Wednesday 9 July 2014

சர்வ மத கடவுள்கள் மாநாடு



உலகத்தில் நடக்கும் மத சண்டைகளை கவனித்த அத்தனை கடவுள்களும், நாம் தான் உயர்ந்தவர் என்று எங்கும் எப்போது சொல்லாத போது இவர்கள் ஏன் அப்படி சொல்லிகொண்டு அடித்துக்கொண்டு சாகிறார்கள் என யோசித்து அதை தடுக்க சர்வ மத கடவுள்கள் மாநாடு கூட்டி முடிவெடுக்க வேண்டுமென முடிவு செய்தார்கள்.

உலகில் கடவுள் என வணங்கப்படும் அனைவரும் மாநாட்டில் கலந்து கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டது.

கூடியிருந்தவர்கள் அனைவரும் அவரவர் மொழியில் பேசிக்கொண்டிருந்ததால் கூச்சலும் குழப்பமும் ஏற்ப்பட்டது. மாநாட்டின் தொடர்ப்பு மொழியாக , உலகின் மூத்த மொழியான தமிழ் மொழியில் பேச வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. சீன மொழி தான் மூத்த மொழி என்றும், உருது தான் இனிமையான மொழி என்றும் உலகின் தொடர்ப்பு மொழி ஆங்கிலம் என்றும் அந்த மொழியில் தான் பேச வேண்டும் என எதிர்ப்பு குரல்கள் எழுப்பப்பட்டன. தொடர்பு மொழி குறித்த சர்ச்சை நீடித்ததால் அனைவரும் அவர்களுக்கு பிடித்த மொழியில் பேசலாம் என்றும், நாம் அனைவரும் கடவுள் என்பதால் நமக்கு எல்லா மொழிகளும் தெரியும் அதனால் இதை பிரச்சனையாக்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டது.

இந்த கூச்சல் குழப்பத்தில் கடவுள்கள் தங்கள் ஆயுதங்களை உயர்த்தி பிடித்ததால் ஆயுதமில்லாத கடவுள்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இறுதியாக , அனைத்து கடவுள்களும் தங்களது ஆயுதங்களை மாநாட்டு அரங்கத்துக்கு வெளியே வைத்து விட்டு வர வேன்டும் என முடிவு செய்யப்பட்டது. கடவுள்கள் யாரும் எதையும் உள்ளே கொண்டு வரக்கூடாது என தீர்மானிக்கப்பட்டது.

இதற்கு பெண் கடவுள்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியது. அவர்கள் தங்கள் கைப்பையை உள்ளே கொண்டு வர வேண்டும் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதற்கான காரணத்தையும் கூறினர். நீண்ட விவாதத்திற்க்கு பின் அனுமதி தரப்பட்டது. பெண் கடவுள்கள் இல்லாத மத கடவுள்கள் , உலகத்தை போலவே இங்கும் தங்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக கூறினர். தேவைப்படும் போது வேறு சில சலுகைகள் அவர்களுக்கு வழங்கப்படும் என சமாதானம் கூறப்பட்டது.

சில மத கடவுள்கள் அதிகமாக இருப்பதால் அவர்களே நிறைய நேரம் பேசுவார்கள் எனவும் எனவே அனைத்து மதத்தினருக்கும் சமமான நேரம் ஒதுக்குவது என தீர்மானிக்கப்பட்டது. ஆனால், மதத்தின்  உட்பிரிவு கடவுள்கள் தங்களுக்கும் பேச வாய்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இறுதியாக ஒவ்வொரு மத முதன்மை கடவுள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை உட்பிரிவு கடவுள்களுக்கு உள் ஓதுக்கீடு செய்து கொள்ள வேண்டுமென முடிவு செய்யப்பட்டது.

மாநாட்டு ஏற்பாடுகளை யார் செய்வது எனவும் அதற்கான நிதி குறித்தும் விவாதிக்கப்பட்டது.  முதலில் எவ்வளவு பணம் வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. பணம் பெரிய அளவில் இருந்ததால், அனைத்து மத கடவுள்களும் அந்த பொருப்பை தங்கள் மதம் ஏற்பதாக கூறினார்கள்.

