Saturday, 20 September 2014

பின் தொடரும் நிழலின் குரல் - ஜெயமோகன் புத்தக ஆய்வு



பின் தொடரும் நிழலின் குரல் ::

பொது உடமை கொள்கை என்கிற கம்யுனிச சித்தாந்தத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் கம்யுனிசம் வளர்ந்த கதை, அதை அமுல் படுத்த அவர்கள் எடுத்துக்கொண்ட சர்வதிகார முறை, மக்களின் தியாகங்கள், கம்யுனிசத்தால் மக்கள் அடைந்த துன்பங்கள், அதிகார போட்டி இறுதியில் கம்யுனிசம் வீழ்ந்த வரலாறு இவைகளை, இந்தியாவில் இந்த கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு வாழ்ந்த அருனாசலம் என்பவர் மூலம் கூறப்பட்டுள்ளது.

அருனாசலம் கம்யுனிச கொள்கைகளை முழுவதுமாக நம்பி தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பல இன்னல்களை சந்திக்கிறார்.

இந்தியாவில் கம்யுனிச கட்சியில் , கட்சி முடிவுகளுக்கு மாறாக கருத்து சொல்பவர்களை கட்சி எவ்வாறு ஒரங்கட்டியது என்பதுடன், அவர்களை கட்சியின் வரலாற்றிலிருந்தே அகற்றி விடுகிறது என்பதை வீரபத்திர பிள்ளை என்பவர் மூலம் விவரிக்கிறார்.

ரஷ்யாவில் , கம்யுனிச வரலாற்றில் புகாரின்என்பவர் எவ்வாறு பொய் குற்றம் சாட்டப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார் மற்றும் அவரைப்பற்றி வரலாற்றில் எந்த சுவடுகளும் இல்லாமல் அழிக்கப்பட்டது என்பதை விவரிக்கிறார். 30 ஆண்டுகள் சைபீரியாவின் வதை முகாமில் வாழ்ந்த அவரது மனைவி , புகாரின் வாழ்வில் நடந்தவைகளை கூற அதற்கு பிறகு புகாரின் குற்றம் அற்றவர் என்பதை அரசு ஒப்புக்கொள்கிறது.

புகாரினின் இந்த வாழ்க்கை சரித்திரத்தை வீரபத்திர பிள்ளை ஆதாரங்களுடன் வெளிக்கொன்டு வந்து பிரசுரிக்க முயலும் போது, தமிழக கம்யுனிஷ்டு கட்சி அதை தடுத்து,  கட்சிக்கு எதிராக செயல்பட்டார் என்று பொய் குற்றம் சாட்டி அவரை அவமானப்படுத்தி வெளியேற்றுகிறது. அவர் நிறைய எழுதுகிறார். கட்டுரைகள், கதைகள், கவிதைகள் மற்றும் நாடகங்கள் எழுதி வைத்துள்ளார். இறுதியில் மனநிலை பாதிக்கப்பட்டு பிச்சையெடுத்து வாழ்ந்து தெருவில் அனாதையாய் மடிகிறார்.

வீரபத்திர பிள்ளையை பற்றி அறிந்த அருனாசலம் அவரை பற்றிய முழு விவரங்களை அறிந்து அவருக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை ஆண்டு மலரில் எழுத முயற்சி செய்கிறார். அதை கட்சி தடுக்கிறது. கட்சியில் புறக்கணிக்கப்படுகிறார். மன உழைச்சலுக்கு அடிமையாகி, மன நல மருத்துவமனையில் சிகிக்சை பெறுகிறார். மனைவியின் அன்பாலும் அரவனைப்பிலும் அதிலிருந்து மீண்டு வருகிறார்.

வீரபத்திர பிள்ளை எழுதிய பல கட்டுரைகள், கதைகள், கவிதைகள் மற்றும் நாடகங்கள் புத்தகத்தில் இனைக்கப்பட்டுள்ளன.

இறுதியில் அருனாசலம் கடவுள் நம்பிக்கை கொண்டு வாழ்க்கையை தொடர்கிறார். இவரைப்போல கட்சியால் அவமானப்படுத்தப்பட்ட  மூத்த தியாகியும் கடவுள் நம்பிக்கையுடன் வாழ்வதாக குறிப்பிடுகிறார்.

கொள்கைக்காக உயிர் நீத்த தீயாகிகளின் வாழ்க்கைக்கு பொருள் என்ன என்ற கேள்விக்குபிதாவின்உபதேசங்களையே பதிலாக தருகிறார்.

தியாகிகள் அறிக. அடைவடற்காகத் தியாகம் செய்பவன் அனைத்தையும் இழக்கிறான். இழப்பதற்காகத் தியாகம் செய்பவன் அனைத்தையும் அடைகிறான்.

தியாகிகள் அறிக. இலக்குகளுக்காகத் தியாகங்கள் செய்யப்படுவதில்லை. இலக்குகளோ மண்ணில் குறிக்கப்படுகின்றன. தியாகங்ககளோ என் பிதாவிற்கு முன்பாகக் கணக்கிடப்படுகின்றன.

ரஷ்யாவில் நடந்த நிகழ்ச்சிகளையும் அக்டோபர் புரட்சியையும் விவரிக்கிறார்

கம்யுனிசத்தில் மேலிருந்து ஆனைகள் பிறப்பிக்கப்படுகின்றன. கீழ் மட்டத்தில் கருத்துக்கள் கேட்கபடுவதில்லை, கருத்துக்கள் சொன்னாலும் புறக்கனிக்கப்படுவதுடன் தண்டிக்கப்பட்டனர் என்கிறார்.

விவசாயிகளை சுரண்டி தொழிலாளிகளுக்கு ஆதரவு தருவதாக கூறி, ராணுவ ஆட்சியை அமைத்து கொண்டனர் என்கிறார்.

மக்கள் லட்ச கணக்கில் கொல்லப்பட்டதுடன் , சைபீரியாவின் வதை முகாம்களுக்கு அனுப்பப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர் என்கிறார்.

ஸ்டாலின் , லெனின் மற்றும் பல தலைவர்களுக்கிடையேயான அதிகார போட்டியை விவரிக்கிறார்.

