெயரில் இது போன்ற சிறு நாவல்களை சிறு பத்திரிக்கைகளில் எழுதி பேரும் பணமும் பெற்றிருப்பார் என தோன்றுகிறது.

இந்த நாவல் அவருக்கு எந்த விதத்திலும் புகழ் சேர்த்திருக்க முடியாது.
                                                            
இந்த நாவலை இனையத்தில் 20.04.2014 அன்று படித்தேன்.

Thursday 24 April 2014

மூடுபனி - தமிழ் திரைப்படம்



மூடுபனிதமிழ் திரைப்படம் 

இயக்குனர் திரு. பாலு மகேந்திரவை பற்றி இப்போது நிறைய பேர் பேசுகிறார்கள். எழுதுகிறார்கள். பார்ட்டுகிறார்கள். அவர் விட்டு சென்ற பணியை தொடர்வதாக கூறுகிறார்கள்.

இவர இயக்கிய படங்களில் நான் பார்த்த படங்கள்.

1) அழியாத கோலங்கள்
2) மூடுபனி
3) மூன்றாம் பிறை
4) நீங்கள் கேட்டவை ?
5) வீடு
6) சந்தியா ராகம்
7) சதி லீலாவதி

இந்த படங்கள் அவை வெளிவந்த காலங்களில் பார்த்தது. அவை இப்போது சரியாக நினைவில்லை. ஆனால்,  சதி லீலாவதி படம் எப்போது தொலைகாட்சியில் ஒளிப்பரப்ப்பட்டாலும் நிச்சயம் பார்ப்பதுண்டு.

நேற்று (22.04.2014) K.TVயில் இரவு 11.00 மணிக்கு மூடுபனி திரைப்படம் ஓளிப்பரப்பப்பட்டது. கவனமாக பார்த்தேன்

திரு. பாலு மகேந்திர மிக சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த ஒளிப்பதிவாளர் என்ற நிலையில் பார்த்தேன்.. மிக பெரிய ஏமாற்றம்.

கதை என்றால்,  சிறு வயதில் எற்ப்பட்ட நிகழ்சி மூலம் பாதிக்கப்பட்டவனின் பழி தீர்க்கும் படலம் தான் கதை. கதாநாயகன் திரு.பிரதாப் போத்தன். அந்த காலகட்டத்தில் அவர் சிறந்த நடிகர் என்ற அடிப்படையில் அவர் தேர்வு செய்யப்பட்டிருக்கலாம். ஆனால், அந்த கதாபாத்திரத்துக்கு அவர் பொருந்தவில்லை என்றே தோன்றுகிறது. கதாபாத்திரத்தை எற்று நடிக்கும் நடிப்பு அந்த பாத்திரத்துடன் ஒன்றி இருக்கவேண்டும். எந்த காலகட்டத்தில் அந்த படத்தை பார்த்தாலும் அவர் சிறப்பாக செய்திருக்கிறார் என்று தோன்ற வேண்டும். ஆனால், இப்போது அந்த படத்தை பார்க்கும் போது, இவர் எல்லாம் ஏன் நடித்தார் என்று நொந்து கொள்ள தோன்றுகிறது.

பிரபல கதாநாயகியாக வரும்  ஷோபா சிறந்த நடிகை. ஆனால் இந்த படத்தில் அவர் வீனாக்கப்பட்டிருக்கிறார் என்று தோன்றியது.

இதில் வரும் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரம் போலிஸ் அதிகாரியா அல்லது நகைச்சுவை நடிகராக என தெரியவில்லை. அவர் துப்பறியும் முறை கொடுமை. அதிலும் எப்போதும் வாயில் பைப் வைத்துகொண்டிருக்கிறார். ஆனால் ஒரு முறை கூட புகைக்கவில்லை. இப்படி ஒரு மட்டமான நடிப்பை வழங்கிய நடிகர் யார் என தெரியவில்லை.

ஒளிப்பதிவில் சிறந்தவர் என்று போற்றப்படுபவரின் ஓளிப்பதிவு இந்த படத்தில் மட்டம் என்றே தோன்றுகிறது. இயற்கையான ஒளிப்பதிவில் படம் எடுப்பவர் என்று பெயரெடுத்தவர் படம் ஏதோ திருமண வீட்டில் வீடியோ படம் எடுப்பவரின் படம் போல் இருக்கிறது. ஒரே காட்சியில் தீடிரென வெளிச்சம் அதிகமாகிறது. குறைகிறது. அது காட்சிக்கு தொடர்பானது என்று கூற முடியாது. அந்த காட்சிகளில் நடிப்பும் கிடையாது. அழுத்தமான வசனமும் கிடையாது. அப்படி ஒரு ஒளிப்பதிவு செய்வதற்கான எந்த மூகாந்திரமும் கிடையாது. வீடியோ எடுப்பவரின் கூட விளக்கு தூக்கிகொண்டு சென்று,  வெளிச்சம் அடிப்பார். அப்போது, சிறிது கவனகுறைவின் காரணமாக வெளிச்சம் வேறுபக்கங்களில் திரும்பும் போது, வீடியோ காட்சி எப்படியிருக்குமோ அப்படியிருக்கிறது.
ஒரே ஒரு பாடலும் அதற்க்கான ஒளிப்பதிவும் நன்றாக இருந்த்து

மொத்தத்தில் இந்த படம் அவரது சிறந்த படங்களில் ஒன்று என கூறினால், நான் இனி அவரது படம் பார்ப்பதேயே தவிர்க்க வேண்டியிருக்கும்.