பிறகு மாநாட்டு வேலைகள் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு வேலையும் ஒவ்வொரு மத கடவுளுக்கும் பிரித்து கொடுக்கப்பட்டது.

மாநாடு நடக்கும் மூன்று நாட்களும் அவர்கள் தினசரி வேலைகள் செய்யாமலிருந்தால் உலகில் மாபெரும் குழப்பம் ஏற்ப்படும் என்பதால், உலக மக்கள் புதிதாக கடவுளாக ஏற்றுக்கொண்டிருக்கும்கூகுள்என்பவரிடம் தற்காலிகமாக கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது. அனைத்தையும் முடிவு செய்து , சபை கலையும் போது, வெளியில் பெரும் ஆரவாரமும் கூச்சல் குழப்பமும் ஏற்ப்பட்டது.

கடவுள்களுக்கு எதிரான சைத்தான்கள் பேய்கள் பிசாசுகள், எமன்கள் போன்றோர் கூடி அவர்களும் மாநாட்டில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை எழுப்பினர். உலக மக்கள் தங்களையும் கடவுளாக வழிபடுவதாகவும் எனவே தாங்களும் மாநாட்டில் கலந்து கொண்டு தங்களது வாதங்களை முன் வைக்க உரிமை உள்ளது என வாதிட்டனர், அவர்களை கலந்து கொள்ள அனுமதிக்காவிட்டால் தாங்கள் வேலை நிறுத்தம் செய்ய போவதாகவும் அதனால் விளையும் விபரீதங்களை விளக்கி கூறினர். நீண்ட விவாதத்துக்கு பின்பு அவர்களும் கலந்து கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டது.

மாநாட்டுக்கு மூன்றே நாட்கள் இருந்ததால் , பெண் கடவுள்கள் தங்களை அலங்கரித்து கொள்ள துணிமணிகள் ஆபரணகள் சேகரிக்க தொடங்கினர். நீல வானம் அனைவருக்கும் அவரவர் விருப்பப்படி ஆடை நெய்து கொடுத்தது. நட்சத்திரங்களும் ஏனைய கிரகங்களும் தங்களை உபயோகப்படுத்திகொள்ள கடவுள்களுக்கு அனுமதியளித்தனர்

தேவதைகள் பெண் கடவுள்கள் ஒப்பனை செய்துகொள்ள உதவி செய்தனர். ஆண் கடவுள்கள் எப்போதும் போல அரை குறை ஆடைகளுடனும், சில கடவுள்கள் ஆடையின்றியும் உலாவி கொண்டிருந்தனர்.

அனைவரும் ஒரே இடத்தில் கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்ப்பட்டது. இவர்கள் கடவுள்களாக இருந்த போதிலும், வெவ்வேறு பகுதிகளில் இருந்ததால் ஒருவருக்கொருவர் அறிமுகம் இல்லாமல் இருந்தனர். இதனால் இவர்கள் கடவுள்களா அல்லது நரகத்தில் இருக்கும் மனிதர்கள் இங்கே கலந்து விட்டனரா என்ற சந்தேகம் எழுந்த்து.

உடனடியாக மாநாட்டு ஒருங்கினைபாளரின் கவனத்துக்கு பிரச்சனை கொண்டு செல்லப்பட்டது. உடனடியாக உலகத்தில் அடையாள அட்டை இருப்பது போல இங்கும் அனைவருக்கும் வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. அதற்கான குத்தகை சைத்தான்களுக்கு வழங்கப்பட்டது.

