Tuesday 17 February 2015

சுஜாதா சிறு கதைகள்



நகரம்

மருத்துவ மனையில் தனது குழந்தையை சேர்க்க தெரியாத படிப்பறிவில்லாத ஏழை தாயின் அவலத்தை கூறும் கதை.

படிப்பறிவில்லாதது அவளது குற்றமல்ல. மருத்துவ மனை ஊழியர்கள் அனைவரும் அவரவர் வேலையில் மும்முரமாக ஈடுப்பட்டிருக்கும் போது தனிப்பட்ட ஒருவருக்கு உதவி செய்வது இயலாத காரியம். அங்குள்ள பொது மக்களுக்கும் அவர் அவர் பிரச்சனை அவர்களுக்கு. இதில் யாரும் யாரையும் குறை சொல்ல முடியாது.

கை வைத்தியமும் கடவுள் நம்பிக்கையுமே நோயளியை காக்க முடியும் என்ற நம்பிக்கையில் வாழ்க்கையை கடத்துவதே மனித வாழ்வின் யதார்த்தம்.

காரணம் 

தந்தையின் காமத்தை கானும் எட்டு வயது மகன் , தனது வகுப்பு மானவியிடம் சில்மிசம் செய்ய, அறிவுரை கூறும் ஆசிரியரை பழி வாங்க, அவர் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்ததாக தலைமை ஆசிரியருக்கு கடிதம் எழுத ஆசிரியர் வேலையிலிருந்து விலகுகிறார். 

ஒரு ஆண் மற்றோரு ஆணிடம் தவறாக நடந்து கொள்ள முடியுமென எட்டு வயது சிறுவனுக்கு தெரியுமளவுக்கு காமம் எங்கும் பரவியிருப்பதும் அதை தங்களுக்கு எந்த விதத்திலும் பயன் படுத்திக்கொள்ள முடியும் என்ற மன நிலை இருப்பதும், சமூக சீரழிவின் ஒர் அங்கமாக மாறிவிட்டது 

கால்கள் 

ஆங்கிலேய ஆட்சி காலத்தில் காவல் துறையில் பணியாற்றிய போது ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த மனிதர்களை சுட்டுக் கொல்லாமல், கால்களை குறி வைத்து சுட்டதை பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார். மக்கள் நொண்டி நொண்டி ஓடியதை ரசித்து  பேசுகிறார். சுதந்திரத்துக்கு பிறகு அனைத்தும் சீர்கேடு அடைந்து விட்டது என்பதும், ஆங்கிலேய ஆட்சியே சிறந்தது என்பது அவரது எண்ணம்.

அவரது கால்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு இயற்கை உபாதை கழிக்க கூட எழுந்து நடக்க முடியாத நிலையில் இருக்கிறார். 

இன்று இவர் நடக்க முடியாமல் இருக்க அவர் செய்த அந்த செயல்களுக்கு இறைவன் / இயற்கை கொடுத்த தண்டனையா ?

ஜன்னல் 

ஒரே விதமான வேலையை பல வருடங்களாக செய்து வரும் வங்கி ஊழியனுக்கு சாகும் எண்ணம் வருவதாக கூறி மருத்துவரை பார்க்கிறான். மருத்துவர் இது இயற்கை என்றும் தனக்கும் எல்லா நேரமும் நோயாளிகளை பார்த்து கொண்டிருப்பது சலிப்பு தருகிறது என்றும் தானும் இதிலிருந்து விலக நினைப்பதாக கூறிவிட்டு, அவனுக்கு மருந்து எழுதி தந்து விட்டு வெளியே அனுப்புகிறார். மற்றோரு நோயளியை பார்க்கும் போது தெருவில் வேகமாக செல்லும் வாகனம் ஒன்று தீடிரென நிறுத்தப்படும் ஓசை கேட்கிறது.

அந்த மனிதன் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தானா அல்லது விபத்து நேர இருந்ததா அதில் அவன் பிழைத்தான செத்தானா என்பதை வாசகனின் கற்பனைக்கு விட்டு விடுகிறார்.

இளநீர் 

இரு மாநிலங்களுக்கு இடையில் ஏற்ப்பட்டுள்ள பிரச்சனையால் ஊர் அடங்கி இருக்கும் இடத்தில் ஒரு கிழவன் இதை அறியாமல் இளநீர் விற்றுக் கொண்டிருக்கிறான்.ஒரு மாநிலத்தில் வன்முறையில் ஈடுப்படும் கும்பல் அந்த கிழவனிடம் தகராறு செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த சமயம் இளம் தம்பதிகள் காரில் வருகிறார்கள். இளநீர் குடிக்க நிற்கும் போது இந்த வன்முறை கும்பல் அவர்களை கொல்கிறது.

எங்கோ யாரோ பிரச்சனையை கிளம்பினால் அதற்கு சம்மந்தமில்லாதவர்கள் பாதிக்கப்படுவதை குறிப்பிடுகிறார்.

