Wednesday 3 December 2014

கங்கணம் – புதினம் – பெருமாள்முருகன்


கங்கணம் – புதினம் – பெருமாள்முருகன் 



 

கவுண்டர் ஜாதியை சார்ந்த 35வயது முதிர் இளைஞன் ஒருவனின் கதை. ஆரம்பகாலத்தில் அவனது தாய் பொறுப்பில்லாமல் அவனுக்கு வந்த திருமண உறவுகளை தட்டிகழிக்கிறாள். அப்பா இது குறித்து கவலையில்லாமல் வாழ்கிறார். 

அவனது நண்பர்களுக்கும் சுற்றியிருப்பவர்களுக்கும் அவனை சார்ந்து வாழ்பவர்களுக்கும் இள வயதில் திருமணம் முடிகிறது. அதே சமயம் அவனைப்போலவே அவனது சமூகத்தில் திருமணம் முடியாதவர்கள் இருப்பதையும் அவன் அறிவான்.

எங்கு சென்றாலும் எல்லோராலும் அவனது திருமண விசயம் பேசப்படுகிறது. அவமானம் அடைகிறான். தனித்து வாழ முயன்று இயலாமல் தவிக்கிறான். 

திருமணம் நிச்சயக்கப்படும் சமயங்களில் யாரவது சொல்லும் சொல்லால் செய்யும் செயலால் திருமணம் தடைப்படுகிறது.

தானாகவே திருமணம் நிச்சயித்து கொள்ள பல வழிகளில் முயற்சி செய்கிறான். அம்மாச்சியின் உறவு முறிகிறது. பாட்டியுடன் இணக்கமாக வாழ்கிறான். தாயிடம் தகாத சொல் சொல்ல வேண்டிய நிலமை ஏற்ப்படுகிறது.

அவனது சக்கிலிய வகுப்பை சார்ந்த நண்பன் செய்யும் ஏற்ப்பாட்டை தயக்கத்துடன் ஏற்றுக்கொண்டு திருமணம் நிச்சயக்கப்படுகிறது. ஏதேனும் தடங்கள் ஏற்ப்பட்டு விடுமோ என்ற பயத்திலேயே பல சமரசங்களை செய்து கொண்டு திருமண வேலைகளை செய்கிறான். இந்த நிலையில் பாட்டி இறந்து விட்டால் திருமணம் தடைப்பட்டு விடுமோ என்ற அச்சமும் இருக்கிறது.

இறுதியில் திருமணம் முடிகிறது. இதில் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை அவனுக்கு திருமணம் முடியுமா என்ற ஆவலை தூண்டும் வகையில் எழுதியிருப்பது தான் எழுத்தாளரின் சிறப்பு. இதன் அடிப்படையில் குடும்பத்தில் உறவுகளில் ஏற்ப்படும் சிக்கல்களை விவரிப்பதுடன், மனிதர்களின் பலவீனமான நம்பிக்கைகளையும் சித்தரிக்கிறார்.
திரு. பெருமாள் முருகனின் நான்காவது நாவல் என குறிப்பிடப்பட்டுள்ளது. இவரது நாவல்களில் நான் படித்த முதல் நாவல் இது.
இந்த புத்தகத்திற்க்கு அவர் எந்த முன்னுரையும் எழுதவில்லை. யாரும் அணிந்துரையும் எழுதவில்லை. பதிப்பகத்தாரின் சிறு குறிப்பு மட்டுமே இருக்கிறது
============================================================================
திருமணம்,  வாழ்க்கையில் முக்கிய அம்சமாக சமூகம் தீர்மானித்துள்ளது. சரியான வயதில் மனதிற்க்கு பிடித்தவாறு இந்த உறவு ஏற்ப்பட்டுவிட்டால் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைந்து விடுகிறது. அப்படி அமைந்த வாழ்க்கையை சரியாக அனுபவிக்க தெரியாமல் சிக்கலாக்கி கொண்டு பிரியும் நிலைக்கும் சென்று விடுகின்றனர். அவர்கள் திருமணமாகாதவர்களிடம் பேசி பழகினால் தான் அதன் அருமை பெருமைகளை உணர முடியும்.