                    ============================
தோழர்களே,

கற்பனை நிரம்பியவர்கள் தங்கள் ஆகச் சிறந்த காமத்தின் தருணங்களை சுயபோகத்தின் போது தான் அடைகிறார்கள். எழுதும் கரத்தால் சுயமைதுனம் செய்யும் போது தான் எழுத்தாளன் பூரண இன்பம் அடைகிறான்.” ----(page 247)

இவர் சமூகத்தில் வெட்ட வெளியில் அனைவர் முன்பும் சுயபோகம் செய்து பீச்சியடித்திருக்கும் விந்துக்களின் நெளியும் தன்மைகளை கவனிப்போம்

இதன் அடிப்படையில் , எழுத்தாளன் தனது சிந்தனையில் உதித்த எண்ணங்களை எழுத்துக்களாக சமூகத்தில் பீச்சியடிக்கும் போது, அவனது உயிரனுக்கள் வாசகனின் மூலையில் வெவ்வேறு வடிவங்களில் கருக்கொள்கிறது எனக் கொள்ளலாம்.

எழுத்தாளனுக்கு இன்பம் கிடைத்தாலும், உருவான பல கருக்கள் சமூகத்தில் பல தாக்கங்களை ஏற்ப்படுத்தும். உருவாகிய கரு ஆரோக்கியமானதா, ஊனமானதா, கடவுளா சைத்தானா என்பது எழுத்தாளனுக்கு தெரிய வாய்ப்பில்லை. சமூகமும் இனம் கான முடியாது. அது சமூகத்தில் பொது கருத்துக்கு மாறாக எதிர் வினையாற்றி கொண்டிருக்கும்.

நாசிசம், பாசிசம் ஸ்டாலினிசம் மூணையும் ஒண்ணா சேத்துச் சொல்ல முடியுமாஎன்ற கேள்விக்கு –-----

கண்டிப்பா. பேருதான் வேற வேற . மத்தப்படி கொள்கை நடைமுறை எல்லாமே இந்த மூணிலயும் ஒண்ணுதான். சமூகத்தையும் பிரபஞ்சத்தையும் பெரிய யந்திரமா உருவகிக்கிற போக்கு இது மூணுக்கும் அடிப்படை. அந்த எந்திரத்தோட இயங்குமுறை என்னான்னு புரிஞ்சுக்கிட்டு அதை இஷ்டப்படி ஆட்டி வைக்கலாம், மாத்தியமைக்கலாம்னு இந்த சர்வாதிகாரிகள் நம்பினாங்க.  முஸ்தபா கமால் பாஷா, மாவோ, கரிபால்டி எல்லோரும் இந்த  வம்சம்தான். இடி அமீனும், போல்பாட்டும் கூட இந்த வம்சத்தில உதிச்சவங்கதான். ---- என்று பதில் கூறுகிறார்.

கம்யுனிசத்தை பற்றி கருத்து வேறுபாடுகள் உண்டு. ஆனால், முற்றிலும் நிராகரிக்கப்பட்டது அல்ல. ஆனால், நாசிசம், பாசிசம் எவராலும் யாராலும் ஏற்க்கப்பட்டதல்ல. அது கண்டிக்கப்பட்டது. இன்று வரை அந்த செயல்களுக்கான பலன்கள் அனுபவிக்கப்படுகிறது. அதில் ஈடுப்பட்டவர்கள் இன்றளவும் அதற்க்காக மன்னிப்பு கோருகின்றனர். தண்டிக்கப்படுகின்றனர்.

ஆனால், எழுத்தாளர் இந்த மூன்றையும் ஒன்றாக பாவிக்கிறார். அதை வெளிப்படையாகவும் தெரிவிக்கிறார்.

கம்யுனிசத்தை மூர்க்க தனமாக எதிர்ப்பதற்க்கு, அதை விட மிக மோசமான வேறு சித்தாந்தத்துடன் சமன் செய்கிறார்.

கம்யுனிச கொள்கை நன்மையை ஏற்ப்படுத்தவில்லை என்றும் மாறாக தீமையை தான் ஏற்ப்படுத்தியது என்பதற்கு சாதகமாக வரலாற்று நிகழ்சிகளை தொகுத்துள்ளார். ஆனால், எந்த இடத்திலும் கம்யுனிசம் என்றால் என்ன மார்க்சிசம் என்றால் என்ன என்பதை குறிப்பிடவில்லை. கொள்கைகள் முற்றிலும் தவறானவையா அல்லது நடைமுறை படுத்த எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்ததா என கூறவில்லை. இன்றைய கால கட்டத்தில் நடைமுறை படுத்த முடியாது என்பவர் ஒரு காலத்தில் அதற்கு சாத்தியம் இருந்தது என்பதை ஒப்புக்கொள்கிறாரா, பொது உடமை சித்தாந்தமே தவறு என்று தனிமனிதன் எவ்வாறு தீர்மானிக்க முடியும். அதை நடைமுறைப்படுத்தினால் தான் சமூகம் அதை எப்படி எதிர் கொள்கிறது என்று அறிய முடியும்

பிடிக்காத உணவையும் மருந்தையும் உடலுக்கு கொடுக்கும் போது அது ஒவ்வாமையை வெளிப்படுத்தும். அதற்கு பிறக்கும் வலுக்கட்டாயமாக திணிக்கும் போது , அதன் விளைவுகள் மரணமாக கூட இருக்கலாம். மேலும் ஒருவருக்கு ஒவ்வாமையானால் அனைவருக்கும் அவ்வாறே இருக்க வேண்டிய அவசியமில்லை. சிலருக்கு அது பயன் தரக்கூடியதாக கூட இருக்கலாம்.

அதை பரிட்சித்து பார்க்க சமூகம் கொடுக்கும் விலை என்னவென்று பார்க்க வேண்டும். லட்சக்கணக்கான மக்களை பலிகொடுத்து, ஒரு சித்தாந்தத்தை திணிப்பது ஒரு வரலாற்று பிழை. அது தான் ரஷ்யாவில் நடந்ததாக தோன்றுகிறது.

கம்யுனிசத்தின் அடிப்படை தத்துவமானஅனைத்தும் அனைவருக்கும் சொந்தம்என்ற பொது உடமை கொள்கையை இவ்வாறு நையான்டி செய்கிறார்.