சில பல விருதுகள் வாங்கிவிட்டதால், சிலர் அவை நாகரீகம் கருதியும் தொழில் நாகரீகம் கருதியும் தனிப்பட்ட காரணங்களுக்காக புகழ்ந்து பேசினால், அதையே எல்லோரும் செய்யவேண்டும் என்ற அவசியமில்லை.

Wednesday 16 April 2014

தேர்தலும் சுயேட்சைகளும்:



தேர்தலும் சுயேட்சைகளும்:

எல்லா தேர்தல்களிலும் சுயேட்சை உறுப்பினர்கள் போட்டியிடுகின்றனர்.
பொதுமக்களில் சிலருக்கு  தேர்தலில் நிற்க வேண்டும், சட்டசபைக்கோ பாரளுமன்றத்திற்க்கோ சென்று மக்களின் பிரச்சனையை பேசி தீர்வு காண வேண்டும் என விருப்பம் ஏற்ப்படுகிறது.

பொதுமக்களில் சிலர் ஏதெனும் ஒருவிதத்தில் சற்று பிரபலமடைந்திருந்தால் (நடிகர், பாடகர் எழுத்தாளர் மற்றும் பலர்) , அவர்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் கொடுக்கும் அழுத்தத்தால் அல்லது தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி பெற்று விடலாம் என்ற தங்களது நம்பிக்கையாலும் போட்டியிடுகின்றனர்.

கட்சியில் இருப்பவர்கள் தங்களுக்கு கட்சி போட்டியிட வாய்ப்பு கொடுக்காத காரணத்தால் சுயேட்சையாக போட்டியிடுகின்றனர்.

சில சமூக (ஜாதி) அமைப்புகள் தங்களுக்கு கட்சிகள் வாய்ப்பு கொடுக்கவில்லையென்ற காரணத்துக்காகவும் சுயேட்சையாக போட்டியிடுகின்றனர்.

பணம் படைத்தவர்கள் தங்களது நிலையை மேலும் வளர்த்துகொள்ள , தங்களது பணத்தை செலவழித்து (பதவி கிடைத்தவுடன் சம்பாதித்து கொள்லாலாம் ) சுயேட்சையாக போட்டியிடுகின்றனர்.

சமூக விரோதிகளும் சட்டத்தின் பிடியில் சிக்காமல் இருக்க சுயேச்சையாக போட்டியிடுகின்றனர்.

சிலருக்கு எவ்வித நோக்கமும் இல்லாமல், தாங்கள் பிரபலமடைய வேண்டும் என்பதற்க்காக தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

பெரிய அரசியல் கட்சிகள் சிலரை சுயேட்சை வேட்பாளராக நிற்க வைப்பார்கள். தேர்தல் ஆனையம் வேட்பாளர்களுக்கு அனுமதிக்கும் சலுகைகளை இவர்கள் மூலம் பெற்று தங்கள் கட்சிக்கு பயன்படுத்திகொள்வார்கள். இப்படி போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் செலவை பெரிய கட்சிகள் ஏற்றுக்கொள்கின்றன. 

இப்படி போட்டியிடுகிறவர்களில் சிலர் வெற்றி பெறுகின்றனர். இவர்கள் வெற்றி பெற்ற பிறகு அவர்கள் பதவி காலம் முழுவதும் சுயேட்சை உறுப்பினராகவே இருப்பதில்லை.

தேர்தலுக்கு பிறகு யாருக்கும் ஆட்சி அமைக்க போதிய பலம் இல்லாத போது, இவர்களுக்கு யோகம் அடிக்கிறது. ஆட்சி அமைக்க உரிமை கோரும் எல்லா கட்சிகளும் இவரை தங்கள் கட்சியில் சேர அழைக்கின்றனர் அல்லது ஆட்சி அமைக்க ஆதரவு தரும் படி வேண்டுகின்றனர். இவர்களது விலையை இவர்களே நிர்ணயித்து கொள்கின்றனர். பணமோ பதவியோ எது கேட்டாலும் கிடைக்கிறது. கட்சியில் சேராமல் , பிரச்சனையில் அடிப்படையில் ஆதரவு தருகிறேன் என்று கூறி, அவ்வப்போது தங்களுக்கு வேண்டியதை சம்பாதித்து கொள்கின்றனர்.

இவற்றையெல்லாம் தவிர்த்து, எந்த கட்சியும் சரியில்லை என்று கூறி எந்த கட்சியிலும் சேரமாட்டேன், எந்த பிரச்சனைக்கும் ஆதரவு தரமாட்டேன் என்று கூறி சிலர் கடைசி வரை சுயேட்சையாகவே இருப்பார்கள். இதனால் அவர்களுக்கும் ஆதாயமில்லை அவரை தேர்ந்தெடுத்த தொகுதி மக்களுக்கும் பிரயோஜனமில்லை.