சிறிய மத கடவுள்கள் தாங்கள் கொண்டு வரும் தீர்மானங்களுக்கு போதிய ஆதரவு கிடைக்காது என்று கருதி, பெருவாரியான கடவுள்கள் இருக்கும் மதத்தில் இருக்கும் சிறிய கடவுள்களிடம் தங்களுக்கு ஆதரவு தர வேண்டும் என கோரிக்கை வைத்து கொண்டிருந்தனர். சிறிய கடவுள்களை தங்கள் மத கடவுளாக மாற்றவும், அதற்க்கு கைமாறாக உலகில் அவர்களுக்கு பெரிய ஆலயங்களை கட்டி தருவதாகவும், அவர்களை வணங்கும் பக்தர்களுக்கு வரங்களை தாராளமாக வழங்குவதாகவும் அதன் மூலம் அவர்களும் பெரிய கடவுள்கள் ஆக முடியும் என ஆசைக்காட்டி கொண்டிருந்தனர்.

இவைகளை எல்லாம் நரகத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்த உலக அரசியல்வாதிகள், இவ்வளவு பெரிய மாநாட்டில் தங்களுக்கு சம்பாத்திக்க வாய்ப்பு இல்லாமல் போய்விட்டதே என வருத்தப்பட்டு கொண்டிருந்தனர்.
உடனடியாக மத பேதங்கள் உட்பட அனைத்து பேதங்களையும் மறந்து அனைத்து உலக அரசியல்வாதிகளும் கூட்டணி அமைத்து கொண்டு யோசித்தனர். மாநாட்டு வேலைகளை குத்தகைக்கு எடுக்க வேண்டுமென்றால் முதலில் அவர்கள் கடவுளாக மாற வேண்டும். அதற்கு அடையாள அட்டை வேண்டும் என்று கருதி, அதில் சிலர் சைத்தான்களை அனுகினர். அவர்களிடம் தான் அடையாள அட்டை வழங்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது.

அவர்கள் சைத்தான்களுக்கு தாங்கள் சம்பாதிக்கும் பணத்திலிருந்து கனிசமான தொகை கொடுப்பதாக கூறினர். அந்த பணத்தை கொண்டு , உலகத்தில் நிறைய பெரிய அழிவுகளை செய்யலாம் என ஆசை காட்டினர். சைத்தான்களுக்கும் அது சரியெனபட்டது. ஆனால், பணத்தை இங்கு வைத்துக்கொண்டு அங்கே எப்படி நாச வேலைகள் செய்ய முடியும் என கேள்வி எழுப்பினர்.

நரக அரசியல்வாதிகள் அதற்கு தாங்கள் பொறுபேற்று அந்த பணம் உலகில் உங்களுக்கு கிடைப்பதற்க்கு ஏற்பாடு செய்வாதாக உறுதியளித்தனர். உடனடியாக சைத்தானகள் அவர்களுக்கு போலி அடையாள அட்டை வழங்கினர்.

போலி அடையாள அட்டைகளுடன், அவர்கள் மேகத்தை அணுகினர். பூமியில் தங்களை வணங்கும் பக்தர்களுக்கு  பணம் அனுப்ப வேண்டியுள்ளதாகவும் அதனால் பக்தர்கள் வைத்திருக்கும் CLOUD COMPUTING  கணக்குகளை திறந்து அதில் அவர்களது பணத்தை செலுத்த விரும்புவதாகவும் எனவே அவர்களது கடவு சொற்களை தர வேண்டும் என கூறினர். மேகமும் எவ்வித சந்தேகமும் படாமல் கடவு சொற்களை தந்து விட்டது. புதிய பக்தர்களுக்கு புதிய வங்கி கணக்கு தொடங்கவும் அனுமதியளிக்க வேண்டி அனுமதி பெற்று, சைத்தான்களுக்கு புதிய கணக்கையும் ஆரம்பித்துவிட்டனர்.

போலி அடையாள அட்டைகளுடன் குத்தகை எடுத்த கடவுள்களை அணுகி வேலையை சீக்கிரமாக செய்து முடிக்க வேண்டுமென்றால், உள் குத்தகை விட வேண்டும் என்றும் அதை தங்களுக்கு அளிக்க வேண்டும் என்றும் கேட்டு வாங்கி கொண்டனர்.