மண் பொண் இவையனைத்தும் அனைவருக்கும் சொந்தமானது என்று கட்சி தலைவர் கொள்கையை விளக்கிய பிறகு, அடுத்த கட்ட தலைவர்கள் பொண் பொதுவென்றால், பெண்ணும் பொது தானா, தலைவரின் மனைவியும் பொதுவானால் நாமும் ………………………………………. இப்படி குதர்க்கமான உரையாடலை திணிக்கிறார். பொது உடமை கொள்கையை இந்த அளவுக்கு விமர்சிக்க முடிகிறதென்றால், அதிகாரதில் இருந்தவர் செய்த அயோக்கியதனங்களே காரணம்.

கம்யுனிச கொள்கையே பிதற்றல் என்கிறார்.  பைத்தியகரமான கொள்கை, செய்கை பேச்சு என்பதை, இருவர் மூலம் நீருபிக்கிறார். கம்யுனிச கொள்கையை நேசித்து அதற்க்காகவே வாழ்ந்த வீரபத்திர பிள்ளை என்பவர் பித்து பிடித்து பிச்சையெடுத்து அனாதையாய் தெருவில் மடிந்தார் என்கிறார். அருணாசலம் என்பவரும் மனநிலை தவறி , சிகிச்சை பெற்று திரும்புகிறார். இதன் மூலமாக இது பைத்தியகரமான  கொள்கை என்பதை நிருபீக்க முயல்கிறார்.

கம்யுனிஷ்டுகள் கடவுள் நம்பிக்கையற்றவர்கள், சடங்கு சம்பிரதாயங்களை புறக்கனிப்பவர்கள் என்ற எண்ணம் சமூகத்தில் ஏற்ப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், கம்யுனிசத்தால் பாதிக்கப்பட்டவர்கள் புறக்கணிக்கப்பட்டவர்கள் இறுதியில் கடவுளிடம் தங்களை ஒப்படைத்துக்கொண்டு சடங்கு சம்பிரதாயங்களை ஏற்றுக்கொள்கின்றனர் என்கிறார்

கம்யுனிஷ்டுகள் போலி என்பதுடன் அவர்களது கொள்கையும் போலியானது என்பதை இதன் மூலம் நிருபிக்க முயல்கிறார். எல்லாம் இறைவன் செயல் என்பதும், இறைவன் விதித்தப்படி தான் நடக்கும் என்றும் , அவனை சரனடைவது தான் சாத்தியம் மற்ற கொள்கைகள் சித்தாந்தங்கள் அனைத்தும் போலி என்பதை வலியுறுத்துகிறார்..

கம்யுனிஷ்டுகளை போல ஆயுதம் ஏந்தி போரடிய மாவோயிஸ்டுகளை இரண்டு கம்யுனிஷ்டுகள் தான் காட்டிக்கொடுத்தனர் என்கிறார்.

சோவியத் ரஷ்யா உடைந்தது ஐரோப்பிய நாடுகளின் சதி என்பது போல கருத்து கூறுகிறார். எனக்கும் அந்த சமயத்திலும்  இப்போதும் அந்த கருத்து தான் இருக்கிறது.

சக்தி வாய்ந்த நாடாக விளங்கிய U.S.S.R  உடைந்த போது, வேலையிழந்த ராணுவத்திற்க்கும் அரசு ஊழியர்களுக்கும் சம்பள பாக்கி கொடுக்க முடியாமல், தொழிற்சாலைகளில் தேங்கியிருந்த தொலைகாட்சி பெட்டிகளும், உள்ளாடைகளும், ஆணுறைகளும் கொடுத்து வெளியேற்றினர். விபச்சாரமே முக்கிய தொழிலாக மாறியது.

உலகில் இரண்டு சக்தி வாய்ந்த நாடுகள் மட்டுமே இருந்தது. ஒன்று U.S.A. இரண்டாவது U.S.S.R . மற்ற நாடுகள் இவர்களுடன் அணி வகுத்து நின்றன. இரண்டிலும் சேராமல் இருந்தவர்கள் அணி சேரா நாடுகள் என அழைக்கப்பட்டன. இந்தியாவும் அணி சேரா நாடுகளில் ஒன்று என்று அறிவித்துக்கொண்டது. உண்மையில் அது ரஷ்யா சார்புடையதாகவே இருந்தது. திட்டமிட்டு USSR அழிக்கப்பட்டவுடன் இன்று ஒரே ஒரு நாடு மற்ற நாடுகளை ஆட்டிப்படைக்கும் நாடாக விளங்குகிறது.

இதற்கு அடங்காத நாடுகளையும் மனிதர்களையும் தீவிரவாதிகள் என்ற பட்டத்துடன் மற்ற நாடுகளின் உதவியுடன் அடக்க முயற்சி செய்கிறது.

இந்த புத்தகம் வெளி வந்த காலகட்டத்தில் (1999) தமிழகத்தில் இருந்த கம்யுனிஷ்டுகள் எதிர் வினை செய்தார்களா அல்லது உண்மையை தான் எழுதியுள்ளார் என சும்மா இருந்தார்களா என தெரியவில்லை.

உலகத்தில் இனி கம்யுனிச கொள்கையுடன் ஆட்சி செய்யப்படும் நாடு இருக்க முடியாது. இந்தியாவில் அது முற்றிலுமாக சாத்தியமில்லை. சில மாநிலங்களில் ஆட்சி செய்ய முடிகிறது.

சில மாநிலங்களில் ஆட்சி நடைபெற காரணம் கொள்கையல்ல. அந்த மாநிலத்தில் செயல்படும் தலைவர் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையே காரணம்.

அகில இந்திய கட்சியாக இருந்து இன்று மாநில கட்சியாக கூட அங்கீகாரம் அற்று இருக்கிறது. காரணம் அவர்கள் கொள்கையை கைவிட்டதல்ல. அவர்களது சந்தர்ப்ப வாத கொள்கையே காரணம், சுயமாக நிற்க தெம்பின்றி பிறர் தோள் மீது சவாரி செய்வதே .

தொழிலாளிகளுக்கு பாடுபடுவது என்ற கொள்கையை கைவிட்டு விட்டனர். ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மாதிரியாக பேசுகின்றனர். இப்போதெல்லாம் சில மணி நேர அடையாள உண்ணாவிரதம், சில மணி நேர ஊர்வலங்கள் மூலம் தங்களது இருப்பை காட்டிக்கொள்கின்றனர்.