சட்டசபையிலோ பாரளுமன்றத்திலோ பேசுபவர்கள் கட்சி சார்புடையவர்கள். யார் யார் பேச வேண்டும் , யார் விவாதத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்பதை கட்சி தீர்மானித்து வாய்ப்பளிக்கிறது. கட்சி உறுப்பினர் என்ற காரணத்தாலேயே , யாரும் நினைத்த போது விவாதத்தில் கலந்து கொள்ள முடியாது.

இந்த நிலையில் சுயேட்சைகளுக்கு பேச அல்லது விவாதத்தில் பங்கேற்க்க வாய்ப்பு எப்படி கிடைக்கும். சுயேட்சைகள் பேச வேண்டும் என்றால் சபாநாயகரின் முன் அனுமதி பெற்று அவர் வாய்பளிக்கும் போது தான் பேசவேண்டும். பொதுவாக  அரசியல் கட்சி உறுப்பினர்கள் பேசவே நேரம் கிடைக்காதபோது (நேரமின்மை காரணமாக) அவர் சுயேட்சைகளுக்கு வாய்ப்பு கொடுப்பதில்லை. அப்படியே கொடுத்தாலும், முக்கியமான விவாதங்களுக்கு வாய்பளிப்பதில்லை. யாருமே விவாதிக்க  விருப்பமில்லாத பிரச்சனையில் இவர்கள் விவாதிக்க அனுமதியளிப்பார். அதை கேட்க முக்கியமானவர்கள் அவையில் யாரும் இருக்கமாட்டார்கள். இவரை போல வேறு வேலையில்லாதவர்கள் அல்லது வேறு ஏதேனும் நெருக்கடியின் காரணமாக சிலர் உட்கார்ந்திருப்பார்கள். பொதுவாக இப்படிபட்டவர்களுக்கு சபை முடியும் நேரத்தில் மாலை 5 மணிக்கு மேல் தான் வாய்ப்பு கொடுப்பார்கள். 

சபாநாயகர், உதவி சபாநாயகர் கூட இருக்கமாட்டார்கள். அவர்களுக்கு பதிலாக வேறு யாரவது அதிகாரி சபையை நடத்திகொண்டிருப்பார்கள். யாருமில்லாத டீக்கடையில் இவர்கள் டீ ஆற்றி இவர்களே குடித்து கொண்டிருப்பார்கள்.

இவர்கள் தொகுதி மக்களுக்காக, சம்மந்தப்பட்ட இலாக்காவின் அமைச்சரை சந்திப்பதற்க்கு கூட அனுமதி கிடைப்பதில்லை. அப்படியே சந்தித்து பிரச்சனையை கூறினாலும், அதனால் என்ன செய்து விட்டால் போகிறது, நிச்சியமாக செய்கிறேன் என்று கூறி வெளியேற்றி விட்டு, தனது செயலாளரிடம் இனிமேல் இவரை போன்றவர்களை சந்திக்க நேரம் ஒதுக்காதே என்று அவர்களை கடிந்து கொள்வார்கள்.

சுயேட்சைகள் உயர் அதிகாரிகளை அணுகினாலும் இதே நிலைமைதான். இவர்களது பிரச்சனை ஆளுங்கட்சியின் கொள்கைக்கு எதிரானதாக இருக்கும் அல்லது சம்மந்தப்பட்ட அமைச்சரின் திட்டத்திற்க்கு எதிரானதாக இருக்கும். அதிகாரி உதவ வேண்டுமென்று நினைத்தாலும் அவரால் இவருக்கு உதவமுடியாது.

உங்கள் தொகுதியில் வெற்றி பெற்ற வேட்பாளரின் கட்சி ஆட்சி அமைத்தால் உங்கள் தொகுதிக்கு சில நன்மைகள் செய்ய வாய்ப்புள்ளது.
உங்கள் தொகுதியில் வெற்றி பெற்ற வேட்பாளரின் கட்சி எதிர்கட்சியாக அமைந்தால், தொகுதியின் தேவைகளுக்கு போராட வாய்ப்புள்ளது.

உங்கள் தொகுதியில் சுயேட்சை வெற்றி பெற்றால், ஆளுங்கட்சியும் எதிர்கட்சியும் கண்டுகொள்ளாது. சுயேட்சையால் போராட முடியாது. போராடவில்லை என்பது தான் வரலாறு.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் சுயேட்சை உறுப்பினர்களால் தொகுதிக்கு ஒன்றும் செய்ய இயலாது.

இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்ட சுயேட்சை உறுப்பினர்கள்  தொகுதி மக்களுக்கு ஏதேனும் நன்மை செய்துள்ளனரா ? நன்மை செய்துள்ளேன் என்று இரண்டாவது முறை வோட்டு கேட்டு வந்துள்ளனரா ? தொடர்ந்து இரண்டு மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சுயேட்சை உறுப்பினர் யாரவது உள்ளனரா ?

சட்டசபை அல்லது பாரளுமன்ற உறுப்பினர் ஆவதன் மூலமாக தான் மக்களுக்கு சமூக சேவை செய்ய முடியும் என்று கருதினால், ஏதேனும் கட்சியில் சேர்ந்து போட்டியிட்டால் தான் , வெற்றி பெற வாய்பிருக்கும். கட்சியின் கொள்கைகள் அல்லது செயல் திட்டங்கள் பிடிக்கவில்லையென்றாலும் , கட்சி சார்பாக போட்டியிட்டால் தான் வெற்றி பெற வாய்ப்பு கிடைக்கும்.

