Tuesday 11 November 2014

RANG RASIYA – ( வர்ணங்களை நேசிப்பவன் ) – இந்தி திரைப்படம்


RANG RASIYA – ( வர்ணங்களை நேசிப்பவன் ) – இந்தி திரைப்படம்



மராட்டிய எழுத்தாளர் ரஞ்ஞித் தேசாய் எழுதிய ராஜா ரவி வரமாவின் வாழ்க்கை வரலாற்று நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம் .

இன்றைய காலகட்டத்தில் புகழ் பெற்ற ஓவியங்களை ஏலம் விடும் காட்சியுடன் படம் ஆரம்பிக்கிறது. அதில் ராஜா ரவி வர்மாவின் ஒவியத்தை ஏலம் விடும் போது, வெளியில் ஒரு எதிர்ப்பு ஊர்வலம் நடைப்பெறுவதும் காண்பிக்கப்படுகிறது. ஏலம் விடும் போது ஓவியரை பற்றி கூறும் போது கதை பின்னோக்கி போகிறது.

கோயில் உட்புற சுவரில் சிறுவன் ஒருவன் யானை ஓவியத்தை வரைகிறான். அதை பார்த்து அங்கு வரும் அரசன் கோபம் அடைவார் என எதிர்பார்க்கும் சமயத்தில் அரசர் அதை பாராட்டி ஊக்கமளிக்கிறார். அவரது ஒவியங்களை கண்டு மகிழும் அரசர், அவரையும் இந்த நாட்டு ராஜா என அறிவிக்கிறார். ராஜாவின் தம்பிக்கு இது பிடிக்கவில்லை.

இவரது ஓவிய புகழ் பரவுகிறது. பரோடா அரசர் அவரை வரவழைத்து தனது அரண்மனையில் ஓவியங்களை வரைந்து வைக்க சொல்கிறார். மேலை நாடுகளில் உள்ளது போல நமது நாட்டில் ஓவியங்கள் இல்லையென்றும் மேலை நாடுகளுக்கு போய் பார்த்து விட்டு வந்து அது போன்ற ஓவியங்களை தனது அரன்மனைக்கு வரைந்து கொடுக்கும் படி கேட்கிறார்.

ஓவியர் மேலை நாடுகளுக்கு செல்ல தேவையில்லை என்றும் நமது நாட்டில் இருக்கும் பழம் கதைகளை ஓவியங்களை வரையலாம் என்றும் அதற்கு நாட்டின் பல பகுதிகளை சுற்றி பார்க்க அனுமதி கேட்கிறார். அவர் அனுமதிதத்துடன் பல் வேறு பகுதிகளை சுற்றி பார்க்கிறார்.

பிரபலமடைகிறார். ஒரு இளவரசியுடன் திருமணம் நடைப்பெறுகிறது. வேலைக்காரியை பல நிலைகளில் நிற்க வைத்து ஓவியம் வரைகிறார். மனைவி ஆட்சேபிக்கிறாள்.

ராஜா இறந்து விடுகிறார். அவரது தம்பி ராஜாவாகிறார். இதனால் ஓவியர் ராஜா என்ற பட்டத்தை இழக்கிறார்.

கோவிலில் ஒரு பெண்ணை சந்திக்கிறார். ஓவியம் வரைய ஒத்துழைக்கும் படி கேட்கிறார். முதலில் மறுத்தாலும் பின்பு ஒப்புக்கொள்கிறார். அவள் ஒரு வேசி.

அவளை வைத்து கடவுள் படங்களை வரைகிறார். பரோடா அரண்மனையில் ஒவியங்கள் காட்சிக்காக வைக்கப்படுகிறது. பொது மக்கள் அனைவரும் பார்வையிடுகின்றனர். மக்கள் அனைவரும் உபயோகிக்கும் படி வேறு ஒருவருடன் கூட்டு சேர்ந்து அச்சகம் அமைத்து அதை பிரின்ட் செய்து விற்பனை செய்கிறார். மக்கள் கடவுள் படங்களை பார்த்து பக்தி பரவசமடைகின்றனர். கோயிலுக்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்படாத சமூகத்தினர் இந்த படங்களை வைத்து வழி படுகின்றனர்.. அதே பெண்ணை வைத்து வேறு படங்களையும் வரைகிறார். ஆடைகள் குறைவாகவும் ஆடை நெகிழ்ந்த நிலையில் உள்ளது போலவும் வரைகிறார். அந்த பெண்ணுடன் உறவு கொள்கிறார். அச்சகம் எரிந்து விடுகிறது. பின்பு ஓவியங்களை அடகு வைத்து கடன் வாங்கி அச்சகம் நடத்துகிறார்..கடன் கொடுத்தவர்  ஆடை இல்லாத படங்களை அச்சடித்து விற்பதால் பிரச்சனை ஏற்ப்படுகிறது

இது மத வாதிக்கு பிடிக்கவில்லை. ஒரு வேசியை வைத்து கடவுள் படங்கள் வரைந்ததும் அவளை வைத்தே வேறு படங்களை வரைந்தது குறித்தும் ஆட்சேபனை தெரிவித்து வழக்கு தொடர்கிறார். கடவுள்களை அவமானப்படுத்தியதால் அவர் ஓவியம் வரைவதை நிறுத்த வேண்டும் என்றும் அவரை தண்டிக்க வேண்டுமென்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிறார்.