சில வருடங்களுக்கு முன்பு இவர்கள் வங்கி துறையில் கனினி பயன் படுத்த எதிர்ப்பு தெரிவித்தனர். வேலை இழப்பு நேரிடும் என்பதும் புதிய வேலை வாய்ப்புகள் ஏற்படாது என்பதும் இவர்கள் கூறிய காரணம். இவர்கள் பேச்சை நம்பி இவர்களது போரட்டத்திற்க்கு செவி சாய்த்திருந்தால் இன்றைக்கு வங்கி துறை எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.

இவர்கள் முழுமையாக ஆட்சி செய்ய முடியாது என்ற காரணத்தால் சில பதவிகளுக்காக சமரசம் செய்து கொள்கின்றனர். ஆனால், கொள்கையை சமரசம்  செய்து கொள்ளவில்லை என்கின்றனர்.

இவர்கள் ஆட்சி செய்த மாநிலங்களின் வளர்ச்சி மற்ற மாநிலங்களின் வளர்ச்சியை விட குறைவாகவே இருக்கிறது.

நேர்மையாளர்கள் மற்றும் ஊழல் செய்யவில்லையென்று சிலரது பெயரை பட்டியலிடலாம். உண்மை. ஆனால், அவர்கள் கம்யுனிஷ்டு கொள்கையை கடைப்பிடிப்பதால் தான் நேர்மையாளர்கள் என்று சொல்ல முடியாது. அவர்கள் எந்த கொள்கையை கடைப்பிடித்தாலும் நேர்மையாளர்களாக தான் இருப்பார்கள். இதர கட்சிகளில் மற்ற கொள்கையை கடைப்பிடிப்பவர்களிலும் நேர்மையாளர்கள் இருக்கிறார்கள். பொதுமக்களிலும் நேர்மையாளர்கள் இருக்கிறார்கள். நேர்மைக்கும் கட்சி கொள்கைக்கும் சம்மந்தம் இல்லை. இவர்கள் நேர்மையாக வாழ்வதற்க்காகவே பிறந்தவர்கள்.

இன்றைய சமூக சூழ்நிலையில், உலகமயமாக்குதல் தாரளமயமாக்குதல் என்ற கொள்கையுடன் நாடு முன்னேறி கொண்டிருக்கையில், கம்யுனிச கொள்கை ஒரு காலாவதியான கொள்கையாகவே தொழிலார் வர்கமும் கருதும்.

அனைத்தும் அனைவருக்கும் சமம் என்ற கொள்கையை ஏற்க முடியாது. உழைப்பவனையும் அறிவை பயன் படுத்துபவனையும் ஒன்றாக கருதி ஒரே ஊதியத்தை கொடுக்க முடியாது. பாகுபாடு இருந்தால் தான் அதை அடைய போட்டி போட்டுக்கொண்டு உழைத்து முன்னேற வேண்டும் என்ற துடிப்பு இருக்கும். சமூகமும் நாடும் வளரும். அனைவரும் சமம் எனும் போது எவனும் தனது திறமை உபயோகப்படுத்த மாட்டான். உழைக்க மாட்டான். வளர்ச்சி இருக்காது.

ரஷ்யா வளர்சியடைந்த வலிமையான நாடாக கருதப்பட்டது. வீக்கத்தை வளர்ச்சி என்று காட்டியுள்ளார்கள். அது விரை வீக்கம் என்பது இரும்பு திரை வீழ்த்தப்பட்ட போது தெரிந்தது.

தோழர்களே, உங்களுக்கு இறுதியாக ஒன்றை சொல்கிறேன். செங்கொடி அதன் நிறத்தை இழந்துவிட்டது. காவி நிறமாக மாறி வருகிறது என்பதை அறிவீர்களாக.

எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்கள் அவரது கருத்தை துணிச்சலாக கூறியுள்ளார். பிறர் தம்மை பற்றி என்ன நினைப்பார்கள் என்று கவலைப்படாமல், அவரது கருத்தை நேர்மையாக கூறியுள்ளதை மனதார பாரட்டுகிறேன்.


Monday, 15 September 2014

கொற்கை - புத்தக ஆய்வு







அன்புள்ள குருஸ் அவர்களுக்கு,                            03.09.2014

சாகத்திய அகதெமி பரிசு பெற்ற உங்களது கொற்கை கதையை படிக்க வாய்ப்பு கிடைத்த்து. அதை பற்றிய எனது கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

விரும்பி படிக்க ஆரம்பித்து, கதையில் தொய்வு விழும் போது வீம்புக்காக படித்து, பின்பு முழு வரலாற்றை அறியும் பொருட்டு மிக நிதானமாக விரும்பி படித்தேன்.


ஒரு நூற்றான்டின் கதை. கதை களமும் காலமுமே கதையின் நாயகர்கள். அதில் வாழும் மனிதர்கள் யாவரும் நிழல்களாய் மறைந்து விடுகின்றனர். அவர்கள் கட்டிக்காத்து விட்டு செல்லும் அனைத்துமே காலத்தால் அபகரிக்கப்படுகிறது.

இதை ஒரு சமூக நாவல் என்பதா அல்லது சரித்திர நாவல் என்பதா ?

காலம்ஒரு நூற்றாண்டின் ஆரம்பமும் முடிவும் 1914 முதல் 2000 . கொற்கையில் ஆங்கிலேய மக்களின்  அதிகாரம்விடுதலை போராட்டம்சுதந்திர இந்தியாவின் ஆட்சி.

காலம் கடப்பதை அந்த மண்ணில் நடக்கும் மாற்றங்கள் குடும்ப வாழ்க்கையில் ஏற்ப்படும் மாற்றங்கள் மூலமாக , அவர்களது 3 வது தலைமுறை வாழ்கையுடன் முடிவு செய்துள்ளீர்கள்.  கொற்கையில் இந்த கால கட்டத்தில் நடந்த அனைத்து நிகழ்வுகளையும் சொல்ல முயற்சிக்கும் சமூக வரலாற்று கதை. முழுமையாக சொல்ல முடியாவிட்டாலும் அதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டடிருக்கிறது

களம்கடற்கரை சார்ந்த நிலப்பரப்பு. கடலை சார்ந்து வாழ்க்கை நடத்தும் மக்கள். கடலில் பயணிக்கும் தோணி முக்கிய கதாபாத்திரம். தோணியின் உடற்கூறுகள், அதன் ஆடைகள் ,  காற்றின் திசைக்கேற்ப நீரின் ஓட்டத்திற்க்கேற்ப்ப அதற்கு ஆடை மாற்றி விடும் பரதவர்கள். இவைகளை படம் வரைந்து விளக்கியிருப்பது , அனைவரும் புரிந்து கொள்ள வசதியாய் இருக்கிறது.

