மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவில்::
அண்மையில் மேற்கொண்ட தமிழக சுற்றுப்பயணத்தில், நான்காவதாக (03.02.2014 - மாலை) சென்ற கோவில்
மலைக்கோட்டை – உச்சிபிள்ளையார் கோவில், திருச்சியில் மலையுச்சியில் அமைந்திருக்கும்
இந்த கோயில் சுமார் 1800 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது என கூறப்படுகிறது. 150
அடி உயரம் கொண்ட இந்த கோயிலை அடைய 417 படிகள் ஏற வேண்டியுள்ளது.
நாங்கள்
மாலை நேரம் சென்றதால், வெய்யிலின் தாக்கம் இல்லாததால் சற்று சிரமம் இல்லாமல் ஏற முடிந்தது.
எனினும் 417 படிகள் என்பது மலைக்க வைக்க கூடிய தூரம். இந்த கோயிலில் அப்படி என்ன சிறப்பு
என்பதை அறியும் பொருட்டு சிரமப்பட்டு ஏறினோம்.
மிகவும்
சாதாரண பிள்ளையார் கோயில் தான். அதிக விசேசம் இல்லை. கூட்டமும் இல்லை. வரிசையில் போக
வேண்டும் என்ற அவசியமில்லை. சிறிய பிரகாரம். மற்றப்படி விசேசம் ஏதுமில்லை.
இந்த
மலையில் சிவனின் சந்நிதானம் தாயுமானவர் என்ற பெயரில் உள்ளது.
நாங்கள்
சென்றிருந்த போது, சில இஸ்லாமிய இளம் பெண்களும் கோவிலில் இருந்தனர். அவர்களுடன் காதலர்கள்
இருந்தனர். நாங்கள் சென்ற போது, பட்டு புடவை மடிசாராக கட்டிகொண்டு பல இளம் கிழம் மாமிகள்
சிரமப்பட்டு படியேறிக்கொண்டிருந்தனர். மடிசார்
பார்ப்பதற்க்கு நன்றாக தான் இருக்கிறது.
கீழே
இருக்கும் குடவரை கோயில்களை பார்க்கமுடியவில்லை. அது மூடப்பட்டிருந்தது.
குன்று
இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமாய் அமையட்டும் என்று வாழ்த்தியதால், முருகன்
கோயில் மலைகளில் இருப்பதாய் அறிகிறன். அப்படியிருக்கும் போது, இந்த மலையுச்சியில் மட்டும்
முருகனுக்கு போட்டியாக பிள்ளையார் அமர்ந்திருப்பது ஏன்.
மாம்பழத்தை
அழுகுனி ஆட்டம் ஆடி பறித்து கொண்ட பிள்ளையார், முருகனின் ஒரு வீட்டையும் பரித்துகொண்டிருப்பது
தவறு என்று ஏன் ஒருவரும் சொல்லவில்லை.
திரும்பும்
வழியில் ஆட்டோவில் வந்தோம். ஆட்டோ ஒட்டுனரிடம் பேச்சு கொடுத்தேன்.
நான்
: நீங்கள் அடிக்கடி உச்சி பிள்ளையார் கோவிலுக்கு போவீர்களா ?
ஓட்டுனர்
: காதலிக்கும் போது நிறைய முறை போயிருக்கிறேன். காதலர்களுக்கு சிறந்த இடம். தெரிந்தவர்களிடமிருந்து
மறைந்து உட்கார்ந்து காதலிக்க சிறந்த இடம். திருச்சியில் காதலர்களுக்கு பாதுகாப்பு
கொடுக்கும் இடம்.
நான்:
திருமணம் செய்து கொண்டீர்களா ?
ஒட்டுனர்
: இல்லை
நான்.:
ஏன்
ஓட்டுனர்.
நான் பாய் ( இஸ்லாமியன்) அவள் இந்து. பெரியவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. அவளை வேறு இடத்தில்
திருமணம் செய்து கொடுத்துவிட்டார்கள்.
நான்:
இப்போது உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா ?
ஓட்டுனர்:
எனக்கு எனது சமூகத்திலேயே திருமணம் ஆகிவிட்டது. 10வது படிக்கும் ஒரு மகன் இருக்கிறான்.
காதலர்களுக்கு
மறைவிடமாக இருக்கும் இடத்தில் இருக்கும் பிள்ளையார் எத்தனை காதலர்களை சேர்த்து வைத்தார்
எத்தனை பேரை பிரித்து வைத்தார் என தெரியவில்லை.
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88
No comments:
Post a Comment