Thursday 28 November 2013

சௌராஷ்ட்ரா சமூகம் - வருட பிறப்பு

சௌராஷ்ட்ரா விஜயாப்தம்,


தமிழ் நாட்டில் சௌராஷ்ட்ரா மொழி இன மக்களின் புத்தாண்டு தினம் எது எப்போது என்று தெரியவில்லை. 

உலகத்தில் உள்ள எல்லா நாடுகளிலும் எல்லா 
இன மக்களுக்கும், மொழியினருக்கும் ஒரு வருட பிறப்பு தினம் உள்ளது. இது, ஆங்கில வருட பிறப்பை உலக மக்கள் ஏற்றுகொண்ட பின்பு, மற்றவர்களுக்கும் தங்களுக்கென்று ஒரு தினத்தை ஏற்பட்டுத்தியுள்ளனர். அவை சுமார் 2013 வருடங்களுக்கு சற்று முன்பாகவோ அல்லது சற்று பின்பாகவோ உள்ளது. அதற்கு முன்பு இந்த ஆண்டு கணக்குகள் இல்லையென்பது போல் பொருள்படுகிறது. இவைகளை உலகம் ஏற்றுகொண்டிருப்பதால், சௌராஷ்ட்டிரர்கள் ஏற்படுத்தியுள்ள இந்த ஆண்டு கணக்கையும் ஏற்கதான் வேண்டியுள்ளது.
கி.பி.2013 என்பதும் கற்பனை எண்களே. ஏதுநாதர் பிறந்த அன்று இவர் கடவுளாக மாறபோகிறார் எனவே இன்று முதல் கணக்கிட்டு வருடங்களை எண்களாக குறிப்பிட வேண்டும் என்று யாரும் தயார் நிலையில் இருந்ததில்லை. அவர் தோன்றி, வாழ்ந்து மறைந்து சில நூற்றாண்டுகளுக்கு பின்பே, அவரது பிறந்த தினம் என்று ஒருநாள் கணிக்கப்பட்டு பின்பு அதுமுதல் வருடங்களை எண்களாக கணித்திருப்பார்கள்.

தற்சமயம் சௌராஷ்ட்ரா ஆண்டை, சௌராஷ்ட்ரா விஜயாப்தம் என்று குறிப்பிடுகிறார்கள். அதாவது, சௌராஷ்ட்டிரர்கள் கி.பி.1025 வருடத்திலிருந்து  கணக்கிட்டு (2013 – 1025 =  988 ) இன்று 988வது சௌராஷ்ட்ரா வருடம் என்று குறிப்பிடபடுகிறது. வேறு சிலர் ,சௌராஷ்டிரர்கள் விஜய நகர் பேரரசில் குடியேறிய கி.பி.1312ல் ஆரம்பித்து, சௌரஷ்ட்ரா ஆண்டை கணக்கிடுகின்றனர். ( 2013- 1312 = 701) இப்படி குறிப்பிடுவது அண்மை காலத்தில் தான் ஏற்ப்பட்டுள்ளது. இது யாரல், எவ்வாறு ஏன் ஆரம்பிக்கப்பட்டது என தெரியவில்லைகி.பி.1025 என்பது , சௌராஷ்ட்ரா தேசத்திலிருந்து குடிபெயர்ந்த வருடம் என்ற கணிப்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

1887ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சௌராஷ்ட்ரா பிராமண மாநாட்டில், 1300 வருடங்களுக்கு முன்பு வந்து குடியேறியவர்கள்  என்று குறிப்பிட்டுதான் பேசியுள்ளனர். அவர்கள் வெளியிட்ட புத்தகத்தில் கூட ஆங்கில ஆண்டு எண்ணை தான், 1887 என்று தான் குறிப்பிட்டுள்ளார்கள். சௌராஷ்ட்ரா வருடம் என்று எதையும் குறிப்பிடவில்லை. புத்தாண்டு தினம் எது என்று என்பது போன்ற விசயங்களை பேசவில்லை

சௌராஷ்ட்ரா வரலாற்று குறிப்பு எழுதியிருப்பவர்கள் அனைவருமே தோராயமாக தான், சௌராஷ்ட்ரா தேசத்திலிருந்து வெளியேறிய வருடத்தை குறிப்பிடுகின்றனர். அது 800 முதல் 1400 வரை என்று வேறுபடுகிறது.

