Monday 20 October 2014

பரிசு - சிறுகதை



குளிர் பதனப்படுத்தப்பட்ட அறை. முதல் முறையாக சென்றான். தொலைபேசியில் பேசி, அவர்கள் கொடுத்த நேரத்துக்கு சென்றான். பெரிய வரவேற்ப்பு அறை. எல்லா பக்கங்களிலும் கண்ணாடி சுவர். மெத்தை நாற்காலியில் உட்கார்ந்தான். முன்புறம் கண்ணாடி வட்ட மேஜை. தினசரிகள் மற்றும் புத்தகங்கள். ஆண்களின் கட்டுடல் புகைப்படங்களுடன் பல  புத்தகங்கள். புத்தகத்தை புரட்டினான். பல வித விளம்பரங்கள். பாதி விளம்பரங்கள் எதை விற்பனை செய்ய முயற்சிக்கிறது என்று புரியவில்லை.

சின்ன சின்ன ஜட்டிகளுடன் ஆண்கள் பல வித கோணங்களிள் நின்று கொண்டிருந்தார்கள். பல ஆண்கள் அது கூட இல்லாமல் இருந்தார்கள். குறிகள் தெரியாதவாறு புட்டங்களை கான்பித்து கொண்டும் , புணரும் நிலை போன்ற நிலைகளிலும் நின்றும் குனிந்து படுத்தும் கானப்பட்டார்கள். ஒருவரது உடலிலும் துளி கூட ரோமங்கள் இல்லை. கண்ணிமைகள், புருவங்கள் தவிர மொத்தமாக வழிக்கப்பட்டிருந்தது. ஆறு மடிப்புகள் எட்டு மடிப்புகள் கொண்ட வயிற்றுடன், கனிந்த நாவல் பழம் போன்ற முலைகளுடன் தங்களை காட்சிபடுத்தியிருந்தனர்.

மனிதன் தனது உடம்பில் உள்ள மொத்த ரோமங்களையும் புருவம், கண்ணிமை உட்பட நீக்கிவிட்டால் உயிர் வாழ முடியாது என எப்போதோ கேள்விப்பட்ட செய்தி நினைவுக்கு வந்தது. அது உண்மையா என தெரியவில்லை

அழகிய பெண்ணொருத்தி மெழுகு பொம்மை போல் இருந்தவள் அருகில் வந்தாள். முன்பதிவு இருக்கிறதா என நுனி நாக்கு ஆங்கிலத்தில் கேட்டாள். இருக்கிறது என்றவுடன் மீண்டும் திரும்பி நடந்தாள். இரண்டு மத்தளங்கள் ஓசை எழுப்பாமல் நடப்பது போல் இருந்தது. ரோமம் நீக்கப்பட்ட பகுதிகள் எப்படியிருக்கும் என்ற கற்பனையில் இருந்த போது, அழகன் ஒருவன் கண்ணெதிரே தோன்றினான்.

கை குலுக்கி விட்டு போதை நிறைந்த கண்களுடன் பார்வையை வீசினான். உங்களுக்கு எந்த வகையில் நான் உதவ வேண்டும் என்று கேட்டான். சவரம் செய்ய வேண்டும் என்றான். நிச்சியமாக செய்து விடலாம் என்று கூறினான்.

உள்ளே அழைத்து சென்றான். சிறிய சிறிய கண்ணாடி அடைப்புகளில் சுற்றும் நாற்காலிகளில் இளைஞர்கள் அமர்ந்திருந்தனர். பலர் படுக்கும் வசதி கொண்ட கட்டில்களில் படுத்து கொண்டிருந்தனர்.

அங்கிருந்த பெண்ணிடம் சென்று என்ன செய்ய வேண்டும் என்று சொல்லி பணம் கட்டி விடுங்கள் என்றான். கூச்சமாக இருக்கிறது நீயே சொல்லி விடு என்றான். சவரம் செய்ய வேண்டும் என்றான். எங்கே என்றான். பேசாமல் இருந்தான். முழுவதுமா என்றான். புரியாமல் விழித்தான். உடல் அமுக்கி விட வேண்டுமா என கேட்டான். எல்லாம் ஆங்கிலத்தில் கேட்டான். ஆங்கிலம் தெரிந்தாலும் அதன் அர்த்தங்கள் புரியவில்லை. அமைதியாக இருந்தான்.

அவனே அவளருகில் அழைத்து சென்றான். எதோ சொன்னான். அவர்களுக்குள் பேசிக்கொண்டார்கள். பணம் கட்ட சொன்னார்கள். அவனிடமிருந்ததை கொடுத்தேன். புன்னகையுடன் வாங்கி கொண்டாள். அவன் உள்ளே அழைத்து சென்றான்.

தலையை நுரை சவுக்காரம் போட்டு குளிப்பாட்டி துடைத்து விட்டான். தலை உலர்வதற்க்காக சூடான காற்றை முடிகளுக்கு இடையே செலுத்தினான்.

