Friday 21 March 2014

மதமும் ஜாதியும்

விவேகனந்தரின் மதமும் ஜாதியும்::


இந்த சந்தர்ப்பத்தில் சென்னை மாகாணத்திற்கு முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றிப் பேச விரும்புகிறேன். தென்னிந்தியா முழுவதும் திராவிடர் என்ற வர்க்கத்தார் இருந்ததாகவும் , வட இந்தியா முழுதும் ஆரியர்கள் என தனி வர்க்கத்தார் இருந்ததாகவும், தென்னிந்தியாவிலிருக்கும் பிராம்மணர்கள் மாத்திரம் வட இந்தியாவிலிருந்து வந்த ஆரியர்களென்றும், தென்னிந்தியாவிலிருக்கும் மற்ற அனைவரும் அவர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்ட திராவிடர்களென்றும் சொல்லப்படுகிறது. இந்த ஆராய்ச்சிக்காரர்களுக்கு மிகுந்த வணக்கத்துடன் நான் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அவர்கள் கூற்று முற்றிலும் அதாரமில்லாதது. இவ்வாததிற்க்கு ஒரே ஒரு காரணம் தான் உண்டு; அதாவது தென்னிந்தியாவிலும் வட இந்தியாவிலும் வேறு பாஷைகள் வழங்கி வருகின்றனவென்பதுதான். அவர்கள் இருவருக்கும் பாஷையைத் தவிர, வேறு ஒரு வித்தியாசமும் எனக்குத் தெரியவில்லை. வட இந்தியர்கள் பலர் இக்கூட்டதிலிருக்கிறார்கள். நம் ஐரோப்பிய நண்பர்களை, தென்னிந்தியர்களிடமிருந்து அவர்களைப் பொறுக்குயெடுக்கச் சொல்லிப்பாருங்கள். அவர்களால் இருவருக்குமுள்ள வித்தியாசத்தைக் கண்டுபிடிக்க முடியாது. பாஷையையொட்டிய இச்சிறு வித்தியாசத்தை தவிர நமக்குள் வேறு வித்தியாசம் கண்டு பிடிக்க முடியாது. இதிலிருந்து பலத்த வாதங்களைக் கிளப்பியிருக்கிறார்கள். பிராம்மணர்கள் சமஸ்கிருதத்தைப் பேசிக் கொண்டிருந்த தனி வர்ககத்தினராம். அப்படியானல், அவர்கள் திராவிட பாஷையை மேற்கொண்டு தங்கள் பாஷையான சமஸ்கிருதத்தேயே மறந்து விட்டார்கள் போலும். மற்ற ஜாதியினரும் ஏன் அப்படியே செய்திருக்கக்கூடாது ? மற்ற ஜாதியினரும் வட இந்தியாவிலிருந்து வந்து, இத்திராவிட பாஷையை ஏற்றுத் தங்கள் பாஷையை ஏன் மறந்திருக்கக் கூடாது ? இந்த வாதம் இரன்டு பக்கத்திற்கும் பேசுகிறது. இம் மாதிரி அறிவற்ற வாதங்களை நம்பாதீர்கள். திராவிடர்கள் என்ற ஒரு ஜாதி மக்கள் இருந்திருக்கலாம்; அவர்கள் நாளடைவில் மறைந்திருக்க வேண்டும். எஞ்சியிருக்கக்கூடிய சிலர் மலைகளிலும் காடுகளிலும் வசித்துக் கொண்டிருக்கலாம். அவர்கள் பாஷையையும் மற்றவர்கள் எடுத்துக் கொண்டிருக்கலாம். ஆனால், இங்கு இருப்பவர்கள் எல்லாம் வட இந்தியாவிலிருந்து வந்த ஆரியர்கள்தான். இந்தியா முழுவதிலும் ஆரியர்கள்தான் இருக்கிறார்கள். வேறு மக்கள் ஒருவரும் இல்லை.