இதில் 1025 ஆண்டுகள் என்று துல்லியமாக கணக்கிடபட்டது எவ்வாறு என்று தெரியவில்லைஒரு வாதத்திற்க்காக இது சரியானது தான் என்று  ஒப்புகொண்டாலும் இது யாரல் அறிவிக்கப்பட்டு எப்படி மக்களால் ஒப்புகொள்ளப்பட்டது என்பதற்க்கு எந்த ஆதாரமும் இல்லை. ஒரு சிலர் உபயோகபடுத்த ஆரம்பித்தவுடன் மற்றவர்கள் கேள்வி கேட்காமல் பின்பற்றியிருப்பார்கள் என தோன்றுகிறது.

வருடத்தை கணித்தவர்கள், வருட பிறப்பு தினத்தை ஏன் கணிக்கவில்லை. அதாவது 1025 ஆம் வருடம் எந்த தேதியில் வந்தார்கள் என்ற அடிப்படையில் கணிக்க முடியாது. முதன் முதலில் முதல் சௌராஷ்ட்டிரன் தமிழ்நாட்டில் காலடி வைத்த தினம் என்று எதையும் குறிப்பிட முடியாது.

இப்படிபட்ட நிலையில், கி.பி.1025 என்பதும் ஒரு கற்பனை எண்ணாக தான் இருக்கமுடியும்.

இந்த நிலையில், எந்த வித தலைமையும் இல்லாத சௌராஷ்ட்ரா சமூகம் எதை ஒன்றையும் தீர்மானமாக கூறிவிட முடியாது..

அண்மையில் வருட கணக்கை ஆரம்பித்தவர்கள், அங்கிருந்து ஆண்டுகளூக்கு பெயர்கள் ஏதேனும் வைத்தார்களா. (தமிழில் ஆண்டுகளுக்கு பெயர் உண்டு. 60 ஆண்டுகள் முடிந்து மீண்டும் ஆரம்பத்திலிருந்து தொடங்கும்.) அதுபோன்று சௌராஷ்ட்ரா வருடத்தை ஆரம்பித்தவர்கள் ஆண்டுகளுக்கு ஏதெனும் பெயர் வைத்தார்களா ?

தமிழில் இருக்கும் திருவள்ளுவர் ஆண்டு கணக்கையே தங்களுக்கு வைத்துகொள்ளாமல் தங்களுகென்று தனி ஆண்டு முறையை ஆரம்பித்தவர்கள், சௌராஷ்ட்டிரர்கள் வருட பிறப்பு தினத்தை ஏற்படுத்த தவறியது ஏன் என்று தெரியவில்லை. தமிழர்களின் வருட பிறப்பு தினத்தையே சௌரஷ்டிரர்களும் வருட பிறப்பு தினமாக கொண்டாடுகிறார்கள்

இன்றைய குஜராத் மாநிலத்தில் அமைந்திருந்த சௌராஷ்ட்ரா தேசத்திலிருந்து வந்தவர்கள் என்றால், இன்றைய குஜாரத்தின் வருட பிறப்பு தினத்தையே தமிழ்நாட்டு சௌராஷ்ட்டிரர்களும் கடைபிடிக்கலாமே.

இன்றைய குஜராத்திகளின் வருட பிறப்பு தினம் எவ்வாறு ஏற்ப்பட்டுள்ளது என்பதை கவனிப்போம்.