தோணியை சொந்தமாக்கி கொள்வதே வாழ்வில் லட்சியமாக கொண்ட மக்கள் தன் கட்டுப்பாட்டுக்குள் அதை வைத்துக்கொள்ள விரும்பும் தண்டல்களின் ( தலைவர்) வாழ்க்கை வரலாற்றை சிறப்பாக பதிவு செய்துள்ளீர்கள்.

முத்து குளிப்பது, சங்கு எடுப்பது, மீன் பிடிப்பது இவையே இந்த களத்தில் வாழும் மக்களின் தொழில். மீன் பிடி தொழிலில் ஈடுப்பட்டிருக்கும் மக்களின் கதையாக மட்டுமே இருக்கும் என்ற முன் முடிவுடன் படிக்க ஆரம்பித்தேன். ஆனால், மீனவர்கள் வாழ்க்கை சில பத்திகளில் மட்டுமே உள்ளது. தோணி தொழிலாளர்கள் அவர்களது தொழில் விரிவாக உள்ளது. அங்கு மற்ற தொழிகள் செய்து வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறை குறிப்பிடப்படவில்லை. இன்றைக்கு தலித் என்று சொல்லப்படும் மக்களின் வாழ்க்கை விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த பகுதியில் உப்பளங்களும் இருந்துள்ளது. சுருக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது. சுதந்திரப்போரட்ட காலத்தில், உப்பு சத்தியாகிரக போரட்ட காலத்தில் இங்கு அதன் தாக்கம் என்னவாக இருந்தது என குறிப்பிட்டிருக்கலாம்.

அந்த தொழில் சார்ந்து வாழும் மக்கள், வியாபாரிகள். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் , அவர்களது இறக்குமதி பொருட்களை கடலிலிருந்து கரைக்கு கொண்டு வருவது ; சரக்குகளை பல பகுதிகளுக்கும் கொண்டு செல்ல தோணிகளை பயன்படுத்துவது. – சிறப்பாக சொல்லப்பட்டிருக்கிறது.

இங்கு வாழ்ந்த மக்களின் குடும்ப பழக்கவழக்கங்கள், சடங்குகள், சம்பிராதயங்கள், விழாக்கள் இவைகள் குறிப்பிடப்படவில்லை.

கலை இலக்கியம் போன்றவற்றில் கொற்கை மக்களின் பங்கு பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

மொழிமொத்த கதையும் வட்டார வழக்கு மொழியில் எழுதப்பட்டிருப்பது சிறப்பு என்றாலும், கதை அந்த வட்டார மக்களுக்காக மட்டும் எழுதப்பட்டது அல்ல என்பதை எழுத்தாளர் உணர வேண்டும். சுமார் 100 பக்கங்கள் படித்த பிறகு தான் மொழியை சரளமாக படிக்க முடிகிறது. தமிழில் எழுதப்பட்டுள்ள கதைக்கு தமிழில் அகராதி கொடுத்து ( 93 சொற்களுக்கு அர்த்தம் கொடுக்கப்பட்டுள்ளது ) எழுதப்பட்டுள்ளது. அந்த அளவுக்கு வட்டார வழக்கு சொற்கள் பயன் படுத்தப்பட்டுள்ளது. அகராதியை பார்த்து பார்த்து கதை படிக்க வேண்டிய பொறுமை எல்லோருக்கும் இருக்காது. இன்னும் சிறிது காலத்தில் வட்டார வழக்கு மொழிகள் அழிந்து விடலாம். அந்த கால கட்டத்தில் இந்த புத்தகத்தை படித்தால் ஒரு வேற்று மொழி புத்தகத்தை படிப்பது போல இருக்கும்.

மொழி ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள் இவர்களுக்கு இந்த புத்தகம் உதவக்கூடும். மற்றப்படி சரளமான தற்காலிக தமிழ் மொழி நடை போதுமானது.

முழு கதையும் வட்டார வழக்கு சொற்களில் எழுதப்பட்டிருந்தாலும், வசை சொற்களை கொச்சையாக கதை முழுவதும் பயன் படுத்தியிருப்பது தவிர்த்திருக்க வேண்டும். “ கூதிஎன்ற சொல் சில முறை படிக்கும் போது எளிதாக கடந்து விடுகிறது ஆனால் மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் போது குமட்டல் ஏற்ப்படுகிறது.

மதமும் கடவுளும்ஆங்கிலேயரின் வருகையின் காரணமாக கத்தோலிக்க மதத்திற்க்கு மாற்றப்பட்ட பரதவர்கள், மேரியை தொழுதாலும் மாரியை வணங்குவதில் விருப்பம் உடையவர்களாகவே இருந்துள்ளனர் என்பதை குறிப்பிட்டதுடன், மத மாற்றத்தினால் மக்களின் வாழ்க்கை தரம் உயரவில்லை என்று குறிப்பிட்டுருப்பது நிகழ் காலத்துக்கும் பொருந்தும். மதம் மாற்றுபவர்களும், மதம் மாறுபவர்களும் இதை கருத்தில் கொண்டால் இன்று சமூகத்தில் ஏற்ப்பட்டுள்ள பதற்றத்தை தவிர்க்கலாம்.

சுதந்திரப் போராட்டமும் அரசியலும் மிகவும் மேலெலுந்தவாரியாக சொல்லப்பட்டுள்ளது. காந்தி, நேரு, பட்டேல், வா..சி. காமராசர், அண்ணா, பெரியார், கலைஞர், எம்ஜிஆர், அம்மா காங்கிரஸ், நீதிகட்சி, திராவிட கட்சி என்று ஒற்றை வரிகளில் அந்த அந்த கால கட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களது அரசியலை அதன் தாக்கங்களை கூட எழுதவில்லை. பரதவர் சமுதாயத்திலும் கொற்கையில் வந்து குடியேறிய நாடார் சமுகத்திலும் அரசியலில் ஈடுபட்ட சிலரது பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

தோணியின் மாற்று வடிவமான கப்பலை விவரித்து, கப்பலோட்டிய தமிழனின் வரலாற்றை விரிவுபடுத்தி எழுதியிருந்தால் இந்த கதைக்கு பொருத்தமாக இருந்திருக்கும்.

