நவகிரகங்கள்
: தேவந்திரா தேவந்திரா ,என்ன செய்கிறாய் எங்கள் நிலைமையை பார்த்தாயா ? இனி எங்கள் கதி என்ன ?
தேவந்திரன்
: அட, சூரியன், சந்திரன்,
செவ்வாய், புதன், வியாழன்,
வெள்ளி, சனி, ராகு
, கேது எல்லோரும் ஒன்றாக வந்துள்ளீர்கள். என்ன
விசயம் ஏன் இந்த கூச்சல்
செவ்வாய்
: என்ன இந்திரா ஒன்றும் தெரியாதது போல் கேட்கிறாய். பூமியிலிருந்து என்னை வேவு பார்க்க செயற்கைகோள் வந்துள்ளது
தேவந்திரன்:
சரி , வரட்டும் அதற்கென்ன. உன்னை சுற்றி விட்டு சில வருடங்கள் கழித்து கீழே விழ போகிறது.
புதன்:
என்ன இந்திரா விளையாடுகிறாயா ? இன்று வேவு பார்த்து
விட்டு சென்று பின்பு என் இடத்தில் வந்து குடியேறுவார்கள். பிறகு என்னுடைய அதிகாரத்தில் உள்ள இடம் என்னை விட்டு போய்விடும்.
தேவந்திரன்:
அது எப்படி போய்விடும். அவர்கள் வந்து எப்படி குடியேறுவார்கள்.
அவர்கள் தான் உங்களை கட்டம் கட்டி, நீங்கள்
அங்குமிங்கும் போவதை வைத்து அவர்கள் வாழ்க்கையை கனித்து விளையாடுகிறார்களே.
அப்படியிருக்கும் போது, அவர்கள் இங்கு எப்படி வர
முடியும்.
புதன்:
தேவந்திரன், எல்லாம் தெரிந்தும் ஒன்றும் தெரியாதது போல் பேசுகிறார்.
முதலில் சந்திரனிடம் வந்தார்கள். இப்போது,
பூலோக மக்களை குடியேற்ற, ஆட்களை அனுப்ப ஆயுத்தம்
செய்து கொண்டிருக்கிறார்கள். இடம் வாங்கலாம் என்றும் விளம்பரம்
செய்தும் , பணம் வசூலிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
தேவந்திரன்:
இது எங்கே எப்போது நடந்தது.
புதன்
: அமெரிக்காவில் இதெல்லாம் நடக்கிறது. உனக்கு தெரியாதா.
தேவந்திரன்:
சந்திரனில் மக்களை குடியேற்ற அமெரிக்க முயற்சி செய்கிறது. ஆனால், இப்போது
செவ்வாயை பார்க்க இந்தியா செயற்கை கோள் அனுப்பியுள்ளது. அவர்களிடம்
மக்களை இங்கு அனுப்பு வசதியில்லை. அது சரி, சந்திரனே சும்மாயிருக்கும் போது நீ ஏன் குதிக்கிறாய். உனக்கு என்ன இவ்வளவு கரிசனம்.
புதன்:
என்ன தேவந்திரா இது கூட தெரியாதது போல் பேசுகிறாய்.
சந்திரனுக்கு அடுத்து செவ்வாய்க்கு வந்தவர்கள் அடுத்து என்னிடம் தானே
வருவார்கள். நான் என்னை
வரும் முன் காப்பாற்றி கொள்ள வேண்டாமா ?
தேவந்திரன்:
சரி என்ன செய்ய வேண்டும்.
என்ன ஆபத்து வந்து விடும்.
செவ்வாய்:
என்ன ஆபத்தா ? இப்போது செயற்கை கோள் அனுப்பியிருப்பது
இந்தியா. அது தான் ஆபத்து. வெள்ளைகாரனை
சமாளிக்கலாம். ஆனால், இந்தியனை அதுவும்
தமிழனை சமாளிக்க முடியாது.
தேவந்திரன்:
புதன் நீ ரொம்பவும் பயப்படுகிறாய். ஒன்றுமாகாது.
கவலைப்படாதே.
புதன்:
இல்லை தேவந்திரா. உனக்கு புரியவில்லை. கீழே பார். நாட்டில் என்ன நடக்கிறது என்று பார்.
கோமான்: என் இனிய மக்களே, இப்போது
இங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது. தமிழனுக்கு எதிராக சதி நடந்து
கொண்டிருக்கிறது. செவ்வாய் கிரகத்திற்க்கு செயற்கை கோள் போய்
சேர்ந்து விட்டதாம். பெருமை பேசுகிறது ஆரிய கூட்டம். அதில்
ISRO என்று ஆங்கிலத்தில் எழுதியுள்ளனர். பழமையான செம்மொழியில் ஏன் எழுதவில்லை. நமது
தமிழின தலைவர் செம்மொழி மாநாடு நடத்தினர் என்பது தான் காரணம்.
