Wednesday 27 November 2013

சௌராஷ்ட்ரா சமூகம் - மடாதிபதி நியமணம்


சௌராஷ்டரா மடாதிபதி::


தமிழ்நாட்டில் வாழும் சௌராஷ்ட்ரா மொழி இன மக்களின் மடாதிபதி யார் ? . அப்படி யாரவது இருந்தார்களா ? இருக்கிறார்களா என்ற கேள்விக்கு விடை கான்பதற்க்கு முன்னால் மடாதிபதி என்றால் யார் என்பதை பார்ப்போம்.
மடாதிபதி என்பவர்  (1) ஸ்மஸ்கிருத அறிவு பெற்றிருக்கவேண்டும்.(2) நான்கு வேதங்களைம் கற்றிருக்க வேண்டும்.(3)  ஆகம விதிகளை அறிந்திருக்கவேண்டும் (4)  தர்ம மற்றும் கிரியா சாஸ்திரத்தை அறிந்திருக்க வேண்டும். (5) சைவ சித்தாந்த அறிவு பெற்றிருக்க வேண்டும் (6) ஆச்சார அனுஷ்டான்ஙகளை கடைபிடிக்க வேண்டும். (7) தீட்சை பெற்றிருக்க வேண்டும்.(8) சைவ மந்திரங்கள் அறிந்திருக்க வேண்டும் (9) முத்திரைகள் அறிந்திருக்க வேண்டும். (10) கிரியை பற்றி அறிந்திருக்கவேண்டும். (11) தர்க சாஸ்திர அறிவு பெற்றிருக்க வேண்டும்.
மடம் என்றால் என்ன ?
மடம் என்பது தெய்வீகத்தின் இருப்பிடம். ஆன்மிகத்தின் உறைவிடம்.
மடாதிபதியின் கடமைகள் என்ன ?
புராதனமான ஆலயங்களைத் திறம்பட நிர்வகிப்பது, மொழியையும் கடவுள் பக்தியையும் வளர்ப்பதுவேதங்களை கற்றுகொடுப்பது என்பன
மடங்கள் எப்படி ஏற்படுகிறது ?
வாரிசுகளே இல்லாமல் இறந்து போனவர்கள், பெரும் செல்வந்தர்கள், மதத்தின் மீது தீவிரப் பற்று கொண்டவர்கள், கோயில் குளங்களை அதிகம் நாடிச் சென்றவர்கள் இப்படிப்பட்டவர்கள் நன்கொடையாக அள்ளிக்கொடுத் வீடுகள், நிலங்கள், தங்க ஆபரணங்கள், தோப்புகள் மூலம் கிடைத்த செல்வத்தின் மூலம் ஏற்படுத்தபட்டவை.
மடங்களின் கடமைகள் என்ன ?  
 மடங்களின் சொத்துகளை நிர்வாகித்து இதன் மூலம் கிடைக்கும் வருமானத்திலிருந்து  வேதங்களை கற்றுகொடுப்பது, கோவில்களை நிர்மானிப்பது பழைய கோவில்களை புணரமைப்பது, மக்களின் பொது நன்மைக்கு, தர்ம ஸ்தாபனங்களை உருவாக்குவது, கல்வி கூடங்கள் மற்றும் மருத்துவ வசதிகள் செய்வது மற்றும் தங்கள் பகுதியில் உள்ள பிராமணர்கள் செய்யும் வைதீக சடங்குகளை கண்கானிப்பது, அவர்களுக்கு பயிற்சி கொடுப்பது போன்றவை.
மடங்கள் யார் பெயரால் நிறுவபடுகிறது ?
இறைவன் பெயரிலும் , அரசர் பெயரிலும்,  நாயன்மார்கள் பெயரிலும், சமய அடியார்களின் பெயரிலும்,  குழுவினர் பெயராலும் மடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
சௌராஷ்ட்ரா தேசத்திலிருந்து ,தமிழ்நாட்டில் வந்து குடியேறிய சௌராஷ்ட்ரா பிராமணர்கள், தாங்களும் தமிழ்நாட்டில் வாழும் பிராமணர்களுக்கு இனையானவர்கள் என்ற உரிமையை அன்றைய ராணி மங்கமாளிடமிருந்து சாசனம் எழுதி வாங்கிய பின்னர் வேறு ஒரு பிரச்சனையை சந்திக்க வேண்டி வந்தது.