திருமணம் என்பது  பெரிய கொள்கைகளுடன் கனவுகளுடன் திட்டமிட்டு செய்து கொள்வது அல்ல. உடலில் தோன்றும் ரசாயன மாற்றங்களின் விளைவுகளால் ஏற்ப்படும் உடல் தினவுகளை தீர்த்து கொள்ள சமூக அங்கீகரிப்பின் மூலம் செய்து கொள்ளும் நிகழ்வே திருமணம். 

திருமணத்தின் மூலம் இனவிருத்தி செய்வது இன்றியமையாததாக மாறிவிட்டது. இனவிருத்தி செய்யவில்லையெனில் அவர்களின் தன்மை சந்தேகத்துக்குள்ளாகி ஏளனத்துக்கும் சங்கடத்துக்கும் உள்ளாக்கப்படுகின்றனர்.

திருமணம் செய்யாமல் இருக்கும் நபர்களை பற்றியும் சமூகம் மிகக் கொடுரமான விமர்சனங்களை முன் வைக்கிறது.

திருமணம் செய்து கொள்ளதவர்களிடமிருந்து உறவுகள் விலக ஆரம்பிக்கின்றன . உறவுகளுக்கு இவர்களிடம் ஒரு எச்சரிக்கை தன்மையும் பயமும் உருவாகிறது. தனது உறவுகளிடம் இவர்கள் உறவாடி விடுவார்களோ என்ற பயம் இவர்களிடம் ஏற்ப்படுவதால் அவர்களை விலக்கி வைக்கின்றனர்.

திருமணமாகதவர்களின் மனநிலையை பற்றி உறவுகள் கவலைப்படுவதில்லை. திருமணமாகாதவர்கள் பெரும்பான்மையோர் முறையான உடல் உறவுக்கே காத்திருக்கின்றனர். சமூகத்தில் கிடைக்கும் இலவச உறவுகளிடமோ விலை கொடுத்தால் கிடைக்கும் உறவுகளிடமோ உறவு வைத்துக்கொள்ள தயங்குகின்றனர்.

திருமண வயதில் ஜாதி அந்தஸ்து என பல காரணங்களை கூறி ஆரம்ப காலத்தில் தட்டி கழித்து பின்பு வயது முதிர்ந்த காலத்தில் இவைகள் அனைத்தையும் ஒதுக்கி விட்டு யார் கிடைத்தாலும் எந்த நிலையில் கிடைத்தாலும் பரவாயில்லையென சமரசம் செய்து திரும்ணம் செய்து வாழ்க்கையை அமைத்து கொள்கின்றனர். இதன் மூலம் உடல் தேவைகள் நிறைவேறுவதுடன் சமூக அங்கீகாரமும் கிடைக்கிறது.

சமரசம் செய்யாமல் வாழ்நாள் முழுவதும் தனிமையில் வாழ்ந்து மடிபவர்களும் இன்னமும் சமூகத்தில் இருக்கின்றனர்.


இன்றைக்கும்  பல வயது முதிர்ந்தவர்களின் திருமண ஆசையை விளம்பரங்களின் மூலம் கான முடிகிறது. இவர்கள் பரஸ்பரம் ஒருவரை ஒருவன் அணுகி ஏன் சேர்ந்து வாழ முடியாது. வாழ முடியாமல் போக காரணம் ஜாதி அந்தஸ்து அழகு என பல காரணங்கள் கூறப்பட்டாலும் அவைகளை சமரசம் செய்து கொண்டால் இவர்களின் ஏக்க தாபங்கள் நிறைவடையும்.

பெண் குழந்தையின் திருமணம் பெரிய சுமை என்ற காரணத்தால் பல ஆண்டுகளாக பெண் குழந்தைகள் தவிர்க்கப்பட்டதான் விளைவை தற்போது ஆண்கள் அனுபவித்து வருகின்றனர். 














No comments:

Post a Comment