வலைஞர்: உடன்பிறப்பே, நான் உனக்கு கடிதம் எழுதுவது புதிதல்ல. 27ஆம் தேதிக்கு பயந்து கடிதம் எழுதாமல்
இருப்பவர்களை போல நான் இருக்க முடியாது. கடிதம் எழுதுபவர்கள் அதை அனுப்புகிறார்களா
இல்லையா என்பது கூட தெரியாது. நான் பத்திரிக்கை மூலம் உனக்கும் உலகத்தாற்கும் அனைவரும்
அறிந்து கொள்ளும் வகையில் வெளிப்படையாக எழுதுகிறேன்.
இவர்கள் ஏன் இப்போது செயற்கை கோள் அனுப்பினார்கள். நமது தமிழன் சிறுபான்மை
இனத்தவராக இருந்தாலும், அபதுல் கலாம் அவர்கள் அங்கிருந்த போது ஏன் அனுப்பவில்லை. இது
குறித்து இன்றைய தமிழக முதல்வர் ஏன் இன்னமும் கடிதம் எழுதவில்லை. தம்பி, கோமானுக்கு
ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். கொள்கை வேறு கூட்டணி வேறு. எத்தனை இடங்கள் கிடைக்கும் என்று
பார்க்காமால், கழகத்திற்க்கு வலுவூட்டும் வகையில் கூட்டணியில் இடம் பெறும் காலம் அதிகமில்லை.
திருவிநாயகம்: நேரு கொடுத்த வாக்குறுதி படி ISRO என்பதை 22 மொழிகளிலும்
எழுதியிருக்க வேண்டும். தமிழர்களின் தாழ்வாரத்தை இடித்த போது, நான் இது அநீதி என்று
குரல் எழுப்பினேன்.
வைத்தியர்: அங்கு காதல் திருமணங்கள் நடத்த விட மாட்டோம்.
கோவை: நாங்கள் இனைந்தாலும் இதற்காக நடைப்பயணம் மேற்க்கொள்வேன் என்பதை
தெரிவித்துக்கொள்கிறேன்.
அங்க பிரதிஸ்டர்கள்: அகிலான்ட பரமேஸ்வரியின் ஆட்சி தான் அகிலமெங்கும்
நடக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
வலைஞர்: மோதி எனது நண்பர் அதனால் அவர் மோடி மஸ்தான் வித்தை காண்பிக்கிறார்
என்று கூற மாட்டேன். நானும் அவரும் அமைதியாக காரியம் ஆற்றுவதில் ஒரு மித்த கருத்து
உடையவர்கள். மாநிலத்தில் கலவரம் நடந்த போது அவர் எப்படி அமைதி காத்தாரோ அது போல நான்
இனம் அழிந்த போதும் அமைதி காத்ததன் மூலம் நாங்கள் ஒருமித்த கருத்து உடையவர்கள் என்பதை
நீங்கள் அறிவீர்கள். என்றைக்குமே மத்திய அரசுடன்
இனைந்தே செயல்பட விரும்புகிறது. எங்களது அனுபவங்களை பயன்படுத்தி கொள்ள அவர்கள் விரும்பினால்,
அவர்களது அமைச்சரவையில் பணிபுரிய எனது மனைவியின் மகள் எப்போதும் தயாராக இருக்கிறார் என்பதை அவர்கள் கவனத்திற்க்கு
எடுத்து செல்கிறேன்.
பப்பு : எங்களை பாராளூமன்றத்தில் யாரும் மதிக்கவில்லையென்பதற்க்காக
நான் உண்மையை கூறாமல் இருக்க முடியாது. நாங்கள் செய்து வைத்திருந்த அனுகுண்டை தான்
இவர்கள் பொக்ரானில் வெடித்து பேர் வாங்கி கொண்டார்கள். இப்போது, நாங்கள் நாட்டை விட்டு
வெளியேற செய்து வைத்திருந்த ராக்கெட்டில் சில மாற்றங்கள் செய்து செவ்வாய் கிரகத்துக்கு
அனுப்பி விட்டார்கள். நான் வழக்கம் போல கட்சிக்கு தோல்வியை வாங்கி தர மகாராஷ்ட்ரா மாநில தேர்தல் வேலைகளில் ஈடுப்பட்டிருக்கிறேன்.