எப்படியும் வாழலாம்

விலை மாதுவை பேட்டி எடுப்பது போன்ற கதை. அவளுக்கு தனது வயது தெரியாது. ஏன் இந்த தொழிலுக்கு வந்தாய் என்று கேட்டால் திமிர் பிடித்து வந்ததாக கூறுகிறாள். வறுமையோ அல்லது நிர்பந்தமோ 
இல்லையென்றும் ஆரம்பத்தில் தனக்கு பிடித்தே பல ஆண்களுடன் தொடர்பு கொண்டதாகவும் பின்பு இந்த தொழிலுக்கு வந்ததாகவும் கூறுகிறாள் . கேவலம் என்றோ இழிவு என்றோ கருதவில்லை. இதை விட்டு விட்டு வேறு கவுரவமான தொழில் செய்யலாம் என்றும் மறு வாழ்வு மையத்துக்கு செல்லலாம் என்று கூறினாலும், மறுவாழ்வு மையத்தில் நடக்கும் ஊழலை சொல்கிறால். தன்னிடம் வந்தவர்களை பற்றியும் கூறுகிறாள்.

இறுதியாக பேட்டியில் தன்னை யாரவது கல்யாணம் செய்து கொண்டு வாழ்க்கை கொடுப்பதாக கூறினால் அவ்வாறு வாழ தான் தயார் என்று பேட்டியில் பிரசுரிக்கும் படி கூறுகிறாள்.

இதன் மூலம் இந்த தொழிலில் ஈடுப்படுவர்கள் எல்லாம் வஞ்சிக்கப்பட்டவர்கள் அல்ல என்றும் விரும்பியே இதில் ஈடுப்பட்டுள்ளவர்கள் இருக்கிறார்கள் என கூற முயற்சி செய்கிறார்.

எல்டோராடா

எட்டு வருடங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய மகன் தந்தை சாக கிடக்கும் நிலையில் அவரை பார்க்க வருகிறான். வீட்டில் அவனை யாரும் மதிக்காமல் வெளியேற்ற நினைக்க  , அவன் தந்தையை பார்க்கிறான். தந்தை தான் இங்கு இருக்க விருப்பம்மில்லையென்றும், தன்னை அவனுடன் அழைத்து செல்லும் படியும் கூறிகிறார். பழைய இனிய விசயங்களை பேசுகிறார்கள். அன்று இரவே இறந்து விடுகிறார்.
சொத்தெல்லாம் தனது பெயருக்கு எழுதி வைத்திருப்பதாகவும் , அதை அண்ணன் பெயருக்கு மாற்றி தருவதாகவும் கூறி வெளியேறுகிறான்.
தந்தைக்கும் மகனுக்கும் இருக்கும் இனிய உணர்வுகளை பதிவு செய்துள்ளார்.

கர்ஃபுயூ 

கர்ஃப்யூ இருக்கும் நேரத்தில் ஹைதராபாத் வருபவர்கள், கடைத்தெருவில் பொருட்கள் வாங்கி கொண்டிருக்கும் போது, கலவர கும்பல் கணவனை தாக்க வரும் போது, அதில் ஒருவன் அவண் தன் அண்ணன் போல் இருப்பதாக கூறி காப்பாற்றி விடுகிறான்.

அரிசி

காரை பழுது பார்க்க வந்த இடத்தில் விபத்தை பார்க்கிறான். போலிசுக்கு போன் செய்கிறான். இன்ஸ்பெக்டர் சாட்சி சொல்ல இவனது விவரங்களை கேட்க சாட்சி சொல்ல மனமில்லாமல் தான் வெளியூர்காரன் என விலகி விடுகிறான். போன் செய்யும் போது சாட்சி சொல்வதால் வரும் பிரச்சனைகளை அங்கு ஒருவர் சொல்வதால் இவன் விலகி கொள்கிறான். ஆனால் ஒன்பது வருடமாக இதே ஊரில் இருப்பவன்.

விபத்து சமயத்தில் அங்கு சிந்திய அரிசியை கூட மக்கள் அள்ளி செல்லும் அவலத்தையும் பதிவு செய்கிறார்.

நமது போலிசும் நீதி மன்றமும் சாட்சிகளை படாத பாடு படுத்துவதால் யாரும் சாட்சியாக இருக்க விரும்புவதில்லை.

அம்மா மண்டபம் 

நாத்திக வாதம் பேசும் கணவனுடன் திருவரங்கம் வரும் மனைவி தனது கணவனை கோயிலுக்குள் அழைத்து சென்று தரிசனம் செய்ய வைத்து அன்று உறவு கொண்டால் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கையுடன் எப்படி அழைத்து செல்வது என நினைத்திருக்கும் போது, காவேரி கரையில் கணவன் குளிக்கும் போது நகை பணம் கையில் வைத்திருக்கிறாள். திருடன் திருடி கொண்டு ஓடுகிறான். புகார் கொடுக்க காவல் நிலையம் சென்றால், இன்ஸ்பெக்டர் கோவில் சன்னதியில் இருப்பதை அறிந்து புகார் செய்ய போகிறார். அங்கு ரங்கநாதனிடம் புகார் அளிக்கப்படுகிறது. இரவு உறவும் ஏற்ப்படுகிறது.

கடவுள் நாத்திகனையும் தன்னிடம் வரும் படி அழைத்து விடுகிறார்
















No comments:

Post a Comment