Saturday 28 June 2014

எனது மடத்தில் பெண்களை மட்டுமே நியமிக்க போகிறேன்



நான் துறவறம் மேற்கொள்வது பற்றி எழுதியிருந்தேன். யாரும் பொருட்டாக மதிக்கவில்லை. நக்கலும் நையாண்டியும் இருந்தது. நானும் யோசித்து கொண்டிருந்தேன்.

இப்போது மிக அவசரமாக துறவறம் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்ப்பட்டுள்ளது. என் மாமனாரும் மாமியாரும் என் வீட்டிற்க்கு வரப்போவதாக தகவல் வந்துள்ளது. உடனடியாக இங்கிருந்து ஓட வேண்டிய நிலை ஏற்ப்பட்டுவிட்டது.

துறவறம் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்து வருகிறேன்.

1. காவி வேட்டி கட்டிக்கொள்வது என முடிவு செய்து விட்டேன்.

2. ஜட்டி போட்டு தான் பழக்கம். துறவறத்தில் காவி வேட்டி கட்டிக்கொண்டு ஜட்டி போடலாமா அல்லது கோவணம் கட்டி கொள்ள வேண்டுமா. கோவணம் என்றால் அரைஞான் கயிறு வாங்க வேண்டும். அல்லது இரண்டும் இல்லாமல் காற்றோட்டமாக விட்டு விடலாமா. ?

3. மேல் சட்டை போட வேண்டுமா இல்லையா. ? இப்போது என் வீட்டு வழியாக போன சாமியார்கள் ஜிப்பா போட்டுக்கொண்டிருந்தனர்.

4. ருட்சாத்திர மாலை வேண்டும். என் நண்பன் வைரவேல் வைத்துள்ளான். அதை இரவல் வாங்கலாம். அதிலும் தங்கத்தால் செய்யப்பட்டுள்ளது. அவசரத்துக்கு உதவும்.

5. திருவோடு கமண்டலம் வாங்க வேண்டுமா.?

6. .மடங்களில் தங்கி கொள்ளலாமா அல்லது விடுதியில் தங்கலாமா அல்லது தெருவில் படுத்து தூங்க வேண்டுமா.?

7 தென்னிந்திய உணவுகளை வழங்கும் மடங்கள் ஹரிதூவாரின் எங்கே இருக்கிறது.?

8. பஜனை செய்ய தெரியும் ஆனால் பஜனை பாடல்கள் தெரியாது. பாடல்கள் தெரியாமல் மடங்களில் சமாளிக்க முடியுமா.?

9.சிகிரெட் மது இவைகளை விட்டு விட வேண்டுமா.? இப்போது போதை மருந்துகள் சாப்பிடும் பழக்கம் சாமியார்களிடம் இருப்பதாக கேள்விப்பட்டேன். அதை கற்றுக்கொள்ள வேண்டுமா. ?

10. முக்கியமான விசயம். காமத்தை அடக்க வேண்டும். அதற்கு காந்திஜியை போல பெண்களுடன் நிர்வானமாக படுத்து , காமம்  செய்யாமல் இருந்து பழக வேண்டும். அந்த பயிற்சியை இங்கேயே ஆரம்பித்து செய்து பார்த்து விட்டு அங்கு போக வேண்டுமா அல்லது அங்கு போய் பயிற்சி செய்யலாமா. ?

இப்படி பயிற்சி செய்யும் போது மறைந்திருந்து படம் எடுத்து என்னை மிரட்ட வேண்டியதில்லை. நேரடியாக படம் பிடிக்கலாம். எங்கு வேண்டுமானலும் வெளியிடலாம். கிடைக்கும் வருமானத்தில் பாதியை கொடுத்து விட வேண்டும்.

ஆசைகளை துறந்து விட்டு தான் துறவறம் செல்கிறேன். எனக்கு பெரிய ஆசைகள் ஏதும் இல்லை. சின்ன குடிசை வேண்டும். கிடைக்கும் காசில் சிறியதாக 1000 ஏக்கரில் மடம் கட்ட வேண்டும். மக்கள் சேவை செய்ய 1000 கோடி இருந்தால் போதும். மடத்தில் பணத்தை களவாடி விடுவார்கள் எனவே, மடத்தை நிர்வாகிக்க அனைத்து பொறுப்பிலும் பெண்களை மட்டுமே நியமிக்க வேண்டும்.

இத்தனை வேலைகள் இருக்கிறது. எனக்கு சிஷ்யர்களாக சேர விரும்போர் இப்போதே விண்ணப்பித்தால், இந்த ஏற்பாடுகளை செய்ய வசதியாய் இருக்கும்.

No comments:

Post a Comment