அக்னிபுத்திரன்.: டெல்லியில் தேர்தல் நடத்தி வெற்றி பெற முடியாதவர்கள்,
செவ்வாய்க்கு செயற்கை கோள் அனுப்பி விட்டோம் என்று மார் தட்டுகிறார்கள்
கோமான் : தமிழர் வரலாறு அறியாதவர்கள் குழந்தை தனமாக பிதற்றுகிறார்கள்.
எனது பாட்டன் முப்பாட்டான் என்றோ அனைத்து இடங்களுக்கும் வின்பல்லக்கு அனுப்பி விட்டான்.
அதில் ஏறி சென்ற தமிழச்சி தான் அங்கு வடை விற்றுக்கொண்டிருக்கிறாள் என்பது தான் சாட்சி.
தமிழனின் வரலாற்றை மறைக்க ஆரிய கூட்டம் சதி செய்கிறது. தமிழனுக்கு தனியாக நாடு இருந்தால்,
அனைத்து வரலாற்று உண்மைகளையும் வெளிக்கொணர முடியும். அதற்கு முதல் கட்டமாக தமிழ் நாட்டை
தமிழன் ஆள வேண்டும். வரும் தேர்தலில் அனைத்து இடங்களிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று
தமிழனின் பெருமையை ஈரேழு உலகத்துக்கும் பறை சாற்றுவோம்.
வடை சுட்டுக்கொண்டிருக்கும் தமிழச்சியை அழைத்து வந்து விழா எடுப்போம்.
ஆரியர்களின் சூழ்ச்சியை முறியடிப்போம். திங்கள் முதல் வெள்ளி வரை தமிழனின்
ஆட்சியே இருக்கும்.
சனி, ராகு, கேது சூரியனை அவர்கள் ஆளட்டும். தமிழன் மற்றவர்களையும் ஆள
வைப்பான் என்பதை இதன் மூலம் அறியட்டும்.
தேவந்திரன்
: புதன் பார்த்தேன். இந்தியாவில் இது போன்று பிதற்றுவது தான் வழக்கம். நாம் பொழுது
போக்குக்காக இதை தானே பார்த்து சிரித்து கொண்டிருக்கிறோம். இவர்களால் நமக்கு என்ன கெடுதல்
ஏற்ப்பட்டு விடும்.
புதன்:
இல்லை தேவந்திரா, இவர்கள் இனி ஒரு புதிய
ஆயுதத்தை கையிலெடுப்பார்கள். மலையாளி தலைமையில் செயற்கை கோள் வந்துள்ளது. அதனால் அவர்கள் முதலில் மலையாளிகளை தான் இங்கு குடி அமர்த்துவார்கள். நாயர் டீக்கடையும் ஆரம்பிக்கப்படும். பிறகு தேயிலை தோட்டங்கள், ரப்பர் தோட்டங்கள் பயிருடுவார்கள். அங்கு வேலை செய்ய தமிழர்கள் வருவார்கள். செவ்வாய் செழித்து வளர நாங்கள் தான் உதவினோம் என்று கூறி பாதி செவ்வாய் கிரகத்தை அவர்கள் கேட்ப்பார்கள். சண்டை வரும். செவ்வாய்க்கு நான் உதவிக்கு செல்ல வேண்டி வரும். என்னை துரோகி என்பார்கள். தேவேந்திரா, உனக்கு நான் சொல்வது புரிகிறதா. எதாவது செய்து தடுத்து நிறுத்த வேண்டும்.
ஆயுதத்தை கையிலெடுப்பார்கள். மலையாளி தலைமையில் செயற்கை கோள் வந்துள்ளது. அதனால் அவர்கள் முதலில் மலையாளிகளை தான் இங்கு குடி அமர்த்துவார்கள். நாயர் டீக்கடையும் ஆரம்பிக்கப்படும். பிறகு தேயிலை தோட்டங்கள், ரப்பர் தோட்டங்கள் பயிருடுவார்கள். அங்கு வேலை செய்ய தமிழர்கள் வருவார்கள். செவ்வாய் செழித்து வளர நாங்கள் தான் உதவினோம் என்று கூறி பாதி செவ்வாய் கிரகத்தை அவர்கள் கேட்ப்பார்கள். சண்டை வரும். செவ்வாய்க்கு நான் உதவிக்கு செல்ல வேண்டி வரும். என்னை துரோகி என்பார்கள். தேவேந்திரா, உனக்கு நான் சொல்வது புரிகிறதா. எதாவது செய்து தடுத்து நிறுத்த வேண்டும்.
தேவேந்திரன்:
நவகிரகங்களே, உங்களில் ஒருவன் புதன் இவ்வளவு கவலைப்படுகிறான். நீங்கள் ஏன் அமைதியாய்
இருக்கிறிர்கள்.
