Sunday 16 March 2014

மதமும் ஜாதியும்

விவேகானந்தர் - மதமும் ஜாதியும்::


இந்த அறிவாளிகளாகிய சீர்திருத்தக்காரர்களால் நடத்தப்பெறும் பத்திரிக்கையைப் படித்தேன். அதில், நான் ஒரு சூத்திரன் என்றும், ஒரு சூத்திரன் சன்னியாசியாவதற்கு என்ன உரிமையிருக்கிறதென்றும் அட்சேபிக்கப்பட்டிருக்கிறேன். இதற்கு நான் கூறும் மறுமொழியென்னவென்றால், - என்னுடைய வம்சம் சூத்திர ஜாதியானால், பின் அந்த பத்திரிக்கை அதிபரின் வம்சம் நீச ஜாதியாகும். “ யமாய தர்ம ராஜாய சித்ரகுப்தாய வைந்ம “ என்ற மந்திரத்துடன் யாருடையா பாதங்களில் சரணமடைகிறார்களோ அவருடைய வழியைச் சேர்ந்தவன் நான். ஒவ்வொரு மனிதனுடைய நல்வினை தீவினைகளையும் அவ்வப்போது பதிவு செய்துவருபவரும், தர்மங்களுக்கெல்லாம் அதிதேவதயுமான யமதர்ம ராஜனின் அடிகளை வணங்குபவன் நான். சத்திரியர்களெல்லாம் யாருடைய வம்சத்தில் தோன்றியிருக்கிறர்களோ , அவரின் பாதங்களில் பணிபவன் நான். உங்கள் காவியங்களிலேலனும் புராண இதிகாசங்களிலேனும் நம்பிக்கை சிறிதளவேனும் இருக்குமானால் என் வம்சத்தார், தாங்கள் பண்டை நாளில் செய்த அரும்பெரும் காரியங்கள் ஒரு புறமிருக்க, இந்தியாவிற் பாதியை அநேக நூற்றாண்டுகள் அரசாண்டு வந்துளரென்பதை இவ்வங்காள சீர்திருத்தக்கார்ர்கள் உணரட்டும். என்னுடைய ஜாதியானது மதிக்கப்படாது புறக்கணிக்கப்படுமாயின் பின் இக்கால இந்திய நாகரிகத்தின் பெருமையென்ன இருக்கிறது.

இந்நாகரிக வளர்ச்சிக்கும் மேன்மைக்கும் காரண புருஷர்களாய்த் தோன்றி நலம்புரிந்த சீரியோர் அனைவரும் எனது ஜாதியிலேயே தோன்றியுள்ளனர். வங்காளத்தை மாத்திரம் எடுத்துக்கொண்டாலும், தத்துவ ஞானத்தில் எவரினும் மேம்பட்டவரும், கவிகளுள் சிரேஷ்டரும், சரித்திரமெழுதுவதில் வன்மை பெற்றவரும், புராதன வஸ்து சாஸ்திரங்களை ஆராய்ந்துணர்வதில் சிறந்தவரும், முதன்மை பெற்ற மதாசாரியர்களும் ஆக இவர்களெல்லோரும் எனது வம்சத்திலென்றோ தோன்றியிருக்கின்றனர். நவீன சாஸ்திர ஆராய்ச்சிக்காரர்களுள் முதன்மை பெற்றவர், இந்தியாவில், எனது வம்சத்திலேயே தோன்றியுள்ளார். என்னுடைய ஜாதி சூத்திர ஜாதியா ? பின் இந்த பத்திரிக்கை அதிபர், மறுமுறையும் கூறுகிறேன், பறையனாவார். குற்றங்கூற முன் வந்த இவர் நமது சரித்திரங்களைச் சற்று ஆராய்ந்துணர்ந்திருத்தல் வேண்டும்; பிராம்மண ஷத்திரிய வைசியர்களுல் எவருக்கும், சன்னியாச ஆசிரமம் ஏற்க பாத்யம் உண்டென்பதையும், இம் மூவருணத்தினர்க்கும் வேதங்களில் சமமான உரிமையுண்டு என்பதையும் அவர்கள் உணர்ந்திருக்கவேண்டும்.

சுவாமி விவேகானந்தர் சென்னையில் பேசிய பேச்சின் ஒரு பகுதி. இந்த பேச்சை மொழிபெயர்த்தவர் சுவாமி ருத்ரானந்த சவாமிகள். சுவாமி விவேகானந்தரின் பேச்சுக்களை தொகுத்து, “ இந்தியப் பிரசங்கங்கள் “ என்ற தலைப்பில் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் புத்தகமாக வெளியிட்டுள்ளது. ஒன்பதாம் பதிப்பு (1943)– இந்த பிரசங்கம் “ எனது போர் முறை “ என்ற தலைப்பில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. பக்கம் 140 -142

தன் வாழ்நாள் முழுவதும் இந்து மத பெருமைகளை விளக்கி பிரசங்கங்கள் செய்தவரும், இந்த இந்து மதம் தாழ்ந்த நிலையில் இருப்பதற்க்கு காரணம் ஜாதி வேற்றுமையே என்றும், ஜாதிகள் ஒழிக்கப்படுவதற்க்கு , கீழ் ஜாதிக்காரர்களை மேல் ஜாதிகாரர்களாக மாற்ற வேண்டும் என்று போதித்தவர் இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டு கோபமாக மறுமொழி கூறியது எந்த வகையில் நியாயமானது என்று புரியவில்லை.

அவரை சூத்திரர் (கீழ் ஜாதிகாரர்) என்று குறிப்பிட்டிருந்தால், அவர் தன்னுடைய ஜாதி இன்னது என்று சுருக்கமாக கூறியிருக்கலாம். அல்லது இது குறித்து கருத்து கூறாமல் ஊதாசினப்படுத்தியிருக்கலாம். ஆனால், தன்னை விமர்சித்தவரை அவரை விட மோசமாக அவர் நீச ஜாதிக்காரர் என்றும் பறையன் என்றும் விமர்சிப்பது, தன்னை சந்நியாசி என்று கூறிக்கொண்டவருக்கு பொருந்துமா. ? தன்னுடைய ஜாதி மதிக்கப்படவில்லையென்றால் இந்திய நாகரிகத்திற்க்கு பெருமையில்லை என்கிறார்.,

தனது ஜாதி பெருமைகளை நீட்டி முழக்கியிருப்பது அவருக்கு தனது ஜாதியின் பேரில் இருக்கும் அபிமானத்தை உணர்த்துகிறது. ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று கூறியவருக்கே இவ்வளவு பெருமை இருக்கிறது என்றால், தங்களது ஜாதியை தாங்கி பிடிக்கும் மக்களுக்கு எவ்வளவு அபிமானம் இருந்திருக்கும் என்பதை அவர் ஏன் உணர மறந்துவிட்டார்.

ஜாதியை ஒழிக்க முடியாது என்பதும், ஜாதீய பிரச்சனைகளை ஒழிக்கமுடியாது என்பதும் அவருக்கு புரியாமல் போனது ஆச்சரியமே.

இவற்றுக்கும் மேலாக, இவரும் சூத்திரர்களை இழிவு படுத்தியே பேசியுள்ளார். இவர் என்ன கூறுகிறார் என்று பாருங்கள் “பிராம்மண ஷத்திரிய வைசியர்களுல் எவருக்கும், சன்னியாச ஆசிரமம் ஏற்க உரிமை உண்டு என்கிறார்.  ஆனால், சூத்திரர்கள் சந்தியாசம் ஏற்க்ககூடாது என்பதை சொல்லாமல் சொல்கிறார். ஏன் சூத்திரர்கள் சந்நியாசம் ஏற்க கூடாது என்பதை சொல்லவில்லை. ஜாதியை ஒழித்து அனைவரும் சமமாக வாழவேண்டும் என்பவர் ஏன் ஒரு ஜாதியினரை சந்நியாசம் ஏற்க கூடாது என்பதை ஆதரிக்கிறார்.

இவர் ஒரு மத போதகர். , மற்ற மத போதகர்களை விமர்சித்துள்ளார். இவர் மதம் மாற்றும் செய்கையை செய்யவில்லையென்றாலும், உலகம் முழுவதும் இந்து மதத்தை பரப்பவேண்டும் என்று பிரசங்கம் செய்துள்ளார். இவருக்கு இந்து மதத்தை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும் என்று ஆசை இருப்பதை போல மற்ற மதத்தினருக்கும் அத்தகைய ஆசை இருக்கும் என்பதை ஏன் உணர மறுத்துவிட்டார்.


எனவே தமக்கும் தனது மதத்துக்கும் ஒரு கொள்கையும் மற்ற மதத்தினருக்கு வேறு ஒரு கொள்கையையும் பேசியவர் ஒரு சந்நியாசியாக இருக்கமுடியாது. இவரும் ஆசைகளுக்கும் பந்தங்களுக்கும் அடிமைப்பட்ட ஒரு சாதாரண மனிதராகவே வாழ்ந்துள்ளார்.


இந்துக்கள் என்பதில் பெருமையுண்டு. இந்த மதம் இந்து மதம் 

அனைவரையும் அரவனைத்து செல்லும் மதம். இது தான் அதன் பலமும்

பலவீனமும் கூட. நான் இந்து என்பதில் பெருமையடைகிறேன்.

No comments:

Post a Comment