குறிப்பிட்ட தொகுதியில் ஒரு சமூகத்தை சார்ந்தா வாக்காளர்கள் அதிகம் இருக்கும் காரணத்தால், அந்த சமூகத்தை சார்ந்தவர் சுயேட்சையாக போட்டியிட முனைகிறார். அந்த சமூக மக்கள் அனைவரும் அவருக்கே வாக்களிப்பார்கள் என நம்புகிறார். வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறார். பொது வெளியில் சாதி பாகுபாடு கூடாது என்று பேசும் இவர்கள், சாதி அடிப்படையில் தனக்கு வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் வைப்பது இரட்டை வேடம். இப்படி சாதி அடிப்படையில் தனக்கு வாக்களிக்க வேண்டும் என கோருபவர்கள், சாதி அரசியல் செய்யும் கட்சிகளில் சேர்ந்து தேர்தலை சந்திக்கலாமே ?

பொதுவாக சுயேட்சைகளிடம் பண பலமும் ஆள் பலமும் கிடையாது. எந்த காரணத்திற்க்காக சுயேட்சையாக போட்டியிட்டாலும், இன்றைய நிலையில் சில லட்ச ரூபாய்களை செலவழிக்க வேண்டியுள்ளது. அவர்கள் சேர்த்து வைத்துள்ள சொந்த பணத்திலிருந்து செலவழித்தாலும் சரி அல்லது கடன் வாங்கி செலவழித்தாலும் சரி, வெற்றி தோல்வியை நிர்ணயிக்க முடியாது.

தேர்தலில் வெற்றி பெற்று விட்டால், செலவழித்த பணத்தை எப்படியாவது சம்பாதித்து விடலாம். ஆனால், தோல்வியடைந்து விட்டால் இழந்த பணத்தை மீட்பது எப்படி ? 

இப்படி சூதாட்டம் போன்ற அரசியலில் பணத்தை இழப்பதை விட, தங்களிடமிருக்கும் பணத்தை கொண்டு தாங்கள் வாழும் பகுதியில் சிறிய அளவில் சமூக சேவை செய்தாலும் மிகுந்த மன நிறைவை தரும்.

சமூக சேவை செய்ய பணமும் பதவியும் அதிகாரமும் தேவையில்லை. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என நினைத்தால் எப்படி வேண்டுமானலும் சேவை செய்யலாம்.

பெரிய கட்சிகளின் மீது இருக்கும் வெறுப்பின் காரணமாக, சிறிய கட்சிகளின் வேட்பாளர்களுக்கோ அல்லது சுயேட்சைகளுக்கோ வோட்டளிப்பது சரியா என யோசித்து வாக்களியுங்கள்.

Wednesday 9 April 2014

காமம் செய்ய காதல் செய்வீர்



சமூகத்தில் காதல் திருமணங்களை எதிர்ப்பவர்கள் யார் ::

தங்களுக்கு திருமண வயதில் மகனோ அல்லது மகளோ இல்லாதவர்கள் ; தங்களுக்கு திருமண வயதில் பேரனோ அல்லது பேத்தியோ இல்லாதவர்கள் ; அப்படியே இருந்தாலும் , அவர்கள் பெற்றோர் பார்த்து திருமணம் செய்து வைக்கும் வரை காத்திருந்து திருமணம் செய்து கொள்வார்கள் என்ற அதிகபட்ச நம்பிக்கையுடன் வாழ்பவர்கள்.

ஆண் பெண் இருவருமே பெற்றோர் செய்து வைத்தால், நல்ல அழகான பெண்ணையும் / ஆணையும் நல்ல பொருளாதார வசதியுடன் செய்து வைப்பார்கள் என்று காத்திருப்பவர்கள் : உண்மையிலேயே சமூக பற்று அதிகம் உள்ளவர்கள் ; இவர்கள் காதலிக்க நினைத்தாலும், இவர்களை காதலிக்க யாரும் இல்லாத நிலையில் இருப்பவர்கள்.

இந்த இரண்டு வகையிலுமே இருப்பவர்களுக்கு, திருமணம் நடக்கவில்லையென்றால், காலம் முழுவதும் தனியாக மகிழ்சியுடன் தங்கள் வாழ்க்கையை நடத்துவார்களா ? அல்லது வேறு சமூக பெண்ணை காதலித்து திருமணம் செய்ய மாட்டேன் என்று கூறிவிட்டு காம இச்சையை தணிக்க எந்த சமூக பெண்ணிடம் உறவு கொள்வார்களா ?

இன்றைய நிலையில் சமூகத்தில் திருமணம் செய்து வைக்க முடியாத பெற்றோர், நாட்டில் எத்தனையோ பேர் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள் நமது பிள்ளைகளுக்கு அந்த துப்பில்லையே என்று புலம்பிகொண்டிருக்கிறார்கள். இவரகள் காதலித்திருந்தால் காலகாலத்தில் திருமணம் செய்து வைத்திருக்கலாம் என்று ஆதங்கப்பட்டுகொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து தேடுதல் வேட்டையில் இருப்பதால், இதை வெளிப்படையாக சொல்லிக்கொள்ள முடிவதில்ல்லை.



