Friday 31 October 2014

கடவுள் முருகன் தமிழ் கடவுளா ?



சிவன்-பார்வதியின் மகன் முருகன் தமிழ் கடவுளா?



கடவுள் முருகன் தமிழர்களின் கடவுள் என்று இப்போது அதிகமாக பேசப்படுகிறது. தமிழ் மொழியை வைத்து அரசியல் வியாபாரம் ஆரம்பித்துள்ள சிலர் இது குறித்து அதிகமாக பேசுகிறார்கள். 

இவர்கள் கடவுள் மறுப்பு இயக்கத்தை சார்ந்தவர்கள் என்று தங்களை கூறிக் கொள்பவர்கள், கடவுள் என்பவர் ஆரியர்களால் (பிராமணர்கள்) உருவாக்கப்பட்ட கற்பனை என்று கூறுபவர்கள். எல்லா கடவுள்களையும் (இந்து கடவுள்கள் மட்டும்) விமர்சிப்பவர்கள். கடவுளின் தோற்றம் மற்றும் அவர்களது அவதார நிகழ்வுகள் குறித்து கேள்விகளை எழுப்பி, தகாத வார்த்தைகளால் மேடையில் பேசுபவர்கள்.

இது போன்ற வாதங்கள் உலகமெங்கும் இருக்கிறது. வாதம் செய்ய அனைவருக்கும் உரிமையுண்டு.

ஆனால் கடவுள் இல்லை என்பவர்கள் முருகனை தமிழ் கடவுள் என்று எப்படி கூறுகிறார்கள் என புரியவில்லை. கடவுள் ஒன்று ஒருவர் இல்லாத நிலையில், மற்றவர்கள் கடவுள் என்று கும்பிடும் முருகனை மட்டும் ஏற்றுக்கொண்டு, முருகனை எவ்வாறு தமிழ் கடவுள் என கூறுகிறார்கள். சரி அவர் தமிழ் கடவுளாகவே இருக்கட்டும். அவர் தமிழ் கடவுள் என்று கூறுவதற்கு என்ன காரணம் அதை எப்படி கண்டுப்பிடித்தார்கள்.

முருகன் என்ற கடவுள் தமிழ் நாட்டில் மட்டும் கும்பிடப்படுவதால் அவர் தமிழ் கடவுள் என்று முடிவு செய்யப்பட்டதா  ?

தமிழர்கள் மட்டுமே முருகனை கும்பிடுவதால் அவர் தமிழ் கடவுள் என முடிவு செய்யப்பட்டதா ?

முருகனுக்கு தேவ மொழி என்று கூறப்படும் சமஸ்கிருத மொழி தெரியாது அவருக்கு தமிழ் மொழி மட்டுமே எழுத பேச படிக்க தெரியும் என்பதால் அவர் தமிழ் கடவுள் என முடிவு செய்யப்பட்டதா ?

முருகன் தமிழ் நாட்டில் பிறந்தார் என்று ஏதேனும் ஆதாரம் கிடைத்து அவர் தமிழ் கடவுள் என முடிவு செய்யப்பட்டதா ?

மேற்கூரிய காரணங்களால் முருகன் தமிழ் கடவுள் என அறியப்பட்டதால் அவரை மட்டும் தமிழர்கள் வணங்கலாம் என்று இவர்கள் சொன்னால், மற்றவர்களும் வேறு பல காரணங்களுக்காக வேறு பல பெயர்களில் இருக்கும் கடவுள்களை வணங்குவதில் என்ன தவறு. கடவுளே இல்லை என்ற வாதத்தை ஏன் வைக்க வேண்டும்.

முருகன் தமிழ் கடவுள் என்று வைத்துக்கொள்வோம். முருகன் மட்டுமே கடவுள் என்பதை ஒப்புக்கொள்வோம்.

முருகனின் அப்பா சிவன் அம்மா பார்வதி சகோதரன் விநாயகர் இவர்கள் எல்லாம் யார். இவர்கள் எல்லாம் இந்தி கடவுள்களா அல்லது அஸ்ஸாம் , ஒரியா, தெலுங்கு மொழி பேசும் கடவுள்களா அல்லது இவர்கள் சீனா தயாரித்து அனுப்பிய சீன மொழி கடவுள்களா ?

முருகன் தமிழ் கடவுள் என்றால் சிவன், பார்வதி, விநாயகர் அனைவரும் தமிழ் கடவுள்கள் தானே. அவர்களை கும்பிடுவதில் என்ன தவறு.

முருகன் தமிழ் கடவுள் என்று முடிவு செய்தாகிவிட்டது. தமிழன் என்று முடிவு செய்த பிறகு, அவர் என்ன ஜாதி என்பதையும் முடிவு செய்ய வேண்டும். அதை எப்படி யார் முடிவு செய்வது.

கடவுளுக்கு ஜாதி இல்லை என்று கூற முடியாது. முருக கடவுளை பொதுவாக உயர் ஜாதியினர் தான் வணங்குகிறார்கள். தாழ்த்தப்பட்ட ஜாதி என்று கூறும் மக்கள் முருகனை கும்பிடுவதில்லை. எனவே அவர் உயர் ஜாதி கடவுள் என்ற முடிவுக்கு வர முடியும். மேலும், அவர் தெய்வயானை என்ற பிராமண பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும் சரித்திரம் உள்ளது. எனவே, இந்த இரண்டு காரணங்களை வைத்து அவர் உயர் ஜாதிகளுக்கான கடவுள் என்று முடிவுக்கு வர முடியும்.

ஆனால், ஏதோ காரணத்தால் அவர் தாழ்த்தப்பட்ட ஜாதி எனும் குறவர் சமூகத்திலிருந்து வள்ளி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

உயர் ஜாதியை சேர்ந்த கடவுள் தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்த பெண்ணை ஏன் மணக்க வேண்டும்.

தேவ லோகத்தில் ஜாதிய இட ஓதுக்கீடு முறையில் ஏதேனும் சலுகைகள் பெற இவ்வாறு திருமணம் செய்தாரா ?

முருகனுக்கு எங்கே ஜாதி சான்றிதழ் வாங்குவது. யார் வழங்குவது.

கடவுள் என்பவர் மனிதன் வகுத்து வைத்துள்ள எல்லா எல்லை கோடுகளுக்கும் உள்ளே வராதவர் என்பதை உணர வேண்டும். சில பல சில்லறை காரணங்களுக்காக கடவுளை தமிழ் மொழி கடவுள் என்றும் தமிழர்கள் கடவுள் என்றும் ஒருவரை சொல்வதும், மற்ற கடவுள்களை சிறிதும் நாகரீகமில்லாமல் விமர்சிப்பதும் தவறு.

கடவுள் ஒன்று ஒருவர் இருக்கிறாரா என்பது குறித்து இறுதியான முடிவு ஏதும் இல்லை. அது மக்களின் நம்பிக்கை.

“ கண்டவர் விண்டதிலை – விண்டவர் கண்டதில்லை. கடவுளை கண்டதாக யாரும் சொன்னதில்லை. சொன்னவர்கள் கண்டதில்லை என்பது பொருள்.

அண்மையில் ஒரு கட்சி வைத்திருந்த பேனரை பார்த்ததன் விளைவாக இது எழுதப்பட்டது

அப்பனே சன்முகா, ஞான பண்டிதா, கந்தா கடம்பா கதிர்வேலா என்ன மட்டும் காப்பாத்துடா
 

No comments:

Post a Comment