தோணி தொழில் சார்ந்தும், வியாபாரம் சார்ந்தும் பரதவ மக்களும் நாடார் மக்களும் இலங்கையை சார்ந்து இருந்ததும், அங்கு சென்று குடியேறியதும் குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கு எற்ப்பட்ட அரசியல் மாற்றங்கள் காரணமாக பலர் திரும்பி வந்து கொற்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

இன்றளவும் இருக்கும் தீவிரவாதம் என்று சொல்லப்படும் சுதந்திர போராட்டத்தை சிறிதும் விவரிக்காமல் விலகியிருப்பது, தற்போதைய தமிழக அரசியலில் சிக்கிகொள்ளாமல் இருக்க கவனமாக எடுத்துக்கொண்ட முயற்சி. இன்றைய மீனவர்கள் நிலையை குறித்து எழுதாமல் நழுவி விட்டீர்கள்

கப்பல் தொழிலும் கன்டெய்னர் தொழிலும் தொடங்கியதால், தோணி தொழில் பாதிக்கப்பட்ட நிலையில் கல்வியின் முக்கியத்துவம் உணர்ந்து, அதில் முன்னேறிய குடும்பங்களை பற்றி பின் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாறி வரும் சூழ்நிலையை உணரமால், தொழிலையையும் மாற்றாமல், கல்வியும் கற்காமல் கொற்கையிலேயே தங்களது வாழ்க்கையை அழித்து கொண்டவர்களை பற்றி குறிப்பிட்டிருப்பது இன்றைய தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய அம்சம்

பொருளுடனும் பெருமையுடனும் வாழ்ந்து இன்று கீழ்நிலையில் இருக்கும் மக்களை சந்தித்ததால் தான் நீங்கள் இந்த கதையை எழுதியுள்ளதாக முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது கவனத்தில் கொள்ள வேண்டியது.

குடும்பங்களை பற்றிய கதை அதிகம். 45 குடும்பங்களை 35 குடும்ப வரைப்படம் ( FAMILY TREE ) மூலம் விவரித்து 446 கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். இவர்களை தவிர வேறு பல கதாபாத்திரங்களும் உள்ளது. இந்த வரைப்படம் வாசகர்கள் புரிந்து கொள்ள கொடுக்கப்பட்டதா அல்லது நீங்கள் எழுதும் போது உங்களுக்கே குழப்பம் வராமல் இருப்பதற்க்காக தயாரிக்கப்பட்டதா என தெரியவில்லை எத்தனை கவனமாக படித்தாலும் யார் யாருடைய வாரிசு, யார் யாருக்கு சொந்தக்காரர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள முடியாது. உங்களுக்கு கூட இப்போது நினைவில் இருக்க வாய்ப்பில்லை.

ஆனால், ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு கதையாக இருப்பதால்,  தொடர்ச்சி வேண்டும் என்பது அவசியமில்லை.

கதையின் நடுவில் ஒரு 50 பக்கத்தை படிக்காமல் மேல் கொண்டு படித்தாலும் எவ்வித பாதிப்பும் ஏற்ப்படாது.

குடும்ப உறுப்பினர்களின் ஆசா பாசங்கள், போட்டி பொறாமைகள், உறவுகளுக்குள் திருமணம் முடிப்பது, வெட்டி பந்தா என்று எல்லாவற்றையும் சொல்லியிருப்பது மற்றும் அவர்களது மூன்றாம் தலைமுறை வாரிசுகளுடன் கதையை முடித்திருப்பது படிக்கும் ஆவலை தூண்டுகிறது

இந்த கதாபாத்திரங்களின் வாழ்க்கையின் இடையே திரைப்பட துறையை ஒரு சில வரிகளில் படங்களின் பெயர்கள் மூலமும் பாடல் வரிகளின் மூலமும் குறிப்பிட்டிருப்பது சிறப்பு. நடிகர் சந்திரபாபுவின் பெயரை குறிப்பிடாமல் அவரது வாழ்க்கை சம்பவத்தை சில வரிகளில் சொல்லியிருப்பதன் மூலம் அவர் இந்த சமூகத்தை சார்ந்தவர் என்பதை குறிப்பிட்டுள்ளீர்கள். இன்றைய இளைய தலைமுறையும் அடுத்த தலைமுறையும் இதை முழுமையாக புரிந்து கொள்ள முடியாது.

காமம் இல்லாமல் வாழ்க்கை இல்லை. உங்களுக்கு தெரிந்தா எல்லா காம வகைகளையும் ஒரே கதையில் சொல்லியிருப்பது, சற்று மிகையாக தெரிகிறது. முறை தவறிய உறவுகள் அம்மா -மகன்,.  அண்ணன்தங்கை, மற்ற உறவுகளுக்கிடெயேயன  தவறான உறவுகள், ஓரின சேர்க்கைகள் என எல்லாவற்றையும் தினித்திருப்பது மிகை.

மேலும், இதில் யாருடைய சோகத்தையும் மிகைப்படுத்தி எழுதி, கண்ணிர் பிழிய வைக்க முயற்சி செய்யாதது பாரட்டுக்குரியது. சமூகத்தின் ஏற்ற தாழ்வுகளுக்கு ஜாதியையோ, தொழிலதிபர்களையோ அரசையோ மற்ற சமூகத்தையோ குறை கூறாமல், அவர்களே காரணம் என்பதை உணர செய்திருப்பது நல்ல உத்தி.

பொதுவாக கதாநாயகன், நாயகி வில்லன் என்று கதை புனையப்படும். அதை தவிர்த்து மொத்த சமூக மக்களையும் கதாபாத்திரங்களாக மாற்றியிருப்பது வேறுப்பட்ட முயற்சி.