உலகத்தில் மாநாட்டு நிகழ்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்தால் விளம்பரங்கள் மூலம் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்று நரக அரசியல்வாதிகளுக்கு தோன்றியது. இதற்க்காக இங்கு யாரிடமும் அனுமதி வாங்க தேவையில்லை என்று தோன்றியதால், ஆகாயத்தில் சுற்றிக்கொண்டிருந்த அனைத்து செயற்கைகோள்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, உலகத்தில் இருக்கும் அனைத்து தொலைகாட்சி நிறுவன உரிமையாளர்களிடம் திட்டம் தெரிவிக்கப்பட்டது. கிடைக்கின்ற வருமானத்தில் பாதியை தாங்கள் சொல்லும் வங்கி கணக்கில் சேர்த்துவிட வேண்டும் என உடன்படிக்கை செய்யப்பட்டது. இங்கு இவர்களே நேரடி ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்வதாகவும் கூறினர்.

நரக அரசியல்வாதிகள், சாஃப்ட்வேர் தொழிலில் தாக்கு பிடிக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டு, திரிசங்கு சொர்கத்தில் தொங்கிகொண்டிருந்த அனைத்து பொறியாளர்களையும் அழைத்து அதற்கான ஏற்பாடுகளை செய்ய உத்தரவிட்டு , செயற்கைகோள்களை அவர்களிடம் ஒப்படைத்தனர்.

தொலைகாட்சி நிறுவனங்கள் உடனடியாக அதற்கான விளம்பர ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்து விட்டது.

மாநாட்டின் முதல் நாள் உள்ளே செல்ல கடவுள்கள் முண்டியடித்தனர். அடையாள அட்டை சரிபார்த்து உள்ளே அனுமதிக்க தாமதம் ஆனது. உள்ளே நிகழ்சிகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டது என்று புரளி கிளப்பிவிட பட்டதால் அனைவரும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

இதில் அனைத்து கிராமத்து குட்டி தெய்வங்களும், காவல் தெய்வங்களும் பெருவாரியாக கலந்து கொண்டதால் கூட்ட நெரிசல் அதிகமானது. அவர்களுக்கு எங்கு எப்படி போக வேண்டும் என்ன செய்ய வேண்டும் என்று ஒன்றும் புரியவில்லை. தங்களுக்கு நிகழ்ச்சிகளை பார்க்க கூட சந்தர்ப்பம் கிடைக்காத போது அதில் கலந்து கொள்வது சாத்தியமில்லை என முடிவு செய்து , ஊர் சுற்றி வர கிளம்பிவிட்டனர்

இவரகளை பலர் கேலி செய்வதும் கிண்டல் செய்வதும் பின் தொடர்வதுமாகவும் இருந்தார்கள். இவர்கள் பெண் தெய்வங்கள் அணிந்திருந்த உடைகள் ஆபரணங்கள் ஆகியவற்றை பார்த்து அது குறித்த விவரங்களை சேகரித்தனர். கிராமங்களில் பக்தர்களிடம் காணிக்கையாக இவைகளை வாங்கி கொள்வது என முடிவு செய்து கொண்டனர்.

மாநாட்டின் துவக்க உரையில் மாநாட்டின் நோக்கம் குறித்து விரிவாக கூறி அதற்கான தீர்வை அடைய அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.

உலகில் பணம் ஒரு குறிப்பிட்ட வர்கத்தினரிடமே சென்று குவிவதால் மற்றவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் அதனால் அமைதியின்மை ஏற்ப்படுகிறது என்றும் அதுவே பிரச்சனைகளுக்கு காரணம் என்று சிலர் கூறினர்.

உலகின் கனிம வளங்களை சுரண்ட வல்லரசுகள் பூர்வ குடிமக்களை அவர்களின் பூமியிலிருந்து விரட்டுவதே பிரச்சனைக்கு காரணம் என சிலர் குறிப்பிட்டனர்.

அனு ஆயுத கழிவுகளை அவர்கள் நாட்டில் வைத்துக்கொள்ளாமல், அவைகளை வேறு கண்டத்தில் கொண்டு வந்து கொட்டுவதால், அந்த கணடத்தின் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு அங்கு வாழும் இனமே அழிக்கப்படுகிறது என புகார் கூறப்பட்டது.