சந்திரனே,
முதலில் உன்னிடம் தான் வந்தார்கள். வரப்போகிறார்கள். ஏதாவது ஆபத்து ஏற்ப்படும் என்று
கருதுகிறாயா. சொல் சந்திரா சொல். தமிழச்சி உன் இடத்தில் தான் கடை போட்டிருக்கிறாளா.
அப்படியென்றால் அதற்கு பக்கத்தில் நாயர் டீக்கடை போட அவர்கள் வருவதில் என்ன தவறு. பெண்களை
மயக்கும் புன்னகையை தந்து மழுப்பாதே. பதில் சொல்.
சந்திரன்:
தேவேந்திரா, புதன் மிகவும் பதட்டமடைந்துள்ளான். அவர்கள் இவ்வளவு தூரம் வரமுடியாது.
அவர்கள் வரும் முன்பே எங்களது பங்காளிகள் பஞ்ச பூதங்களாக வாழும், - நிலம், நீர், வாயு,
நெருப்பு, ஆகாயம் இவர்களை அடைய அடக்கி ஆள செய்த முயற்சியில் அவர்கள் அழிந்து கொண்டிருக்கிறார்கள்.
எனது
சகோதரர்கள் நினைத்தால் இந்த மானிடர்களை அழித்து விட முடியும். பரம்பொருளின் அவதாரத்தில்
தான் கல்கி யுகம் முடியும் என்று அவர்கள் நம்பி கொண்டிருப்பதால், இவர்கள் அந்த அழிவு
செயலை செய்யவில்லை.
அவ்வப்போது,
மக்களுக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கிறார்கள். அக்னி எரிமலையாக வெடித்தும், காட்டு
தீயாக பரவியும், வெப்ப நிலையை உயர்த்தியும் அவர்களை எச்சரிக்கிறான்.
நீர்
கன மழையாக பொழிந்தும் ஆறுகளில் கட்டுக்கடங்காமல் ஓடியும், சுனாமிகளை ஏற்ப்படுத்தியும்
எச்சரித்துக்கொண்டிருக்கிறார்.
வாயு
சூறாவளியாக சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கிறான். மனிதர்களின் உடம்பில் புகுந்து
அவ்வப்போது தொந்தரவு கொடுத்துக்கொண்டிருக்கிறான்.
நிலம்
மனிதர்களின் எதிர்ப்பார்ப்புக்கு ஏற்ப உணவு பொருள் உற்ப்பத்திக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் மேலும் அவ்வப்போது நிலச்சரிவின் மூலம் தனது சக்தியை
வெளிப்படுத்துகிறார்.
ஆகாயம்
இவர்கள் பயணிக்கும் விமானங்களை மறைய வைத்தும் இவர்கள் ஆகாயத்தில் சேமித்து வைக்கும்
தகவல்களை கொண்டு அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இவ்வாறு
இவர்களது வாழ்வுக்கு உதவி செய்ய படைக்கப்பட்டிருக்கும் ஐம்பெரும் பூதங்களை அவமதித்து,
அவைகளை அழித்து வருகின்றனர். மனிதர்கள் இவர்கள் மூலமே அழிந்து விடுவார்கள். அதையும்
மீறி இவர்கள் இங்கு வந்தால்,………………………………………………….. வேண்டாம் தேவேந்திரா, தேவ ரகசியங்களை
இதற்கு மேல் சொல்லக்கூடாது. அதற்கு அவசியமும் ஏற்ப்படாது.
தேவந்திரன்
: நவகிரகங்களே, சந்திரன் சொல்வது எனக்கு சரியாக படுகிறது. மனிதர்கள் தங்களது அறிவுத்
திறமையை பரிசோதித்து கொள்ள இது போன்ற செயல்களில் ஈடுப்படுகிறார்கள். அதனால் ஒன்றும்
பாதகமில்லை. யாரும் அஞ்ச வேண்டாம்.
இயற்கையை
அழிப்பதோ, ஆராய முற்ப்படுவதோ அவர்களுக்கு அழிவாக முடியும் என்பதை அவர்கள் அறிவார்கள்
அவர்களுக்கு வாழ அனுமதிக்கப்பட்ட இடத்தை விட்டு வேறு இடத்திற்க்கு குடி பெயர நினைத்தால்,
அகதிகளாக ஆகாயத்தில் அவதிப்படுவார்கள்.
தற்சமயம்
அவர்களுக்கும் நமக்கும் எந்த ஆபத்தும் இல்லை. அவரவர் இடத்தில் அமைதியாக இருக்க பழகி
கொள்வோம்.
மங்கல்யான் செயற்கைக்கோள் தற்போதய நிலவரம் வீடியோ : http://youtu.be/F0wljrHK9ks
ReplyDelete