Thursday 23 October 2014

அகிரா குரோசோவா Akira Kurosawa - ஜப்பானிய இயக்குனர் - “இகிரு” IKIRU (வாழ்க்கை) திரைப்படம் .



அகிரா குரோசோவா Akira Kurosawa என்ற ஜப்பானிய இயக்குனரின்  இகிரு” IKIRU (வாழ்க்கை) என்ற திரைப்படம் பார்த்தேன்

மாநகராட்சி என்ற அமைப்பு போன்ற அரசு அலுவலகத்தில் பணியாற்றும் ஒரு ஊழியர். முப்பது வருடங்களாக அங்கேயே வேலை செய்கிறார். ஒரே மாதிரியான உணவை உண்கிறார். யாரிடமும் அதிகம் பேசுவதில்லை. சக ஊழியர்களின் ஏளனத்துக்கு ஆளாகிறார். அவருக்கும் MUMMY என்ற பட்டப்பெயர் உண்டு. மனைவியை இழந்தவர். மகன் மருமகள் உண்டு.

ஒரு நாள் வயிற்று வலி காரணமாக மருத்துவமனை செல்கிறார். காத்திருக்கும் போது, வேறோரு நோயாளி வயிற்று வலியா என கேட்கிறார். உள்ளே இருக்கும் மருத்துவர் இது குடல் புண்அல்சர் என்று கூறுவார். மருந்து சாப்பிட்டால் குணமாகிவிடும் என்று கூறுவார். உண்மையில் இது வயிற்று புற்று நோய். குணமாகாது. ஆறு மாதங்களிலிருந்து  ஒரு வருடத்துக்குள் மரணம் ஏற்ப்படும் என்கிறார்.

மருத்துவரை பார்க்கும் போது இது அல்சர் மருந்து சாப்பிட்டால் சரியாகி விடும் என்கிறார். வெளியில் அந்த நோயளி சொன்னது போலவே சொல்கிறார் அப்படியென்றால் தனக்கு புற்று நோய் தான் என்று உறுதி செய்து கொள்கிறார். அவருக்கு புற்று நோய் இருக்கிறது என மருத்துவர் செவிலியிடம் கூறுகிறார்.

அலுவலகத்தில் பொது மக்கள் மனு ஒன்றை கொடுக்கின்றனர். தங்கள் பகுதியில் உள்ள இடத்தில் குப்பைகளும் கொசுக்களும் இருப்பதால் வியாதிகள் பரவுவதால் அந்த இடத்தை சுத்தம் செய்து பூங்காவாக மாற்றி தரும் படி கேட்கின்றனர்.

அவர்களை ஒவ்வொரு துறையாக போகும் படி சொல்கின்றனர். 7 – 8 துறைகளை அனுகியபின் அவர்கள் வந்து சத்தம் போட்டு விரைவில் நிவாரணம் செய்து தரும்படி சத்தம் போடுகின்றனர்.

மகனும் மருமகளும் வெளியில் போய் விட்டு வீட்டுக்கு வருகின்றனர். மின்சாரம் இல்லை. மருமகள் இங்கு குளிராக உள்ளது என்கிறாள். மகன் நல்ல வீடு ஒன்றை புதிதாக வாங்க நிறைய பணம் தேவைப்படும் என்கிறான். மேலும் அப்பாவின் ஓய்வூதிய தொகை கிடைக்கும் கொஞ்சம் பணம் இருக்கிறது கொஞ்சம் கடன் வாங்கலாம் என்று பேசிக் கொள்கிறார்கள். மின்சாரம் வருகிறது. அப்பா இருட்டில் உட்கார்ந்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தாலும் மருமகள் சமாளிக்கிறாள். மகன் தற்போது இது குறித்து அப்பாவிடம் பேச வேண்டாம் என்கிறான்.

ஒரே மாதிரியான வாழ்க்கை வாழ்ந்து விட்டோம் இறப்பதற்க்கு முன்னால் வாழ்க்கை வெளியில் எப்படியிருக்கிறது என்பதை அறிய ஆவல் கொள்கிறார். அலுவலகத்துக்கு செல்லவில்லை. 30 வருடத்தில் விடுமுறையே எடுக்காதவர் எங்கே போனார் என்று அலுவலகமும், மகனும் தேடுகின்றனர். வங்கியிலிருந்து 50000 பணம் எடுத்துள்ளது தெரிய வருகிறது.மது பான கடையில் ஒரு எழுத்தாளரை சந்திக்கிறார். அவர் பல மது சாலைகளுக்கும் பெண்கள் நடனமாடும் விடுதிகளுக்கும் அழைத்து செல்கிறார்

அவருக்கு அந்த வாழ்க்கை பிடிக்கவில்லை. தெருவில் நடக்கும் போது அவரிடம் வேலை செய்யும் பெண்ணை பார்க்கிறார். அவளும் அவரை தேடிக் கொண்டிருப்பதாக கூறுகிறாள். அவள் வேலையே விட இருப்பதாகவும் இந்த வேலை பிடிக்கவில்லையென்று கூறுகிறாள். அவளை பல இடங்களுக்கு அழைத்து செல்கிறார். அவளது ஏழ்மை நிலையை பார்த்து நல்ல ஆடைகள் வாங்கி தருகிறார்.