குஜராத் நாட்காட்டி (calendar) கணக்கின்படி கார்தக் ( Kaartak.) மாதத்தில் அதாவது ஆங்கில மாதம் அக்டோபர்(October)  தமிழ் மாதம் கார்த்திகை மாதத்தில் வருகிறது. குறிப்பாக தீபாவளிக்கு மறுநாள் குஜாதியர்களின் புதுவருடமாக கொண்டாடப்படுகிறது. குஜராத் புத்தாண்டை பெஸ்டு வரஸ்(Bestu Varas)மற்றும் வரஷா-பிரதிபா Varsha-pratipada அல்லது படவா Padwa  என்றும் குறிப்பிடுகிறார்கள்.

கிருஷ்ண பகவான் வரஜா மக்களுடன் சேர்ந்து மழையை நிறுத்த கோவர்தன பூஜை செய்ததாகவும் அன்றிலிருந்து அன்றைய தினத்தில் கோவர்தன மலையை பூஜை செய்ய ஆரம்பித்து அன்றைய தினத்தையே புத்தாண்டு தினமாக ஏற்றுகொண்டதாக வரலாறு கூறுகிறது.

வருட பிறப்பு தினத்தை ஏற்படுத்த தவறியவர்கள் ,மாதங்களின் பெயர்களையும் ஏற்படுத்த தவறிவிட்டனர். தமிழ் மாத பெயர்களையே  உபயோகிக்கின்றனர். புதிதாக ஏற்படுத்தியிருக்கலாமே.

தமிழ் மாதங்களின் பெயர்களை உபயோகிக்கும் சௌராஷ்டிரர்கள், ஏன் தமிழ் தின பெயர்களை – (திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ஜாயிறு) என்று உபயோகிக்காமல், வடநாட்டவர்கள் உபயோகிக்கும் பெயர்களை பயன்படுத்துவது ஏன்.

அதாவது, வருடங்களை குறிப்பிட கிருஸ்துவ மத தொடர்பான எண்களையும், மாதங்களை குறிப்பிட திராவிடர்கள் (தமிழர்கள்) உபயோகிக்கும் பெயர்களையும், தினங்களை குறிப்பிட ஆரியர்கள் (வட இந்தியர்கள்) உபயோகிக்கும் பெயர்களை கலந்து உபயோகிக்கும் சௌராஷ்ட்டிர்ர்கள் தங்களுக்கென தனி அடையாளம் இருக்கிறது, சடங்கு சம்பிரதாயங்கள் இருக்கிறது என  வரலாற்றை பதிவு செய்வதன் மூலம் , ஒரு தவறான முன்னுதாரனத்தை ஏற்படுத்துகிறார்களோ என ஐயம் எழுகிறது. வரலாற்றை எழுதும் முன்பு இது போன்ற விசயங்களை ஆராய வேண்டும்.

எழுதப்படும் வரலாற்றை சரிபார்க்கவோ தணிக்கை செய்யவோ, விவாதித்து சரிபார்த்து திருத்தம் செய்யவோ, சமூகத்தில் எவ்வித அமைப்பும் இல்லை. இவைகளை அங்கீகரிக்கவோ, நிராகரிக்கவோ அரசு துறைகளோ இல்லை.

வரலாறு என்பது மர்மம் நிறைந்தது. அதை கண்டு வியப்படையலாம். பாரட்டலாம் பயப்படலாம்.கொண்டாடலாம். மர்மங்களை. அவிழ்க்க முயற்சி செய்யலாம்.

தங்களுக்கிருக்கும் சமூக அந்தஸ்து, ஆட்சி அதிகாரம், இவைகளை கொண்டு மீண்டும் மீண்டும் தெரியாத விசயங்களை இது தான் உண்மை என்பது போல எந்த சரித்திரம் பதிவு செய்வது சரிதானா?


1 comment:

  1. திருவள்ளுவர் ஆண்டு எப்படி ஆரம்பமானது?
    யாரோ ஒருத்தர் ஆரம்பித்தது எதிர்ப்பில்லாமல் அனுஷ்டிக்கப்பட்டால் அதுவே சரித்திரம் !

    ReplyDelete