Saturday 7 September 2013

பிள்ளையாருக்கு பிரச்சனைகள்

கடவுள் வழிபாடு::


நேற்று என் கனவில் பிள்ளையார் வந்து புலம்பிய புலம்பலை, உங்களிடம் புலம்பா விட்டால், எனக்கு பைத்தியமே பிடித்துவிடும். அவரது புலம்பல்கள்.

1. நான் பிறந்து உயிர் பெற்ற விதம் விசித்திரமானது. எனது அம்மா பார்வதி அதாவது சிவபெருமானின் மனைவி, மண்ணால் என்னை செய்து(சிலர் என் அம்மா தனது உடலில் இருந்த அழுக்கை சேர்த்து உருட்டி) உயிர் ஊட்டி , பின்பு என்னை காவலுக்கு வைத்துவிட்டு குளிக்க சென்றார்களாம்.
என்ன கொடுமடா இது. உலகை ஆளும் சக்தி படைத்த பார்வதி எத்தனை வருடங்கள் குளிக்காமல் இருந்தார்கள் இவ்வளவு அழுக்கு சேர்வதற்க்கு  ?
அது சரி, என் அம்மா குளிப்பதற்க்கு காவல் எதற்கு ? முக்கோடி தேவர்களும் வந்து அம்மா குளிப்பதை வேடிக்கை பார்ப்பார்கள் என்ற பயமா? மறைந்திருந்து புகைபடம் எடுத்து வலைதளங்களில் வெளியிட்டுவிடுவார்கள் என்ற பயமா? அல்லது அதற்கும் மேலாக யாரவது அவரிடம் தவறாக நடந்து கொள்வார்கள் என்ற பயமா ?

இன்றைக்கு பூலோகத்தில், ஒரு பெற்றோர்(SINGLE PARAENT) என்ற முறை உள்ளதாம். அதாவது, அம்மாவோ அல்லது அப்பாவோ யாராவது ஒருவர் தனியாக குழந்தை வளர்த்தால் அதற்கு ஒரு பெற்றோர் என்று பெயராம்.
உண்மையில் ஒரு பெற்றோர் முறையை அறிமுகப்படுத்தியதே எனது அம்மா தான். ஆண் பெண் உறவு இல்லாமல் தான் ஒருவரே என்னை உருவாக்கி வளர்த்ததால் எனது அம்மா தான் உண்மையிலேயே ஒரு பெற்றோர் முறையை உருவாக்கியவர் என்ற பெருமையை அடைகிறார். ஆனால், பூலோகவாசிகள் அவர்கள் உருவாக்கியதாக கூறிக்கொண்டு என் அம்மா அறிமுகபடுத்திய முறைக்கு உரிய மரியாதையை கொடுக்கவில்லை.

2) சரி. நான் காவலுக்கு இருந்த போது, பார்வதியின் கணவர்(எனது அப்பா அல்ல) வந்தார் . நான், அவர் உள்ளே சென்ற போது தடுத்ததாகவும், அதனால் கோபம் கொண்டு என் தலையை வெட்டி சாய்த்து விட்டு உள்ளே சென்றதாகவும் கூறுகிறப்படுகிறது.
முக்காலமும் உணர்ந்த சிவபெருமானுக்கு, தனது மனைவி பார்வதி குளித்து கொண்டிருப்பது தெரியாதா ? அல்லது நான் யார் என்பது தான் அவருக்கு தெரியாதா ?
மேலும், பார்வதி என்ன முதன் முறையாக குளித்தாரா. என்னை உருவாக்குவதற்க்கு முன்பு, அவர் குளித்ததே இல்லையா ? அப்போதெல்லாம் யாரை காவலுக்கு வைத்துவிட்டு குளிக்க சென்றார். அல்லது என்னை உருவாக்கி அதன் மூலம் எழுந்த விளைவுகளுக்கு பின்பு மீண்டும் குளித்தாரா இல்லையா. அப்போது யாரை காவலுக்கு வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு பின்பு தான் பார்வதி குளிக்கும் குளியலறைக்கு தாழ்பாள் போடப்பட்டதா.