பரந்த நிலப்பரப்பில் இருக்கும் தண்ணீரை கையப்படுத்தி அதை விலைக்கு விற்கும் நிலை ஏற்ப்பட்டுள்ளது என்றும் இதே நிலை நீடித்தால் காற்றையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு அதையும் விலை பேசுவார்கள் எனவே அதை தடுத்து நிறுத்த வேண்டுமென சிலர் கூறினார்கள்.

பலரும் பலவித பிரச்சனைகள் குறித்து பேசினார்கள்.

நிகழ்சி ஒருங்கினைப்பாளர்கள், இந்த மாநாடு மத கலவரங்களை பற்றி பேசுவதற்க்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அது குறித்து மட்டும்  கருத்துக்கள் தெரிவிக்கும் படியும் வலியுறுத்தப்பட்டது.

ஆனால், பிரச்சனை எழுப்பியவர்கள் இந்த பிரச்சனைகள் உலகத்தை அமைதியாக இயங்க விடாமல் தடுத்து கொண்டிருப்பதாகவும், இதற்க்காக தாங்கள் விடுமுறை நாட்களில் கூட வேலை செய்ய வேண்டியுள்ளதாகவும், எனவே இது குறித்து அவசரமாக விவாதிக்க வேண்டுமென ஒத்தி வைப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டுமென வற்புறுத்தினர்.

நிகழ்சி ஒருங்கினைப்பாளர்கள் இந்த கோரிக்கையை நிராகரித்தனர். இதனால் அவர்கள் மாநாட்டிலிருந்து வெளிநடப்பு செய்தனர். மாநாட்டின் முதல் நாள் நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிகழ்சிகள் உலகில் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. ஆனால், மக்களிடையே பெரிய ஆர்வத்தை ஏற்ப்படுத்தவில்லை. அவர்களால் நிகழ்சிகளில் மாற்றம் செய்ய இயலவில்லை. அவர்கள் உடனடியாக நரக அரசியல்வாதிகளை தொடர்பு கொண்டனர். நிகழ்சிகளை சுவையாக அமைக்கும் படி கூறினர். மேலும், அனைத்து தொலைகாட்சிகளும் ஒரே நிகழ்சியை காட்டிகொண்டிருந்தால், TRP உயராது என்றும் விளம்பரங்கள் குறையும் என்றும் அதனால் தங்களுக்கு வருவாய் குறையும் என்றும், எனவே நிகழ்சிகளை சுவையாக அமைக்கும் படி கேட்டுக்கொண்டனர்.

நரக அரசியல்வாதிகளுக்கு நிகழ்ச்சிகளை எப்படி மாற்றுவது என குழம்பி கொண்டிருந்த போது, ஏற்கனவே தில்லு முல்லுதனமாக தொலைகாட்சி நிகழ்ச்சிகளை தோல் காட்சி நிகழ்சிகளாக காட்டிக்கொண்டிருந்த ஒருவன் நரகத்தில் இருப்பதை அறிந்து அவனை அணுகினர்.

அவன் மிக எளிதாக இந்த பிரச்சனைக்கு தீர்வு கூறினான்.

நகரை சுற்றிக்கொண்டிருக்கும் குழந்தை தெயவங்களையும் சிறிய தெய்வங்கள் செய்யும் செய்கைகளை தனியாக பிரித்து, அவர்களது ஒலியை அடக்கிவிட்டு, போலியாக வசனம் பாடல்களை இனைத்து அதை உலகத்தில் கார்ட்டூன், நகைச்சுவை சேனல்களில் ஒளிப்பரப்பும் படி கூறினார்.

வாலிப ஆண் பெண் தெய்வங்கள் ஒருவருக்கொருவர் லுக் விடுவதை காதல் பாடல்களுடன் இனைத்து பொழுதுபோக்கு சேனல்களுக்கு கொடுக்கும்படி கூறினார்.