அவளுடன் வீட்டுக்கு வருகிறார். இருவரும் தனியறையில் பேசிக்கொண்டிருக்கிறார்கள். மகனும் மகளும் வேலைக்காரியும் தவறாக நினைக்கிறார்கள்.

அவர் மகனிடன் தனது நோயை பற்றி சொல்ல முயற்சி செய்கிறார். மகன் அந்த இளம் பெண்ணுடன் இருக்கும் உறவை பற்றி கூறி ஊதாசினப்படுத்துகிறான். மருமகள் இவரது பணம் அந்த பெண்ணுக்கு போய் விடுமோ என சந்தேகப்படுகிறாள்.

அந்த பெண்ணுடன் ஒரு உணவகத்தில் இருக்கும் போது தனது நோயை பற்றி குறிப்பிடுகிறார். அதிர்ச்சியடைகிறாள். அவளை தன்னுடன் சில நாள் இருக்கும் படி கூறுகிறார். அவள் தவறாக நினைக்கிறாள். பின்பு எல்லா விசயங்களையும் கூறுகிறார். நீ ஏன் வேலையை ராஜினாமா செய்கிறாய் என கேட்கிறார். தனக்கு இந்த வேலை பிடிக்கவில்லையென்றும், பொம்மை செய்யும் வேலை தான் பிடித்திருக்கிறது என்றும் கூறுகிறாள். பொம்மை செய்யும் போது உலகத்தில் உள்ள அனைத்து குழந்தைகளிடமும் விளையாடுவது போல இருக்கிறது என கூறுகிறாள்.
சில மாதங்களுக்கு பிறகு இறந்து விடுகிறார்.

அவரது வீட்டில் மகன் இரங்கல் கூட்டம் ஏற்ப்பாடு செய்கிறார். துனை மேயரும் அவருடன் வேலை செய்தவர்களும் மற்ற துறை அதிகாரிகளும் கூடுகின்றனர். சம்பிரதாயங்கள் முடிந்த பிறகு, மது அருந்த உட்காருகின்றனர். அப்போது அவரை பற்றி எல்லோரும் பேசுகின்றனர்.
 
அந்த பழைய அசுத்தமான இடத்தை அவர் பூங்காவாக மாற்ற ஒவ்வொரு துறையாக அலைந்து அதை எப்படி செயல்படுத்தினார் என்பதை சொல்கிறார்கள். அந்த இடத்தில் பணக்காரர்  ஒருவர் விடுதி கட்ட முயன்றதையும் அவர் மிரட்டியதையும் அதை அவர் சமாளித்ததை பற்றியும் கூறுகின்றனர்.

அவருக்கு வயிற்றில் புற்று நோய் இருந்துள்ளது என்றும் அதற்க்காக தான் இறப்பதற்க்கு முன் ஏதேனும் நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்து செய்துள்ளார் என்று பேசிக்கொள்கின்றனர். மகன் அவருக்கு புற்று நோய் இருப்பது தனக்கு சொல்லவில்லை என்று கூறுகிறார்.

அவர் தன் முயற்சியால் ஏற்ப்படுத்தப்பட்ட  பூங்காவில் இரவு நேரத்தில் உஞ்சலில் ஆடிக்கொண்டே உயிர் துறந்தார் என்பதையும் கூறுகிறார்கள். அவர் மகிழ்ச்சியுடன் இருந்துள்ளார் என்றும் அவர் இறக்கும் போது தனக்கு பிடித்த பாடலை பாடிக்கொண்டே இறந்துள்ளார் என்றும் கூறுகின்றனர்.

அவரைப் போலவே நாமும் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று கூறி கலைந்து செல்கின்றனர். மறு நாள் காலையில் அலுவலகத்தில் உட்கார்ந்திருக்கும் போது, மக்கள் மனுக்களுடன் வருகின்றனர். வழக்கம் போல வெவ்வேறு துறையை கை காட்டுகின்றனர்.  ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்வதுடன் படம் முடிகிறது.
இந்த திரைப்படம் உலகின் சிறந்த திரைப்படமாக ஏன் பாரட்டப்படுகிறது என்பதை கவனிப்போம். சிறந்த திரைப்படம் என்று சொல்வதற்க்கான தகுதிகள் இருக்கிறதா அதிலும் தமிழ்நாட்டு மாற்று திரைப்படக்காரர்கள் பாரட்டும் அளவுக்கு என்ன இருக்கிறது என்பதை பார்ப்போம்.