இன்னுமொரு வாதமும் சொல்லப்படுகிறது. அதாவது இப்பொழுது சூத்திரர்கள் என்று சொல்லப்படுகிறவர்களெல்லாம் இந்தியாவின் ஆதி மக்களாம். அவர்கள் ஆரியர்களால் அடிமையாக்கப்பட்டவர்களாம். மற்ற நாட்டுச் சரித்திரங்களில் நடந்திருப்பதுபோல் இங்கும் நடந்திருக்கிறதென அவ்வாராய்ச்சிக்காரர்கள் உரைக்கிறார்கள். அமெரிக்கர்கள், ஆங்கிலேயர்கள், டச்சுக்கார்ர்கள், போர்ச்சுகேயர்கள் முதலியவர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து நீக்ரோக்களைக் கொண்டுவந்து, தாங்கள் சுகமாயிருந்துகொண்டு அவர்களிடம் வேலை வாங்கிக்கொண்டிருந்தார்கள். அந்த நீக்ரோக்களுக்கு பிறந்த கலப்பு ஜாதியினரை அடிமைகளாக வைத்துக்கொண்டிருந்தனர். இந்நிலைமை நெடுங்காலமிருந்து வந்தது. இந்த விசித்திரமான உதாரணத்தை வைத்துக்கொண்டு, இந்தியாவிலும் பல்லாயிர வருஷங்களுக்கு முன் இவ்விதம் நடந்திருக்க வேண்டுமென்று நமது ஆராய்ச்சிக்காரர்கள் கனவு காண்கிறார்கள். இந்த ஆரியர்கள் எங்கிருந்து வந்தவர்கள் ? அவர்கள் மத்திய திபேத்திலிருந்து வந்ததாகச் சிலர் சொல்லுகிறார்கள். மத்திய ஆசியாவிலிருந்து வந்ததாகச் சிலர் சொல்லுகிறார்கள். ஆங்கிலேயர்கள் அவர்களுக்குச் சிவப்பு மயிர் இருந்ததாகச் சொல்லுகிறார்கள். வேறு சிலர் அவர்களுக்குக் கறுப்பு மயிர் இருந்ததாக ஊகிக்கிறார்கள். தங்களுடைய மயிர் கறுப்பாயிருந்ததால், ஆரியர்களுடையதும் அவ்விதமிருந்ததென அவர்கள் நினைக்கிறார்கள். கடைசியாக, சுவிசர்லாந்து குளக்கறையில், அவர்கள் ஆரம்பத்தில் வாழ்ந்து கொண்டிருந்த்தாக ஒரு புது ஹோஷ்யம்  தோன்றியிருக்கிறது. இந்த ஹோஷ்யங்களனைத்தும் , இத்துடன் இவ்விவாதமனைத்தும் அக்குளத்திலேயே விழுந்து மூழ்கிப்போனால், அதற்காக நான் வருத்தப்படமாட்டேன். சிலர் ஆரியர்கள் வட துருவத்திலிருந்து வந்ததாகச் சொல்லுகிறார்கள். ஆண்டவனருளால் அவர்கள் எங்கு வேண்டுமானாலும் இருந்துபோகட்டும். ஆனால், நம்முடைய சாஸ்திரங்களைப் பொறுத்தமட்டில் , இவற்றிற்கு யாதொரு ஆதாரமும் இல்லை. இந்தியாவுக்கு வெளியிலிருந்து அவர்கள் வந்தார்களென்று சொல்வதற்கே அதில் ஆதாரமொன்றும் இல்லை. பழங்காலத்து இந்தியாவில் ஆப்கானிஸ்தானமும் சேர்ந்திருந்தது சூத்திரர்கள் எல்லாம் ஆரியர்கள் அல்லாதவர்களென்றும், அவர்கள் மிகப் பெரும்பான்மையோராக விருந்தார்களென்றும் சொல்லும் வாதமும் தர்க்கத்திற்கும் அறிவுக்கும் ஒவ்வாதாயிருக்கிறது. அந்தக் காலத்தில் ஒரு சில ஆரியர்கள் வந்து குடியேறி, லட்சக்கணக்கான் அடிமைகளுடன் வாழ்ந்துவந்தார்கள் என்று சொல்வதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவில்லை. இந்த அடிமைகள் அவர்களை ஐந்து நிமிடங்களில் தொவையலாக்கிச் சாப்பிட்டுருப்பார்கள். நம் ஜாதி வித்தியாசத்திற்கு உண்மைக் காரணம் மகா பாரதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.  சத்தியயுக ஆரம்பத்தில் பிராம்மணர்களென்ற ஒரு ஜாதிதான்  இருந்தது. அதாவது அப்பொழுது எல்லோரும் பிராம்மணர்களாகவிருந்தார்கள். அதற்குப் பிறகு தொழில் வேறுபாட்டால், அவர்கள் பலவிதமான் ஜாதிகளாகப் பிரிந்துகொண்டே போனார்கள். இதுதான் புத்திபூர்வமாக இருக்கிறது..