முதலில் குறிப்பிடபட்டவர்களின் குடும்பத்தில், காதல் திருமணம் செய்து வைக்க வேண்டிய நிலை ஏற்ப்பட்டால், நவ தூவரங்களையும் மூடிக்கொள்வார்கள். இப்போதெல்லாம் காலம் மாறிவிட்டது சேர்ந்து வாழ போகிறவர்களின் விருப்பம் தான் முக்கியம் என்று கூறி சமாளிப்பார்கள்
இரண்டாவது வகையில் குறிப்பிடப்பட்டவர்கள் வயது ஏற ஏற, தங்களது எதிர்ப்பார்ப்புகளை குறைத்து கொள்ள தொடங்குகின்றனர். 30 வயதை கடக்கும் போதுவத்தலோ தொத்தலோ பொத்தல் இருந்தால் சரிதான்என்ற மனநிலைக்கு வந்து விடுகிறார்கள்.

பெற்றோர் பார்த்து தங்களது சமூகத்திலேயே மணமக்களை முடிவு செய்து திருமணம் செய்து வைப்பது சிறந்தது தான். ஆனால், அப்படி எல்லோருக்கும் காலகாலத்தில் அமைந்து விடுவதில்லை.

எப்போது காதலிக்க வேண்டும் ::

பெற்றோர் திருமணத்திற்க்கு வரண் தேடும் போது, ஒரு ஆண்டு காலம் வரை பொறுமையாக அவர்கள் சொல்படி கேட்டு நடக்க வேண்டும்.
26 – 27 வயது வரை வரை திருமணம் நடைப்பெறவில்லையென்றால், சமூகத்தில் ஆண் / பெண் காதலிக்க தொடங்க வேண்டும்.
29 – 30 வயது ஆகும் போதும் திருமணம் அமையவில்லையென்றால், வேறு சமூகத்து ஆண்யோ / பெணயோ கூட காதலிக்க தொடங்கலாம்.
35 வயதுக்குள் திருமணம் நடைப்பெறவில்லையென்றால், எவ்வித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல், தன்னுடைய சமூகம் சார்ந்த அல்லது வேறு சமூகம் சார்ந்த விதவையோ அல்லது விவாகரத்து ஆனவர்களையோ பெரியோர்கள் மூலம் ஏற்பாடு செய்தோ அல்லது காதலித்தோ நிச்சயமாக திருமணம் செய்யவேண்டும்.

அதற்கு மேல் திருமணம் செய்யாமல் காலம் கடத்தி , திருமணமே செய்யாமல் இருப்பதை விட , ஏதாவது ஒரு விதத்தில் திருமணம் செய்து, காமம் அனுபவித்து வாரிசுகள உருவாக்கி வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவேண்டும்.

சமூகத்தில் காதலிக்க அண் / பெண்ணை தேடுவது எப்படி :

27 வயது ஆகும் போது, தமது வீட்டுக்கு யார் வந்து திருமண பத்திரிக்கை வைத்து அழைத்தாலும், அந்த திருமணத்தில் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் ; அங்கு தங்களுடைய சமூக பெண்கள் அதிகம் இருப்பார்கள். அதில் யாரையாவது உங்களுக்கு பிடித்திருந்தால், பெற்றோரிடம் சொல்லி ஏற்பாடு செய்யலாம். அல்லது நீங்களே களத்தில் இறங்கி காதலிக்க ஆரம்பிக்கலாம்.

காது குத்தல், முடி இறக்குதல், வளைகாப்பு அல்லது வேறு எந்த விசேசம் என்றாலும் அந்த வீட்டு விசேசங்களில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். எல்லோரையும் கவரும் படி நடந்துகொள்ள வேண்டும். யாரவது திருமணம் ஆகிவிட்டதா என்று கேட்டால், ஆகவில்லையென்றும், யாரவது ஆண் / பெண் இருந்தால் சொல்லுங்கள் என்று கூச்சப்படாமல் கேட்க வேண்டும்.

கல்யாண தரகர்களிடம் சமூக ஆண் / பெண் ஜாதகங்கள் மற்றும் இதர தகவல்கள் இருக்கும். அவர்களிடம் பேசி எல்லா ஆண் /பெண் விவரங்களையும் சேகரித்து, அவர்களை காதலிக்க முயற்சி செய்ய வேண்டும்.

சமூக மக்கள் அதிகமாக வாழும் பகுதியிலிருந்து வெளியேறி வேறு மாநிலங்களில் அல்லது வெளிநாட்டில் வசிக்கும் ஆண் / பெண்கள் , அந்தந்த ஊர்களில் நடக்கும் சமூக நிகழ்ச்சிகள் அனைத்திலும் கலந்து கொண்டு தங்களுக்கு பிடிக்கும் ஆண் / பெண்ணை காதலிக்க வேண்டும்.
இவ்வாறேல்லாம் செய்தும் 29 வயது வரை திருமணம் அமையவில்லையென்றால், வேறு சமூக  ஆணையோ /பெண்ணையோ காதலிக்க ஆரம்பிக்கலாம்.

