Saturday 22 February 2014

ஆலய தரிசனம் - ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்::


அண்மையில் மேற்கொண்ட தமிழக சுற்றுப்பயணத்தில், நான்காவதாக   (03.02.2014 – இரவு) சென்ற கோவில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்.  இரவு 8.30 மணிக்கு கோவிலுக்குள் நுழைந்தோம். ஆசியாவில் உள்ள கோவில்களிலேயே மிக உயரமான கோபுரம் கொண்ட பெருமை கொண்டது. சிலர் தென்னிந்திய கோவில்களிலே மிக உயரமான கோபுரம் கொண்ட கோவில் என்கிறார்கள். 1987ஆம் ஆண்டு தான் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டது என்கிறார்கள் என்கிறார்கள். இந்த கோபுரம் 17ம் நூற்றாண்டை சார்ந்தது என்றாலும் வெளி கோபுரத்திற்க்கு பின்பு உள்ளே பல கோபுரங்கள் உள்ளன. ஒரு சிறய நகரமே உள்ளது. .

இங்கும் நீண்ட வரிசை. எனவே முழுகோவிலையும் சுற்றிப்பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை. சிறப்பு தரிசண வரிசையும் உண்டு. ரூ.25 மற்றும் ரூ.250. நாங்கள் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் கோவிலில் மக்களை அனுமதிக்கவில்லை என தோன்றியது. 10 மணிக்கு கோவில் மூடப்பட இருந்ததால், ஏற்கனவே வரிசையில் இருந்த மக்களுக்கு தான் தரிசனம் கிடைக்கும் என மேற்கொண்டு மக்களை அனுமதிக்கவில்லை. நேரம் கடந்து கொண்டிருந்தது. எனவே பொதுவரிசையில் நின்றிருந்தவர்களை , சிறப்பு தரிசன வரிசையில் செல்ல அனுமதித்தனர். எங்களுக்கு பின்னால் சுமார் 25 பேர் தான் இருந்தனர்.

நாங்கள் இறுதியாக பள்ளிகொண்ட பெருமாளை தரிசித்தோம். இறுதியாக தரிசித்ததால் சிறிது நேரம் நின்று சிலையை தரிசிக்க வாய்ப்பு கிடைத்தது. கருப்பு நிறத்தில் பள்ளிகொண்ட பெருமாள், தலைப்பகுதியில் ஐந்து தலை நாகத்துடன் உறங்கிகொண்டிருந்தார். காலடியில் மகாலட்சுமி இருந்தார்களா என கவனிக்கமுடியவில்லை. இந்த சிலைக்கு எந்த அலங்காரமும் இல்லை. இந்த சிலைக்கு முன்பு வேறு ஒரு சிலை வைக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

நான் தசவதாரம் படம் பார்த்த போது, முதல் காட்சியில் கோவிலின் உள்ளே கமலாஹாசன் வந்து சிலையை பாதுகாப்பது போல காட்சி வரும். அப்போதிருந்தே அது போன்ற சிலை உள்ளதா என்று பார்க்க ஆவல் கொண்டிருந்தேன். அந்த அளவுக்கு பெரிதாக இல்லையென்றாலும், அதே போல் இருந்ததும், அதை அருகிலிருந்து பார்க்கும் வாய்ப்பும் கிட்டியது.

புளியோதரை பிரசாதம் வாங்கி சாப்பிட்டோம். கோவில் பிரசாத புளியோதரையின் சுவையே தனி.

இங்கும் பட்டு மாமிகள் அதிலும் இளம் வயது பெண்கள் மடிசார் புடவையில் பார்க்கும் வாய்ப்பும் அவர்கள் பேசும் மொழி அவா இவா என்ற வார்த்தைகளும் கேட்ட வித்தியாசமாகவும் நன்றாகவும் இருந்தது. ஆனால், அவர்கள் இது போன்று நம்மிடம் பேசும் போது அவ்வளவாக ரசிக்கமுடியவில்லை.

தினமும் இப்படி சிலமணி நேரம் வரிசையில் நின்று தான் தரிசனம் செய்யவேண்டியிருப்பதால், உள்ளூர் மக்கள் வருவதில்லையென்றும், சில மாதங்களில் கூட்டமே இருக்காது என்றும், நேரடியாக தரிசிக்கலாம் என்றும் அந்த நாட்களில்  உள்ளூர் மக்கள் செல்வார்கள் என அறிந்தேன்.
வெளியூரிலிந்து வரும் மக்கள் தங்கள் பொருட்களை வைத்துவிட்டு கோவிலுக்கு சென்று வர வசதியாக வெளியில் பொருட்களை வைத்து பூட்டிகொண்டு வரும்படியாக பாதுகாப்பு பெட்டகங்கள் வசதியை , கோவில் நிர்வாகமோ அல்லது அரசு தரப்பிலோ செய்ய வேண்டும்.

இந்த பெரிய கோபுரம் 1987ஆம் ஆண்டு, தமிழக முதல்வர் திரு. எம்.ஜி.ஆர். அவர்களால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கோவிலை கட்டிய மன்னர்களை பற்றிய குறிப்புகள் எப்படி கல்வெட்டுக்களில் செதுக்கப்பட்டுள்ளதோ அது போன்று இவரது பெயரையும் இவரது பணிகளையும் குறிப்பிட்டு வைக்கவேண்டும்.

இது போன்று குறிப்புகள் சரியகா எழுதப்படாத காரணத்தினால் தான், பல கோவில்களின் வரலாறுகள் இன்று வரை முழுமையாக கிடைக்கவில்லை.




No comments:

Post a Comment