3)எனக்கு யானை தலையை வெட்டி கொண்டு வைத்தார்கள். சரி. எனக்கு ஏன் தொப்பை வயிறு இருப்பதாக காட்டுகிறார்கள். நான் யானையை போல நிறைய சாப்பிட்டதால், அப்படி வயிறு இருப்பதாக காட்டீனார்களா ?
இப்போது, பூலோகத்தில் எனது உருவத்தை பலவிதமாக வரைகிறார்கள். பல்வேறு உலோகங்களில் எனது சிலைகளை செய்கிறார்கள். Cartoon character விட மோசமாக செய்கிறார்கள்.
நான் நல்ல உடற்பயிற்சி செய்து, நீங்கள் எல்லாம் சொல்வது போல 6 pack உடல் அமைப்புடன் இருக்கிறேன். எனக்கு ஒரு jeans pant  போட்டு 6 pack  உடல் அமைப்புடன் இருப்பது போல் ஏன் வரைவதில்லை. சிலை செய்வதில்லை. கொஞ்சம் யோசியுங்கள. எனக்கும் இது போன்ற ஆசைகள் இருக்கிறது.
4) நாரதர் கொண்டு வந்த மாம்பழத்தை பெறுவதற்க்காக வைக்கப்பட்ட போட்டியில் நான் பார்வதி-சிவபெருமான் அவர்களையே உலகமாக கூறி அவர்களை சுற்றி வந்து பழத்தை பெற்று கொண்டதாக கூறுகிறார்கள். அதவாது நான் ஏமாற்றி பழத்தை வாங்கி கொண்டேன் என்பதை நாசூக்காக கூறுகிறார்கள். என்ன ஒரு பித்தலாட்டம்.
பெரிய உருவம் உள்ள எனக்கு, ஏன் சிறிய மூஞ்சூரை வாகனமாக ஒதுக்கினார்கள். எனது பெரிய உருவத்தை சுமக்கும் அளவுக்கு பலம் கொண்ட உயிரினத்தை ஏன் உருவாக்கி கொடுக்கவில்லை.
இப்போது நிங்கள் செய்யும் உருவத்திலாவது மூஞ்சூருக்கு பதிலாக நீங்கள் உபயோகிக்கும் வேகமாக செல்லும் நவீன வாகனத்துடன் சிலை செய்யுங்கள்
(முருகனும் புலம்பிகொண்டிருக்கிறான். அவனுக்கு சேவலை வாகனமாக ஒதுக்கிவிட்டார்களாம். அவன் அதன் மீது உட்கார்ந்து கொண்டு அதை பாதுகாக்க வேண்டியுள்ளதாம். கொஞ்சம் ஏமாந்து பிடியை தளர்த்தினாலும் அது கோழியை தேடிகொண்டு சென்று விடுகிறதாம். அதனால் சேவலை எப்போதும் கவட்டுக்குள் வைத்து கொண்டு கவனமாக இருக்க வேண்டியிருக்கிறதாம். இதனால், “ கந்தனுக்கு புத்தி கவட்டுக்குள்ளே” என்ற பழமொழியே ஏற்பட்டு விட்டதாக புலம்பிகொண்டிருக்கிறான். எனவே எனது பிரச்சனையை தீர்த்து விட்டு , அவனது பிரச்சனையையும் கவனியுங்கள்)

5)நான் இந்து மத கடவுள், தமிழ்நாட்டிலும் இந்தியா பூராவும் வணங்கபடுகிறேன்.
ஆனால், எனது உருவத்தை ஏன் சீனாவில் இருந்து இறக்குமதி செய்து உபயோகிக்கிறிர்கள். இந்தையாவிலேயே செய்ய கூடாதா. ?
6) எனக்கு ஏன் எப்போதும் சாப்பிடுவதற்க்கு கொழுகட்டையும் சுண்டலும் மட்டும் தருகிறிர்கள். நீங்கள் மட்டும் வகைவகையாக செய்து சாப்பிடுகிறீர்கள். எனக்கு ஒரே மாதிரி உணவை சாப்பிட்டு அஜிரினம் ஆகிவிட்டது. சம விகித்த்தில் உணவை கொடுங்கள். அப்போது தான் எனக்கு உடல் நிலை சரியாய் இருக்கும். மேலும், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யும் எனக்கு கொழுகட்டை போல் இருக்கும் அவர்கள் உணவு “மோமோ” கொடுக்கலாமே.
எனக்கு கல்யானம் ஆகிவிட்டதா இல்லையா. தெளிவாக சொல்லுங்கள். நான் கல்யானம் ஆகாமல், பிரம்மசாரியாக மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு ஏங்கி கொண்டிருப்பதாக ஒரு சாரார் சொல்கிறார்கள்.
மறுசாரார், எனக்கு கல்யானம் ஆகிவிட்டது என்றும், 2 மனைவிகள் உள்ளர் என்றும் கூறுகிறார்கள். எது உண்மை.
எனக்கு கல்யானம் ஆகிவிட்ட்து என்றால் எனது வாரிசுகள் எங்கே. கல்யானம் ஆகியும், எனது உருவத்தின் காரணமாக “உறவு” கொள்ளாமல் இருக்கிறேனா அல்லது எனக்கு உருவாகும் வாரிசு என்னை போல இருப்பானா அல்லது மற்றவர்களை போல சாதாரனமாக இருப்பானா. என் மனைவியால் எனது குழந்தையை சுமக்க முடியுமா. அல்லது, நான் அந்த விசயத்திற்க்கு லாயக்கு இல்லாதவனா. செயற்கை முறையிலாவது எனது மனைவிகளை கரு தரிக்க செய்து , எனக்கு வாரிசுகளை உருவாக்குங்கள்.

அவரது புலம்பல்களுக்கு என்னால் பதில் சொல்லமுடியவில்லை. நீங்களாவது பதில் சொல்லுங்கள்.
எங்கள் வீட்டு பூஜையில் சுண்டல் நிச்சியம். கொழுகட்டை செய்வது பற்றி யோசிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment