Thursday 20 March 2014

திரைப்பட விமர்சனம்

இந்தி திரைப்படம் - QUEEN




இந்தி திரைப்படம் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது என்று கேள்விப்பட்டு 19.03.2014 காலை காட்சி 11 மணிக்கு சென்றேன். டிக்கெட் கிடைக்கவில்லை HOUSE FULL. விடுவேனா. இன்று காலை 11.00 மணி காட்சி பார்த்தேன்.


பிரபலமான கதாநாயகன் இல்லை. கதாநாயகியும் மிகவும் பிரபலம் இல்லை. மிகவும் பேசப்படுபவர். சற்று கவர்ச்சியாக நடிக்ககூடியவர். நடிப்பிலும் பிரமாதமானவர் இல்லை. ஆனாலும், படம் நன்றாக ஓடுகிறது. அதுவும் கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள படம்., கவர்ச்சி காட்சிகளுக்காக அல்லது காமக் காட்சிகளுக்காக எடுக்கப்பட்ட படமாகவும் தெரியவில்லை.  என்னத்தான் இருக்கிறது அதில் என்று பார்த்துவிடுவது என நினைத்தேன். (படம் பார்க்க இது ஒரு காரணம்)

கதாநாயகி Kangana Ranaut டெல்லியில் வசிக்கும் நடுத்தர குடும்ப பெண். திருமணத்திற்க்கு 2 நாட்களுக்கு முன் மருதாணி வைக்கும் சடங்கு நிகழ்ச்சியுடன் படம் ஆரம்பிக்கிறது. மணமகன் Rajkummar Rao அன்று அவளை தனிமையில் அழைத்து, நீ எனக்கு ஏற்றவள் அல்ல என்றும் திருமணத்தில் விருப்பம் இல்லையென்றும் கூற திருமணம் தடைப்படுகிறது.
திருமணத்திற்க்கு பிறகு அவள் மிகவும் நேசிக்கும் இடத்திற்க்கு பாரிஸ்(PARIS)  தேன்நிலவு செல்ல ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது. திருமணம் நின்ற பிறகு தனியாக தேன்நிலவு செல்கிறாள். அங்கு ஏற்படும் ஒரு பெண்ணின் அறிமுகத்துடன் ஊரை சுற்றிப்பார்க்கிறாள். சில இடர்பாடுகளையும் சந்திக்கிறாள். அங்கு அவள் போட்டு பார்க்கும் நாகரிக உடைகளை புகைப்படம் எடுத்து தோழிக்கு அனுப்பும் போது , தவறுதலாக அது தன்னை புறக்கனித்த மணமகனுக்கு அனுப்பியிருப்பதை அறிகிறாள். பின்பு அம்ஸ்டர்டாம் நகருக்கு செல்கிறாள். ஒரு விடுதியில் தங்குகிறாள். அதாவது நகரில் இடபற்றாக்குறை இருப்பதால் நான்கு பேருடன் அறையை பகிர்ந்துகொண்டு தங்க ஒப்புக்கொள்கிறாள். மற்ற மூன்று பேரும் ஆண்கள் ஒருவன் ரஷ்யா, ஒருவன் ஃப்ரான்ஸ் மற்றோருவன் ஜப்பான்காரன். ஆரம்பத்தில் தயங்கினாலும் பின்பு நட்புடன் பழகி ஊரை சுற்றி வருகிறாள். அவர்களை பற்றி அறிந்துகொள்ள சந்தர்ப்பம் கிடைக்கிறது. பல அனுபவங்கள் கிடைக்கிறது. இவையனைத்தும் டெல்லியில் அவளுக்கு மறுக்கப்பட்ட விசயங்கள்.  மிகவும் நன்றாக அனுபவிக்கிறாள்.
இதற்கிடையில் நிராகரித்த மணமகன் இவளை தேடிக்கொண்டு, ஃபாரிஸ் வருகிறான். செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு மணக்க விரும்புகிறான். அவனை டெல்லியில் சந்திப்பதாக கூறிவிட்டு, இறுதியாக, அந்த 3 நண்பர்களுடன் இசைநிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரியா விடை பெறுகிறாள்.
இந்தியா திரும்பும் போது, வீட்டிற்க்கு போகும் முன் மணமகன் வீட்டிற்க்கு செல்கிறாள். அங்கு அவனை சந்தித்து, நிச்சியதார்த்த மோதிரத்தை திருப்பி தந்து விட்டு மகிழ்ச்சியுடன் சுதந்திரமாக வீடு திரும்புகிறாள்.
இது ஒன்றும் பெண்ணியத்தை வலியுறுத்தும் கதையல்ல. எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று போதிக்கும் படமும் அல்ல. முன்பே சொல்லியதை போல காதல், கவர்ச்சி, காமம் எதுவும் அதிகப்படியாக இல்லை. அழுது அழுது புலம்பி பரிதாபத்தை சம்பாதிக்கும் கதையுமல்ல. ஆனால், இவரது முந்தைய படங்களில் இருந்து மாறுப்பட்ட நடிப்பு. சிறப்பாக நடிக்க முயற்ச்சி செய்துள்ளார். தொடர்ந்து நடித்தால் சிறப்பான நடிகையாக உருவாகலாம்.
அவர் சிறந்த நடிகையாக உருவானாலும், சில பல படங்களுக்கு பிறகு, வயதாகிவிட்டது என்ற காரனத்தால் அல்லது புதிய நடிகைகள் வரவு காரணமாக இவர் புறக்கணிக்கப்படுவார்.
எப்படியிருப்பினும், இவரை நம்பி ஒரு படத்தை எடுத்த இயக்குனர் Vikas Bahl ம் தயாரிப்பாளரையும் பாரட்டதான் வேண்டும். இசை சுமாராக இருக்கிறது. ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது. பார்த்த கதை தான்.
இந்த நேரத்தில் இங்கு வேறு யாருடைய பிரபலமான கதாநாயர்களின் படமும் வெளிவராத காரணத்தால்,( பள்ளிகளில் பரிட்சை நேரம் ) இந்த படம் வெற்றியடைய ஒரு காரணமாக இருக்கலாம்.
பார்த்தால் வருத்தமடைய ஒன்றுமில்லை

No comments:

Post a Comment