Friday 29 November 2013

சௌராஷ்ட்ரா சமூகம் - குலதொழில்


சௌராஷ்ட்ரா குலத்தொழில்::


தமிழ்நாட்டில் வாழும் சௌராஷ்ட்ரா மொழி இன மக்களின் குலதொழிலாக சொல்லப்படுவது நெசவு தொழில்

தமிழ்நாட்டுல், வேறு மொழி இன மக்களும் நெசவு தொழில் செய்கின்றனர்

அன்றைய சௌராஷ்ட்ரா தேசத்தில் சௌராஷ்ட்டிரர்கள் நெசவு தொழிலில் சிறந்து விளங்கிய காரணத்தால் தான் அவர்கள் தமிழ்நாட்டில் குடியேற வாய்ப்பு கிடைத்தது என்று வரலாறு கூறுகிறது. நெசவு என்பது துணி நெய்தல் மட்டுமல்ல. அதற்கு சாயம் ஏற்றுதல், அதில் ஜாரிகை வேலைபாடு செய்தல், மற்றும் மெல்லிய ஆடைகள் நெய்வதில் சிறப்பு தன்மை பெற்றுவதும் இதில் அடங்கும்.

சௌராஷ்ட்டிரர்கள் நெசவு தொழிலில் சிறந்து விளங்க காரணம் என்ன ? . மற்ற தொழில்களில் குறிப்பாக விவசாயத்தில் ஈடுபட முடியாமல் போக காரணம் என்ன ?

இன்றைய கணக்குபடி, பருத்தி உற்பத்தியில் முதலிடம் வகிப்பது குஜராத் மாநிலம் அதிலும் சௌராஷ்ட்ரா பகுதியில் தான் பருத்தி உற்பத்தி அதிகம். இது முந்தைய சௌராஷ்ட்ரா தேசத்திலிருந்து தொடர்ந்து வரும் நிகழ்ச்சி. சௌராஷ்ட்ரா தேச பகுதிகளில் விவசாயத்திற்க்கு ஏற்ற நிலபகுதி அல்ல.

எங்கு பருத்தி உற்பத்தி அதிகமாக இருக்கிறதோ அங்கு தான் அதை சார்ந்த நெசவு தொழிலும் தொடங்கும். எனவே சௌராஷ்ட்ரா தேசத்தில் வாழ்ந்த பெரும்பான்மையான மக்கள் நெசவு தொழிலில் ஈடுபட்டது, அதை சார்ந்த பிற தொழில்களில் ஈடுபட காரணமாய் அமைந்திருக்கிறது.

குறிபிட்ட பகுதி மக்களில் பெரும்பான்மையான மக்கள் ஒரே தொழிலை செய்யும் போது, அந்த பகுதி மக்களின் குலதொழிலாக அது மாறிவிடுகிறது. அந்த வகையில் சௌராஷ்ட்ரா பகுதி மக்களின் குலதொழிலாக நெசவு தொழில் மாறியது. அவர்கள் தமிழ்நாட்டுக்கு குடிபெயர்ந்த பின்பும் பெரும்பான்மையான மக்கள் அதே தொழிலில் ஈடுபட்ட காரணத்தால், தமிழ்நாட்டில் வாழும் சௌராஷ்ட்ரா மக்களின் குலதொழிலாக நெசவு தொழில் கூறப்படுகிறது.

இன்றைக்கு அனைத்து சௌராஷ்ட்ரா மொழி இன மக்களும் நெசவு தொழில் செய்கின்றனரா என்றால் நிச்சியமாக இல்லை. இன்றைய சௌராஷ்ட்ரா மக்கள் தொகையில் 5% மக்கள் தான் நெசவு தொழிலில் ஈடுபட்டிருப்பார்கள்.

பெரும்பான்மையினர் நெசவு தொழிலை கைவிட்டுவிட்டு வேறு தொழிலுக்கு மாறிவிட்டனர்.
1. அவர்கள் அடிப்படையில் வேறு தொழிலில் ஈர்க்கப்பட்டு அந்த தொழிலுக்க்கு மாறியிருக்கலாம்.
2. நெசவு தொழிலில் கிடைக்கும் வருவாயை விட வேறு தொழில்கள் அதிக வருவாய் கிடைக்கிறது என்ற காரணத்தாலும் மாறியிருக்கலாம்.
3. கல்வியறிவு பெற்றதன் காரணமாக , நிலையான மாத சம்பளம் கிடைக்கும்  வேலைக்கு மாறியிருக்கலாம்.
4. நெசவு தொழிலில் இருக்கும் பல்வேறு பிரச்சனைகளை சமாளிக்க முடியாமலும், கைத்தறி தோழிலுக்கு போட்டியாக விசைதறி தொழில் முன்னேற்றம் அடைந்ததால், தாக்குபிடிக்க முடியாமலும் வெளியேறியிருக்கலாம்.
5. கைத்தறி துணிகளுக்கு மக்களிடேயே விருப்பம் குறைந்த காரணத்தால், நெசவு தொழிலை விட்டு வெளியேறியிருக்கலாம்.