சுவாமி விவேகானந்தர் சென்னையில் பேசிய பேச்சின் ஒரு பகுதி. இந்த பேச்சை மொழிபெயர்த்தவர் திரு.து.சு.அவினாசிலிங்கம். சுவாமி விவேகானந்தரின் பேச்சுக்களை தொகுத்து, “ இந்தியப் பிரசங்கங்கள்என்ற தலைப்பில் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் புத்தகமாக வெளியிட்டுள்ளது. ஒன்பதாம் பதிப்பு (1943)– இந்த பிரசங்கம்எதிர்கால இந்தியா  என்ற தலைப்பில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. பக்கம் 186 -190



இவர் என்ன சொல்கிறார். அனைவரும் ஆரியர்கள்ஆரியர்கள் அனைவரும் 

பிராமணர்கள். இந்த பகுதியில் (தமிழகத்தில்). அதாவது, ஆரிய இனத்தில் திராவிடர்கள் 

என்ற ஜாதி இருந்திருக்கலாம் என்று கூறுகிறார்.



இன்றைய நிலைப்படி ஆதி திராவிடன் என்ற பட்டியலில் பல ஜாதிகள் இருக்கின்றன.  

பிராமணர்கள் என்ற பிரிவும் இருக்கிறது. இந்த இரண்டு பிரிவிலும் வராதவர்களுக்கு 

பொதுப்பெயர் என்ன?. சிலர் சொல்வது போல தமிழன் என்று சொல்லிக்கொள்வதா ? அது 

பேசும் மொழி சார்ந்த பொது பெயராக தான் இருக்கும். எல்லோரும் ஆரியர்கள் என்றால்,  

ஆரியர் என்ற சொல் எதற்கு. இரண்டு அல்லது அதற்க்கு மேற்ப்பட்ட இனம் இருந்தால் 

தானே தன்னை அடையாளப்படுத்தி கொள்ள ஒரு பெயரை ஏற்ப்படுத்தி கொள்ள 

வேண்டும். எல்லோரும் ஆரியர் என்றும் பிராமணர் என்றும் சொல்லிக்கொள்ள வேண்டிய 

அவசியம் என்ன வந்தது.



இவர் ஒரு மத போதகர். இந்து மத பெருமைகளை சொல்லிகொண்டு  பிரசங்கங்களை

செய்வதுடன் நிறுத்தாமல், ஜாதிகளை பற்றி பேச வேண்டிய அவசியம் ஏன் ஏற்ப்பட்டது.

 அவர் யாரிடம் பேசினாரோ அவர்கள் அனைவரும் இந்துக்கள். அவரகள் தங்களை 

ஆரியர்கள் என்று சொல்லிக்கொண்டாலென்ன அல்லது திராவிடர்கள் என்று 

சொல்லிக்கொண்டாலென்ன ? இவரும் இன்றைய மதவாதிகள் போல் தான் மதத்தைப்பற்றி

 பேசும் போது ஜாதி பிரச்சனையை பேசியுள்ளார். மதத்தைப்பற்றி பேசும் போது, பிற 

 
மதங்களை விமர்சித்துள்ளார். இவருக்கும் எதிர்ப்புகள் இருந்திருக்கும். ஆனால்,\

 அவரைப்பற்றி எழுதி வைத்தவர்கள் அதை மறைத்து அவர் புகழ் பாடியுள்ளனர்.

No comments:

Post a Comment