1) ஜப்பானின் 1952ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட திரைப்படம்

அரசு அலுவலர்களின் மெத்தன போக்கு அலட்சிய தன்மையை சொல்கிறது. மனைவியை இழந்த தனிமனிதன் வாழ்க்கையில் பிடிப்பிலாமல் இயந்திர தனமாக வாழ்வதை காட்டுகிறது. மகனின் சுய நலமும் முதியவர்கள் மீது கரிசனமில்லா நிலையை கூறுகிறது. சமூகத்தின் மற்ற கேளிக்கை வாழ்க்கை முறையை முதிய தலைமுறை ஏற்க மறுப்பதை சுட்டி காட்டுகிறது. மனிதன் இறந்த பின்பே அவன் மதிக்கப்படுகிறான் என்பதையும் கூறுகிறது.

ஒரு காட்சியில் தான் தன் மகனை எப்படியெல்லாம் வளர்த்தேன் ஆனால் அவன் என்னை கவனிக்கவில்லை பொறுப்பில்லாமல் இருக்கிறான் என்று கூறுகிறார். உடன் இருக்கும் இளம் பெண் என் அம்மாவும் இப்படி தான் சொல்கிறார் என்று கூறுகிறாள். இதை ஏன் சொல்லி காட்ட வேண்டும். நாங்கள் விருபப்பட்ட பிறந்தோம் என்கிறாள்.

இந்த வசனம் எல்லோருக்கும் பொருந்தும். இதை நம்மில் பலர் சொல்லியிருப்போம். என்னை வளர்க்க முடியவில்லையென்றால் என்னை ஏன் பெற்றாய் என்று பலரும் கேட்டிருப்போம். யாரும் திட்டமிட்டு குழந்தை பெற்றுக்கொள்வதில்லை. குழந்தை பிறந்தால் என்னவாக வளர்க்க ஆசைப்படுகிறேன் எப்படி வளர்ப்பேன் என்று திட்டமிட்டு குழந்தை பெற்றுக்கொள்வதில்லை.

திருமணம் நடக்கிறது. திருமணத்திற்க்கு முக்கிய காரணம் தேவைப்படும் போதெல்லாம் காமம் அனுபவிப்பது மட்டுமே.  சார்ந்து வாழும் நிலை , நிரந்தர துணை என்பதெல்லாம் பின்பு ஏற்ப்படுகிறது. ஆரம்ப காலத்தில் காமம் மட்டுமே முதல் குறிக்கோள். குழந்தை பிறந்து விடுகிறது. ஆன்மையை நிருபிக்க மலடி என்ற சொல்லை தவிர்க்க குழந்தை பெற வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்ப்படுகிறது.

நான் கேட்டு தாய் தந்தை படைத்தானா இல்லை அவன் கேட்டு என் பிள்ளை பிறந்தானா ( பாடல் வரி சரியாக நினைவில்லை) என்ற தத்துவ பாடல் மிக எளிமையாக இதை விளக்குகிறது. மகன் உதாசீனப்படுத்துவது நமது நாட்டில் காலம் காலமாக நடைப்பெற்று வருகிறது. இது குறித்து பல படங்கள் வெளி வந்துள்ளது. “ பிள்ளையை பெத்த கண்ணீரு தென்னையை பெத்த இளநீரு என்ற பாடல் இதற்கு சான்று.

எனவே, இப்படிப்பட்ட கதையம்சம் கொண்ட படம் தமிழ் திரையுலகில் எடுக்கப்படவில்லையென்றும், ஜப்பானில் எடுக்கப்பட்டுள்ளது என்று கூறி இன்றைய மாற்று திரைப்பட ஆவலர்கள் கொண்டாடுவது தேவையற்றது

ஜப்பானின் அரசு ஊழியர்களின் பொறுபின்மையை வெளிப்படுத்தியதால் அது அங்கு புகழப்பட்டிருக்கலாம். நாம் இதை வாழ்க்கையில் தினமும் அனுபவிக்கும் நிகழ்ச்சி. இதை திரைப்படம் சொல்லி தான் நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நிலை இல்லை. நம் நாட்டில் எல்லா திரைப்படங்களிலும் இது சொல்லப்படுகிறது. இப்போது வெளி வந்திருக்கும்கத்திபடத்திலும் மீத்தேன் வாயு, தண்ணீர் கொள்ளை பற்றி சொல்லியிருப்பதாக பேசி பல விதமான விமர்சனங்கள் வருகிறது . இந்த விசயத்தை பற்றி சொல்லியிருப்பதால் இது சிறந்த படம் என்று விருது கொடுக்க முடியுமா. இந்த ஒரு விசயத்தை மட்டும் சொல்லி படம் எடுத்தால் அது ஆவணபடம் என்ற பகுதிக்கு சென்று விடும். பொருளாதார ரீதியில் வெற்றி அடையாது. மக்கள் விரும்பும் அனைத்து அம்சங்களையும் கலந்து வெற்றி அடைய முயற்சி செய்யப்பட்டுள்ளது. அதனால் விருது கிடைக்காது.