சௌராஷ்ட்ரா பிராமணர்களை பார்த்து தமிழ் தெலுங்கு பிரமணர்கள் உங்களது குரு யார் என்ற கேள்வியையும், யாரிடம் தீட்சை பெற்றீர்கள் என்ற கேள்வியையும் எதிர் நோக்க வந்தது. இதற்கு யாரிடமும் எந்த பதிலும் இல்லை. சௌராஷ்ட்ரா பிரமணர்களுக்கு மடங்கள் இல்லை. தீட்சை கொடுப்பதற்க்கு மடம் சார்ந்த ஆசிரியர்கள் இல்லை. சிலர் பரம்பரையாக தாத்தா, தந்தை வழியாக கற்று குலதொழிலாக செய்து வந்துள்ளனர்.
இந்த காரணங்களுக்காக சௌராஷ்ட்ரா சமூகத்திற்க்கு மடாதிபதியை நியமிக்க வேண்டும் என்று தோன்றியுள்ளது.
1887 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் சௌராஷ்ட்ரா மாநாட்டிலேயே இது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. அதற்கு பிறகு நடந்த மாநாட்டிலும் விவாதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநாட்டிலும் அடுத்த மாநாட்டில் இது குறித்து முடிவெடுக்கலாம் என தள்ளிபோட்டுகொண்டே வந்துள்ளனர். இதற்கு காரணம் என்னவென்று ஆராய்ந்தால் உண்மை புலப்படும்.
சௌராஷ்ட்ரா பிராமண வகுப்பில் சைவ பிரிவு, வைஷ்ணவ பிரிவு மற்றும் மார்த்துவ பிரிவுகள் இருந்தன இருக்கின்றன. இதில் எந்த பிரிவை சார்ந்தவரை மடாதிபதியாக நியமிப்பது என்ற பிரச்சனை . யாரும் யாருக்காகவும் விட்டுகொடுக்க தயாராக இல்லை. ஏனெனில், அந்த பிரிவை சார்ந்தவர்களின் ஆதிக்கம் தலை தூக்கும். அவர்களது சொல்படி மற்றவர்கள் வேலை செய்ய நேரிடும். மேலும் , மடாதிபதி நியமித்து, மடங்கள் நிறுவப்பட்டால், அதற்கு சொத்துகள் சேரும். அதை, மடாதிபதி சார்ந்த குழு நிர்வாகிக்கும். இதை ஏற்கவும் எந்த பிரிவினரும் தயாராக இல்லை. எனவே, இந்த பிரச்சனை ஒவ்வொரு ஆண்டும் தள்ளி போட்டுகொண்டே வந்துள்ளது.
இதற்கிடையில், சௌராஷ்ட்ரா பிராமணர்கள், தமிழ், தெலுங்கு மக்களுக்கு (பிராமணர் அல்லாதோர்) சுப அப காரியங்களில் புரோகிதம் செய்வதை விரும்பவில்லை. மேலும், வேறு பிராமணர்களிடம் தீட்சை பெறுவதையும் விரும்பவில்லை.
மடாதிபதி நியமனமும் ஏற்படவில்லை. தங்களுக்கு ஏற்படும் அவபெயரையும் காப்பாற்றியாக வேண்டிய சூழ்நிலை. பிராமண சமூகத்திலிருந்து வழி தவறி சென்றுகொண்டிருப்போரையும், சரி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதால், மடாதிபதியை நியமிக்கும் வரை, “ ஆசார விசாரனை தலைவர்என்ற ஒருவரை நியமிக்கலாம் என முடிவெடுத்துள்ளனர். அப்படி தேர்ந்தெடுக்கப்படுபவர், எல்லா விசயங்களையும் கற்றரிந்தவராகவும், அனைத்து பிரிவினரையும் அனைத்து செல்பவராகவும் இருக்க வேண்டும் என முடிவெடுத்துள்ளனர். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுபவர், சௌராஷ்ட்ரார்கள் வாழும் பகுதிகளுக்கு சென்று, பிராமணர்கள் சரியான ஆச்சார அனுஷ்டானங்களை கடைபிடிக்கின்றனரா என ஆராய்வதுடன் , அதற்கான உதவிகளை செய்ய வேண்டும் என முடிவெடுத்தாலும் இதை அவர்களால் செயல்படுத்த முடியவில்லை. அதற்கு காரணம் மேலே கூறியபடி பிராமணர்களில் இருந்த பாகுபாடே காரணம். இந்த காரணங்களினால், இறுதிவரை மடாதிபதி அல்லது ஆசார விசாரனை தலைவர் என்று ஒருவர் நியமிக்கபடாமலேயே சௌராஷ்ட்ரா பிராமண சமூகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
இன்றைக்கு பிராமணர்களாக  புரோகிதர் மற்றும் அர்சகர்களாக இருப்பவர்கள் எந்த அளவுக்கு வேதங்களையும் மந்திரங்களையும் கற்று யாரிடம் தீட்சை பெற்றுள்ளனர் என்று அறிய முடியவில்லை. இப்படி அரை குறை அறிவு உள்ளவரை வைத்து கொண்டுதான் நாம் ஆச்சார அனுஷ்டான்ங்களை செய்து வருகிறோம் என்பதை அறியும் போது இவைகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டியது அவசியமா என தோன்றுகிறது. மேலும், தமிழ் நாட்டிற்க்கு வெளியே வாழும் சௌராஷ்ட்டிரர்கள் அவர்கள் வாழும் பகுதியில் உள்ள பிற சமூகத்தை சார்ந்த பிராமணர்களின் உதவியுடன் சுப அப காரியங்களை செய்ய வேண்டியுள்ளது. அதில் பல மாறுபாடுகள் இருந்தாலும், சூழ்நிலைக்கேற்ப சமாதனப்படுத்திகொண்டு இவைகளை ஏற்றுகொள்ளவேண்டியுள்ளது.
இந்த நிலையில் இன்று சௌராஷ்ட்ரா சமூகத்திற்கு மடாதிபதி என்று யாரையும் நியமிக்க முடியும் என்று தோன்றவில்லை.
மடாதிபதி என்று ஒருவர் தோன்றியிருந்தால், சௌராஷ்ட்ரா மக்கள் ஏற்படுத்தியுள்ள பொதுசொத்துக்கள், சத்திரங்கள், கோவில்கள் மற்றும் தர்ம சபைகள் ஒரு மடத்தின் கீழ் வந்திருக்கும்.
ஆனால், இப்போது தனியாரல் நிறுவபட்ட அறகட்டளைகள், மற்றும் பொதுமக்களின் உதவியுடன் நிறுவபட்ட அறகட்டளைகளின் சொத்துக்கள் தனியார் வசமோ, அல்லது ஒரு குடும்பத்தின் வசமோ இருக்கிறது. இவைகளை அண்மை காலங்களில் தனிப்பட்ட சொத்துகளாக மாற்றி வருகின்றனர். 
இன்றைய நிலையில் மடங்களின் மீதும், மடாதிபதிகளின் மீதும் வரும் குற்றசாட்டுகளை பார்க்கும் போது, சௌராஷ்ட்ரா சமூகத்திற்க்கு மடமும் மடாதிபதியும் ஏற்படாமல் இருந்ததே சரியென தோன்றுகிறது..


2 comments:

  1. சௌராஷ்ட்ரா மடாதிபதி யார் ?

    அப்படி ஒருவர் இருந்தாரா ?

    ReplyDelete
  2. தற்பொழுது ஸௌராஷ்ட்ர ஜகத்குருவாக ஸ்ரீமந் நடனகோபால நாயகி ஸ்வாமிகள்
    கருதப்படுகிறார்.
    ஸ்ரீவைகுண்ட நாதர் குருமஹாபீடம்,வேப்பம்பட்டு, சென்னை-602204 என்று ஒன்று செயல்பட்டு வருகிறது.
    திருவண்ணாமலையிலும் ஒரு மடம் இருப்பதாகத் தெரிகிறது.
    மதுரையில் இருந்த மடங்களின் குருக்கள் காலமான பிறகு மடங்கள் செயல்படவில்லை.
    அத்வைதானந்த மடாலயம், சித்த பீடம், சித்தாஸ்ரமம் இவைகள் மடங்களாக கருதப்பட்டன.

    ReplyDelete