ஒரு நூற்றாண்டில் ஒரு நிலப்பரப்பில் நடக்கும் நிகழ்ச்சிகள் அனைத்தையும் தொகுப்பது கடினம். ஏதேனும் ஒன்று அல்லது இரண்டை  வலியுறுத்தி கதையை நகர்த்தியிருந்தால், சிறப்பாக அமைந்திருக்கும்.

எல்லாம் இருக்கிறது ஆனால் எதுவுமே முழுமையாக இல்லையென்று தோன்றுகிறது.

இந்த கதையை எழுத நீங்கள் படித்த புத்தகங்களை குறிப்பிட்டு அவர்களை சிறப்பித்தமை நல்ல விசயம்.

அன்மை கால வரலாற்றை  ,  சாகத்திய அகதெமி விருது  பெறும் அளவுக்கு எழுதியிருப்பதற்க்கு மனதார பாரட்டுகிறேன்.

சரித்திரத்தை பதிவு செய்திருந்தாலும் , இடதுசாரி எழுத்தாளர், வலதுசாரி எழுத்தாளர், தலித் இலக்கியம் மற்றும் இன்ன பிற எழுத்து வகையை சார்ந்தது என்ற வட்டத்துக்குள் சிக்க முடியாதபடி கதை அமைந்துள்ளது.


விருது பெற்ற சமயத்தில் சம்பிரதாயமாக பலரும் வாழ்த்து சொல்லியிருந்தாலும் அவர்கள் யாரும் அதை படிக்கவில்லை என்பது புரிந்தது

மேலும் ஒரு அரசியல் கட்சி சார்ந்த உங்களது கருத்துக்கு கண்டனம் தெரிவித்து உங்களது எழுத்தை உங்களை வலது சாரி என்பது போல காட்ட முயற்சித்தனர். இந்த சமயத்தில் உங்களது மனநிலை எப்படி இருந்தது என்பதை அறிய விரும்புகிறேன்.

இன்று வரை உங்களுடைய இந்த புத்தகத்துக்கு விமர்சன கூட்டம் பாராட்டு விழாக்களோ நடைப்பெறவில்லையென்று தோன்றுகிறது. மக்களிடையே, சம கால எழுத்தாளர்களிடையே மற்றும் விமர்சகர்களிடையே பரவலாக சென்றடயவில்லை என தோன்றுகிறது. இவ்வாறு சென்றடைய நீங்களும் எதுவும் முயற்சி செய்ததாக தெரியவில்லை. ஏன் ?

பெரிய நிறுவனத்தில் வேலை செய்து கொண்டு, குடும்பத்தையும் கவனித்து கொண்டு, நிறைய படித்து ஒரு வரலாற்றை பதிவு செய்திருப்பது பாரட்டுக்குரியது. இவை எப்படி சாத்தியமானது. எவ்வளவு காலம் இதற்காக உழைத்தீர்கள் என்பதை அறிய விரும்புகிறேன்.

இந்த கதையில் வரும் கதாபத்திரங்களில் எத்தனை பேர் உண்மையில் வாழ்ந்தவர்கள். ?

இந்த கதாபாத்திரங்களின்  பெயர்களை எப்படி தேர்ந்தெடுத்தீர்கள்.
நன்றியுடன்

எம். எஸ். சேகர்
================================================================================


On Wed, Sep 3, 2014 at 1:25 PM, mallisekar mallisekar <mallisekar@hotmail.com> wrote:
Dear Mr.Cruz,

My review about your book " koRkai " enclosed .  If you have time, pl. write back few words about my review.

Regards

M.S.SEKAR



Dear Mr.Sekar,

Good to read your reveiw about Korkai.

I am presently stationed in Delhi for some meetings.

Shall write back to you next week.

Thanks and Regards,

Joe 

Sir,

Thanks for prompt reply. I am living in Delhi. If you like if you have some time, can we meet at your convenient.

Regards,

M.S.SEKAR

Is it possible to meet tomorrow by 8.30am at ****************

Regards,

Joe
Sir,

I thinks its too early to meet at Janpath. If you have any spare time in the evening, that will suit me.


Regards

M.S.SEKAR
Sir,

If you are still in Delhi, pl. give some time for today or tomorrow.

Regards

M.S.SEKAR

















Friday, 12 September 2014

FINDING FANNY – இந்தி திரைப்படம்



FINDING FANNY – இந்தி திரைப்படம்


கோவாவில் உள்ள சிறிய கிராம பகுதியில் நடக்கும் கதை. கிராமத்தில் பெரிதாக ஒன்றும் நடப்பதில்லை. வெட்டி பேச்சு பேசிக்கொண்டு வாழ்க்கை நடத்தும் கிராம மக்கள்.

வயதான தபால்காரர் (Naseeruddin Shah) ஒருவருக்கு ஒரு கடிதம் வருகிறது. அதை பார்த்து அதிர்ச்சியடைகிறார். அது அவர் தனது காதலிக்கு 46 வருடங்களுக்கு முன்பு காதலை தெரிவித்து ஏற்றுக்கொள்ளுமாறு எழுதிய கடிதம். அது அவளுக்கு போய் சேராமல் திரும்பி வந்த கடிதம். இவர் தனது காதலை அவள் ஏற்க்கவில்லையென்று நினைத்து தனிமையில் வாழ்ந்து கொண்டிருப்பவர்.

அவரது வீட்டருகில் பெரிய பிட்டங்களுடன் வசிக்கும் (Dimple Kapadia)  மாமியார் மற்றும் விதவை மருமகள் (Deepika Padukone). திருமணத்தன்றே அவளது கணவன் இறந்து விடுவதால் மாமியாருடன் வசிக்கிறாள்.

தனக்கு வந்த கடிதத்தை பற்றி தீபிகாவிடம் கூறுகிறார்.  தீபீகா உங்களுடைய காதலியை கண்டுபிடித்து உங்களது காதலை சொல்லுங்கள் என்று கூறுகிறாள்.

அதே கிராமத்தில் ஓவியன் ஒருவன் (Pankaj Kapur) வாழ்ந்து வருகிறான். அதே சமயம் ஊரை விட்டு வெளியேறிய இளைஞன் (Arjun Kapoor) ஊருக்கு திரும்பி வந்துள்ளான். அவன் தனது தந்தை வீட்டில் வாழ்கிறான். அங்கு இருக்கும் பழைய காரை சரி செய்து ஓவியனுக்கு விற்றுள்ளான். பம்பாயில் தொழில் நடத்திக்கொண்டிருப்பதாக பொய் கூறுகிறான். தீபீகாவும் அர்ஜூனும் பழைய நண்பர்கள். தீபீகாவுக்கு திருமண ஆன நாளன்று யாருக்கும் சொல்லாமல் ஊரை விட்டு கிளம்பியவன் ஆறு வருடம் கழித்து திரும்பியுள்ளான்.