ஆணோ பெண்ணோ, உங்களுக்கு காதல் வந்து விட்டால், அதை பெற்றோரிடம் சொல்லி திருமணம் செய்து வைக்க சொல்லுங்கள். உங்கள் தரப்பு நியாயங்களை கூறுங்கள். உறவினர்களின் ஆதரவை நாடுங்கள். சம்மதிக்காவிட்டால், திருமணமே செய்து கொள்வதில்லை என உறுதியாய் இருங்கள்.

பெண்களே தயவு செய்து வீட்டை விட்டு ஓடாதீர்கள். நீங்கள் நம்பி செல்லும் ஆண் உங்களிடம் எல்லா உண்மைகளையும் சொல்லியிருப்பான் என்று குருட்டுதனமாக நம்பாதீர்கள். தீர விசாரியுங்கள். நாளை அவண் உங்களை விட்டு விட்டு ஓடினால், நீங்கள் பிறந்த வீட்டிற்க்கும் வரமுடியாது. தனியாக அவப்பெயருடன் வாழ்வது சிரமம். ஓடிப்போய் திருமணம் செய்துகொண்டாலும், பலரது சாட்சியுடன் பதிவு திருமணம் செய்துகொள்ளுங்கள். ஏதேனும் பிரச்சனையேற்ப்பட்டாலும், அது உதவக்கூடும். பொதுவாக, விட்டு கொடுத்து வாழ்ந்தால் தான் வாழ்க்கை அமைதியாய் இருக்கும். குறிப்பாக காதல் திருமணத்தில், ஓடி போய் திருமணம் செய்து கொள்பவர்கள் நிச்சியமாக விட்டுக்கொடுத்து தான் வாழவேண்டும்

ஆரம்பத்தில் ஓடிபோனாலும் , பின்பு நமது வீட்டில் சேர்த்துகொள்வார்கள் என்ற குருட்டு நம்பிக்கையில் இருக்காதீர்கள். பொதுவாக சில வருடங்களுக்கு பின்பு சேர்த்து கொள்கிறார்கள். மேலும், இவர்கள் வந்து சேர்ந்து கொள்வதற்க்கு காரணம் உறவுகள் வேண்டும் என்பதற்க்காக அல்ல. அப்பன் சொத்தில் எங்கே நமது பங்கு கிடைக்காமல் போய்விடுமோ என்று சிலவருடங்களில் எப்படியாவது வந்து ஒட்டிக்கொள்கிறார்கள். எனவே, ஓடி போய் திருமணம் செய்து கொண்டு , சொத்துக்காக வந்து ஒட்டிக்கொள்ளாதீர்கள். எல்லோரையும் உதறி விட்டு போபவர்கள், சொத்தையும் உதறிவிட்டு போங்கள்.

பெற்றோரின் விருப்பத்துக்கு எதிராக திருமணம் செய்யும் ஆண்கள், உங்களை நம்பி வந்த பெண்ணை கடைசி வரை காப்பாற்றுங்கள். உங்களது பெற்றோர் உங்களை நம்பி வாழ வேண்டிய சூழ்நிலையில் இருந்தால், அவர்களை கடைசி காலத்தில் காப்பாற்றுங்கள். அவர்கள் ஏன் உங்கள் காதல் திருமணத்தை எதிர்த்தார்கள் என்பதை அவர்களது கோணத்திலிருந்து காண முயற்சி செய்யுங்கள்.

30 வயதுக்குள் அனுபவிக்கும் காமமே சிறந்த காமம். அதற்கு பின்பு முதன் முதலில் காமம் அனுபவித்தால் அவ்வளவு இன்பமாக இருக்காது.

பெற்றோர்கள் ஏன் காதல் திருமணத்தை ஆதரிக்கவேண்டும். ::

1. இந்த காலகட்டத்தில் எல்லா வீடுகளிலும் இரண்டு குழந்தைகள் தான் இருக்கிறது. வயதான காலத்தில் பிள்ளை தன்னை காப்பாற்றுவான் என்பது நம்பிக்கை. பெண்களும் காப்பாற்றுவார்கள்.
அவர்களுக்கு கால காலத்தில் காமம் அனுபவிக்க திருமணம் செய்வது அவசியம். அவர்கள் யாரையாவது காதலிப்பதாக கூறினால், நல்லவிதமாக புரிய வைக்கலாம். சமூகத்தில் பார்த்து திருமணம் செய்வதால, ஏற்பட கூடிய நன்மைகளை விரிவாக கூறலாம். ஏற்கனவே வயது அதிகமாகிவிட்டிருந்தாலும், சமூகத்தில் வரன் அமைவது சிக்கலாக இருந்தாலும், அவர்களது காதலை ஆதரித்து, திருமணம் செய்து வைக்கலாம்

காதலை பிரிக்கிறேன் என்று மிரட்டுவது, பூட்டி வைப்பது, வெளியே அனுப்பாமல் இருப்பது, படிப்பை நிறுத்துவது, வேலைக்கு அனுப்பாமல் இருப்பது போன்ற காரியங்களை செய்யகூடாது. கட்டப்பஞ்சாயத்து மூலமாகவோ, சமூக அமைபுகளின் மூலமாகவோ காதலை முறியடிக்க முடியாது ;  கௌரவ கொலைகளும் செய்ய முடியாது கூடாது. பெற்றோர் அப்படி நடந்துகொண்டால்  அவர்கள் உங்களுக்கு அவமானத்தை தேடி தந்து உங்களுக்கு தெரியமாலேயே திருமணம் செய்துகொள்வார்கள். வீட்டை விட்டு ஓடிபோவார்கள் ; வீட்டிற்க்கு இழுத்துகொண்டு வருவார்கள்.