ப்போதும் , கைத்தறி நெசவு தொழிலில் பல குடும்பங்கள் ஈடுபட்டிருப்பதற்க்கு காரனம் என்னவென்று பார்த்தால் அவர்கள் சொல்லும் காரணம் (1) இது எங்கள் குலதொழில் என்பதும் (2) இதை தவிர எங்களுக்கு வேறு தொழில் தெரியாது என்பதும் தான்.

ஆனால், உண்மை அப்படியிருக்க வாய்பில்லை என்றே தோன்றுகிறது. குல தொழில் என்ற காரணத்தாலேயே எவரும் ஏழ்மையில் வாழ்ந்துகொண்டு அந்த தொழிலை தொடர்ந்து செய்து கொண்டிருக்கமாட்டார்கள்.

எங்களுக்கு வேறு தொழில் செய்ய தெரியாது என்பதும் காரணமாக இருக்கமுடியாது. வேறு தொழிலுக்கு சென்றவர்கள் இயற்கையாகவே வேறு தொழில் தெரிந்த காரணத்தால் சென்றார்களா என்றால் நிச்சியமாக இல்லை என கூறலாம். வேறு தொழிலில் போய் சேர்ந்த பின்பு அந்த தொழிலை கற்றுகொண்டிருப்பார்கள்.
 
இப்போது நெசவு தொழிலை செய்துகொண்டிருப்பவர்கள் எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதும் ஏற்புடையதல்ல. வாய்ப்பு அவர்களை தேடி வராது. வாய்ப்புகளை தேடி செல்ல வேண்டும். வாய்ப்பு கிடைக்கும் போது உடனடியாக பயன்படுத்தி கொள்ள தெரிந்திருக்க வேண்டும்.

இன்றைக்கு, நெசவு தொழிலில் ஈடுபட்டிருக்கும் பெரும்பான்மையினர் , எங்களுக்கு கல்வி கற்க எங்களது பொருளாதரம் இடம் கொடுப்பதில்லை என கூறுகின்றனர்

நெசவு தொழிலில் போதிய வருவாய் இல்லை ஏழ்மையில் இருக்கிறோம் என்று கூறுபவர்கள் ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும். எந்த குல தொழிலை செய்பவர்களும் ஏழ்மையில் தான் இருக்கிறார்கள். வேறு தொழில் செய்தால் வசதியாக வாழலாம் என்றால் அந்த தொழிலுக்கு மாறுவதற்க்கு எது தடையாய் இருக்கிறது. யாராவது இவர்களை தடுக்கிறார்களா ? நிச்சியமாக இல்லை. இவர்களக்கு தெரியும் வேறு தொழில்களிலும் போதிய வருவாய் இல்லையென்பது. எனவே, அங்கு சென்று புதிய தொழிலை கற்று சிரமபடுவதை விட தெரிந்த தொழிலையே தொடர்ந்து செய்யலாம் என இதையே செய்து கொண்டிருக்கிறார்கள்.

கல்வி கற்க வசதியில்லை என்பது ஒரு காரணமாக சொல்லப்பட்டால், இது நெசவாளர்களுக்கு மட்டும் உள்ள பிரச்சனை அல்ல. போதிய வருவாய் இல்லாத எந்த தொழில் செய்பவருக்கும் இந்த பிரச்சனை உள்ளது.

கைத்தறி நெசவு தொழிலை புதிய முறையில் செய்ய முயற்சிசெய்யாமல் இருப்பதும், உற்பத்தி செய்த துணிகளை சரியான முறையில் விற்கவும் முயற்சி செய்யாமையும் முக்கிய காரணங்களாகும்.

அரசு உதவி செய்ய வேண்டும் என்பது ஏற்கதக்கது தான். ஆனால்,தொடர்ந்து, இலவசங்களையும், சலுகைகளையும் வழங்கி ஒரு தொழிலை எந்த அரசாங்கத்தாலும் வாழ வைக்க முடியாது. அல்லது, மக்கள் அனைவரும் கைத்தறி துணிகளை தான் பயன்படுத்த வேண்டும் என ஆனையிட முடியாது. கைத்தறி துணிகளை நெசவு செய்யும் நெசவாளிகளே கைத்தறி துணிகளை அதிக அளவில் பயன்படுத்துவதில்லை என்பது தான் வேதனைகுரிய விசயம்.

ஏதோ இன்றைக்கு தான் நெசவாளர்கள் துன்பபடுகிறார்கள் என்பது போல பேசப்படுகிறது. விசைதறிகள் மூலம் ஆடைகள் தாயரிப்பதற்கு முன்பே கூட நெசவாளிகன் நிலை இப்படி தான் இருந்திருக்கிறது. கைத்தறி ஆடைகளை மட்டுமே உபயோகிக்கப்பட்ட கால கட்டத்திலும், கைத்தறி நெசவாளர்களுக்கு போதிய வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை போதிய வருவாய் இல்லாமல் ஏழ்மை நிலையில் இருந்துள்ளனர். தொழில் செய்ய வாய்பிருந்த காலத்தில் கூட நெசவாளர்களே ஏழ்மை நிலையில் இருந்த போது, கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்திய மக்கள் உணவுக்கே சிரமபட்ட நிலையில் புதிய ஆடைகளை வாங்கி உடுத்தி, நெசவு தொழிலை மேம்படுத்த வாய்பில்லாமல் போனது.