வழக்கு இவருக்கு சாதகமாக அமைகிறது. அச்சகத்தை ஒரு ஜெர்மனியருக்கு விற்று விட்டு, தனது கடன் தொகையை தீர்த்து விட்டு அந்த ஓவியங்களை மீதி உள்ள பணத்தை தன்னிடம் ஓவியம் கற்றுக்கொள்ள வந்திருக்கும் பால்கே என்னும் இளைஞருக்கு கொடுத்து விடும் படி கூறுகிறார். அவர் தான் பின்பு இந்தியாவில் முதன் முறையாக திரைப்படம் தயாரித்த தாதா பால்கே ஷாகிப் என்று அறியப்படுகிறார்.

நிகழ் காலத்தில் ஓவியங்களை ஏலம் விடும் அரங்கில் , இந்த ஓவியங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அமைப்பினர் உள்ளே புகுந்து ஓவியங்களை அழிக்கும் காட்சிகளுடன் படம் நிறைவு பெறுகிறது.
ஒவியர் ராஜா ரவி வர்மாவாக நடிகர் திரு. ரந்தீப் வூடா (RANDEEP HOODA)வும், சுகந்தாவாக மாடலாக நந்தனா சென் (NANDANA SEN) ம் நடித்துள்ளனர்.

நடிகருக்கு முரட்டு தன்மையான ஆண்மை முகம் உள்ளதால் காதல் காட்சிகளில் நளினமில்லை.

நடிகை ஒரு காட்சியில் ஒரு முலையை கான்பித்து மாடலாக நிற்க்கிறார். அழகான முலை. ஒரு காட்சியில் நடிகையின் வெற்றுடம்பில் வர்ணங்களை தடவி, ஒவியர் மீதும் வர்ணங்களை தடவி, நிர்வாணம் தெரியாத அளவில் உடல் உறவு காட்சி படமாக்கப்பட்டுள்ளது.

இது ஒரு சுய சரிதை என்பதால் கதையில் விறுவிறுப்பு குறைவு. அடுத்து என்ன நடக்கும் என்பது போன்ற பரபரப்பு இல்லை. பாடல் காட்சிகளில் ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது.

இதில் வரும் காட்சிகளுக்கு ஆட்சேபனை இருந்ததால் காட்சிகள் வெட்டப்பட்டு மூன்று வருடங்கள் பிறகு தாமதமாக வெளி வந்துள்ளது.

பல ஓவியங்கள் காண்பிக்கப்படுகிறது. அது அனைத்தும் அவர் வரைந்த நிஜ ஓவியங்களா அல்லது படத்திற்க்காக இப்போது வரைந்ததா என தெரியவில்லை.
இன்றைக்கு நாம் சரஸ்வதி தேவி என்று வைத்து வணங்கும் படம் இவர் வரைந்த படம் தான். 

கோயில்களுக்கு உள்ளே கடவுள் சிலைகளை மட்டுமே வணங்கி வந்த காலத்தில் , கடவுள் படங்கள் அனைவரது கைகளிலும் கிடைக்க செய்தது அந்த காலத்துக்கு ஆட்சேபனைக்கு உரியதாக இருந்திருக்கலாம். ஆனால் இன்றைய நிலைக்கு அது ஒத்து வராது.

கடவுள் உருவம் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டவைகளை, வேறு மாதிரியாக சித்தரிப்பது ஆடை இல்லாமல் சித்தரிப்பது அல்லது உறவு கொள்வது போல சித்தரிப்பது இன்றைக்கு அனைத்து மதத்திரனாலும் எதிர்க்கப்படுகிறது.

ஓவியர்களின் தரப்பிலிருந்து கூறப்படும் வாதம் கலைக்கு கட்டுப்பாடு விதிக்ககூடாது என்பது. காமக் காட்சிகளை வரைந்து காசு சம்பாதிக்க வேண்டும் புகழ் அடைய வேண்டுமென்றால் , வேறு மனித உருவங்களை  அது போன்று வரைந்து காசு சம்பாதிக்க வேண்டியது தானே. பெரும்பான்மை மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் கடவுள் உருவங்களை இதற்கு ஏன் பயன் படுத்த வேண்டும்.

இதற்கு ஆட்சேபனை தெரிவிப்பதும் அவசியமற்றது. இவர்கள் இவ்வாறு வரைந்து விடுவதால் கடவுளுக்கு களங்கம் ஏற்ப்பட போவதில்லை. திரைப்படங்களில் கடவுளாக நடிப்பவர்கள் மனிதர்கள் தான் அவர்களுக்கு ஏன் ஆட்சேபனை எழுவதில்லை. கடவுள் வேடங்களில் நடிப்பவர்கள் வேறு மாதிரியான காட்சிகளிலும் நடிக்கிறார்கள். இதை ஏற்றுக்கொள்பவர்கள் சில ஓவியங்களை ஏற்றுக்கொள்வதில் என்ன தவறு.

இரு தரப்பு வாதங்களும் சரி தான். அரசாங்கமும் நீதி மன்றங்களும் இது குறித்து இறுதியான தீர்ப்புகள் வழங்க முடியாது. அவர்களும் மனிதர்களே. அவ்வப்போது அனைவரையும் சமாதானப்படுத்தும் முயற்சிகள் மட்டுமே செய்ய முடியும்.
 

No comments:

Post a Comment