உங்கள் பேச்சை கேட்டும், சமூக கௌரவத்திற்க்காகவும் அவர்கள் காதலை தியாகம் செய்து தனிமையில் வாழ்ந்தால், அவ்வாறு வாழும் பெண்களை இந்த சமூகம் பலவேறு விதமாக பேசுகிறது. எந்த சமூகத்திற்க்காக , தங்களது காதலை துறந்தார்களோ , அந்த சமூகமே அவர்களை இழிவாக பேசுகிறது. அவர்களும் குடும்ப நிகழ்சிகளில் / சமூக நிகழ்சிகளில் பங்கு கொள்ள விருப்பம் ஏற்படுவதில்லை. அப்படியே கலந்து கொண்டாலும், அவர்களது திருமணம் ஆகாத நிலைக்கு அவர்களையே காரணமாக சொல்லி தூற்றூகிறது. பெண்களுக்கு இந்த நிலை என்றால், ஆண்களை சமூக உறவினர்கள் கூட தங்கள் வீட்டிற்கு அழைக்க தயங்குகிறார்கள். அவர்கள் மூலம் தங்கள் வீட்டு பெண்களுக்கு ஏதேனும் ஆபத்து அசிங்கம் ஏற்ப்பட்டு விடுமோ என்று நினைக்கிறார்கள்.
இப்படி தனிமையில் வாழ நேரிடும் அணுக்கும் பெண்ணுக்கும் ஏற்ப்படும் காம உணர்ச்சியால், அதை அவர்கள் தவறான வழியில் தேடும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். பெயரை கெடுத்து கொள்வதுடன் மனதையும் உடலையும் கெடுத்து கொள்ள வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்படுகிறார்கள்

வயதான காலத்தில் மகனையோ அல்லது மகளையோ சார்ந்து வாழ வேண்டிய சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவர்களது இளமை கால வாழ்க்கைக்கு முட்டு கட்டை போட்டால், அதுவே உங்கள் மீது வெறுப்பை வளர்த்து விடும். அவர்களுடன் சேர்ந்து வாழ முடியாத சூழ்நிலை ஏற்ப்படும். பொருளாதார உதவிகளும் கிடைக்காமல் போய்விடும். உடல்நல குறைவு ஏற்ப்படும் போது, பெற்ற பிள்ளைகள் உடனிருந்து கவனித்தால் தான் மனநிறைவு ஏற்ப்படும். உங்களிடம் பணம் இருந்தாலும் , உங்களை கவனித்து கொள்ள ஆள் வேண்டும் என்ற நிலை ஏற்ப்படும் போது, அவர்கள் உங்களை கவனித்துகொள்ள மாட்டார்கள். முதியோர் இல்லத்திலோ அல்லது அனாதை இல்லத்திலோ போய் வாழ வேண்டிய நிலை ஏற்ப்படும். அது உங்களுக்கும் அவமானம். அவர்களுக்கும் அவமானம்.

எந்த சமூகத்திற்க்காக காதல் திருமணத்தை எதிர்த்து, பிள்ளைகளை ஒதுக்குகிறிர்களோ அந்த சமூகம் உங்களுக்கு உதவி தேவைப்படும் போது  உதவ முன்வராது. சமூக அந்தஸ்தை காப்பாற்றுபவர்களுக்கு , அவர்களது கடைசி காலத்தில் உதவி செய்வதற்கென்று, எந்த சமூக அமைப்புகளும் இல்லை. உறவினர்களிடம் சென்று உதவி கேட்டாலும், , அவர்களும் உதவும் நிலையில் இருக்கமாட்டார்கள். விரும்பமாட்டார்கள். பிள்ளைகளிடம் சென்று வாழுங்கள் என்று தான் கூறுவார்கள். பிள்ளைகளின் விருப்பபடி காதல் திருமணம் செய்து வைத்திருக்க வேண்டும் என்றும் எத்தனையோ பேர் அப்படி தான் செய்திருக்கிறார்கள் என்றும் நீங்கள் தவறு செய்து விட்டீர்கள் என்று உங்களது உறவினர்களும், சமூக மக்களும் கைவிட்டு விடுவார்கள்.

2. மேலும், பெண்களை பெற்றவர்களால், ஆண்கள் எதிர்ப்பார்க்கும் அளவுக்கு செலவு செய்து திருமணம் செய்து வைக்க முடியாத நிலையில் இருப்பதாலும், பெண்களின் எதிர்ப்பார்புகளுக்கு ஏற்ப ஆண்களை தேட முடியாத நிலையில் இருக்கும் போது, காதல் திருமணங்களை ஆதரிக்க வேண்டும். அவர்களாகவே முடிவு செய்யும் போது, பெற்றோர்களுக்கு இந்த பொருளாதார பிரச்சனை ஏற்ப்படாது. அவர்களது எதிர்ப்பார்ப்புகளுக்கு ஏற்ப அவர்களது துணையை தேடிக்கொள்வார்கள். எனவே, காதல் ஏற்ப்பட்டு விட்டது என்று கூறினால், அவர்களை பற்றி விசாரித்து திருமணம் செய்து வைத்துவிடுங்கள்.