1887ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் சௌராஷ்ட்ரா பிராமண மாநாட்டிலும் இது குறித்து பேசப்பட்டுள்ளது. நெசவாளர்கள் ஒரே விலையில் விற்க வேண்டும் (போட்டியின்  காரணமாக விலை குறைப்பு செய்ய கூடாது) தரமான கெட்டி சாயங்களை உப்யோகித்து துணிகளை தயாரிக்க வேண்டும், கூட்டுறவு முறையில் செய்ல்பட வேண்டும்,  இயந்திர உதவியுடன்(விசைதறி) துணிகளை உற்பத்தி செய்ய வேண்டும், அரசின் கவனத்திற்க்கு கொண்டு சென்று உதவிகள் பெற வேண்டும் என கேட்டுகொண்டதுடன் உதவி செய்யவும் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

ஒரு சிறிய சமுகத்தில், சில குடும்பங்களே செய்யும் தொழில் விருத்தியடைய , செய்யும் தொழிலை மாற்றிகொள்ள எத்தனை நூற்றாண்டுகள் தேவை.  125 ஆண்டுகளுக்கு பின்பும் அதே நிலை நீடிக்கிறது என்றால், அடிப்படையில் தொழிலில் உள்ள குறைபாடும், நெசவாளிகளிடம் உள்ள குறைபாடும் தான் காரணம்.

நெசவாளிகளின் ஏழ்மையை போக்க அனைத்து உதவிகளையும் அரசு செய்ய முடியாது. அரசியல்வாதிகள், மக்கள் ஏழ்மையில் இருந்தால் தான் அவர்கள் வாழ முடியும் என்பதை தெரிந்து வைத்துள்ளார்கள்

ஏழ்மை என்பது எப்போதும் இருந்துகொண்டு தான் இருக்கும். ஏழ்மை என்பதே ஒரு மனோநிலை தான். இன்றைக்கு இருக்கும் நெசவாளிகள் அனைவரிடமும் கேட்டு, ஒரு குறிப்பிட்ட அளவுக்கு வருமானத்தை கொடுத்துவிட்டால் நாங்கள் வறுமையிலிருந்து வெளியே வந்துவிட்டோம் இனி எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று மகிழ்சியாக வாழ்வார்களா ? இல்லை. சில வருடங்களுக்கு பின்பு மற்றவர்களுடன் தங்களை ஒப்பிட்டுகொண்டு,  மீண்டும் ஏழ்மையில் தான் இருக்கிறோம் என்று சொல்வார்கள் . எனவே தான் ஒப்பிட்டுதல் என்பது இருக்கும் வரை ஏழ்மை என்ற சொல் இருக்கும்.

மேலும், குறிப்பாக சௌராஷ்ட்ரா சமூகத்தில் இருக்கும் நெசவாளிகள் தங்களது வாழ்க்கை முறையை மாற்றியமைத்து கொள்ள வேண்டும். புத்தியை பயன்படுத்தி முடிவெடுக்க  வேண்டிய விசயங்களை மணத்தால் யோசித்து முடிவெடுக்க கூடாது.

அரசு உதவி என்பது கோழி அடைகாப்பது போல. ஓரளவுக்கு தான் உதவிகளை செய்ய முடியும். முட்டையை உடைத்து கொண்டு குஞ்சு தானாக  வெளியே வந்து தனது வாழ்க்கையை ஏற்படுத்திகொள்ளவதை போல தான் நெசவாளர்களும் தங்கள் வாழ்க்கையை தானே அமைத்துகொள்ள வேண்டும். யாரும் முட்டையை உடைத்து குஞ்சை வெளியே கொண்டுவரமாட்டார்கள்.

3 comments:

  1. நான் ஒரு நெசவுத் தொழிலாளி

    ReplyDelete
  2. நம் ஸ்மூக மக்களில் 5% தான் நெசவாளிகள் என்பது தவறு. இன்னும் 50% மக்கள் நெசவை நம்பிதான் உள்ளனர். இதற்கு காரணம் அடிமைதனம்.முதலாளியிடம் அதிக கடன் பெற்று அவரிடமே வேலை செய்ய்ய வேண்டிய நிலைதான்.இந்த தொழிளில் இருந்து தப்பிதவர்களில் நானும் ஒருவன். இதனால் உங்கலள் யூகத்தை மாற்றிக்கொள்ளுங்கள்.

    ReplyDelete
  3. நன்றி. தங்கமயில். சரிபார்த்து திருத்தம் செய்கிறேன்.

    ReplyDelete