குறைவான ஆடைகளுடன் சுற்றிவரும் ஆன் பெண் கடவுள்களை ஃபேசன் சேனல்களுக்கு கொடுக்கும் படி கூறினார்.

இங்கு பறிமாறப்படும் உணவு வகைகள் குறித்து எப்படி தாயரிப்பது எப்படி சாப்பிடுவது என்பதை தனியாக தொகுத்து அதற்கான சேனல்களில் ஒளிபரப்பும் படியும் கூறினார்.

முக்கிய நிகழ்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்யாமல், 5 நிமிட நிகழ்சிகளை பதிவு செய்து அதற்கு மக்களை கவரும் விதமாக வசனங்களை பொருத்தி ஒளிபரப்பும்படி கூறினார்.

கடவுள்கள் கூட்டமாக இருக்கும் இடங்களையும், வேகமாக நடந்து ஓடிக்கொண்டிருக்கும் காட்சிகளை தொகுத்து புதிதாக ஒரு விளையாட்டு பேரை சொல்லி ஸ்போர்ட்ஸ் சேனல்களில் ஒளிப்பரப்பும்படி கூறினார்.

இரண்டாவது நாள் நிகழ்சிகள் துவங்கின. தேவையற்ற விவாதங்களை எழுப்பும் கடவுள்களை கண்டறிந்து வெளியேற்றி விட்டு நிகழ்சிகள் தொடங்கின.

மனிதனின் ஒழுக்க நெறிகள் மூலமாகவும் வாழ்வின் அனுபவ அடிப்படையிலும் தோன்றிய மதத்தை சார்ந்தவர்கள்  தங்களது மதமே முதன்மையானது என்றும் அதை உலக மக்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டால் பிரச்சனை தீர்ந்துவிடும் என கூறினார்.

இதற்கு பதிலடியாக யார் தோற்வித்தது என்று தெரியாத மதத்தை ஏன் அனைவரும் ஏற்க வேன்டும் என்றும்,  அவதாரமாக தோன்றி தோற்றுவித்த மதத்தை உலக மக்கள் ஏற்று நடந்தால் பிரச்சனைகள் தோன்றாது என கூறினர்.

உருவ வழிப்பாடு செய்வதால் தான் இது போன்ற பிரச்சனைகள் ஏற்ப்படுகிறது என்றும் உருவமற்ற கடவுளே உண்மையான மதத்தை தோற்றுவித்தவர் என்றும் அதையே பின்பற்ற வேண்டும் என்று கூறினர்.

ஒரே மதத்தில் பல பிரிவுகள் இருப்பதால் தான் பிரச்சனைகள் உண்டாகிறது என்றும் எந்த மதத்திலும் உட்பிரிவுகள் இருக்க கூடாது என்றும் ஆலோசனை கூறப்பட்டது.

ஒரு மதத்திலிருந்து வேறு மதத்திற்க்கு மாற்றும் செயல்கள் இருப்பதால் தான் பிரச்சனை வருகிறது என்றும் விவாதிக்கப்பட்டது.

இந்த நிகழ்சிகள் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. தொலைகாட்சி நிலையங்களில் அனைத்து மத குருமார்களும் இது குறித்து விவாதம் செய்து கொண்டிருந்தனர்.

இதற்கிடையே இந்த நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்த சிலருக்கு இந்த ஓளிப்பரப்பு உண்மையானது அல்ல என்று சந்தேகம் எழுந்தது. விசாரனையில் செயற்கை கோள்கள் சிலரது கட்டுப்பாட்டில் இருப்பதும், நிகழ்சிகளை அவர்களது விருப்பம் போல் ஒளிபரப்புவதும் கண்டறியப்பட்டது. அவர்களை தொடர்பு கொள்ள செய்த முயற்சிகள் அனைத்தும் பலன் அளிக்கவில்லை. அவர்களது 15G அலைகற்றை விவரம் மட்டுமே தெரிந்தது.