இன்றைக்கு சமூகத்தில் திருமண வயதை கடந்து பல ஆண்களும் பெண்களும் இருக்கிறார்கள். அவர்கள் ஜாதகம் பார்ப்பதை நிறுத்திவிட்டு, மற்ற எதிர்ப்பார்ப்புகளையும் நிறுத்திவிட்டு அவர்களுள் ஒருவரை ஒருவர் திருமணம் செய்து கொண்டால், இன்றைக்கு அவதிப்பட்டுகொண்டிருக்கும் ஆண் பெண் நிச்சியமாக ஒரு நல்ல வாழ்வை அமைத்துக்கொள்ள முடியும். முயற்சி செய்து தான் பாருங்களேன்.

காதல் திருமணம் செய்தால், சமூகம் சீரழிந்து விடும் என்பது மிகப்பெரிய முட்டாள்தனம். சமூக கலாச்சாரம் என்று ஒன்று கிடையாது. நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த்து போலவா வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சமூக காலச்சாரம் எவ்வளோ மாறிவிட்டது. காதல் திருமணங்கள் கூடாது என்பவர்கள், சமூகத்து ஆண் பெண்களை சமமாக பழகவிடுங்கள். சமூகத்திலேயே அவர்களுக்கு துணை கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்ப்பட்டால், அவர்கள் வேறு சமூக பெண்களை நாடுவது குறையும்.  மேலும், பெண் வீட்டாரிடமிருந்து எதிர்ப்பார்ப்புகளை குறைத்துகொள்ளுங்கள். பெண்களுக்கும் நிறைய எதிர்ப்பார்ப்புகள் இருக்கிறது. ஆண்களை விட பெண்களுக்கு தான் நிறைய எதிர்ப்பார்புகள் இருக்கிறது.

சமூகத்தில் எல்லா பெண்களுக்கும் அவர்கள் எதிர்பார்ப்பது போல ஆண்கள் கிடைக்கமாட்டார்கள்.. பொருளாதாரம் மட்டுமே வாழ்க்கையை நிம்மதியாக சந்தோசமாக வைத்திருக்க உதவாது.  

இப்படியே வேறு சமூகத்து பெண்களை திருமணம் செய்து கொண்டிருந்தால், சமூகம் அழிந்து விடும் என்று கூறப்படுகிறது. சமூகம்(ஜாதி) என்பது தொட்டு உணரகூடியது அல்ல. பார்த்து அறிய கூடியது அல்ல. ஜாதி என்பது ஒரு சொல். சௌராஷ்ட்ரா சமூகத்திற்க்கு மொழிதான் அடையாளம்.

காதல் திருமணங்களால் தான் சமூகம் அழிந்து விடுமா. இன்று சொந்த ஊரில் இருந்து குடிபெயர்ந்து வேறு மாநிலங்களில் , வேறு நாடுகளில் வாழும் சமூக மக்களுக்கு அவர்களது மொழி தெரிவதில்லை. வேறு இடங்களுக்கு குடி பெயர்ந்தவர்களின் குழந்தைகளுக்கு, அவர்களது பெற்றோர் இருக்கும் வரை தான், சொந்த ஊருக்கு வந்து சொந்தங்களை வந்து பார்த்துவிட்டு பாக்கியம் கிடைக்கிறது. பெற்றோர்களின் மறைவுக்கு பிறகு அங்கேயே வாழும் சூழ்நிலையில் மொழியும் தெரிவதில்லை. கலாச்சாரமும் தெரிவதில்லை. இரண்டு தலைமுறையில் சமூகத்திலிருந்து பிரிய வேண்டிய சூழ்நிலை ஏற்ப்படுகிறது. இவ்வாறு சமூகம் சிறிது சிறிதாக அழிந்து கொண்டுதான் இருக்கிறது. இன்னும் ஒரு நூற்றாண்டில், சமூகம் மற்ற சமூகங்களுடன் கலந்து ஒரு கலவையாக தான் இருக்கும். அதை யாரலும் தடுத்து நிறுத்தமுடியாது.

இந்த நிலையில் உள்ளூரில் வாழும் சமூக மக்கள் வேறு சமூக மக்களுடன் காதல் திருமணங்கள் செய்து வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்ப்பட்டாலும், அந்த சமூக ஆணுக்கும் பெண்ணுக்கும் மொழியை கற்றுக்கொடுப்பதன் மூலம் , சமூகத்திற்க்கு ஒரு புதியவரை அழைத்து வர முடியும். இதன் மூலம் இந்த சமூக தொடர்ச்சியை இன்னும் சில நூற்றாண்டுகளுக்கு நீட்டிக்க முடியும். அதற்கு பிறகு என்ன செய்வது என்பதை அடுத்த தலைமுறைகள் முடிவுசெய்யும்.

பள்ளியில் படிக்கும் போதும், கல்லூரியில் படிக்கும் போதும், சிறு வயதிலேயே அரிப்புக்கு ஆள் தேடி ஓடிப்போவருக்கு மேலே கூறியவை பொருந்தாது.