சுற்றும் நாற்காலியில் உட்கார வைத்து தலைமுடியை , ஆங்காங்கே வெட்டினான். அரை மணி நேரம் சுற்றி சுற்றி வந்து தலைமுடியை வெட்டினான். பின்பு தாடியை வழித்தான். மீசையை முழுவதுமாக வழிக்க வேண்டுமா என கேட்டான். இல்லை திருத்தம் மட்டும் செய்தால் போதும் என்றான். அவன் சொன்ன படி செய்து விட்டு சென்று விட்டான்.

மீண்டும் ஒருவன் வந்தான் . வேறு ஒரு அறைக்கு அழைத்து சென்றான். அழகன். பெண்களின் கனவு நாயகன். பார்த்த மாத்திரத்தில் பெண்களின் உள்ளாடையை நனைய வைப்பவன்.

சிறிய அறை. சிறிய நீச்சல் குளம். ரோஜா இதழ்கள் தூவப்பட்டிருந்தது. பல வித வண்ண மெழுகுவர்த்திகள் வாசனையுடன் எரிந்து கொண்டிருந்தது ஒளி எங்கிருந்து வருகிறது என்று தெரியவில்லை. மெல்லிய இசை. அதுவும் எங்கிருந்து வருகிறது என்று தெரியவில்லை. மனதை மயக்கும் வாசனை. இதமான ஒலி ஒளி. மது அருந்தாமலேயே போதை தரும் சுகம்.

மன்னிக்கவும். உடை மாற்றி கொள்ளுங்கள் என்று ஒரு சிறிய வெள்ளை துவாலையை கொடுத்தான். அப்போது தான் அவனை சரியாக கவனித்தான். கடைந்தெடுத்த சிற்பம் போல இருந்தான்.  ஜீன்ஸ் கால்சட்டையும் மெல்லிய வெள்ளை சட்டையும் அணிந்திருந்தான். விம்மி புடைத்த மார்பகங்கள் அப்பட்டமாக தெரிந்தது. உடையை மாற்ற சொல்லி மறைவிடத்தை.கான்பித்தான். துண்டை கட்டினால் சரியாக இடுப்பளவுக்கு மட்டுமே இருந்தது. நடந்தால் துண்டு விலகி உள்ளே இருப்பது தெரியும் என்பதால் உள்ளாடையின் மேல் கட்டிக்கொண்டு வந்தான்.

அவன் ஆடைகளை களைந்து விட்டு மிகச் சிறைய உள்ளாடையுடன் இருந்தான். அதுவும் ஒற்றை கால் உள்ளாடை. இது வரை அந்த மாதிரியான உள்ளாடையை பார்த்ததில்லை. ஆன்களும் ஆசைப்படும் அளவுக்கு கிளர்ச்சியை ஏற்ப்படுத்தும் உடல் கட்டு. 

நல்ல கற்பனை சக்தி உள்ள கவிஞர் பார்த்தால் தேக்கு மர கட்டையில் செய்த சிற்பம் என்று வர்ணிப்பார். உடலில் ஏதோ தடவி மெருகேற்றியிருப்பார்கள் போல வளைந்து செல்லும் நரம்புகள் தெரிந்தது. அச்சு பதித்தது போன்ற முலைகள் அவையும் விரைத்திருந்தன. மெல்லிய புகை பிடிக்காத உதடுகள், சுருங்கிய வயிறு பருத்த தொடைகள் புடைத்த பிட்டங்கள். பெரிய  கால் விரல்கள். துணியால் ஆன செருப்பு போட்டிருந்தான்.

படுப்பதற்க்கு சிறிய படுக்கை போன்ற வசதி இருந்தது. குப்புற படுக்க சொன்னான். மேல் தண்டு வடத்தில் எண்ணெய் உற்றி தண்டு வடத்தை மேலிருந்து கீழாக நீவி விட்டான். முதுகு புறத்தை பலவாறாக நீவி விட்டு பிட்டம் வரை கைகளை கொண்டு வந்து நிறுத்தினான். துண்டை நீக்கினான். உள்ளாடையை பார்த்து இதை நீக்கி விடுங்களேன் என்று கூறி பதிலுக்கு காத்திராமல் நீக்கி விட்டான். அதற்கு பிறகு அவன் எங்கெங்கு எப்படியெல்லாம் உருவி விட்டான் என்பது புரியவில்லை. முதுகுக்கு பின்புறம் அவனது இரு கால்களையும் போட்டுக்கொண்டு மீண்டும் முதுகை தேய்த்து விட்டான். அவனது தொடைகள் இவனது இடுப்பின் இரண்டு பகுதிகளையும் உரசிக்கொண்டிருந்த்து. அவனது பிட்ட பிளவில் உரசிக்கொண்டிருந்தது

திரும்பி படுக்க சொல்லி முகம் முதல் கால் பாதம் வரை நீவி விட்டான். சுய நினைவு இல்லை முழு நிர்வாணமாக இருப்பதை கூட இவனால் உணர முடியவில்லை.