அர்ஜூனுக்கு கார் ஓட்ட தெரியும் என்பதாலும், அது ஓவியனின் கார் என்பதாலும் எல்லோரும் சேர்ந்து நஸ்ருதினின் காதலியை (Anjali Patil) ( அவளது செல்ல பெயர் FANNY ) தேடி புறப்படுகின்றனர். எல்லோரும் வாழ்க்கையில் பிடிமானம் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருப்பதால், இந்த பயணம் மாறுதலாக இருக்கும் என்று கிளம்புகின்றனர்.

அவளது விலாசத்தில் அவள் இல்லாததால் அவள் இருக்குமிடம் தேடி செல்கின்றனர். வழியில் ஏற்படும் பல சுவரஸ்யமான சம்பவங்களுடன் கடந்து செல்கின்றனர். வண்டியில் பெட்ரோல் தீர்ந்து விடுவதால், இரவு வெட்ட வெளியில் தங்குகின்றனர்.

ஓவியனுக்கு பெரிய பிட்டங்களிடம் ஈர்ப்பு ஏற்ப்படுகிறது. தீபிகாவும், அர்ஜூனும் பழைய விசயங்களை பேசுகின்றனர். அவன் வீட்டை சுத்தம் செய்யும் போது அந்த கடிதம் கிடைத்ததாகவும், அதை தான் தான் நஸ்ருதின் வீட்டில் போட்டதாகவும் கூறுகிறான். அவனது அப்பா தான் அந்த கிராமத்தின் போஸ்ட் மாஸ்டர். அவன் அவளை காதலித்ததாக கூறுகிறான். தீபிகா நீ காதலை சொல்லாததால் வேறு ஒருவனை மணந்தேன் என்கிறாள். இரவு வெட்ட வெளியில் உறவு கொள்கின்றனர்.

நஸ்ருதீன் புறப்பட்டு சென்று பெட்ரோலுடன் வந்து , பின்பு எனது காதலியை நானே கண்டுபிடித்து கொள்கிறேன் என்று எழுதி வைத்து விட்டு புறப்பட்டு செல்கிறார். மற்றவர்கள் காரில் போய்க்கொண்டிருக்கும் போது அவரை கண்டுபிடித்து ஊர் திரும்புகின்றனர். அப்போது ஒரு சவ ஊர்வலம் வருகி’றது. அதில் நடந்து வரும் ஒரு பெண்ணை பார்த்து அவள் தான் FANNY  என கண்டுபிடித்து அவளிடம் பேசும் போது, அவள் FANNYயின் மகள் என தெரிந்து FANNY  எங்கே என்று கேட்கும் போது, இறந்த உடலை காண்பிக்கிறாள். அவரால் அடையாளம் கானமுடியவில்லை. உடல் திருமண உடையில் இருக்கிறது. அவள் என்னை நினைத்து இவ்வளவு காலம் இருந்து விட்டு இப்போது தான் திருமணம் செய்யும் நிலையில் இறந்தாளா என கேட்கிறார். மற்றவர் இது இவளுக்கு நாலாவது திருமணம் என்கிறார். மேலும், என்னை பற்றி ஏதாவது கூறினாளா என மகளிடம் கேட்க அவள் , அவளது அம்மா பல காதலர்களின் பெயரை கூறியிருக்கிறாள் ஆனால் ஒரு நாளும் உங்களது பெயரை கூறியதில்லை என்றும் அவள் ஒரு அற்புதமான வாழ்க்கை வாழ்ந்தாள் என்றும் கூறுகிறாள்.

எல்லோரும் ஊர் திரும்புகின்றனர். நஸ்ருதினும் டிம்பிள் கபாடியாவும் திருமணம் செய்வதோடு முடிவடைகிறது.

நஸ்ருதின் , பங்கஜ் கபூர் மற்றும் டிம்பிள் கபாடியா இவர்களது நடிப்பு அருமை. அனுபவப்பட்ட நடிப்பு. நஸ்ருதின் பழைய நினைவுகளில் போகும் போது, அருமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

டிம்பிள் கபாடியாவும் தனது பாத்திரத்தை அருமையாக செய்துள்ளார். பங்கஜ் கபூரும் சிறப்பாக செய்துள்ளார்.

அர்ஜூன் கபூரும் தீபிகாவும் முக்கிய பாத்திரங்கள் என்று சொல்ல முடியாது. அவர்களது வழக்கமான நடிப்பில் இருந்து விலகி அடக்கி வாசித்துள்ளார்கள். இல்லாத கவர்ச்சியை காட்ட தீபிகா மிகவும் முயற்சித்துள்ளார்.

வழக்கமான பாடல்கள் இல்லை. சண்டை காட்சிகள் இல்லை. ஆடை அலங்காரங்கள் இல்லை. 

கதை நடக்கும் கிராமம் ரம்மியமாக உள்ளது. பயணம் செய்யும் பாதையும் அழகாக ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கதையுடன் இனைந்து பின்னனியில் இரு பாடல்கள் ஒலிக்கிறது.

2 மணி நேர படம். ஒரு 15 நிமிடத்தை குறைத்திருந்தால் கதை வேகமாக நகர்ந்ததாக அமைந்திருக்கும்.

இது விருது பெறும். விருதுக்காக தயாரிக்கப்படும் படம் போன்றது. ஆங்கிலம் மற்றும் இந்தியில் தயாரிக்கப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியாக வெற்றி பெற வாய்பில்லை. 

இந்த படத்தை கருப்பு வெள்ளையில் எடுத்திருந்தால், உலக திரைப்படம், மாற்று திரைப்படம் என்று கொண்டாடியிருக்கலாம்.

திரையரங்கில் ரசிக்கலாம். இனையத்தில் இலவசமாக கிடைத்தாலும் பாருங்கள்.

 Finding Fanny Theatrical release poster.jpg