அது போலவே அங்கும் அரசு ஊழியர்களின் பொருப்பின்மையை சொல்லியிருக்கிறது. அதற்க்காக அது விருதுக்கான சிறந்த படம் என்று சொல்ல முடியாது.

மனிதன் இறந்த பிறகு புகழப்படுவது எல்லா நாடுகளிலும் நடக்கும் நிகழ்வு. சிலர் உண்மையிலே இறந்த பிறகு தான் அவர்களது நல்ல எண்ணங்களும் நல்ல செயல்களும் தெரிய வருகிறது அல்லது அவரை விட மோசமான் ஒருவரை சந்திக்கும் போது அவர் எவ்வளவு நல்லவர் என்று உணர்ந்து புகழ முடிகிறது. சிலர் சம்பிரதாயமாக புகழ்ந்து விட்டு செல்கின்றனர். எனவே இந்த காரணத்துக்காகவும் விருது கொடுக்க முடியாது.

விருது கொடுக்கும் அமைப்புகளும் எந்த காரணத்துக்காக இது சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது என்று அறிவிப்பதில்லை. போட்டிக்கு வந்த மற்ற படங்களுடன் இது எந்த வகையில் சிறந்தது என்றும் அறிய முடிவதில்லை.

இந்த படத்தை பொறுத்த வரை  முக்கிய பாத்திரத்தில் வரும் நடுத்தர மனிதர் மூன்று நிலைகளில் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இயந்திர தனமாக அலுவலகத்தில் வேலை செய்யும் போது ஒரு முக பாவனை.

வெளியுலகில் மதுபான விடுதிகளில் அதை எதிர்கொள்ளும் போது வெளிப்படுத்தும் முகபாவம்.

பூங்கா அமைக்க வெவ்வேறு துறைகளில் போரடும் போது வெளிப்படுத்தும் முக பாவம்.

அவருக்கு பிடித்த பாடலை விடுதியில் பீயானோ வாசிப்பவனிடம் வாசிக்க சொல்லி விட்டு , அந்த இசைக்கு ஏற்ப அதை பாடும் போது நடிப்பு சிறப்பாக உள்ளது.

இந்த மூன்றையும் மிகவும் அழகாக செய்துள்ளார்.

இளம் பெண்ணாக வரும் நடிகையும் உணர்ந்து நடித்துள்ளார்.

இரங்கள் கூட்டத்தில் மது அருந்திவிட்டு எல்லோரும் பேசும் காட்சியில் அனைவருமே சில நிமிடங்கள் நன்றாக நடித்துள்ளனர். உண்மையிலேயே குடித்து விட்டு நடிக்க சொல்லியிருப்பார்களே என்னவோ.

ஒலி, ஒளி பற்றிய நிச்சியமாக எழுதுவும் சொல்ல முடியாது. இனையம் வழியாக கனினியில் பார்ப்பதால் இவை தெளிவாக இல்லை. திரையரங்கிள் பார்த்தால் அதைப்பற்றி கூற முடியும். மேலும் 1952ஆம் ஆண்டு இருந்த தொழில் நுட்பத்தை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படம். இன்றைக்கு இருக்கும் தொழில் நுட்பத்துடன் ஒப்பிட்டு கருத்து சொல்வது சரியாக இருக்காது.

அரசு அலுவல அமைப்பு நமது இந்திய அரசு அலுவலம் போலவே உள்ளது. பெரிய மேஜை. அதை சுற்றி 6 பேர் அமர்ந்து வேலை செய்வது. மேஜை முழுக்க கோப்புகள். பக்கவாட்டு அலமாரிகளில் நிரம்பி வழியும் கோப்புகள். மங்கிய வெளிச்சம் அந்த காட்சி அமைப்பு சிறப்பாக இருந்தது

 அவர் பூங்காவில் இரவில் ஊஞ்சலில் அமர்ந்து அசைந்து கொண்டே பாடும் பாடல் காட்சியில் அருமையான ஓளி ஒலிப்பதிவு..
 Ikiru poster.jpg

No comments:

Post a Comment