உடனடியாக ஒரு செயற்கை கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. அதன் மூலம் நரக அரசியல்வாதிகளை தொடர்பு கொண்டனர். நிகழ்சிகளை தங்களுக்கு சாதகமாக ஒளிப்பரப்பும் படி கூறினார் மறுத்தால் இங்கு வாழும் உங்களது வாரிசுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சொத்துக்களும் வங்கி கணக்குகளும் முடக்கப்படும் என்றும் மிரட்டல் விடுத்தனர். ஆனால், நரக அரசியல்வாதிகள் அதற்கு பயப்படாமல் உங்களது ரகசியங்கள் அனைத்தையும் உலகம் முழுவதும் எங்களால் ஒளிப்பரபப்படும் என எதிர் மிரட்டல் கொடுத்தனர்.

இறுதியாக நாங்கள் உலக மக்கள் அனைவரையும் கண்கானித்து எங்களுக்கு ஏற்ப உலகை இயக்கி வருகிறோம் ஆனால் சில சமயங்களில் எங்களை மீறி நாங்கள் விரும்பாத வகையில் செய்ல்கள் நடைப்பெறுகிறது எனவும், அது கடவுள் செயல் என்று கூறப்படுகிறது. அது எந்த கடவுள் என்று தெரியவில்லை அவரை எப்படி கண்கானிப்பது என்றும் புரியவில்லை என்றும் அதை கண்டறிய துனை புரிந்தால், அதற்கு ஈடாக புதிய மதம் ஒன்றை தோற்றுவித்து உங்களையே கடவுளாக நியமிக்கிறோம் என்று கூறினர். இவர்களும் ஆலோசிப்பதாக கூறினார்கள்.

முன்றாம் நாள் மாநாடு கூடியது.  உலகில் ஏற்படும் மத கலவரங்களுக்கான காரணங்கள் ஆராயப்பட்டது.

மதங்களை குறைப்பது என்றும் அதில் உள்ள உட்பிரிவுகளை நீக்குவது என்றும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

மதங்களை குறைப்பதன் மூலமும் உட்பிரிவுகளை நீக்குவதன் மூலம் கடவுள்களின் எண்ணிக்கை குறையும் என்றும் , இப்போதிருக்கும் கடவுள்கள் வேலை இழக்கும் வாய்ப்பு ஏற்படும் என்றும் புதிய கடவுள்கள் தோன்ற வாய்ப்பு ஏற்ப்படாது என்றும் எதிர்ப்பு கிளம்பியது.

மத மாற்றம் செய்வது தடுத்து நிறுத்தப்பட்டால் மத கலவரங்கள் குறையும் என்ற தீர்மானத்தின் மீதும் விவாதம் நடத்தப்பட்டது.

தானே விரும்பி மதம் மாறும் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி இது என்று அதற்க்கும் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இது குறித்த விவாதம் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருந்தது

இதற்கிடையில் நரக அரசியல்வாதிகள்எல்லாம் கடவுள் செயல்என்று கூறப்படும் அந்த கடவுள் யார் என்று எப்படி அறிவது என குழம்பி கொண்டிருந்தனர்.

நிகழ்சிகளை தொகுத்து வழங்கி கொண்டிருந்த மென்பொருள் பொறியாளர்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டது.

அவர்களும் தாங்கள் ஓளி ஒலி பரப்பு செய்யும் போது எதோ ஒரு அலைவரிசை தங்களை கண்கானிப்பது போல உனர்வதாக கூறினர்.  உடனடியாக அந்த அலைவரிசையில் தான் அந்த கடவுள் இருக்க்கூடும் என்றும் அவர் தான்இயக்கம்என்றும் இங்கு கூடியிருக்கும் கடவுள்கள் எல்லாம் அந்தஇயக்கம்உருவாக்கிய  காவலர்கள் என்று தீர்மானித்து அந்தஇயக்கம்என்ன எங்கிருக்கிறது என கண்டறிய முடிவு செய்யப்பட்டது

