சமயபுரம் மாரியம்மன் கோவில்::
அண்மையில் மேற்கொண்ட தமிழக சுற்றுப்பயணத்தில், மூன்றாவதாக (03.02.2014 - மதியம்) சென்ற கோவில்
சமயபுரம் மாரியம்மன் கோவில். இது, திருச்சிக்கு
வடக்கே காவிரியின் வட கரையிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.
இந்த கோயிலில் மதிய நேரத்தில் கோயிலை மூடும்
வழக்கமில்லை என்று தெரிகிறது. மக்கள் கூட்டம் அலைமோதியது. இதுவும் கோயில் என்ற நிலையை
தாண்டி, சுற்றுலா தளம் போல் கூட்டம் அலைமோதுகிறது.
கோவிலுக்குள் செல்லும் மண்டபத்தின் இருபுறத்திலும்,
பாசிமணி ஊசிமணி கடைகளும், பிரசாத கடைகளும் காணப்பட்டன. நடைபாதையின் இருபுறத்திலும்
கடைகள் இருப்பதால், மக்கள் ஓய்வெடுக்க நடைபாதையின் நடுபகுதில் அமர்ந்திருந்தனர். கோவிலின்
முன்பகுதியில் எண்ணை விளக்கேற்றி கும்பிட்டுகொண்டிருந்தனர்.
கூட்டம் அதிகமென்பதால், தடுப்பு அமைத்து
உள்ளே அனுப்புகின்றனர். வழக்கம் போல சிறப்பு தரிசனமும் உண்டு. ரூ. 25 மற்றும் ரூ.250.
சுமார் 2 மணி நேரத்திற்க்கு பிறகு தரிசனம் கிடைத்தது. அர்ச்சனை தட்டு வாங்கியிருந்தோம்.
வழக்கம் போல அம்மனை தரிசிக்கும் முன்பு வேறு ஒருவர் (இவரை பூசாரி என்று சொல்வதா அல்லது
அர்ச்சகர் என்று சொல்வதா – பொதுவாக இது போன்ற மாரியம்மன் கோயில்களில் பிரமாண வகுப்பை
சார்ந்த புரோகிதர்கள் இருப்பதில்லையென்றும் , பிற சமூகத்தை சார்ந்தவர்களே பூசாரிகளாக
இருந்து பூசை செய்வார்கள் என கேள்விப்பட்டுள்ளேன்) தேங்காய் உடைத்து நம்மிடம் கொடுத்து
விடுகிறார். அர்ச்சனை தட்டில் ஒரு பன்னீர் பாட்டில் வைத்து கொடுக்கிறார்கள். அதை அவர்
தனியாக எடுத்து வைத்து கொள்கிறார். (அநேகமாக அது மீண்டும் கடைக்கு விற்பனைக்கு வரும்
என்று தோன்றுகிறது) இதை நான் தூரத்திலிந்து கவனித்துவிட்டதால், பன்னீர் பாட்டிலை எடுத்து
வந்து விட்டேன்.
தடுப்பு சுவர் வழியாக போதும் போது சில இடங்களில்,
மக்கள் உப்பு போட்டு வழிபடுகின்றனர். அது வழியெங்கும் சிதறி கிடக்கிறது. செருப்பு போடாமல்
இதன் மேல் நடக்க வேண்டியிருப்பதால், காலை உறுத்துகிறது. மக்கள் மாலை வாங்கி வருகின்றனர்.
மேலும் அர்ச்சனை தட்டில் உள்ள பூவையும் அம்மனுக்கு சாத்த முடிவதில்லை. எனவே மக்கள்
நிலைப்படியின் மேல் விசூகின்றனர். அது கீழே விழுந்து மக்களின் கால்களில் மிதிப்படுகிறது.
அர்ச்சனை செய்யப்படாத இடத்தில் அர்ச்சனை தட்டு ஏன் விற்க்கப்படுகிறது என தெரியவில்லை.
எல்லாம் வியாபரம் . காசு காசு துட்டு துட்டு.
பெரும்பாலான பெண்கள் மஞ்சள் புடவை கட்டியும்
சிலர் குங்கும நிறத்தில் புடவையும் கட்டி வந்திருந்தனர். யாரோ கடைக்காரர் , சுற்றுலா பயணிகளிடம் மணிமாலைகள்
எதோ காரணம் சொல்லி விற்றிருக்கிறார். சுற்றுலா பயணிகள் பெரும்பாலானோர் மணிமாலைகள கழுத்து
முழுவதும் அணிந்திருந்தனர். நிறைய பேர் வளையல்களை காணிக்கையாக செலுத்தவேண்டும் என எண்ணி,
வளையள்களை வாங்கி தடுப்பு அமைக்கப்பட்டிருக்கும் கம்புகளில் மாட்டியிருந்தனர்
வழக்கம் போல நின்று நிதானித்து தரிசிக்க
முடியவில்லை . சிலையை கூட சரியாக பார்க்க முடியவில்லை. அவ்வளவு கூட்டம்
அம்மனாக இருந்தால் என்ன அய்யாவாக இருந்தால்
என்ன. ஏதெனும் காரணத்திற்க்காக அந்த இடம் புகழ் அடைந்துவிட்டால், கோவில் என்ற புனித
? தன்மையை இழந்து வியாபார தளமாக மாறிவிடுகிறது. ஆனால், சில மக்கள் எது எப்படியிருப்பினும்
மிகவும் நம்பிக்கை வைத்து வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றனர்.
நாங்கள் சென்ற போது, வெளி வாசலிலிருந்து
ஒரு பெண்மணி முட்டி போட்டுக்கொண்டு நடந்து உள்ளே சென்று கொண்டிருந்தார். நாங்கள் வெளியே
வரும் போது கோவிலின் உள்ளே இருந்தார். மிகவும் களைப்பாக இருந்தார். அவர் அம்மனை தரிசிக்க
வெதுதூரம் போக வேண்டியிருந்தது இவரும் வரிசையில் சிலமணி நேரம் காத்திருந்து தரிசிக்க
வேண்டுமா அல்லது, முதலில் உள்ளே விடுவார்களா என தெரியவில்லை. இது போன்று வேண்டுதளை
நிறைவேற்றும் பக்தர்களுக்கு சலுகை அளித்து, விரைவில் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும்.
No comments:
Post a Comment