பின்பு சிறிய குளியலறையில் ஆவியில் குளிக்க சொன்னான். ஆளுயுர கண்ணாடி பெட்டி . எல்லா பக்கங்களிலிருந்தும் வெந்நீர் ஆவி வந்து கொண்டிருந்தது. அவன் வெளியிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தான். பின்பு கதவை திறந்து வெளியில் வர சொன்னான். தலை முதல் பாதம் வரை துடைத்து விட்டான். அவன் கூச்சமே இல்லாமல் முன் தோல் உயர்த்தியும் சுத்தம் செய்து விட்டான்.

சேவை பிடித்திருக்கிறதா என கேட்டான். வேறு ஏதும் தேவையா என கேட்டான். இவன் வேண்டாம் என தலையாட்டினான். முன்பு முன்புறம் முட்டிக்கால் போட்டு உட்கார்ந்து வெள்ளரி பிஞ்சை மென்மையாக முத்தமிட்டான்.

ஆடை அனிந்து கொண்டு வெளியே வாருங்கள் என்று சொல்லி விட்டு அவன் வேகமாக அவனது ஆடைகளை அணிந்து கொண்டு வெளியே சென்று விட்டான். முற்றின வெள்ளரிக்காயை மடக்கி, உள்ளாடையில் அடக்கி ஆடை அணிந்து கொண்டு வெளியே வந்தான்.
.
காசு வாங்கும் பெண் சிரித்த முகத்துடன் காத்திருந்தாள். கையில் பெரிய பில் இருந்தது. சேவை செய்த இருவரும் அருகில் இருந்தார்கள். பில் தொகை நாப்பதி ஏழாயிரத்து சொச்சம். வரிகளும் சேர்ந்திருந்தது. இனாம் என்ற பகுதி காலியாக இருந்தது. அதில் எழுத பேனாவும் கொடுத்தாள்.

அவன் , நான் எனது பரிசு கூப்பனை உபயோகித்து செய்து கொள்ள வந்தேன். நீங்கள் பில் கொடுப்பது ஏன். என்னுடைய பரிசு கூப்பன் தொகை பத்தாயிரத்துக்கு தானே செய்ய வேண்டும் என்று கேட்டான். அவள் பரிசு தொகை கூப்பனின் 10 சதவீகிதத்தை இந்த பில் தொகையில் கழித்து விடுவோம். மீதி உள்ள பரிசு தொகையை நீங்கள் மீண்டும் மீண்டும் வரும் போது 10% விதமாக கழித்து கொண்டே வருவோம். ஒரே முறையில் பத்தாயிரம் ரூபாயை கழிக்க மாட்டோம் மேலும் நீங்கள் நாப்பதி ஏழாயிரம் சொச்சம் ரூபாய்க்கு எங்களது சேவையை பெற்றுள்ளீர்கள் என கூறினாள். இந்த நிபந்தனைகள் எல்லாம் பரிசு கூப்பனில் எழுதப்பட்டுள்ளது என்று காட்டினாள். மிகச் சிறிய எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்தது. அங்கிருந்த வெளிச்சத்தில் படிக்க முடியவில்லை.

சேவை செய்த இளைஞர்களை பார்த்தான். அவர்கள் புன்னகையுடன் நின்று கொண்டிருந்தார்கள்.  அவர்களை சிறிது தள்ளிக்கொண்டு போய் பேசினான். அவர்களும் இது தான் விதி என்று கூறினார்கள். இனாம் சேர்த்து மொத்தம் ஐம்பதாயிரம் என எழுதிவிடுங்கள். ஆயிரம் ரூபாய் கழித்து கொண்டது போக நீங்கள் 49,000 கொடுத்தால் போதும் என்றார்கள்.

ஒப்புக்கொள்ளவிட்டால் என்ன செய்வார்கள் என கேட்டதற்க்கு, அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு மெதுவாக புன்னகை புரிந்தனர். இன்று இரவுக்குள் 10 முறையாவது நீங்கள் குனிந்து நிற்க வேண்டியிருக்கும் அதற்கு நாங்கள் இப்போதே பயிற்சி கொடுக்க ஆரம்பிப்போம் என்றனார்.

அவன் அமைதியாக திரும்பி வந்து கடன் அட்டை மூலம் காசை செலுத்தி விட்டு வெளியே வந்தான்.

பரிசு கொடுத்த தொலைக்காட்சி நிகழ்ச்சியாளர்கள் மேல் கோபம் வந்தது. குனிவதை பற்றி நினைத்து பயந்து கொண்டு பல நாட்கள் தொலைக்காட்சி பார்பதையே நிறுத்தி விட்டான்.




 

No comments:

Post a Comment