இந்த முடிவு எடுக்கப்பட்ட தருணத்தில் அண்ட சராசரங்களையும் இயக்கும் சர்வ வல்லமை பொருந்தியஇயக்கம்   உடனடியாக மாநாட்டில் கலந்து கொண்டிருக்கும் அனைத்து கடவுள்களுக்கும் இதை உனர்த்தியது. மாநாட்டில்உள்ளது உள்ளபடியே தொடர வேண்டும்என ஒற்றை வரி தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு, உடனடியாக அனைத்து கடவுள்களும் தங்கள் இடங்களுக்கு திரும்பி சென்று தங்களது பொறுப்புகளை ஏற்றுக்கொண்டனர். “குகூள்தனது பொறுப்புகளை ஒப்படைத்து விட்டது.

திடிரென அனைத்து செயற்கைகோள்களும் நரக அரசியல்வாதிகளில் கட்டுப்பாட்டிலிருந்து விலகியது. மாநாடு தீடிரென முடிவடைந்ததும் ஏதோ விபரீதம் நடந்துள்ளது என்று உணர்ந்த நரக அரசியல்வாதிகள் உடனடியாக நரகத்தில் தங்கள் இடங்களில் சென்று அமர்ந்து கொண்டனடர். நரகத்தில் தண்டனை கொடுப்பவர்களுக்கு பெரும் செல்வம் கொடுத்திருந்ததால்  இவர்களுக்கு தண்டனை கொடுக்காமல் சுகமாக வாழ அனுமதித்தார்கள்.

உலக மக்களுக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை. தீடிரென மூன்று நாட்கள் முன்னோக்கி இருப்பது போல தோன்றியது. மூன்று நாட்கள் என்ன செய்தோம் என்ன நடந்தது என புரியவில்லை ஆனால் ஒன்றும் நிகழாமல் மூன்று நாட்கள் முன்னோக்கி நகர்ந்துள்ளோம் என்பது மட்டும் புரிந்தது. உலகில் நடந்த மூன்று நாள் நிகழ்சிகளை கடவுள்கள் முற்றிலுமாக அழித்து விட்டனர்.

இயக்கம்இட்ட கட்டளைபடி மாநாடு நடந்த சமயத்தில் என்ன நடந்தது என்பதை கண்டறிய விசாரணை குழு அமைக்கப்பட்டது. ஐந்து யுகங்கள் உலகை இயக்கி ஓய்வு பெற்ற மூன்று கடவுள்கள் விசாரனை குழுவில் இடம் பெற்றனர்.

விசாரனை துவங்கியது. சைத்தான்கள் ஒத்துழைக்க மறுத்தது. கடவுள்கள் தொலை தூரத்திலிருந்து வந்து விசாரனையில் கலந்து கொள்ள இயலவில்லை என்று வாய்தா வாங்கி கொண்டிருந்தார்கள். எந்த விதத்திலும் விசாரனை முன்னேற்றம் அடையவில்லை. நாறு ஆண்டுகளுக்கு பிறகும் நடந்தது என்ன என்று அறிக்கை தயாரிக்க முடியாத காரனத்தால் விசாரனை குழு கலைக்கப்பட்டது .

இந்த நிகழ்சிகளை குறித்து தனது வலைப்பூவில் நக்கலும் நையான்டியுமாக எழுதி வைத்திருக்கும் M.S.SEKAR ஐ தண்டிக்க வேன்டும் என கருத்து தெரிவிக்கப்பட்ட போது, பத்து ஆண்டுகளுக்கு முன்பே அவனை இதயத்தில் லேசாக தட்டி எச்சரிக்கை செய்யப்பட்டது என்றும் அந்த சமயத்தில் சற்று பயந்து நடந்து கொண்டவன் தற்போது மீன்டும் இது போன்று எழுதி வருவதால் சரியான சமயம் பார்த்து தட்டுவது என்றும் இப்போது அவன் போக்கில் விட்டு வைப்பது என்றும் முடிவெடுத்ததால் இப்போது நீங்கள் இந்த பதிவை படிக்க நேர்ந்த்து.

No comments:

Post a Comment